Author: நிருபர் காவலன்
மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு
மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு
மஹிந்தமகன் யோஷித வழக்கு ஒத்திவைப்பு ,பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக
வழக்கு விசாரணை
தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை ஒக்டோபர் 22 ஆம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
வழக்கு இன்று (4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப்
எனினும், இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கை ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 மற்றும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் முறைகேடாக ஈட்டிய 59 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மூன்று தனியார் வங்கிக்
கணக்குகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பு செய்ததன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக குறித்த
பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபாரால் மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல் ,மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் காந்தன்
வன்னி மைந்தன் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ள 100 மிதிவண்டி
திட்டத்தின் அடிப்படையில் 45 ஆவது முதல் 49வது மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மிதிவண்டிகளை லண்டனில் உள்ளயெயா என அழைக்கப்படும் காந்தன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார் .
அவர் வழங்கிய ஒரு லட்சத்து 35 ஆயிரம் நிதி பங்களிப்பில் இந்த ஐந்து மிதிவண்டிகள். தலா ஒன்று 27 ஆயிரம் ரூபாவுக்கு கொள்முதல் செய்யப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி
இந்த நிகழ்வை முன்னெடுத்து ஒருங்கிணைத்த முன்னாள் அதிபர் புண்ணியமூர்த்தி அவர்களுக்கும், பாடசாலை இந்நாள் அதிபருக்கும் , பாடசாலை மாணவர்களுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து நமக்கு தோளோடு தோள் கொடுத்து உதவி புரிகின்ற அணைத்து உறவுகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பாடசாலைக்கு இந்த ஐந்து மிதிவண்டிகளை வழங்கிய அண்ணன் காந்தன் அவர்களுக்கு மீளவும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி அண்ணா.

- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

- மாணவர்களுக்கு 5 துவிச்சக்கர வண்டி வழங்கிய லண்டன் பகீரதன் அண்ணா

- பிரான்ஸ் வாணன் மாணவர் ஐவருக்கு மிதிவண்டிகள் வழங்கி வைத்துள்ளார்

- 50 தாவது மிதிவண்டி சாதனை

- கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்திற்கு 5 மிதிவண்டிகள் வழங்கல்

- 05 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய சந்தன்

- 02 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய மயூரன் ஜேசுதாஸ் இத்தாலி

- 2 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் மாலா

- 2 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கிய லண்டன் ANN அக்கா

- முஸ்லீம் மாணவனுக்கு மிதிவண்டி வழங்கல்

- பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா
எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து
எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து
எம்பிக்களின் ஓய்வூதியம் இரத்து ,பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கான திட்டம் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளைக் குறைப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்துச் செய்வது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் வசந்த சமரசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் திட்டம்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் திட்டம் குறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நந்தன குணதிலக்க நேற்று (02) தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அரசியலில் முழுநேர ஈடுபாட்டால் தான் வேலையை இழந்துள்ளதாகவும், இந்த சூழ்நிலையில் தனது ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால்,
தான் வாழ்வதற்கான வருமானம் இல்லாமல் போகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அத்தகைய திட்டம் நிறைவேற்றப்பட்டால், அதை நிறைவேற்றுபவர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி, அவர் தனது பேஸ்புக் கணக்கில் அச்சுறுத்தும் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக அனுராதபுரம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க,
அரசியல் செய்வது வாழ்வதற்காக அல்ல
“அரசியல் செய்வது வாழ்வதற்காக அல்ல என்றும், நமக்கு ஒரு நாடு வேண்டும் என்பதை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பும், பொதுத் தேர்தலுக்கு முன்பும் சொன்னோம். உலகில் வேறு எங்கும் இங்குள்ள சலுகைகள் இல்லை.
ஜனாதிபதிகள் ஓய்வு பெறும்போது அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடம் ஏன் விடப்படுகிறது. அவர்களால் அந்த சுமையை தாங்க முடியவில்லை.
நம் நாட்டில் இன்னும் மக்கள் கடுமையாக கஷ்டப்படும் பகுதிகள் உள்ளன. மக்கள் பணத்திலிருந்து இவ்வாறான பயன்பாடுகளை நிறுத்துவோம்.
நாங்கள் ஜனாதிபதிகளின் சலுகைகளையும் அவர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்களையும் மாற்றுகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தையும் இரத்து செய்வோம்.
சொந்தமாக சட்டமூலங்களை உருவாக்கி மக்கள் மீது சுமையை சுமத்துவது நியாயமில்லை. தேர்தலுக்கு முன்பே நாங்கள் அதைச் சொன்னோம், அதைச் செயல்படுத்துவோம்.
அரசியலை அவர்களின் வாழ்வாதாரமாக மாற்றுவார்களானால், அது நாங்கள் நிராகரித்த ஒரு முறைமையாகும்.
அதற்காக யாரும் தற்கொலை செய்துகொள்ள தேவையில்லை. அது இல்லாமல் வாழ முடியவில்லை என்றால் அஸ்வெசுமவுக்கு விண்ணப்பித்து அதனைப் பெற்றுக்கொள்ள முடியும்”
கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை
கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை
கல்விசீர்திருத்தம் பிள்ளைகள் தோல்வியடைய வாய்ப்பில்லை ,புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர
பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்
பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
யாழ்ப்பாண கிறிஸ்தவ இளைஞர் சங்க மண்டபத்தில் நேற்று (2) நடைபெற்ற வட மாகாண கற்றறிவாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடனான
சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
பாரம்பரிய கல்வி முறை
பாரம்பரிய கல்வி முறைக்குப் பதிலாக, பிள்ளைகள் கல்வி மற்றும் தொழிற் துறைகள் ஆகிய இரண்டு துறைகளிலும் உயர் கல்வியைத் தொடர உதவும்
வகையில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மூலம் வரலாறு, சமயம் மற்றும் அழகியல் ஆகிய பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிலர் இன்னும் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
இந்த தவறான கூற்றுகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை. வரலாறு, அழகியல் அல்லது சமயம் ஆகிய பாடங்கள் எந்த வகையிலும் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ்
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ், மாணவர் சமூகத்தின் மீது சுமையை ஏற்படுத்தும் கல்விக்கு பதிலாக, பிள்ளைகளுக்கு அழுத்தம் இல்லாமல் கற்றுக்கொள்ளவும்,
அவர்கள் விரும்பும் பாடங்களை மேலும் கற்பதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தொழிலை தேர்வுசெய்யவும் சரியான வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
தொழிற்கல்வியை பாடசாலைக் கல்வியினுள் கொண்டு வந்து, மாணவர்கள் கல்வித்துறை அல்லது தொழிற்கல்வி ஆகிய இரண்டு பாடப்
பிரிவுகளிலிருந்தும் தங்களுக்கு மிகவும் பொருத்தமான துறையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
தற்போதைய கல்வி சீர்திருத்தம் ஏற்கனவே தயாரித்து முடிக்கப்பட்ட இறுதி சீர்திருத்தம் அல்ல.
வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்
பாடங்கள் தொடர்பான வல்லுநர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் நேர்மறையான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைக் கருத்தில்
கொண்டு, தேவையானவற்றை இணைத்து, தேவையற்றவற்றை நீக்கி, படிப்படியாக மேற்கொள்ளப்படும் சீர்திருத்தம் இது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை
ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை
ஒருவர் கோரமாக வெட்டி படுகொலை ,முதுகட்டுவ கடற்கரையில் இருதரப்பு கடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதம் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பலியாகி உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவள் மாராவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய அடையாளம் காணப்பட்டுள்ளது.
படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும்
இலங்கையில் தற்பொழுது சமீப காலங்களாக பல வெட்டுப் படுகொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகிறது ,
மக்களுக்கிடையில் இடம் பெற்று வருகிற குரோத மனப்பான்மை காலமாகவே இந்த படுகொலைகள் இடம்பெற்று வருவதாக சமூகநல ஆர்வலர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றன .
அதன் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட நபர் தொடர்பான பல விடயங்கள் வெளிவந்துள்ள நிலையிலும் ,
படுகொலை படுகொலையை மேற்கொண்ட நபர் தற்பொழுது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட கோபம்
ஒரு நிமிடத்தில் ஏற்பட்ட கோபம் காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதனால் ஒருவருடைய வாழ்வியல் இன்று சிறைக்குள்
கழிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது மன வேதனைக்கு உள்ளான முடியுமாக காணப்படுகிறது.
ஒருநிமிட கோபம் பாவத்தை தேடும் என்பது இதுவாக காணப்படுகிறது என்பது தான் மிக முக்கியமான விடயமாக இருப்பதாக மக்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள் மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்ரேலியஇராணுவம் 119 பாலஸ்தீனியரை கொன்றது
இஸ்ரேலியஇராணுவம் 119 பாலஸ்தீனியரை கொன்றது
இஸ்ரேலியஇராணுவம் 119 பாலஸ்தீனியரை கொன்றது ,கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் 119 பாலஸ்தீனியர்களைக் கொன்றது
கடந்த 24 மணி நேரத்தில் சியோனிச ஆட்சியின் படைகள் காசாவில் 119 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் கடந்த 72 மணி நேரத்தில் காசாவில் 119 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 209 பேர் காயமடைந்தனர்,
இதனால் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இறப்பு எண்ணிக்கை 41,391 ஆக உயர்ந்துள்ளது என்று பாலஸ்தீன பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அனடோலு ஏஜென்சி (AA) படி, கடந்த அக்டோபர் முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 95,760 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சக அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
“மீட்புப் பணியாளர்களால் அவர்களை அடைய முடியாததால் பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று அது மேலும் கூறியது.
உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் இருந்தபோதிலும், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பாலஸ்தீன
குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேல் தனது கொடூரமான தாக்குதலைத் தொடர்கிறது.
காசா மீதான தொடர்ச்சியான முற்றுகை உணவு, சுத்தமான நீர் மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது, இதனால் அப்பகுதியின் பெரும்பகுதி இடிந்து விழுந்தது.
துருக்கி வெடிப்பில் 2பேர் பலி
துருக்கி வெடிப்பில் 2பேர் பலி
துருக்கி வெடிப்பில் 2பேர் பலி ,துருக்கியில் மயக்க மருந்து எரிவாயு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் 2 தொழிலாளர்கள் பலி.
மயக்க மருந்து எரிவாயு உற்பத்தி
துருக்கியில் மயக்க மருந்து எரிவாயு உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
டெகிர்டாக் மாகாணத்தின் எர்ஜீன் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அஸர்நியூஸ் தெரிவித்துள்ளது.
அவசரகால மீட்புக் குழுக்கள்
சம்பவ இடத்திற்கு காவல்துறை மற்றும் துணை மருத்துவர்கள் உட்பட அவசரகால மீட்புக் குழுக்கள் விரைவாக அனுப்பப்பட்டன.
சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
ஆர்மீனியா அமெரிக்கா கூட்டு இராணுவப்பயிற்சி
ஆர்மீனியா அமெரிக்கா கூட்டு இராணுவப்பயிற்சி
ஆர்மீனியா, அமெரிக்கா கூட்டு இராணுவப்பயிற்சி களை நடத்த உள்ளன
ஆர்மீனியாவும் அமெரிக்காவும் ஆகஸ்ட் 12-20 தேதிகளில் ஆர்மீனியாவில் கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தும் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி
சனிக்கிழமை ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்யாவின் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி,
இந்த பயிற்சி ஈகிள் பார்ட்னர் 2025 பயிற்சிகள் என்று பெயரிடப்படும், மேலும் இது அமைதி காக்கும் பணிகள் மற்றும் மருத்துவ வெளியேற்ற நடைமுறைகளில் கவனம் செலுத்தும்.
ஆர்மீனியா ரஷ்யாவின் ஒப்பந்த நட்பு நாடு
ஆர்மீனியா ரஷ்யாவின் ஒப்பந்த நட்பு நாடு மற்றும் பாரம்பரியமாக ஒரு நெருங்கிய கூட்டாளியாகும்,
இருப்பினும் யெரெவன் மேற்கு நாடுகளுடன் நெருக்கமாகி வருவதால் சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு உறவுகள் பதட்டமாகிவிட்டன என்று செய்தி வெளியிட்டுள்ள ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது
இஸ்ரேலை தாக்கின ஏமன் டிரோன்கள்
இஸ்ரேலை தாக்கின ஏமன் டிரோன்கள்
இஸ்ரேலை தாக்கின ஏமன் டிரோன்கள் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக யேமன் இராணுவம் 3 ட்ரோன் தாக்குதல்களை நடத்துகிறது
ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள இலக்குகள் மீது யேமன் இராணுவம் மூன்று ட்ரோன் தாக்குதல்களை
நடத்தியதாக யேமன் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் அறிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு அறிக்கையில். சியோனிச ஆட்சியின் குற்றங்களுக்கும், அல்-அக்ஸா மசூதியைத் தாக்கி அதன் அவமதிப்புக்கும்
பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக யேமன் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி கூறினார்.
அந்த அறிக்கையின்படி, யேமன் இராணுவ ட்ரோன் பிரிவு மூன்று சியோனிச ஆட்சியின் இலக்குகளை மூன்று ட்ரோன்கள் மூலம் குறிவைத்தது.
“இந்த நடவடிக்கையில், யாஃபா மற்றும் அஷ்கெலோன் மாவட்டங்களில் இரண்டு இராணுவ இலக்குகளும்,
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தில் உள்ள ஹைஃபா துறைமுகத்தில் மற்றொரு இலக்கும் தாக்கப்பட்டன,” என்று சாரி கூறினார்.
சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி
சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி
சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி யில் அடைந்துள்ளதை அங்கிருந்தவரும் காணொளிகள் காண்பிக்கின்றன.
50,000 மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்து குவிக்கப்பட்ட கதிரைகளில், 50 பேரும் இல்லாமல் பரிதவித்த நிலை கண்டு வெட்கி தலை குனிந்து போனது ஏற்பாட்டு குழு.
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்து விட்டதாக ,16 வருடங்களுக்கு பின்னர் விளக்கேற்ற வேண்டும் என வந்தவர்கள் இன்று வெட்கி தலை குனிந்த நிலை கண்டு உலகம் தமிழ் சிரிக்கிறது .

தமிழர் தேச இனத்தையும் , தமிழர் விடுதலையையும், தமிழ் இனத்தையும் கட்டிக்காத்த எங்களது கரிகால தலைவன் இறந்துவிட்டதாக, காட்டிக் கொடுத்த கயவர் கும்பல் அறிவித்தது.
மக்கள் மத்தியில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய தலைவர் வீரவணக்க நிகழ்வு
அந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய நிலையில் ,இன்று மூக்குடைப்பட்டு போய் இருக்கிறது இங்கே முன்னே வந்து கூறிய சிங்கள கூலிகள்.
இலங்கை சிங்கள உளவுத்துறையால் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வு பிசுபிசுத்து போனது.
நாங்கள் மேற்கொண்ட பரப்புரை காரணமாகவும் அதற்கு எதிராக பல தமிழர்கள் மேற்கொண்ட நிகழ்ச்சி நிரல் இன்று காணாமல் போய் உள்ளதை காண்பிக்கிறது .
ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு படு தோல்வி

ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு நடத்த வந்த விருமாண்டி கூட்டங்கள் ,இன்று கோமணத்துடன் ஓட வேண்டிய நிலையில் தலை குனிந்து நிற்பதை இந்த காட்சிகளை பார்த்த பின்னர் ஆவது தெரிந்து கொள்ளுங்கள்.
பல படையணிகள் என மலர் வளையம் வைக்கப்பட்டிருந்தது தான் சிரிப்பை ஏற்படுத்தியது. .
இந்த படையணிகளுடைய தளபதிகளில் யார் என்பதுதான் கேள்வியாகிறது.
ஆக மொத்தம் அலங்கோலமாய் போய் இருக்கிறது இந்த சிங்கு சா கைக கூலிகள் இந்த விளக்கேற்றல் நிகழ்வு.
வன்னி மைந்தன் டக் டாக் தளத்தில் இன்று இதுதான் பேசப்போகிறோம் லண்டன் நேரம் 5:00 மணிக்கு இணைந்து கொள்ளுங்கள் மக்களே .


ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி
ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி
ஆஸ்திரேலியா வீரவணக்கு நிகழ்வு தோல்வி அடைந்துள்ளதாக அங்கு திரண்ட மக்கள் கூட்டம் தெரிவித்துள்ளனர்.
திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தமிழருடைய மண்டபத்துக்கு முன்பாக திரண்ட பெரும் திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதனை அறிந்த கார்களில் வந்தவர் மண்டபத்துக்குள் நுழைய முடியாதபடி மக்கள் தடுத்தனர்.
தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.
தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள கூலிக் குழு ஒன்று வீரவணக்க நிகழ்வை நடத்த முற்பட்டது.
முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள்
முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள் ,தலைவர் இறந்துவிட்டார் என உரிமை கூற முற்பட்டதை அடுத்து ,மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் முறுகல் இடம்பெற்றுள்ளது .

அடையாளம் தெரியாத சிங்கள கூலிகளாகவும் இந்திய கூலிகளுக்கும் செயல்படும் கூலிகளே தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என இந்த வீரவணக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதனைக் கண்டித்து தலைவர் மீதும் தமிழீழ மண் மீதும் தமிழீழ மக்கள் மீதும் பாசம் கொண்ட அறத்தமிழர்கள் திரண்டு எழுந்து தமது எதிர்ப்பை காட்டினர்.
இதனால் அந்த நிகழ்வு தோற்றுப் போனதை கீழே உள்ள காட்சிகள் ஊடாக நீங்கள் காணலாம்.
தலைவரையும் தமிழீழ மண்ணையும் நேசிக்கிற மானத் தமிழர்கள் இப்படித்தான் கிளெர்ந்தெழுவார்கள் என்பது சிங்கள கூலிகளுக்கும் வாடகை வாய்களுக்கும் இது ஒரு சாட்டை அடியாக காணப்படுகிறது.
இன்று மதியம் லண்டநேரம் ஐந்து மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் இதுதான் பேச்சு.


தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர்
தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள்போர் ,தலைவருக்கு வீரவணக்கம் வெடித்த மக்கள் போர் ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் இடம்பெற்று வருகின்ற தலைவர் பிரபாகரன் அவர் வீரமரணம் அடைந்துவிட்டார் என்ற
விளக்கேற்ற நிகழ்வுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தலைவர் இறந்துவிட்டார் என தெரிவித்து இலங்கை அனுரா அரசின் ஏற்பாட்டில் இவ்வாறான சித்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தலைவர் இறந்தால் அதற்கான ஆதாரத்தை காட்டும்படி கேட்ட பொழுது அதை காண்பிக்க மறுத்த இந்த கூட்டங்கள் தற்பொழுது இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது .
இதற்கு எதிராக தற்பொழுது சர்வதேச ரீதியில் மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்து வருகின்றனர்.
அதேபோன்று ஆஸ்திரேலியா மற்றும் ஸ்விஸ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களுக்கு முன்பாக கூடிய தமிழர்கள் மிகப் பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் அங்கு பெரும் முறுகல் நிலை அடைந்துள்ளதால் போலீசார் மேலதிகமாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று
செம்மணியில் மீட்கப்பட்ட 54 சான்று ப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட 54 சான்றுப் பொருட்களை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
அடையாளம் காண உதவும் வகையில் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி, யாழ் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த
விண்ணப்பத்தின் அடிப்படையில், இந்தச் சான்றுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05-08-2025) மதியம் 1:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை,
அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில்
அரியாலை சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் இப்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
செம்மணி புதைகுழிகளில் இதுவரை மீட்கப்பட்ட சான்றுப் பொருட்களில் புத்தகப் பைகள், சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போத்தல், வளையல்கள் உள்ளிட்ட 54 பொருட்கள் அடங்கும்.
இவை தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. இப்பொருட்களை அடையாளம் காணக்கூடியவர்கள், நீதிமன்றத்திற்கு அல்லது குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் தெரிவித்து, விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சான்றுப் பொருட்களைப் பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் நாளை (02) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து
முட்டைகளை கழுவிசேமித்து வைப்பதால் ஆபத்து முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக
முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட புலின ரணசிங்க,
“முட்டை ஓடு என்பது முழுமையாக மூடப்பட்ட ஒன்றல்ல. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது,
மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே செல்லும்.
முட்டையின் உள்ளே புரதம் நிறைந்துள்ளது. நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும். எனவே, கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது.
இதன் பொருள் முட்டைகளை சமைக்கும்போது கழுவ வேண்டும் என்பதல்ல.
கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி செய்யப்படுவதில்லை என்று நினைக்கிறேன். முட்டை உற்பத்தி செயல்முறையின் போது அழுக்கு, தூசி
மற்றும் மலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நல்ல தரமான முகாமைத்துவ முறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உள்ளன.
உலகில் சாதாரணமாக முட்டைகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை இயந்திரங்களின் ஊடாகவே மேற்கொள்வது வழக்கம். அவைகள் கழுவி சுத்தப்படுத்தப்படுவதில்லை” என்றார்.
22 பேர் கடற்படையினரால் கைது
22 பேர் கடற்படையினரால் கைது
22 பேர் கடற்படையினரால் கைது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், டைவிங் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி
முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 நபர்களுடன் 5 டிங்கி படகுகளையும் கடற்படை கைது செய்துள்ளது.
கடற்படை, பொலிஸார்
கடற்படை, பொலிஸார் மற்றும் மீன்வளம் மற்றும் நீர்வளத் துறை ஆகியவை ஜூலை 23 முதல் 31 வரை நாட்டின் கடல் எல்லைகளை உள்ளடக்கியதாக இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டன.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த 210 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டார்.
திருகோணமலையின் கோட்பே, கும்புறுப்பிட்டி, கிண்ணியா, மூதூர் மற்றும் மன்னாரின் கக்கரதீவு
ஆகிய கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சொத்துக்களை குவித்த நபர் கைது
சொத்துக்களை குவித்த நபர் கைது
சொத்துக்களை குவித்த நபர் கைது ,பிலியந்தலை, போகுந்தர பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் போதைப்பொருள் வர்த்தகத்தின் ஊடாக ஈட்டிய
பணத்தின் மூலம் சொத்துக்களை வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள்
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேக நபர் கடந்த 29 ஆம் திகதி பணமோசடி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போகுந்தர, பிலியந்தல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபரின் முந்தைய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையில், அவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர் சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 3 கோடி ரூபாவைக் கொண்டு வாங்கிய பிலியந்தலை பகுதியில் உள்ள ஒரு நிலம், பணமோசடி சட்டத்தின் கீழ் 9ஆம் திகதி முதல் 7 நாட்களுக்கு முடக்கப்பட்டது. இது
தொடர்பாக ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர், இந்த முடக்கம் தொடர்பான உத்தரவை 15.10.2025 வரை நீதிமன்றம் நீடித்துள்ளது.
இதேவேளை, சந்தேகநபர் கடந்த 29ஆம் திகதி கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும்
தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டார்.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்
கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம்
கண்டியில் விசேட போக்குவரத்து திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஸ்ரீ தலதா மாளிகை எசல பெரஹெரவின் நான்காவது கும்பல் பெரஹெர இன்று (2) இடம்பெறவுள்ளது.
குறித்த காலப்பகுதியில் செயல்படுத்தப்பட வேண்டிய போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துத் திட்டம் மற்றும் மாற்று வழிகள் பின்வருமாறு,
கட்டுகஸ்தொடையிலிருந்து கண்டி நகரத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹய்யாவ சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக பொலிஸ் சந்தி வழியாக கண்டி நகரத்திற்கு பயணிக்க முடியும்.
கட்டுகஸ்தோட்டையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க வீதி வழியாக உள்ளே நுழைந்து, குறுக்கு வீதியைக் கடந்து யட்டிநுவர வீதிக்குச் சென்று, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் தேவாலயத்திற்கு அருகில் இடதுபுறம் திரும்பி, திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாகச் செல்லலாம்.
கட்டுகஸ்தொடை நோக்கிச் செல்லும் வாகனங்கள், பொலிஸ் சந்தியிலிருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியாக மஹய்யாவ நோக்கிச் செல்லலாம்.
தென்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியாக வேல்ஸ் பார்க் சந்திக்குச் சென்று எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பலாம். ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள
போகம்பரை நோக்கிச் செல்லும் வாகனங்களும், கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்களும் இடதுபுறமாகவும், கண்டி நகரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்லலாம்.
அதேபோல ரஜபிஹில்ல மாவத்தை சந்தியிலிருந்து பள்ளிவாசல் வீதி வழியாகவும் கண்டி நகரத்திற்குள் நுழையலாம்.
நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய வீதியில் பயணிக்கும் வாகனங்களானது கடிகார கோபுர சுற்றுவட்டத்திலிருந்து தலதா வீதி வழியாகச் சென்று, குயின்
ஹோட்டலின் பக்கவாட்டு நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஜோய் படகு சேவையைக் கடந்து, சங்கராஜ மாவத்தை வழியாகச் செல்லலாம்.
மேலும், போகம்பர சுற்றுவட்டத்தில் எஹெலேபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி ஊடாக சங்கராஜ மாவத்தை வழியாக அம்பிட்டிய மற்றும் தென்னேகும்புர நோக்கிச் செல்லலாம்.
பள்ளிவாசல் வீதி இரு பக்கங்களுக்கும் பயணிக்கும் வகையில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து கண்டி நகருக்குள் நுழையும் மற்றும் கண்டியிருந்து கொழும்பு நோக்கி வெளியேறும் வாகனங்கள் பழைய பேராதனை வீதி மற்றும் வில்லியம் கோபல்லவ மாவத்தை வழியாக பயணிக்க முடியும்.
கண்டி எசல பெரஹெர கடந்த 30ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், எதிர்வரும் 8ஆம் திகதி வரை வீதி ஊர்வலம் இடம்பெறும்.
இதற்காக பொலிஸார் விசேட பாதுகாப்பு திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள்
மற்றும் மக்களைச் சரிபார்த்தல், சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட விசேட திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து
அவிசாவளை பேருந்து கவிழ்ந்து விபத்து ,கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் 41 பேர் பயணித்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெரணியகலையில் இருந்து அவிசாவளை கைத்தொழில் பேட்டைக்கு பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்
ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்
அய்யனாரே பக்தி பாடல் |aiyanare aiyanare pakthi paadal சுடரி என அழைக்கப்படும் கௌரி அவர்களது ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல் வெளியாகியுள்ளது .
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இசை – இலங்கை செல்லப்பா வெளியீடு – எதிரி இனையம் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக அறிமுகமாகும் 16 வது பாடலாசிரியராக சுடரி அல்லது கவுரி அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுளளார் .
புதிய சாமி பாடல் குத்து இசை
சாமி பாடல் குத்து இசையில் சிறப்பாக வெளி வந்துள்ளது ,வாழ்த்துக்கள் சுடரி அக்கா கவுரியின் ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் இணைந்து முன்னெடுக்கும் நூறு பாடல் உருவாக்கத்தில் 16 வது பாடலாசிரியராக சுடரி அறிமுக படுத்த பட்டுளளார் .
ஜெர்மனியை சேர்ந்த பாடலாசிரியர் சுடரி
ஜெர்மனியை சேர்ந்த பாடலாசிரியர் சுடரியை அடுத்து ,தொடர்ந்து மேலும் பல உறவுகள் அறிமுகம் செய்ய படவுள்ளனர் .
இத்தகையை திறமை கொண்டவர்களை ,பாடல் ஆசிரியராக அறிமுகம் செய்து வரும் ,இளங்கோ செல்லப்பா மற்றும் ,பாடகர் பாவேந்தன் ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
கொஞ்சம் எடு பயிற்சி ,கொஞ்சம் எடு முயற்சி ,,நாளை நீயே தான் சாதனையாளன் .
இதில் அழுத்தி சுடரி பாடல் காட்சியை பார்க்கவும்
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

புதிய பேட்ரியாட் வான் பாதுகாப்பு
புதிய பேட்ரியாட் வான் பாதுகாப்பு
புதிய பேட்ரியாட் வான் பாதுகாப்பு ,கியேவுக்கு 2 பேட்ரியாட் அமைப்புகளை வழங்க அமெரிக்காவுடன் ஜெர்மனி உடன்படுகிறது.
வான் பாதுகாப்பு அமைப்பு
பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பெறுவது குறித்து ஜெர்மனி அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது, இது பெர்லின்
தனது இரண்டு பழைய அமைப்புகளை உக்ரைனுக்கு மாற்ற உதவும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ஆரம்பத்திலிருந்தே, கியேவுக்கு அமைப்பு கூறுகளை வழங்க ஜெர்மனி தயாராக இருப்பதாக அறிவித்தது.
கூட்டணிக்கான தனது கடமைகளை ஜெர்மனி தொடர்ந்து நிறைவேற்றும் வகையில், அமெரிக்க உற்பத்தியாளரால்
புதிய பேட்ரியாட் அமைப்புகளை முன்கூட்டியே வழங்குவதே கட்டாய நிபந்தனையாகும்.
இந்த உறுதிமொழியை அமெரிக்கா நிறைவேற்றியுள்ளது. எனவே, ஜெர்மனி முதலில் உக்ரைனை ஏவுகணைகள் மூலமாகவும், பின்னர்
கூடுதல் பேட்ரியாட் அமைப்பு
கூடுதல் பேட்ரியாட் அமைப்பு கூறுகள் மூலமாகவும் ஆதரிக்க முடியும்,” என்று அமைச்சகத்தின் செய்தி சேவை, உயர் ஜெர்மன் பாதுகாப்பு அதிகாரி போரிஸ் பிஸ்டோரியஸ் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.
அமைச்சகத்தின் கூற்றுப்படி, பன்டேஸ்வெர் உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகளை “வரும் நாட்களில்” வழங்கும். அடுத்த இரண்டு முதல் மூன்று
மாதங்களுக்குள் கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள் கியேவிடம் ஒப்படைக்கப்படும்.







































