Tag: படுதோல்வி
சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி
சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி
சுவிசில் விளக்கேற்றல் நிகழ்வு படுதோல்வி யில் அடைந்துள்ளதை அங்கிருந்தவரும் காணொளிகள் காண்பிக்கின்றன.
50,000 மக்கள் வருவார்கள் என எதிர்பார்த்து குவிக்கப்பட்ட கதிரைகளில், 50 பேரும் இல்லாமல் பரிதவித்த நிலை கண்டு வெட்கி தலை குனிந்து போனது ஏற்பாட்டு குழு.
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வீர மரணம் அடைந்து விட்டதாக ,16 வருடங்களுக்கு பின்னர் விளக்கேற்ற வேண்டும் என வந்தவர்கள் இன்று வெட்கி தலை குனிந்த நிலை கண்டு உலகம் தமிழ் சிரிக்கிறது .

தமிழர் தேச இனத்தையும் , தமிழர் விடுதலையையும், தமிழ் இனத்தையும் கட்டிக்காத்த எங்களது கரிகால தலைவன் இறந்துவிட்டதாக, காட்டிக் கொடுத்த கயவர் கும்பல் அறிவித்தது.
மக்கள் மத்தியில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய தலைவர் வீரவணக்க நிகழ்வு
அந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் சலசலப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்திய நிலையில் ,இன்று மூக்குடைப்பட்டு போய் இருக்கிறது இங்கே முன்னே வந்து கூறிய சிங்கள கூலிகள்.
இலங்கை சிங்கள உளவுத்துறையால் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட இந்த நிகழ்வு பிசுபிசுத்து போனது.
நாங்கள் மேற்கொண்ட பரப்புரை காரணமாகவும் அதற்கு எதிராக பல தமிழர்கள் மேற்கொண்ட நிகழ்ச்சி நிரல் இன்று காணாமல் போய் உள்ளதை காண்பிக்கிறது .
ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு படு தோல்வி

ஆஸ்திரேலியா மற்றும் சுவிஸ் நாடுகளில் தலைவருக்கு வீரவணக்க நிகழ்வு நடத்த வந்த விருமாண்டி கூட்டங்கள் ,இன்று கோமணத்துடன் ஓட வேண்டிய நிலையில் தலை குனிந்து நிற்பதை இந்த காட்சிகளை பார்த்த பின்னர் ஆவது தெரிந்து கொள்ளுங்கள்.
பல படையணிகள் என மலர் வளையம் வைக்கப்பட்டிருந்தது தான் சிரிப்பை ஏற்படுத்தியது. .
இந்த படையணிகளுடைய தளபதிகளில் யார் என்பதுதான் கேள்வியாகிறது.
ஆக மொத்தம் அலங்கோலமாய் போய் இருக்கிறது இந்த சிங்கு சா கைக கூலிகள் இந்த விளக்கேற்றல் நிகழ்வு.
வன்னி மைந்தன் டக் டாக் தளத்தில் இன்று இதுதான் பேசப்போகிறோம் லண்டன் நேரம் 5:00 மணிக்கு இணைந்து கொள்ளுங்கள் மக்களே .










