Author: நிருபர் காவலன்
இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார்
இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார்
இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார் ,நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டம்பர் மாதம் 21ஆம்
இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி
திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி, Admiral Dinesh K Tripathi, பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை செவ்வாய்க்கிழமை (23) சந்தித்தார்.
இந்திய கடற்படைத் தளபதி மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இரு
நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியமான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத
மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சவால்களுக்கு முகம்
மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் கூட்டு அணுகுமுறையுடன் செயற்படுவதன் முக்கியத்துவமும் பற்றி
வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை இந்திய அரசாங்கத்தினால் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை கடற்படை 12ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யும் காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 இல் கலந்துகொண்டதன்
பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதி இந்திய கடற்படைத் தலைவர் Admiral Dinesh K Tripathi மீண்டும் நாடு திரும்ப இருக்கின்றார்.
இச்சந்திப்பில் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா
போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் தெற்காசிய மற்றும் SARCC பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ,திருகோணமலை,உட்துறைமுகம் கடலில்கட்டுவலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலைகளில் இருந்து மீன்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும்,திருடர்களை சட்டரீதியாக தண்டிக்குமாறு கோரியும் புதன்கிழமை
தமிழ் மற்றும் சிங்களமீனவர்சங்கங்கள்
(24) அன்று தமிழ் மற்றும் சிங்களமீனவர்சங்கங்கள் இணைந்து, உட்துறைமுகம் வீதியில் அமைந்துள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசடி புனிதசூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இப்போராட்டத்தை தொடர்ந்து தமது கோரிக்கைகள்
அடங்கிய மனுவை,மீனவர் சங்கப் பிரதிநிதிகள் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் உதவிப்பணிப்பாளரிடம் கையளித்தனர்.
இப்போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த சங்கத்தின் முன்னாள் தலைவரும்,தற்போதைய ஆலோசகருமான இ.பாக்கியராசா கூறுகையில் “உட்
துறைமுக கடற்பரப்பில் எம்மால் மேற்கொள்ளப்படும் கட்டுவலை தொழிலுக்கு,இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலரால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
1.எமது மீனவர்சங்கஅங்கத்தவர்களால் 56 இடங்களில் கட்டுவலை அமைக்கப்பட்டு மீன்பிடி நடைபெறுகிறது.
கட்டுவலைகளில் உள்ளகூடுகளில் நிற்கும்
2.மேற்படி கட்டுவலைகளில் உள்ளகூடுகளில் நிற்கும் கணவாய்மீன்களை சிலர்திருடுகின்றனர்.
3.கணவாய்களை பிடிப்பதற்கான அவர்கள் பயன்படுத்தும் விசேடதூண்டிலினால் எமதுகட்டுவலைகள் சேதமடைகின்றது.
4.வலைகள் சேதமடையும் போதுகூட்டில் உள்ளமீன்கள் வெளியேறி விடுகின்றன.
5.இதனால் வலைகள்சேதமடைவது டன்,மீன்கள் வெளியேறுவதால் வருமானம் முழுவதும் இழக்கப்படுகின்றது.
எனவேஇவ்வாறு திருட்டில் ஈடுபடுபவர்களை சட்டரீதியாக தடுக்கவும் ,திருடர்களுக்கு உரிய தண்டனை வழங்கி திருட்டுக்கள் தொடராது இருப்பதை உறுதிப்படுத்துமாறும் நாங்கள் உரிய அதிகாரிகளை வேண்டுகின்றோம்.
இந்த உட் துறைமுக கடற்பரப்பில் 1935 ம்ஆண்டு முதல் நான்கு தலைமுறையாக இந்த கட்டுவலைத் தொழில் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆரம்பத்தில் பிளான் ரன் பொயின்ட் முகாமையை அண்மித்த கடற்பரப்பில் இருந்து கடற்படை முகாம் வரையிலான கடல் பகுதியில் 64 இடங்களில் கட்டுவலை அமைக்கப்பட்டு மீன்பிடி நடைபெற்று வந்தது.
உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம்,கட்டு வலைகளின் எண்ணிக்கை 56 ஆக குறைவடைந்தது.கடற்படை முகாமை அண்மித்த கட்டுவலைகள் அகற்றப்பட்டது.
1935 ம் ஆண்டு முதல் இக்கட்டுவலைத் தொழில் இப்பகுதியில் செய்யப்பட்டு வந்த போதும்,1993ம்ஆண்டில் முதல் முறையாக இத்தொழிலுக்கென அனுமதிப்பத்திரம் கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டது.
அது வருடாந்தம் புதிப்பிக்கப்பட்டு வருகின்றது.ஆழம் குறைந்த கடற்ப்பரப்பில் மட்டுமே இக்கட்டு வலைத் தொழில் செய்ய முடியும்.2019 ம் ஆண்டின் பின்னர் சிலர் எமது கட்டுவலைகளில் கணவாய்களைத் திருட தொடங்கினர்.
இதனால் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியது. உட் துறை முகப்பகுதியில் தூண்டில் மீன்பிடி,வலையை பயன்படுத்தி மீன் பிடித்தல்,கரைவலைமீன்பிடி என்ற மேலும் மூன்று வேறு மீன்பிடித் தொழில்களும் நடைபெற்று வருகின்றது.
கட்டுவலைத் தொழில் மேற்படி மூன்று தொழில்முறைகளுக்கு இடையூறு எதுவும் ஏற்படுத்தாது நடைபெற்று வருகின்றது.
அதே வேளை மேற்படி மூன்று மீன்பிடியாளர்களால் கட்டுவலைத் தொழிலுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் எமது கட்டுவலைகளில் மீன்களை(கணவாய்)திருடும் சிலரை பலமுறைகையும் களவுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம்.
ஆனால் அடுத்த நாளே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியில் வந்து மீண்டும் திருட்டில் ஈடுபடுகின்றார்கள்.
இது பற்றி கஸ்தூரி நகர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு அறிவித்தோம்.
ஆனால்திருடர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது உள்ளது.நீங்கள் சட்ட ரீதியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.
அதற்கு நாங்கள் தடையில்லை என்றுஅந்த சங்க நிர்வாகிகள் எழுத்து மூலம் எமக்குஅறிவித்துள்ளனர்.
இம் முரண்பாடுகள் தொடரும் நிலையில் அது இரு பகுதியினருக்கும் இடையில் பெரும் மோதல் நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாங்கள் அஞ்சுகின்றோம்.
எனவே மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு பின்வரும் தீர்வுகளை எமக்கு வழங்கி இவ்முரண்பாட்டு நிலையை முடிவுக்கு கொண்டு வர உதவுமாறு வேண்டுகிறோம்.
உரிய அரச அதிகாரிகளை வேண்டி நிற்கின்றோம். தீர்வுகள்
1.ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலத்தில் கணவாய் மீன்கள் கரையை நோக்கி வரும்.
இக்காலப்பகுதியில் தான் கணவாய் திருட்டு அதிகளவில் இடம் பெறும்.எனவே இது முற்றாக தடுக்கப்படல் வேண்டும்.
2.திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு சட்டரீதியாக உச்சபட்சத் தண்டனை வழங்கப்படல் வேண்டும்
.3.திருட்டின் போதுகட்டுவலை சேதமாக்கப்பட்டால் அதற்குரிய முழுமையான நட்டஈடும் திருட்டில் ஈடுபட்டவரால் உரிய கட்டுவலை உரிமையாளருக்கு வழங்கப்படல் வேண்டும்.
4.உட்துறைமுக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுவலை,தூண்டில் முறை,வலைத்தொழில்,கரைவலைத் தொழில் என்பவற்றை
சுதந்திரமாகவும்,எவருக்கும் மற்றைய தொழில்செய்பவரால் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படாமலும் இருப்பதற்கேற்ற ஒழங்குவிதிகளை ஏற்படுத்தலும்,அதனை நடைமுறைப்படுத்தி கண்காணிப்பதும்.
இறுதியாக எமது பாதிப்புக்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் முன்வைத்து நடக்கும் இப்போராட்டம் மூலம் வெற்றி கிடைக்காவிட்டால்
அடுத்து நீதித்துறையிடம் நேரடியாக முறையிட எண்ணியுள்ளோம் “என்று அவர் கூறினார்.
நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு
நள்ளிரவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ,நோர்வே தலைநகர் ஆஸ்லோவில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சந்தேகப்படும்படியான மூவரை பொலிஸார் கைது செய்துள்னளர்.
பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில்
பார்க்வீன் மற்றும் பைல்ஸ்ட்ரெட் பகுதியில் இந்த இரண்டு குண்டுவீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிப்போர் அச்சமும், பீதியும் அடைந்தனர்.
நோர்வே பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்த பகுதியைச் சுற்றி வளைத்த அவர்கள், தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது அங்கு வெடிக்காமல் இருந்த கையெறி குண்டு ஒன்றை கண்டுபிடித்து, செயலிழக்கச் செய்தனர்.
அங்கு சுற்றித்திரிந்த சந்தேக நபர்கள் மூவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து
குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஆஸ்லோ பொலிஸ் தலைவர் பிரையன் ஸ்கொட்னஸ் கூறியதாவது;
மத்திய ஆஸ்லோ பகுதியில் குண்டு வெடித்துள்ளது. தேடுதல் வேட்டையின் போது சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்திருக்கிறோம். அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களையும் தேடி வருகிறோம்.
சம்பவம் நடந்த இடம், தற்போது முழு பொலிஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிஸ்லெட் ஸ்டேடியத்தில் இருந்து கார் ஒன்று சந்தேகத்துக்கு இடமாக சென்றதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
காரில் இருந்து இரு கையெறி குண்டுகளை அவர்கள் வீசிச் சென்றதாக சம்பவத்தை பார்த்தவர்கள் கூறி இருக்கின்றனர். விசாரணை தொடர்கிறது.
குண்டுகள் வெடித்த பகுதிக்குள் யாரும் நுழைய வேண்டாம், குடியிருப்புகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அப்பகுதி மக்களை பொலிஸார் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு
இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு
இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) அமர்வின் ஒரு பகுதியாக, இலங்கை
வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர்
வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.
அமைச்சர் விஜித ஹேரத் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் ஒரு பதிவில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும்
நெருக்கமான ஒத்துழைப்பை இந்த விவாதம் மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் விஜித ஹேரத் நியூயார்க்குக்கு செல்கின்றார், அங்கு ஜனாதிபதி புதன்கிழமை (24) அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (UNGA) இல் உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு
பேச்சுவார்த்தை களையும் நடத்துவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில்,அமைச்சர் ஹேரத் அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் அலிசன் ஹூக்கரையும் சந்தித்தார்.இருதரப்புஒத்துழைப்பை வலுப்படுத்துவது
மற்றும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னேற்றுவது குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது
அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி
அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி
அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி ,ஹரியானாவில், தெருவில் சுற்றித்திரிந்த 20 பசுக்கள் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை
ஜீரணிக்க முடியாத உணவை தின்று பசுக்கள் உயிரிழந்தது
ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையில் அல்வா, பூரி போன்ற ஜீரணிக்க முடியாத உணவை தின்று பசுக்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
ஹரியானாவின் ஹிசாரில், ‘கோ சேவா ஹெல்ப் லைன் சமிதி’ என்ற தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை மீட்டு
பராமரிக்கும் பணியில், இந்த அமைப்பு
பராமரிக்கும் பணியில், இந்த அமைப்பு ஈடுபடுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் இங்குள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த, 20க்கும் மேற்பட்ட
பசுக்கள் பலியாகியுள்ளதாக, இந்த அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமான சீதா ராம் சிங்கால் தெரிவித்தார்.
ஹிசாரில் தினமும் சராசரியாக இரண்டு தெரு பசுக்கள் இறக்கின்றன. இது இயற்கையாகவோ, நோய் பாதிப்பு காரணமாகவோ, விபத்தினாலோ
பலியாகின்றன. நகரில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 பசுக்கள் இறந்துள்ளன. இவை பெரும்பாலும் மக்கள் தரும் அல்வா, பூரி,
வறுத்த தின்பண்டங்கள் போன்ற உணவுகளை தின்று, அதனால் அமிலத்தன்மை அதிகரித்து இறக்கின்றன இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு
ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு
ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இடையிலான சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்
செயலாளர் அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றதுடன் கடந்த வருடத்தில் மனித
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை
நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நைஜரில் குறைந்தது 34 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
நைஜரில் குறைந்தது 34 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்
நைஜரில் குறைந்தது 34 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ,நைஜரில் குறைந்தது 34 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் இராணுவ நடவடிக்கை: இராணுவம்.
நைஜரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள்
நைஜரின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் படைகள் கடந்த வாரத்தில் டோசோ மற்றும் தில்லாபெரியின் மேற்குப் பகுதிகளில் நடத்தப்பட்ட இரண்டு
நடவடிக்கைகளில் குறைந்தது 34 பயங்கரவாதிகளைக் கொன்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.
சனிக்கிழமை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இராணுவத்தின் வாராந்திர செய்திக்குறிப்பின்படி, டோசோ பிராந்தியத்தில் உள்ள டூபால்மா
அருகே புதன்கிழமை முதல் மோதல் நடந்தது, சௌகூகுடேனில் இருந்து ரோந்து சென்ற சுமார் 50 ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களைத் தாக்கியதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
வான்வழி ஆதரவுடன் அதன் படைகள்
வான்வழி ஆதரவுடன் அதன் படைகள் குறைந்தது 22 தாக்குதல்காரர்களைக் கொன்றதாகவும், பலர் காயமடைந்ததாகவும், மீதமுள்ள தாக்குதல்காரர்கள்
மாலி எல்லையை நோக்கி ஓடிவிட்டதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. பதுங்கியிருந்த தாக்குதலில் ஏழு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று அது மேலும் கூறியது.
வெள்ளிக்கிழமை, தில்லாபெரி பிராந்தியத்தில் உள்ள மங்காயிஸ் அருகே திருடப்பட்ட கால்நடைகளை ஏற்றிச் செல்லும் மோட்டார் சைக்கிள்களில் வந்த பயங்கரவாதிகள் குழுவை மற்றொரு வான்வழி நடவடிக்கை குறிவைத்ததாக
இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் குறைந்தது 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், ஆறு மோட்டார் சைக்கிள்கள்
அழிக்கப்பட்டன, மேலும் அனைத்து திருடப்பட்ட கால்நடைகளையும் மீட்க முடிந்தது.
அணு ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை வடகொரியா
அணு ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை வடகொரியா
அணு ஆயுதங்களை கைவிட விரும்பவில்லை வடகொரியா ,பியோங்யாங் கைவிட விரும்பவில்லை என்று கிம் ஜாங் உன் கூறுகிறார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், நாடு தனது அணு ஆயுதங்களை கைவிடாது என்று அறிவித்ததாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“இப்போது கூட, அமெரிக்க அணு ஆயுதங்களை கைவிடும் மந்திரத்தை ஆதரிக்கும் பல சக்திகள் உள்ளன.
இந்த சக்திகள் வட கொரியாவின் இறையாண்மையை புறக்கணித்து அதை தீவிரமாக ஆக்கிரமித்துள்ளன,”
என்று கிம் ஜாங் உன் கூறினார். அவரைப் பொறுத்தவரை, பியோங்யாங்கின் அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான அழைப்புகள் அரசியலமைப்பு
ஒழுங்கின் மீதான அத்துமீறலுக்கு சமம், ஏனெனில் டிபிஆர்கேவின் அணு ஆயுத அந்தஸ்து நாட்டின் அடிப்படைச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு நாம் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்
“நாம் அரசியலமைப்பிற்கு முரணான செயலைச் செய்யலாமா? அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு நாம் ஏன் ஒப்புக்கொள்ள வேண்டும்?” கிம் ஜாங் உன் கூறினார். “தடைகளை நீக்கவா? அப்படி!”
என்று அவர் மேலும் கூறினார். புதிய தென் கொரிய நிர்வாகம் முன்மொழிந்த மூன்று கட்ட அணு ஆயுதங்களை அகற்றும் கருத்தையும் அவர் குறிப்பிட்டார்,
இதில் அணு ஆயுத திட்டத்தை முடக்குதல், ஆயுதக் கிடங்குகளைக் குறைத்தல் மற்றும் முழுமையாக கைவிடுதல் ஆகியவை அடங்கும்.
“சமீபத்தில், அவர்கள் ஒருவித படிப்படியாக அணு ஆயுதங்களை கைவிடும் யோசனையை முன்வைத்தனர், இதன் மூலம் எங்களுடன் உரையாடலுக்கான
அடித்தளத்தை தங்கள் கைகளால் அழித்தார்கள்” என்று கிம் ஜாங் உன் வலியுறுத்தினார்.
“நாங்கள் அணு ஆயுதங்களை கைவிட மாட்டோம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
செப்டம்பர் 19 அன்று, தென் கொரிய அதிபரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வை சுங்-லக், பேச்சுவார்த்தைகளின் போது அணு ஆயுதங்களை அழிப்பதற்கு
ஈடாக வட கொரியாவுக்கு பகுதியளவு தடைகள் நிவாரணம் வழங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஐ.நா.வை ஹமாஸ் அழைக்கிறது
ஐ.நா.வை ஹமாஸ் அழைக்கிறது
ஐ.நா.வை ஹமாஸ் அழைக்கிறது ,இஸ்ரேலை தனிமைப்படுத்த சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா.வை ஹமாஸ் அழைக்கிறது.
இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ்
இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கமான ஹமாஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததை
வரவேற்றுள்ளது, இது பாலஸ்தீன மக்களின் நிலத்தின் மீதான உரிமையை உறுதிப்படுத்துவதில் ஒரு முக்கியமான படியாக விவரிக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், இயக்கம் சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் இஸ்ரேலை தனிமைப்படுத்தி அதனுடன் அனைத்து வகையான ஒத்துழைப்பையும் நிறுத்துமாறு அழைப்பு விடுத்தது.
அல்-குத்ஸை (ஜெருசலேம்) மூலதனமாகக் கொண்ட ஒரு சுதந்திரமான அரசுக்கான விருப்பங்களுடன், பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலம் மற்றும் புனித
தளங்கள் மீதான உரிமையை உறுதிப்படுத்துவதில் இந்த அங்கீகாரம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக ஹமாஸ் பாராட்டியது.
விடுதலை மற்றும் மீள்குடியேற்றத்திற்கான
விடுதலை மற்றும் மீள்குடியேற்றத்திற்கான அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தில் “நமது மக்களின் போராட்டம், உறுதிப்பாடு மற்றும் தியாகங்களின் தகுதியான விளைவு” என்று ஹமாஸ் விவரித்தது.
காசா பகுதியில் “கொடூரமான இனப்படுகொலைப் போர்” என்று அவர்கள் அழைத்ததை உடனடியாக நிறுத்துவது மற்றும் மேற்குக் கரை மற்றும் அல்-
குத்ஸில் இணைப்பு மற்றும் யூதமயமாக்கல் முயற்சிகளை எதிர்ப்பதற்கான முயற்சிகள் உள்ளிட்ட நடைமுறை நடவடிக்கைகளால் இந்த அங்கீகாரம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று இயக்கம் வலியுறுத்தியது.
ஹமாஸ் தனது அறிக்கையில், இஸ்ரேலை தனிமைப்படுத்தவும், அதனுடன் அனைத்து வகையான ஒத்துழைப்பையும் நிறுத்தவும் சர்வதேச சமூகத்தையும் ஐக்கிய நாடுகள் சபையையும் கேட்டுக் கொண்டது.
இஸ்ரேலுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளை அதிகரிக்கவும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு அதன் தலைவர்கள் பொறுப்பேற்கப்படவும் இந்த இயக்கம் வலியுறுத்தியது.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான “கொடூரமான மீறல்களை” எடுத்துக்காட்டும் வகையில், சர்வதேச சட்டங்கள் மற்றும் மனிதாபிமான விதிமுறைகளை இஸ்ரேல் தொடர்ந்து மீறி வருவதை இந்த அறிக்கை விமர்சித்தது.
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய் ,விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு “ஒரு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்
தாயைப் போன்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் நடந்த தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார்.
“உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எங்கள் உறவினர்களான ஈழத் தமிழ் மக்கள், தாய் பாசத்தைக் காட்டிய ஒரு தலைவரை இழந்து தவிக்கின்றனர்.
எனவே, அவர்களுக்காகப் பேசுவது எங்கள் கடமை.”எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாகப்பட்டினம் போன்ற பெரிய கடற்றொழில் சமூகம் உள்ள பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஓர் உணர்ச்சிகரமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய்
2008 ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அரசியல்
விமர்சகர்கள் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரபாகரனைப் புகழ்வதைத் தவிர, கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தனது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று விஜய் கூறினார். மேலும், எம்.கே. ஸ்டாலின் அரசாங்கத்தையும் விமர்சித்த அவர்,
மீன்பிடிப் பிரச்சினைகளைத் தீர்க்க தனது கட்சி நீண்ட கடிதங்களை எழுதாது, மாறாக தீர்வுகளைத் தேடும் என்றும் கூறினார்.
“கடற்றொழிலார்களின் உயிர்கள் முக்கியம். ஆனால் ஈழத் தமிழர்களின் உயிர்களும் எங்களுக்கு சமமாக முக்கியம்” என்று கூறி முடித்தார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு 7 – 8 மணியளவில் புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து ஊர்காவல் படையினரும் வீடுகளின் உறங்கிக்
அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணை
கொண்டிருந்தவர்களின் 45 அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென கடற்கரை பகுதிக்கு ஒதுக்கிக் சென்றுள்ளனர்.
விசாரணக்கொன அழைத்துச் சென்றவர்களில் சிலர் உயிர் தப்பிய உள்ள போதிலும் நள்ளிரவு வேளை பெண்கள் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன்
இவர்களது சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
உயிரிழந்தவர்களின் நினைவாக புதுக்குடியிருப்புபில் அமைக்கப்பட்டநினைவுத் தூபி முன்றலில்
உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு,மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்தப் படுகொலையில் 09 ஆண்கள் 08 பெண்கள் சிறுவர்கள் என17 படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த படுகொலைச் சம்பவம் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என இறந்தவர்களின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
புலிகளுடன் தொடர்பு இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
புலிகளுடன் தொடர்பு இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
புலிகளுடன் தொடர்பு இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி ,தற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் .
சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு
தொடர்புடையதென கூறப்படும் பணச்சலவை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு முகவரக நீதிமன்றம் அமுலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
மேரி பிரான்சிஸ்கா லெட்சுமணன் என்ற குறித்த பெண் தமிழ்நாட்டின் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பை கொண்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகவரத்தினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
இது அந்த முகவரத்தினால் 2022 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பணச்சலவை வழக்குடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலுள்ள வங்கிக் கணக்கொன்றிலிருந்து பணம் எடுப்பதறகு போலி இந்திய அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
விடுதலைப்புலிகளின் மீளுருவாக்க செயற்பாடு
இந்த நிதி, விடுதலைப்புலிகளின் மீளுருவாக்க செயற்பாடுகளுக்கானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்தநிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கு குறித்த பெண்ணை விசாரிப்பது அவசியம் என்று அமுலாக்க துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் சிறையில் அவரை விசாரிக்க அதிகாரிகளுக்கு அனுமதியளித்தது.
சிறை விசாரணையின் போது மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மகிந்தவின் சகோதரரான தெரிவிக்கப்பட்டுள்ளது .
முன்னாள் ராஜாங்க அமைச்சராக
முன்னாள் ராஜாங்க அமைச்சராக செயல்பட்ட சசீந்திர ராஜபக்ஷவுக்கு இந்து இவ்வாறு தொடர்ந்து பிணைவழங்க மறுக்கப்பட்டு விளக்கமறையில் நீடிக்கப்பட்டுள்ளது .
இதன்படி ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் தேதி வரை விளக்கமரில் வைக்குமாறு கொழும்பு நீதவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
லஞ்ச ஊழல் மோசடி
லஞ்ச ஊழல் மோசடி செய்த நபர்களுக்கு எதிரான போட்டியை ஆரம்பித்து உள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடுகிறது.
அவ்விதிகமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
ஆனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் பின்னர் குற்றங்கள் அற்றவராக பிணையில் விடுவிக்கப்படுவது தான் ஏமாற்று நாடகத்தின் உச்சகட்ட திருவிழா கோலமாக காணப்படுகிறது
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம் ,மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் .
தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை(21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்,
மன்னார் மக்கள் இணைந்து தீ
இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து தீ பந்தத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்,இளையோர், பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
இரண்டு சடலங்கள் மீட்பு
இரண்டு சடலங்கள் மீட்பு
இரண்டு சடலங்கள் மீட்பு .தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் கைவிடப்பட்ட வீட்டில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நடத்தப்பட்ட சோதனை
அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் (படிக
மெத்தம்பேட்டமைன்) என்ற போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 10 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் திடீரென நோய்வாய்ப்பட்டு தங்காலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.
பொலிஸார் முழு அளவிலான விசாரணை
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் முழு அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளனர்,
அதே நேரத்தில் இறப்புக்கான காரணங்களைக் கண்டறிய அரசு பகுப்பாய்வாளர் துறை பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
கரிகாலன் படை வரவேண்டும்
கரிகாலன் படை வரவேண்டும்
கரிகாலன் படை வரவேண்டும் |karikalan padai inru
கரிகாலன் படை இன்று கண் முன்னே வரவேண்டும் என்ற பாடலை கரிகாலன் தேசம் நினைந்து ஆதவன் அவர்கள் எழுதியுள்ளார் .
கரிகாலனின் எழுச்சியை குறிக்கும் முகமாக வெளிவந்துள்ள இந்த பாடல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
பாடலின் பெயர் – கரிகாலன் படை இன்று
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் – இந்தியா
இசை அமைப்பாளர் – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – ஆதவன் லண்டன்
தயாரிப்பு – கேசவன் லண்டன்
வெளியீடு எதிரி இணையம்
The song Karikalan Bandai Iddi Kan Munne Varaveendam has been written by Aadhavan, keeping in mind the Karikalan nation.
This song, which has been released to symbolize Karikalan’s rise, has been well received by the people.
Song Name – Karikalan Bandai Iddi
Sung by – Bavendan Ilangovan – India
Music Arranger – Ilango Chellappa
Lyrics – Aadhavan London
Production – Kesavan London
Published by ETHIRI COM
(பல்லவி)
கரிகாலன் படை இன்று
கண் முன்னே வரவேண்டும்
கல்லறையின் சீற்றமது
கண் முன்னே எழ வேண்டும்
கரையேற்ற கரையேற்ற
கலை தமிழை கரையேற்ற
கரிகாலன் படை இன்று
கண் முன்னே எழ வேண்டும்
(சரணம் 1)
கரை நின்ற கனவு அது
கரை சேர எழ வேண்டும்
கண் திறந்து மூடு முன்னே
கனவு அதை பெறவேண்டும்
கல் நெஞ்ச காடையரை
கதை கொண்டு தரை யாடி
கரம் கோர்த்து சிரம் கோர்த்து
கனவு அதை நனவாக்க
(சரணம் 2)
கனம் கொண்ட இதயமதை
கனம் சேர்த்து பகையாட
கதிரவனின் பிள்ளைகளின்
கற்கை நெறி உரமாக்க
கடுகளவும் பயமின்றி
களை எடுக்க வர வேண்டும்
கற்சிலையும் உயிர் கொண்டு
கடலாட எழ வேண்டும்.
பாடல் வரிகள் – ஆதவன் லண்டன்
தயாரிப்பு – கேசவன் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
New Tamil Songs in Vanni Mainthan YouTube | New Tamil Songs Release |Today Updated Vannimainthan Tiktok Songs in Youtube Channel |Vanni Mainthan new songs promoted through Tik Tok and the enemy internet
Here every day
வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையத்தின் ஊடாக முன்னெடுக்க படும் புதிய பாடல்கள்
நாள் தோறும் இங்கே
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய் ,நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு 40 இந்திய ரூபா என பல கோடி ரூபாய் கொமிஷனாகப் பெறப்படுகிறது.
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன்போது அவர் உரையாற்றுகையில்,
டெல்டா பகுதியில இருக்கற விவசாயிங்க ஒரு கொடுமைய அனுபவச்சிகிட்டு இருக்காங்க. அதுபற்றி புகார் ஒன்று வந்தது.
அது என்னன்னா, இந்த மாவட்டத்துல இருக்கிற நெல் கொள்முதல் மையங்கள்ல ஒரு மூட்டைக்கு 10 ரூபா கொடுக்கறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபா கொமிஷன் வாங்கறாங்க.
ஒரு டன்னுக்கு 1,000 ரூபா கொமிஷன். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்கனா, கடந்த நான்கரை வருடங்கள்ல இந்த டெல்டா பகுதி விவசாயிங்க கிட்ட இருந்து கொமிஷனா பல கோடி புடுங்கி இருக்காங்க.
இதை வேற யாராவது சொல்லி இருந்தாகூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஆனா, எங்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான். விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க.
கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க
கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க. தீர்வைத் தேடி தீர்வை நோக்கி போவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சியமே.
எங்கள் தேர்தல் அறிக்கையில் இதை விளக்கமாக தெரிவிப்போம். இந்த பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்கவே மாட்டோம்.
எது நடப்பதற்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டுமே சொல்லுவோம், அதை செய்வோம் என்றார்
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து ,மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று அதிகாலை
பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம்
இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி
பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே நேரம் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி
வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதன் காரணமாக பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில்
குறித்து விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் பஸ் மீது மோதியுள்ளது இதனால் பஸ்ஸில் நடத்துனர் படுகாயமடைந்தார்.
அதே நேரம் பஸ்ஸின் சாரதி முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் பஸ்ஸின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.மற்றும் சொகுசு பஸ் ஆட்டோ என்பது பெரிதும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை
ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை
ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை ,நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஏற்கனவே அதிகமாக மது குடித்ததால்
மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர்
மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர் இப்போது மரணத்தை தழுவியிருப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் நடிகரும், சங்கரின் நெருங்கிய நண்பருமான காதல் சுகுமார் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த
பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். அதிக அளவு அவர் மதுவை தொடர்ந்து குடித்ததால் நோய் வந்து நண்பர்கள், மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியோடு அதிலிருந்து
மீண்டார். அப்படி மீண்ட அவர் அறவே குடியை நிறுத்தி தனது கரியரில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினார்.
மேலும் மது ஏற்படுத்தும் தீங்கு குறித்து தொடர்ந்து பேசிவந்த அவர்; அதுதொடர்பான விளம்பரங்களிலும் நடித்தார்.
ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்
அவரது உடல்நிலை திடீரென சில நாட்களுக்கு முன்பு குன்றியது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்; பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியாவது அவரை உயிர் பிழைக்க வைத்துவிட வேண்டும் என்பதில் மருத்துவர்களுக்கு போராடினார்கள்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
சங்கரின் இந்த உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு பெருத்த இடியாகத்தான் இந்த மரணம் அமைந்திருக்கிறது.
திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி; குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்தார்கள்.
சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடி அஞ்சலி செலுத்தி சங்கரை வழியனுப்பி வைத்தார். இதனை பார்த்த ஒருதரப்பினர் வழக்கம்போல் அவரை விமர்சிக்க தொடங்கினார்கள்.
ஆனால் மரண வீட்டில் நடனமாடுவது ஒன்று பெரிய குற்றம் இல்லை; இதற்கு முன்னரும் பல மரண நிகழ்வுகளில் இது நடந்திருக்கும் சூழலில்; பிரியங்காவை
ஏன் தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டும் என்று சப்போர்ட் செய்து; விமர்சிப்பவர்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான காதல் சுகுமார் வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் அவர், “சங்கர் திறமை வாய்ந்த கலைஞன். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
பிறகு மீண்டு வந்தார். பிரியங்காவிடம் சங்கரின் பழக்கவழக்கங்கள் குறித்து கேட்டால்; எவ்வளவுதான் சொல்வது என்று சோர்வுடன் கேட்பார்.
சங்கர் அதிலிருந்து வெளியே வர வேண்டுமென்று பிரியங்கா பேசாமல் இருந்து பார்த்தார், சாப்பிடாமல் இருந்து பார்த்தார்.
சங்கருக்கு இலங்கை எப்போதுமே சொந்த ஊர் போல்தான். நிகழ்ச்சிகளும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அடிக்கடி செல்வார். சமீபத்தில்கூட அவர் அங்கு சென்றிருந்தார்.
அப்போது விருந்து ஒன்று நடந்ததாகவும், மீண்டும் சில பழக்கங்களை சங்கர் தொடர்ந்தார் என்றும் சொல்கிறார்கள்.
மதுவுக்கு அடிமையாகி சந்திரபாபு, என்.எஸ்.கே, கலாபவன் மணி, ரோபோ சங்கர் என பலர் 50 வயதை கடக்காமலேயே சென்றுவிட்டார்கள்” என்றார்.
இன்ஜின் ஆயில்குடித்து உயிர்வாழும் ஆயில்குமார்
இன்ஜின் ஆயில்குடித்து உயிர்வாழும் ஆயில்குமார்
இன்ஜின் ஆயில்குடித்து உயிர்வாழும் ஆயில்குமார் ,கர்நாடகாவில் ஆயில் குமார் என்பவர் தினமும் ஏழெட்டு லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலுக்கு தீங்கான
ஆயிலை குடித்து வரும் இவர்
ஆயிலை குடித்து வரும் இவர் இதுவரை மருத்துவமனைக்கே சென்றதில்லை என கூறுவது வியப்பின் உச்சிக்கு அழைத்து செல்கிறது.
அண்மையில் சமூக வலைதளங்களில் ஆயில் குமார் குறித்த வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஐயப்ப சுவாமி பக்தர் ஒருவர் வாகனங்களுக்கு பயன்படுத்
வீடியோவை கண்ட லட்சக்கணக்கான பார்வையாளர்கள்
தப்படும் இன்ஜின் ஆயிலை குடித்துக்கொண்டே பேசுகிறார். இந்த வீடியோவை கண்ட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள 45 வயது மதிக்கத்தக்க நபரின் பெயர் குமார். கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் ஏழெட்டு லிட்டர் இன்ஜின் ஆயிலை குடிப்பதால் மக்களால் ‘ஆயில் குமார்’ என அழைக்கப்படுகிறார்.
காலை, மதிய உணவை உண்ணாமல் மூன்று வேளையும் ஆயிலே குடித்து வருகிறார். ஆனாலும் இதுவரை உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இல்லை.
வருடந்தோறும் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்வதால் தனக்கு எந்த தீங்கும் நேரவில்லை என ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, ‘‘பயன்படுத்தப்பட்ட இன்ஜின் ஆயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதிலுள்ள பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன் புற்றுநோயை உருவாக்கும்.
ஆயிலில் கலக்கப்பட்டுள்ள இரும்பு, அலுமினியம், தாமிரம், ஈயம் போன்ற தனிமங்கள் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் ஆகியற்றை கடுமையாக பாதிக்கும்.
இதை குடித்தாலோ, தொடர்ந்து சுவாசித்தாலோ சுவாச மண்டல பாதிப்பும் வயிற்று போக்கும் ஏற்படும்’’ என தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஆயில் குமார் எந்த பாதிப்பும் இல்லாமல் இன்ஜின் ஆயில் குடித்தவாறே பாத யாத்திரை மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்துகிறது.ஆயில் குமார்













































