இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறிதரன் நியமனம்
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் நியமிக்க பட்டுள்ளார்
இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் கே 184 வாக்குகளை பெற்று தனது வெற்றியை தேடி கொண்டார் .
சுமந்திரன் 137 வாக்குகளினால் பின் தள்ள பட்டுளளார் ,எனினும்ஸ்ரீதரன் தொடர்ந்து நீதியாக செயல் பட்டு சுமந்திரன் அனுமதிப்பாரா என்கின்ற கேள்வி எழுகிறது ,
இலங்கை தமிழரசு கட்சி இனியாவது சிறை பாதையில் பயணித்து மக்களுக்கு நல்வழி படுத்தும் என நம்புவோம் .
M.A.சுமந்திரன் – பெற்ற வாக்குகள் -137
சிறிதரன் பெற்ற வாக்குகள் -184
சி.யோகேஸ்வரன் பெற்ற வாக்குகள்-0
திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று 21ம் திகதி இடம் பெற்ற கூட்டத்தில் 327
பேர் கலந்து கொண்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
தன்னை ‘விஸ்வ புத்தர்’ என்று அழைத்துக் கொண்ட காவி அங்கி அணிந்த துறவி, பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் முதலில் டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டார், அதன் பின் அவருக்கு கொழும்பு பிரதான நீதவான் ஜனவரி 8 ஆம் திகதி பிணை வழங்கியிருந்தார்.
விஸ்வ புத்த துறவி மீண்டும் கைது
விடுதலையின் பின், அவர் பல ஒன்லைன் பேச்சு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன் அவர் அடுத்த வாரம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் சமரவிக்கிரம நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் பொருட்டே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
மாத்தறை – தெலிஜ்ஜவில பிரதேசத்தில் நேற்றிரவு (20) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர், இலக்கு வைக்கப்பட்ட நபர் அல்ல என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.
நேற்று (20) இரவு 08 மணி அளவில் மாத்தறை – மாலிம்படை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெலிஜ்ஜவில சந்தியில் அமைந்துள்ள கையடக்கத் தொலைபேசி உபகரண விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தொலைபேசி உபகரணக் கடைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
துப்பாக்கி சூடு மாத்தறை இளைஞன் பலி
குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 22 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தெனிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மிந்திக அளுத்கமகே எனவும், அவர் தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்வதற்காக கடைக்கு வந்துள்ளாதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணை நடத்தப்பட்டதுடன், கடையின் உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், மாத்தறை பிரதான நீதவான் அனுருத்த புத்ததாச, அவரை பொலிஸ் காவலில் எடுத்து பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
Grid
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் இருவர், சனிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு நீர்மற்றும் வெள்ள நீர் என்பன வீதியில் உள்ள வாய்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப் பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.
குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்களின் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு, குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.
வவுனியாவில் யுவதி ஒருவர் தாக்குதல் இரு சகோதரிகள் கைது
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்றுள்ளது.
கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார். இதன்போது இரு வீட்டாருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அது கைகலப்பாக மாறவே, குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் காயமடைந்த 22 வயதான யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வவுனியாவில் அரச திணைக்களம் ஒன்றில் உத்தியோகத்தராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள பல வீதிகளில் வடிகாலமைப்பு சீர்செய்யப்படாத நிலை காணப்படுவதுடன், மழை காரணமாக பல வீடுகள் வெள்ளத்தினால் பாதிப்படைந்த போதும் வவுனியா
தெற்கு பிரதேச சபை செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்காது அசமந்த போக்குடன் செயற்பட்டு வருகின்றமையே இவ்வாறான சச்கரவுகள் ஏற்பட வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் போராட்டம்|ஓடி போ என மக்கள் கோசம்|ஆட்சி கவிழ்ப்பு ஆரம்பம்
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீடு சுற்றிவளைத்து மக்கள் ஆயிரக்கணக்கில் போராட்டம் நடத்தினர் .
பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படை வீரர்கள் பிடித்து சென்ற தமது உறவினர்களை மீட்டு தரும் படி கோரி இவர்கள் இந்த மிக பெரும் பேரணியை நடத்தினர் .
அவ்வாறு மீட்டு தராவிட்டால் தேர்தலை நடத்து படி மக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர் .
இந்த மக்கள் போர்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பம் ,ஆகியுள்ளதை தெளிவாக எடுத்து காட்டுகிறது .
எவ்வேளையும் ஐயா நெதன்யாகு இஸ்ரேல் பிரதமர் பதவியை துறந்து நடையை கட்ட வேண்டிய நிலை வரும் நாட்களில் எட்ட படலாம் என்பதாக களநிலவரம் காணபடுகிறது .
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Asad விமான படை முகாம் மீது ஈரான் குழு நடத்திய தாக்குதலில் அந்த முகாம் சிதறியது ,இதில் பல படைகள் காயம் என அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பு .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா இராணுவம் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் புரிந்து வருகிறது .
அதனை அடுத்தே மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அவ்விதம் நேற்று சனிக்கிழமை ஈராக்கில் அமைய பெற்ற Ain al-Asad airbase அமெரிக்கா விமான தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது .
ரொக்கட் தாக்குதல் செய்திகள் யாவும் படிக்க இதில் அழுத்துங்க
இதன் பொழுது இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,அமெரிக்கா மற்றும் ஈராக் இராணுவ சிப்பாய்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா இராணுவம் இழப்பை ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது .
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
இரான் போராளி குழுக்கள் அமெரிக்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த படுகின்ற பொழுது மட்டும் ,எமது இராணுவத்தினருக்கு சிறிய காயம் என அமெரிக்கா கூறி வருவது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
ஆளணி சேதங்களை ஒப்பு கொண்ட பொழுதும் ஆயுத இழப்பு தொடர்பாக அமெரிக்கா படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகளை தமது மண்ணில் இருந்து விலகி செல்லுமாறு வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,அத்து மீறி ஈராக்கில் நிலை கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
வெள்ளத்தால் அழிந்த வீடுகளுக்கு 50 லட்சம் உதவி
மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியது மருதானை
லண்டனில் வரிசோதனை 3.3 மில்லியன் ஓய்வூதிய சேமிப்பாளர்களை பாதிக்கும்
இறந்த விலங்குகளைக் கையாள்வது குறித்து WHO வழிகாட்டுதல்
19 000 வெளிநாட்டு ஊழியர்கள் நிவாரண நிதிக்கு பங்களிப்பு
இஸ்ரேலிய ஆதரவு தலைவர் கொலை
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரான் இரகசிய உளவுத்துறை தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் ,ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலியாகியுள்ளனர் .
சிரியா தலைநகரை அண்மித்து ஈரான் இராணுவத்தின் முக்கிய ரகசிய இராணுவ செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அவ்வாறான மிக முக்கிய இராணுவ உளவுத்துறை கூட்டம் ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த பொழுது ,ஈரான் இரகசிய தளம் மீது இஸ்ரேல் போர் விமானம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இஸ்ரேல் ஈரான் தாக்குதல் யாவும் படிக்க இதில் அழுத்துங்க
இந்த போர் விமான தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை தளபதி ,மற்றும் துணை உளவுத்துறை தளபதி உள்ளிட்ட ஐவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஈரான் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .
இரான் இராணுவ உயர்மட்ட தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை துல்லியமான இடைவிடாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
ஈரான் நாட்டின் இராணுவ தளபதிகள் யாவரும் ,அதிகமாக இஸ்ரேல் போர் விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் மூலமே ,படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
சக்தி வாய்ந்த அமைப்பாக காணப்பட்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஹமாஸ் இரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதை மட்டும் எவ்வாறு தடுக்க மறந்தது என்ற கேள்வி இங்கே எழுப்ப படுகிறது .
தமது முதுநிலை தளபதிகள் படுகொலைக்கு உரிய பதிலடி வழங்க படும் என ஈரான் இராணுவ உயர் மட்டம் அறிவித்துள்ளது .
அப்படி என்றால் வரும் நாட்களில் இஸ்ரேல் மொசாட் இரான் குறிவைக்கிறது ,தாக்குதல் எங்கே என்பது தான் தெரியவில்லை .
காசா இஸ்ரேல் போர் உச்சகட்ட தாக்குதலாக இவை காணப்படுகின்றன .
பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து
பிரிட்டன் போர் கப்பல் இரண்டு நேரெதிர் மோதல்|சிதறிய ஏவுகணை போர் கப்பல்|பாரசீக வளைகுடாவில் விபத்து
பிரிட்டன் போர் கப்பல் இரண்டு திடீரென நேரெதிர் மோதல்,
இந்த மோதலில் பிரிட்டன் ஏவுகணை போர் கப்பல் பலத்த சேதங்களை
சந்தித்துள்ளது .
ஏவுகணை போர் கப்பலில் பாரிய ஓட்டை காணப்படுகிறது ,தரித்து நின்ற கப்பலுடன் பிறிதொரு கப்பல் பின்னோக்கி சென்ற போது மோதி தள்ளியது .
இந்த பிரிட்டன் போர் கப்பல் இரண்டு விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்நது இடம்பெற்று வருகிறது .
இந்த ஆண்டு பாரசீக வளைகுடாவில் இடம்பெற்ற பெரும் கடற் படை போர் கப்பல்கள் விபத்தாக இது பதிவாகியுள்ளது .
பிரிட்டன் கப்பல் மோதல் காட்சி video இணைப்பு பார்க்க விரும்புபவர்கள் அழுத்துங்க


வீடியோ .
இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்
இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்
இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ,இஸ்ரேல் தலைநகர் அருகில் உள்ள கைபா நகரில் மிக பெரும் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
காசா மீது இஸ்ரேல் நடத்தும் போர் உடனடியாக நிறுத்தி அமைதியை ஏற்படுத்த வேண்டும் என கோரி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் இனைந்து போராட்டம் நடத்துகின்றனர் .
கைபா துறைமுகம் அமைந்துள்ள முக்கிய பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இஸ்ரேலுக்கு காணப்படுகிறது .
அவ்வாறான அந்த கைபா துறைமுக நகர் பகுதி மீதுரொக்கட் ,ஏவுகணைகள்,வெடிகுண்டு போர் விமானங்கள் என்பன தாக்குதலை நடத்தி வருகின்றன .
இஸ்ரேல் போர் நடத்த மக்கள் எதிர்ப்பு இஸ்ரேல் தலைநகரில் வெடித்த போராட்டம்
அதனால் தமது வாழ்வாதாரம் மற்றும் வியாபாரம் என்பன பலத்த அடியை வாங்கி சுருண்டு இழப்பை சந்தித்து வருவதால் ,மேலும் இஸ்ரேல் போர் நடத்தி செல்ல அனுமதிக்க கூடாது என தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர் .
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் போர் நடத்தி நூறு நாட்கள் கடந்துள்ள பொழுதும் ,இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு எதிர்பார்த்த வெற்றியை பெற்று கொள்ள முடியவில்லை .
அதனால் இஸ்ரேல் உள்ளேயும் மக்கள் அச்சத்துடன் தமது அன்றாட வாழ்வை நடத்த வேண்டியுள்ள நிலையில் தற்போது ,இஸ்ரேல் காசா மீதான போரை நிறுத்த கோரி வீதி இறங்கி போராட்டம் நடத்துகின்றனர் .
மக்கள் ஜனநாயக போராட்டத்துக்கு தலை வணங்கி இஸ்ரேல் போரை நிறுத்துமா என்றால் அது கேள்வியாகவே உள்ளது .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இஸ்ரேல் போர் விமானம் மற்றும் யுத்த டாங்கிகள் ஊடாக நடத்த பட்ட தாக்குதலில் ,பாலஸ்தீனம் காசா பகுதியில் வசித்து வந்த மக்கள் 165 பேர் பலியாகியும் 280 பேர் காயமடைந்துள்ளனர் .
காந்த 24 மணித்தியாலத்தில் காசா பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய கோர கொலை வெறி தாக்குதலில் ,இந்த பாரிய உயிரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
காசா போராளிகள் நடத்தி வரும் உக்கிர தாக்குதலில் பல்லாயிரம் இராணுவத்தை இழந்து தவிக்கும் இஸ்ரேல் இராணுவம், அதன் போர் விமானங்களை பயன் படுத்தி ,பாலஸ்தீனம் காசா மீது சரமாரியாக குண்டுகளை வீசி மக்களை கொன்று வருகிறது .
103 நாட்கள் கடந்து இடம்பெறும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இதுவரை 25.000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியும் ,60.000 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் 165 மக்கள் பலி 280 பேர் காயம்
இடைவிடாது தொடரும் தாக்குதலினால் காஸாவின் எழுபது சதவீததிற்கு மேற்பட்ட வீடுகள் ,கட்டடங்கள் ,என்பன முற்றாக அழிக்க பட்டு பாலஸ்தீனம் அழகு இழந்து கண்ணீரில் தவிக்கிறது .
ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் போர் வெறியும் பழிவாங்கும் இனவெறியுமே இந்த இஸ்ரேல் காசா போர் நீடித்து செல்ல காரணமாகிறது .
பாலஸ்தீனம் காசா போர் அரங்கில் பாரிய தோல்வியை இஸ்ரேல் இராணுவம் சந்தித்துள்ளதால் ,தனது அரசாட்சி கவிழ்க்க பட்டு வீடு செல்லும் அபாயத்தில் இஸ்ரேல் பிரதமராக விளங்கும் நெதன்யாகு உள்ளதினால் ,அதற்கு முன்னதாக பாலஸ்தீனம் காசாவை சுடுகாடாக்கிட முயன்று வருகிறார் .
அதன் ஒரு அங்கமே இந்த அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதல் மக்கள் படுகொலை ,அழிப்பும் காணபடுகிறது .
பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்
பொலிஸாருக்கு புதிய உத்தரவு திணறும் இலங்கை பொலிஸ்
இலங்கை பொலிஸாருக்கு புதிய உத்தரவு பொலிஸ் தலைமையக்கத்தால் பிறப்பிக்க பட்ட நிலையில் இலங்கை பொலிஸார் திணறி வருகின்றனர் .
லொறி சாரதி ஒருவரை சிவில் உடையில் நின்ற பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்தனர் .
இதனை அடுத்து இலங்கை பொலிஸ் நிலையங்கள் யாவற்றுக்கும் உடனடி அமூலுக்கு வரும் நிலையில் ,சிவில் உடையில் பணியாற்றும் இலங்கை பொலிஸார் யாவரும் வாகனங்களை சோதனை செய்த்திட தடை விதிக்க பட்டுள்ளது .
பொலிஸாருக்கு வழங்க பட்ட இந்த அதிரடி உத்தரவை அடுத்து லஞ்ச போலிஸ் பெருச்சாளிகள் கலக்கத்தில் உறைந்துள்ளனராம் .
இஸ்ரேலை தாக்க பறந்த விமானங்கள்|இஸ்ரேலில் விமான அபாய ஒலி அலறல்
இஸ்ரேலை தாக்க பறந்த விமானங்கள்|இஸ்ரேலில் விமான அபாய ஒலி அலறல்
இஸ்ரேலை தாக்க இரான் ஆதரவு போராளி குழுக்கள் விமானங்கள்இஸ்ரேலில் உள்ளே பறந்து வருவதால் விமான அபாய ஒலி அலறல் சத்தம் கேட்கிறது
இஸ்ரேலை தாக்க பறந்த ஈரான் ஆதரவு
போராட்ட காரர்கள் விமானங்கள் எங்கு தாக்குதலை நடத்தின என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
இஸ்ரேலில் விமான ஊடுருவல் அபாய ஒலி அலறல் இடம்பெற்ற பகுதிகள்
முக்கிய பகுதியாக காணப்படுகின்றன
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ,
ஹமாஸ் முக்கிய தளபதிகள் இருவர் லெபனானுக்குள் பலியாகியுள்ளனர் .
ஹமாஸ் போராளிகள் தளபதிகள் இரகசிய வீடொன்றை அடையாளம் கண்டு கொண்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஆட்கள் ,அந்த ஹமாஸ் வீடு மீது தாக்குதல் நடத்தின .
துல்லியமான உளவு தகவல்கள் ஊடக ஹமாஸ் போராளிகள் தளபதிகள் தங்கி இருந்த காரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அந்த தாக்குதலில் அந்த கார் முற்றாக எரிந்து அழிந்துள்ளது .
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தளபதிகள் லெபனானுக்குள் பலி
லெபனானுக்குள் அத்துமீறி நுழைந்து ஹமாஸ் போராட்ட காரர்கள் தளபதிகள் மீது இஸ்ரேல் நடத்திய இரண்டாவது மிக பெரும் விமான தாக்குதல் இதுவாக காணப்படுகிறது .
ஹிஸ்புல்லாவை போருக்குள் முற்றாக வலிந்து இழுக்கும் ஆத்திரமூட்டும் தாக்குதலாக இது காணப்படுகிறது .
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய இந்த ஆழ ஊடுருவல் தாக்குதலுக்கு ,ஹமாஸ் போர் படைகள் பதிலடி வழங்குமென எதிர் பார்க்க படுகிறது .
தற்போது இஸ்ரேலுக்குள் லெபனானில் இருந்து வெடிகுண்டு விமானங்கள் பறந்த வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் நகாரங்கள் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போராளிகள் அமைப்பினரால் கூட்டாக இலக்கு வைத்து தாக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் விமானங்கள் நடத்திய இந்த தாக்குதலில் வீரமரணடைந்த ஹமாஸ் போராளி தளபதிகள் யார் என்பது தொடர்பிலான பெயர் விபரங்கள் இதுவரை வெளியாவில்லை என்பது குறிப்பிட தக்கது .


இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல்|4 தளபதிகள் பலி
இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல்|4 தளபதிகள் பலி
இஸ்ரேல் மொஸாட் ஈரான் உளவுத்துறை நேரடி மோதல் ,
ஈரான் உளவுத்துறை தளபதி உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் பலியாகியுள்ளனர் .
தற்போது நேரடி யுத்தம் வெடிக்கும் அபாயத்தை இஸ்ரேல் மொஸாட்
,உளவுத்துறை உருவாக்கி வருவதை இந்த இரான் மீதான வலிந்து தாக்குதல் படுகொலை நடவடிக்கை எடுத்து காட்டுகிறது .
4 ஈரான் முக்கிய தளபதிகள் இழப்பு ஏற்று அறிவித்துள்ள ஈரான் ,தாக்குதலை நடத்திய உளவுத்துறைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என ஈரான் முழங்கியுள்ளது .
வரும் மணித்தியாலங்க்ளில் இஸ்ரேல் மொசாட் உளவாளிகளை இரான் போட்டு தள்ள போகிறது .
இரான் மேற்கொள்ளல் போகும் இந்த பதிலடி தாக்குதலில் சிக்க போகும் அந்த இஸ்ரேல் மொஸாட் தளபதி அல்லது உளவாளிகள் யார் என்பதே கேள்வியாக உள்ளது .
கடக்கும் நிமிடங்கள் திக் திக் நிமிடங்களாக உள்ளது
கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து கடை எரிக்க பணம் அனுப்பிய தமிழர்
கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து கடை எரிக்க பணம் அனுப்பிய தமிழர்
யாழ்ப்பாணத்தில் கடை எரிக்க 19 லடசம் வெளிநாட்டில் இருந்து வழங்கி கடையை எரிக்க பணம் அனுப்பிய தமிழர் வசமாக சிக்கியுள்ளார் .
ஐரோப்பியா நாடான பெல்ஜியம் நாட்டில் வசிக்கும் தமிழர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மிக முக்கிய, இரண்டு புடவை கடைகளை தீவைத்து எரிக்கும் படி பணம் அனுப்பி இருந்தாராம் .
சுமார் 19 லட்சம் இலங்கை பணம் அனுப்ப பட்டு அந்த கடைகள் எரிக்க பட்டனவாம் ,இவற்றில் கடை எரிப்பதற்கு 12 லட்சம் வழங்க பட்டு உள்ளதாம் .
மேலும் கார் எரிப்பதற்கு ஏழுலட்சம் வழங்க பட்டது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கார் எரிப்பதற்கு ஏழு லட்சம் ,கடை எரிப்பதற்கு 12 லட்சம் என்கின்ற விடயம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
போலீஸ் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரிய வந்த நிலையில் ,பெல்ஜியம் நாட்டில் இருந்து பணம் அனுப்பியவரை ,சர்வதேச பொலிஸ் உதவியுடன் கைது செய்திடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
மின்சார சபை ஆப்பு மின்சார சபைக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் நீக்கம்
மின்சார சபை ஆப்பு மின்சார சபைக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் நீக்கம்
இலங்கை மின்சார சபை மறு சீரமைப்புக்கு எதிராக போரட்டம் நடத்திய 66 பேர் பணி நீக்கம் செய்ய பட்டு ஆப்பு அடித்துள்ளது இலங்கை மின்சார சபை .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கும் வகையில் மறுசீரமைப்பு நடவடிக்கை இலங்கை மின்சார சபை வாரியம் எடுத்து வந்தது .
அவ்வாறான நவீன மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களில் 66 பேரே ,இவ்விதம் இலங்கை மின்சாரா சபை தலைமை அறிவிப்பினால் பணிநீக்கம் செய்ய பட்டுள்ளனர் .
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

பொலிஸ் துப்பாக்கி சூடு துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ்
பொலிஸ் துப்பாக்கி சூடு துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ்
பொலிஸ் நாரம்மல பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதில் லொறி சாரதி ஒருவர் பலியானார் ,இந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு ஒரு மில்லியன் இழப்பு வழங்கிய பொலிஸ் சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பாவம் தேர்தலில் மிக பெரும் எதிர்வினையை ஆற்றும் என்பதால் ,போலீஸ் துப்பாக்கி சூட்டில் இறந்தவருக்கு பொலிஸார் இந்த ஒரு மில்லியன் இழப்பு தொகையை வழங்கியுள்ளனர் .
இலங்கையில் அப்பாவி மக்கள் மீது ஆதாரமற்ற நிலையில் பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது .
குற்றவாளியின் காலின் கீழே பொலிஸ் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்கின்ற விதி உள்ள பொழுதும் ,அதனை மதிக்க மறந்து இவ்வாறு கண்மூடித்தனமாக பொலிஸ் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு வழங்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யபட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்
ஈரான் களமிறக்கிய புதிய ஏவுகணை கப்பல்|ஈரான் குறியில் அமெரிக்கா ஏவுகணை கப்பல்
ஈரான் களமிறக்கிய புதியநவீன ஏவுகணை கப்பல் ,
செங்கடல் வழி பாதுகாப்பபு நெருக்கடி ஏற்படும் அபாயம் .
அமெரிக்கா ஏவுகணை கப்பல்களை குறிவைக்கும் ஈரான் ,
கடற்படையின் புதிய ஆட்டம் .
செங்கடலில் பெரும் மோதல் வெடிக்கும் அபாயம் உள்ளதை ஈரான் சமீப நாட்கள் விடயங்கள் சம்பவங்கள் கோடிட்டு கடடுகின்றன .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படாமையால் அவரின் உறவினர்கள் நோயாளியை தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை வைத்தியசாலையில் எலும்பு முறிவுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவதற்காக சென்ற நோயாளியை கொண்டு செல்வதற்கு சக்கர நாற்காலி வழங்கப்படவில்லை எனவும்
இதனால் நோயாளியை தூக்கிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற பல சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் நோயாளிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிய வருகின்றது.
நோயாளியை தூக்கி சென்ற அவலம் வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு கெடுபிடி
அத்துடன் நோயாளிகளுக்கான கட்டில்கள் பற்றாக்குறையின் காரணமாக தரையில் காட்போட் அட்டைகளை விரித்து படுக்க வேண்டி இருப்பதாகவும் நோயாளிகள் கவலை வெளியிடுகின்றனர்.
திருகோணமலை வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர்கள், மருந்து மற்றும் வைத்தியசாலை உபகரணங்களின் பற்றாக்குறையின் காரணமாகவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற பணிப்பகிஷ்கரிப்பின் காரணமாகவும் சிறந்த சேவையினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் நேயாளிகள் விசனம் வெளியிடுகின்றனர்
- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன
- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
- வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் தாய்லாந்துக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்
- திலித் ஜயவீரவின் ரிட் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 30
- யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னகோடா மீதான வழக்கில் விசாரணை
- 500 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது
- ஹொரானாவில் சடலம் மீட்பு
- மட்டக்குளியாவில் கோரமான விபத்து தொடர்பாகக் கைது
காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை
காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை
காசா ஹமாஸ் போர் படைகள் சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவ படைகளை,சுரங்கத்துள்ளே வைத்து கொத்தாக போட்டு தள்ளி சமாதி கட்டிய காசா சிறப்பு கமாண்டோ அல்கஸாம் போர் படையணி .
இஸ்ரேல் காசா போர் அரங்கில் சற்றும் எதிர்பாராத மாறுபட்ட தாக்குதல் சம்பவங்கள் நாள் தோறும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அவ்வாறு காசா போர் படைகள் இரகசிய சுரங்க வழி ஊடாக நுழைய முயன்ற இஸ்ரேல் இராணுவ படையை உள்ளே நுழைய விட்டு காசா போர் படைகள் தாக்குதல் நடத்தின .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படையணி அவ்விடத்திலேயே கொத்தாக வீழ்ந்து மடிந்த்துள்ளனர் .
காசா சுரங்கத்துக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை சுரங்கத்துள்ளே போட்ட காசா போர் படை
பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகள் போர் படை சிறப்பு தாக்குதல் அணியினர் நடத்தும் ,வீரம் செறிந்த சிறப்பு தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது இஸ்ரேல் இராணுவம் ஓட்டம் பிடித்து வருகிறது .
படைக்கல மற்றும் ஆளணி இழப்பு என்பனவற்றை சந்தித்து பேரிடரை சந்தித்து கொண்டுள்ள இஸ்ரேல் படைகளுக்கு அடிமேல் அடியை கொடுத்து திணறடித்து வெற்றியை தமதாக்கி கொண்டுள்ளது இஸ்ரேல் ஹமாஸ் போர் படையணிகள் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி

































































