சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது
சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது
76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் மரியாதை செலுத்துவதோடு மறுபுறம் மகிழ்ச்சியளிக்கிறது. நாடு யாருக்கும் அடிமையாகாமல், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய
ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சுதந்திரமான நாடாக செயல்படுகிறது.ஏகாதிபத்திய சக்திகளின் கீழ் காலனித்துவ நாடாக இல்லாவிட்டாலும், நாட்டில் அரசியல் சுதந்திரம் எந்தளவு உள்ளது? என்பது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை மீறி சபாநாயகர் தலைமையிலான அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனூடாக பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தும் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 83 ஆவது கட்டமாக,காலி ஹபுக்கல மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வங்குரோத்து நிலைமையால், 220 இலட்சம் மக்களும் பொருளாதார சுதந்திரத்தையும் சமூக சுதந்திரத்தையும் இழந்துள்ளனர். சேதன உர மோசடியால் விவசாயத்தில் ஈடுபடும் சுதந்திரமும் இழக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்க, குரல் கொடுக்க, வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்தும் போது, பேராட்டம் நடத்தும் போது,நீர் தாரை தாக்குதலுக்கும், கண்ணீர் புகைத் தாக்குதலுக்கும், தடிகள் தாக்குதல்களுக்கும் மக்கள் உள்ளாகும் போது நாட்டில் உண்மையான சுதந்திரம் உள்ளதா என்பது குறித்து பெரும் கேள்வி எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வர்த்தகங்களும் சொத்துக்களும் பரேட் சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படும் நாட்டில், கல்வியில் சுதந்திரம் இல்லாத நாட்டில், சுதந்திரத்தை உண்மையாக கொண்டாட முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சுகாதாரத்துறையில் சுதந்திர செயல்பாடு இல்லாது போனமை, நாட்டைச் சுற்றி கடல் இருந்தாலும் மீன் வளத்தில் தன்னிறைவு இன்மை போன்ற பல பிரச்சினைகள் உள்ள நாட்டில் சுதந்திரத்தை அபிமானத்துடன் கொண்டாட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காத்தே 76 ஆவது சுதந்திரத்தை நாம் உண்மையில் கொண்டாட வேண்டும். இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து மீள 220 இலட்சம் மக்களும் சாதி, மதம், இனம் ,குலம், கோத்திரம் மற்றும் கட்சி என அனைத்து வேறுபாடுகளும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து, பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை
இஸ்ரேலுக்குள் வெடிக்கும் ஹிஸ்புல்லா ஏவுகணை ,
பதிலுக்கு தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா ,வானில் நடக்கும் யுத்தம்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு
ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு
ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிப்பு,ஏமன் ஹவுதிகளை தாக்குவோம் அமெரிக்கா அறிவிதுள்ளது ,ஏமன் ஹவுதிகள் செங்கடல் வழியை முடக்குவதால் தாக்குவதாக அமெரிக்கா தெரிவிக்கிறது .
இஸ்ரேலுக்கு செங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதிகள் கடும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த தாக்குதலினால் இஸ்ரேல் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதுடன் ,இஸ்ரேல் பொருளாதாரம் பெரும் ஆட்டம் கண்டு வருகிறது .
அவ்வாறான நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு இவ்வாறு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு
கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு
கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு.
இஸ்ரேல் பாதுகாப்பது அமைச்சர் ஹமாஸ் போராளிகள் சிறைபிடித்து சென்றுள்ள கைதிகள் தங்க வைக்க பட்டுள்ள மறைவிடங்கள் அருகில் தாக்குதலை நடத்துவதாகவும் ,அவர்ககாலை விரைவில் மீட்டு ஓடுவோம் என அவர் முழங்கியுள்ளார்
கிட்ட தட்ட நமக்கு மாதங்கள் போர் முடிவுக்கு வரும் இவ்வேளையில் ,இதுவரை இஸ்ரேலிய இராணுவத்தால் கைதிகள் விடுவிக்க படவில்லை .
ஆனால் தொடர்ந்து போரில் வெற்றி பெற்று கைதிகளை மீட்டு வந்து விடுவோம் என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சூடியலினால் அடித்த நபர்
பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சூடியலினால் அடித்த நபர்
பிரான்ஸ் Gare de Lyon train நிலையத்தில் மக்களை கத்தியால் குத்தி சுட்டியலினால் தாக்கியதில் மூவர் காயமடைந்துள்ளனர்
தற்போது Gare de Lyon train station in Paris ரயில்வே நிலையம் சுற்றிவளைக்க பட்டு ஆயுதம் தரித்த இராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் .
மாலி நாட்டை சேர்ந்த 31 வயது நபரே இந்த தாக்குதலை நடத்தியதவாகவும் தற்போது அவர் கைது செய்யப் பட்டுள்ளார் .
இவர் மனநோய் பாதிப்புக்கு உள்ளான நிலையில் காணப்படுவதாக முதல் கட்ட செய்திகள் தெறிவிக்கின்றன ,தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
- கூதி சவூதி கடும் மோதல்

- அமெரிக்காவுடன் ‘ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள’ ஈரான் நேரடியாக அணுகியதாக டிரம்ப் கூறுகிறார்

- காசா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66

- மெக்கா மீதான தாக்குதலை பொய் என ஹூதி அதிகாரி நிராகரித்தார்

- சவூதி அரேபியாக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி 43போர் வண்டிகள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி 43போர் வண்டிகள் அழிப்பு
இஸ்ரேல் இராணுவத்திற்கு மரண அடி 43 போர் வண்டிகள் அழிப்பு ,
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்

- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு

- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா

- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது

- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி

சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா
சவப்பெட்டியுடன் பொரளை மயானத்திற்கு சென்ற மேர்வின் சில்வா
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் இன்று (04) மாலை பொரளை மயானத்திற்கு சவப்பெட்டியுடன் சென்றுள்ளனர்.
நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினர் பொரளை மயானத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதனை தடுத்ததால் இரு குழுக்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
எனினும் பாதுகாப்பு அதிகாரிகளின் எதிர்ப்பையும் மீறி முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பதற்றம்
பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலில் பத்து கைதிகளும் ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இன்று (04) அதிகாலை, சோமாவதி யாத்திரைக்காக வந்த பேருந்தை வழிமறித்து தப்பிச் சென்ற கைதிகள் குழுவொன்று, வர்த்தகர் ஒருவரிடமிருந்து ஐம்பதாயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 34 கைதிகளை வெலிகந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இதற்கு முன்னரும் பல தடவைகள் உணவுப் பிரச்சினை மற்றும் பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
உன்னால் தவிக்கிறேன் ஏற்று விடு
கொஞ்ச நாளாய் உன்னை தேடி
கொஞ்சுதடி மனசு – உன்
கொண்டையில ஆடும் பூவா
குதிக்குதடி வயசு
கண்ணுக்குள்ள நீ இருக்க
காட்சிகளாய் கொட்டுதடி
என்னை கொல்லும் உன் நினைப்பை
எடுத்து போக வந்திடடி
ஆடியில ஆடும் காற்றாய்
ஆடிடலாம் வந்திடடி
ஆகாய வெண்ணிலவே
அடைக்கலம் தந்திடடி
உன்னை சுமக்கும் என் நெஞ்சை
உயிரே சுமக்க வந்திடடி – நான்
உயிராய் இருப்பேன்
உயிரே ஏற்றிடடி .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-02-2024
- மீள வருவாயா
- ஒரு நாள் வெல்வேன்
- எப்படி நான் பேசிடுவேன்
- என்னை விடு
- நேரில் வந்து விடு
- என் உயிரே நான் வெல்வேன்
- என்னை ஏற்று விடு
- என்னை அழைப்பாயா
- அடைத்து வைக்க வாவேண்டி
- கவலைப் படுகிறேன்
- யார் மேல் குற்றம்
- காதலே சோகமா
- கண்டதெல்லாம் கனவு
- ஏமார்ந்த காதல்
- அர்ச்சுனா ஆவி பேசிறது
- எனக்கு என்ன ஆச்சு
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹமாஸ் அதிரடி தாக்குதல் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட்
ஹமாஸ் நடத்திய அதிரடி தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ அதிகாரி அவுட் ,
இஸ்ரேல் ஹமாஸ் க்கு இடையில் தொடர்ந்து கடும் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி
சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன் பல்கலைக்கழக சுழலில் கறுப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளது
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி
போராட்டத்தை அடக்க பொலிஸார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதுடன், நீர்த்தாரை பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
கிளிநொச்சியில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனை கட்டுப்படுத்த பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதுடன், நீர்த்தாரை வாகனமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகள் 1450 பேருக்கு தரம் உயர்வு
இராணுவ அதிகாரிகள் 1450 பேருக்கு தரம் உயர்வு
இலங்கை 76 வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 2024 பெப்ரவரி 4 இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பரிந்துரையின் பேரில், முப்படைகளின் சேனாதிபதியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
இலங்கை இராணுவத்தின் மொத்தம் 211 அதிகாரிகள் (நிரந்தரம் மற்றும் தொண்டர்) சிப்பாய்கள் 1239 (நிரந்தரம் மற்றும் தொண்டர்) வெற்றிடத்தின் அடிப்படையில் அடுத்த நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, மேஜர் ஜெனரல் நிலைக்கு 02 பிரிகேடியர்களும், பிரிகேடியர் நிலைக்கு 12 கேணல்களும், கேணல் பதவிக்கு 13 லெப்டினன் கேணல்களும், லெப்டினன் கேணல் நிலைக்கு 17 மேஜர்களும், மேஜர் நிலைக்கு 29 கெப்டன்களும் (உபகரண கட்டுப்பாட்டாளர்),
13 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும் (உபகரண கட்டுப்பாட்டாளர்) மற்றும் 125 இரண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்வு பெற்றுள்ளனர். சிப்பாய்கள் பிரிவில்,
அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலையிலிருந்து அதிகாரவாணையற்ற அதிகாரி-I நிலைக்கு 49 பேரும், அதிகாரவாணையற்ற அதிகாரி –II நிலைக்கு 111 பணிநிலை சார்ஜென்களும், பணிநிலை சார்ஜென் நிலைக்கு 135 சார்ஜென்களும், 170 கோப்ரல்கள் சார்ஜென் நிலைக்கும், 364 லான்ஸ் கோப்ரல்கள் கோப்ரல் நிலைக்கும் மற்றும் 330 சிப்பாய்கள் லான்ஸ் கோப்ரல் நிலைக்கும் (நிரந்தர படையணி மற்றும் தொண்டர் படையணி) வெற்றிடத்தின் அடிப்படையில் நிலைக்க உயர்த்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தின் இரண்டு நட்சத்திர மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்ட சிரேஷ்ட பிரிகேடியர்களில் மேஜர் ஜெனரல் பீஎன்
கொடல்லவத்த யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் மேஜர் ஜெனரல் யூஎல்ஜேஎஸ் பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோர் அடங்குவர்.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இது தவிர, தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதுடன், தூதுவர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய கெடட் படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக 19 விமானங்களும் விமானப்படையின் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளும் அணிவகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
அதேநேரம் 76வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 05.00 மணி முதல் காலை 9.00 மணி வரை கரையோர மார்க்கத்தில் பொதுச்
செயலாளர், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாமல் இயங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை தற்போது செல்லும் பாதை சரியானது என முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், இந்தப் பாதையில் தொடர்ந்து
சென்று செழிப்பை மீண்டும் பெற சுதந்திர தினத்தன்று தீர்மானம் எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாம் கடினமான எல்லைகளைக் கடந்து வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணிப்பது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்
எங்கள் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டை தாக்குவோம் ஈரான்
எங்கள் போர் கப்பல்களை தாக்கினால் அந்த நாட்டு
கப்பல்களை தாக்குவோம் ஈரான் கடும் எச்சரிக்கை
ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர்
ரஷ்ய தாக்குதலில் இருளில் மூழ்கிய உக்ரைன் தலைநகர் கீவ்,பலத்த எறிகணை தாக்குதலில் இந்த நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது
ரஷ்ய உள்ளே தாக்குதலை உக்ரைன் நடத்தியது அதற்கு ,பதிலடியாக ஏவுகணை தாக்குதலை நடத்தி மின்சார மையங்களை ரஷ்ய அழித்துள்ளது
அதனை;ல் தற்போது உக்ரைன் தலைநகரில் ஐந்து பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்
அமெரிக்க இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல்
அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள இராணுவ
தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல் ,பற்றி எரியும் அமெரிக்கா முகாம்கள் .
இரான் ஆதரவு குழுக்கள் மீது வான்வழி தாக்குதலை அமெரிக்கா நடத்தி வரும் நிலையில் , அதற்கு பதிலடியாக ஈரான் ஆதரவு குழுக்கள் துல்லியமான ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளன .
இதனால் அமெரிக்கா இராணுவம் பலத்த சேதத்தை சந்தித்து .வருகிறது
விரைவில் இராக் சிரியாவில் இருந்து அமெரிக்கா படைகள் ஓட்டம் பிடிக்க போகின்றன
ருவாண்டா அமைதி ஒப்பந்த மீறல்
சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
லெபனான் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்
ஒரு தாய் சிப்பாய் கையெறி குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்
10 000க்கும் மேற்பட்ட கம்போடியர்கள் ஒட்டம்
உக்ரைனின் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சி
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
யுக்திய சுற்றிவளைப்பில் இன்று (04) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களும் குற்றத் தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 108 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது 152 கிராம் ஹெரோயின், 134 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள்கள் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 552 சந்தேக நபர்களில் போதைக்கு அடிமையான ஒருவர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பில் 660 பேர் கைது
இதன்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 03 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பட்டியலில் கைது செய்யப்பட்ட 108 சந்தேக நபர்களில் 08 சந்தேக நபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் 95 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளையும் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாகியிருந்த 02 சந்தேக நபர்களும் குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 03 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்
ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் எதிரிகள்
ஈரான் புதிய ஏவுகனை சோதனை அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிரிகள் ,
ஈரான் மிரட்ட முனைந்த எதிரிகள் கலக்கத்தில் உறைவு ,
Grid
காட்டு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
காட்டு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
ஏலயாபத்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உலுக்குளம் காட்டு பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (03) பிற்பகல், அந்த வனப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இருப்பதாக ஏலயாபத்துவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், சடலம் அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைவடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் குறித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (04) நீதவான் விசாரணை இடம்பெறவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏலயாபத்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















































