Tag: சுதந்திர தினம்
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) காலி முகத்திடலில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
‘புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ எனும் தொனிப்பொருளில் இவ்வருட தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இது தவிர, தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளதுடன், தூதுவர்கள் உட்பட குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களின் பங்கேற்புடன் இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இராணுவம், விமானப்படை, கடற்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் தேசிய கெடட் படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக 19 விமானங்களும் விமானப்படையின் புதிய தொழில்நுட்ப தயாரிப்புகளும் அணிவகுப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
அதேநேரம் 76வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு இன்று அதிகாலை 05.00 மணி முதல் காலை 9.00 மணி வரை கரையோர மார்க்கத்தில் பொதுச்
செயலாளர், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படாமல் இயங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை தற்போது செல்லும் பாதை சரியானது என முழு உலகத்தின் முன் நிரூபணமாகியுள்ளதால், இந்தப் பாதையில் தொடர்ந்து
சென்று செழிப்பை மீண்டும் பெற சுதந்திர தினத்தன்று தீர்மானம் எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 76வது சுதந்திர தினம் இன்றாகும்
தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் உணவுப் பாதுகாப்பு, கிராமிய மறுமலர்ச்சி மற்றும் உற்பத்திப் பொருளாதாரம் போன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் நாம் கடினமான எல்லைகளைக் கடந்து வருகிறோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தம்மை அர்ப்பணிப்பது சகல பிரஜைகளின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று (15) காலை 9 மணி அளவில் இந்தியாவின் தேசியக் கொடியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் ஏற்றி வைத்தார்.
இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் யாழில் கொடியேற்றம்
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியை துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி பிரித்தானியாவின்
ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்
by நிருபர் காவலன் - சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்
by நிருபர் காவலன் - நாய்களை எரிக்க சுடலை
by நிருபர் காவலன் - கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது
by நிருபர் காவலன் - ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு
by நிருபர் காவலன்








