ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை
Posted in உலக செய்திகள்

ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை

ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகளின் சபை என இரு அவைகள் உள்ளன. செனட் சபை, அந்நாட்டு ஊழியர்களின் நலன் கருதி “ரைட் டு டிஸ்கனெக்ட்” (Right to Disconnect) எனும் “தொடர்பு அறுக்கும் உரிமை” குறித்து சட்டம் இயற்றியுள்ளது.

இச்சட்டத்தின்படி, ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள், தங்கள் பணி நேரத்தை முடித்த ஊழியர்களை, நிறுவன அதிகாரிகள் செய்தி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அல்லது வேறு எந்த வகையிலும் தொடர்பு கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய ஊழியர் அழைப்பை நிராகரிக்க உரிமை

அதே போன்று, பணிக்கான நேரம் முடிந்ததும் ஊழியர்கள் தங்கள் தொலைபேசிகளை அணைத்து வைத்து கொள்வதும் அவர்களின் உரிமை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மென்பொருள், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல துறைகளில் பணிக்கான நேரம் முடிந்து ஊழியர்கள் சென்ற பிறகும், தங்கள் மின்னஞ்சலை அவ்வப்போது பார்த்து அலுவல் குறித்த முடிவுகளை எடுக்க கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

தாங்கள் தேவையற்று அழைக்கப்படுவதாக பணியாளர்கள் உணர்ந்தால் நிறுவன மேலிடத்தில் தெரிவிக்க வேண்டும். அதில் தீர்வு காணப்படவில்லை என்றால், பணியாளர் நல ஆணையத்திடம் முறையிடலாம்.

இச்சட்டத்திற்கு புறம்பாக ஊழியர்களை அழைக்கும் நிறுவனங்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது

ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது

ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் , கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலைய கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுத்த சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள், கலஹாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் குழுவினரே, கலஹா, தெல்தோட்டை கிரேட்வெளி தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து, ஏழு பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில், ஐந்து ஆண்களும், பெண்கள் இருவரும் அடங்குகின்றனர்.

கொழும்பு, ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்டுப்பட்டி தெருவில் விஷபால் 7பேர் கைது

பொலிஸ் நிலையத்தில் உள்ள கூண்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பால் பாக்கெட்டுகளில் சயனைட் விஷம் கலந்திருந்தமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர், பால் பாக்கெட்டுகளை​ கொள்வனவு செய்வது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சிக்கியுள்ளன.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த இருவரிடமும் பால் பாக்கெட்டை வழங்கியதையடுத்து, அவற்றை குடித்த இருவரும் மயங்கிவிட்டனர். ஆபத்தான நிலையில்,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கலஹா கிரேட்வேலி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர், மருதானையில் பணிபுரியும் போது, ​​பிரதான சந்தேகநபருக்கு தங்குமிடத்தை வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டது. அங்கு வைத்தே இந்த கொலையை திட்டமிட்டதாக கூறப்படுகின்றது. அந்த குழுவினர், கலஹா, கிரேட்வலி தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாகவும் ​பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஜிந்துபிட்டி பிரதேசத்தில் ஜனவரி 24 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது, அங்கு வந்திருந்த ஒருவரை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தக் கொலை சந்தேகநபர்களுக்கு, விஷம் கலந்த பால் பாக்கெட்டுகளை வழங்கியவர்களும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில்,கலஹா கிரேட்வேலி தோட்டத்திலுள்ள வீடொன்றில் புதிதாக வந்தவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். அதனையடுத்து ஆட்டுபட்டிதெரு வீதி பொலிஸ் குழுவொன்று, கலஹாவுக்கு விரைந்து அங்கிருந்த ஏழுபேரையும் கைது செய்து, ஆட்டுபட்டிதெரு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இரக்கம் காட்டு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

இரக்கம் காட்டு

இரக்கம் காட்டு

பறவைகளே பறவைகளே
பார் தேசம் போனீரா
பகை வனவன் போர் தொடுக்க
மண் விட்டு பறந்தீரா

சொந்த மண்ணின் துயர் அறிந்து
சோகமுடன் வாழ்கிறீரா
பந்தம் அது இழந்து
பார் தேசம் வாழ்கிறீரா

எங்களவன் தேசமதை
எவன் வந்து ஆழ்வதுவோ
ஏக்கத்தில மனம் தவிக்க
ஏங்கி தினம் தவிப்பதுவோ

ஒன்று பட்டு வாழ்ந்திடுவோம்
ஓர்மமதை விட்டுடுவீர்
எங்களுக்கும் உம் உரிமை
எடுத்து கொஞ்சம் தந்திடுவீர்

பார் புகழும் நாடாக – இலங்கை
பாரினில காட்டிடுவோம்
பாசமதை காட்டி விடு
பல தடை உடைந்தோடும் ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-02-2024

இஸ்ரேல் இராணுவ கட்டளை தளம் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ கட்டளை தளம் மீது ரொக்கட் தாக்குதல்


இஸ்ரேல் இராணுவ கட்டளை தளம் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் இராணுவ கட்டளை தளம் மீது ரொக்கட் தாக்குதல்
இராணுவ சிப்பாய் அவுட் பல சிப்பாய்கள் கொத்தாக காயம் .


வெடித்து பறக்கும் ஏவுகணைகள் ,

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு

கொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு


கொழும்பில் முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் முகத்துவாரம் வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

முகத்துவாரம் வீதி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணியாற்றி வரும் குறித்த நபர், நேற்று இரவு அந்த உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த கொழும்பு -14 மஹவத்தை பகுதியை சேர்ந்த 51 வயதான நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு

இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது

அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை திருடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார்.

அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய சந்தேக நபர் கைது

அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

ஒரு மணி நேரத்தில் சந்தேக நபர் அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் களவாடப்பட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க

புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க

நாட்டை பொருளாதார மாற்றத்திற்கு இட்டுச் செல்வதற்கு, உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியமானது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்தைக்குத் தேவையான துறைசார் நிபுணர்களை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சுட்டிக்காட்டினார்.

பரீட்சை சுமையை குறைத்து, ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்ளடக்கி, தொழிலுக்கு ஏற்றவகையிலான மாணவர்களை உருவாக்க எதிர்பார்ப்பதாகவும், புதிய தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியில் இன்று (14) பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான இலவச பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் இந்த நிகழ்வுடன் இணைந்ததாக நாடளாவிய ரீதியில் உள்ள 10,126 பாடசாலைகள் மற்றும் 822 பிரிவெனாக்களின் பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும்.

இதன்போது அடையாரீதியாக, பிக்கு மாணவர் மற்றும் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சீருடைகள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

புதிய கல்வி முறைமை அவசியம் ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரியின் அதிபர் ஏன் கிறிஸ்டீன் நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

எனது வீட்டிற்கு அருகில் ஐந்து பாடசாலைகள் உள்ளன. நான் கற்ற றோயல் கல்லூரி மற்றும் தேர்ஸ்டன் கல்லூரி, மகளிர் கல்லூரி, மகாநாம கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி என்பனவே அவை. அதனால் எனக்கு கல்வித்துறையில் அதிக கவனம் செலுத்த முடிந்துள்ளது. ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இப்பாடசாலைகளின் அபிவிருத்தியில் கவனம் செலுத்தினோம்.

2022 இல் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியால், கல்வித் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் சரிவைச் சந்தித்தன. பாடசாலை பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க முடியவில்லை. அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க எந்த தலைவரும் முன்வரவில்லை. அப்போது, சவாலை ஏற்று, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தேன்.

இந்த பொருளாதார வேலைத்திட்டத்தினால் இன்று நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்று வருகின்றது. அதன்படி, பாடசாலை சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்களை உரிய நேரத்தில் வழங்க அரசாங்கத்தினால் முடிந்துள்ளது. அதற்காக 14 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டது.

கல்வி மறுசீரமைப்பின் ஊடாக நாட்டில் புதிய கல்வி முறையொன்றை உருவாக்க வேண்டும். உலகிற்கு பொருத்தமான தொழில் படையினை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும். நாட்டில் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துவதற்கு கல்வி முறையை உலகிற்கு பொருத்தமான வகையில் மாற்றியமைக்க வேண்டும். அதன் மூலம் உலகிற்கு தேவையான தொழில் படையினை உருவாக்க முடியும்.

அதனூடாக சர்வதேச சந்தையுடன் போட்டியிடும் வாய்ப்பு எமக்கு கிடைக்கும். பரீட்சைகளின் சுமைகளை குறைத்து ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை கல்வி முறையில் உள்வாங்கி தொழில் முறைகளுக்கு உகந்த சமூகத்தை உருவாக்க எதிர்பார்க்கிறோம். அதற்காக தொழில், தொழில்நுட்பக் கல்லூரிகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம்.

நாம் எவரும் 2022 இல் இருந்த நிலைக்குச் செல்வதை விரும்பவில்லை. எரிவாயு, எரிபொருள் உணவு வரிசைகள் அற்ற சமூகமே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். எனவே அவ்வாறான யுகத்திற்குள் மீண்டும் நாடு செல்லாமலிருக்க வலுவான பொருளாதாரத்தை நாம் உருவாக்குவோம். வலுவான பொருளாதாரம் கொண்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டத்தினை நாம் ஆரம்பித்துள்ளோம். என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த,

இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக 09 மாகாணங்களின் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங்கள் இன்று வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் கல்வித்துறையின் நான்கு பிரிவுகளை ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து மனித வளத்தை முகாமைத்துவம் செய்து மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தினார்.

இன்று வழங்கப்படும் பாடசாலை சீருடையில் 80% சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாகும். எஞ்சிய 20% சதவீதம் இலங்கை அரசாங்கத்தின் செலவில் பெற்றுகொடுக்கப்பட்டது.

இந்திய கடன் உதவியில் கிடைத்த கடதாசியை கொண்டு பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அதனால் உரிய தினத்தில் பாடப்புத்தங்களை அரசாங்கத்தினால் வழங்க முடிந்துள்ளது. அரச அச்சீட்டு பணிகளில் இலாபம் ஈட்டவும் முடிந்துள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் மாணவர்களுக்கும் சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை வழங்க அரசாங்கம் 19 பில்லியன்களை செலவிடுகிறது.

கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக தாமதமாகிவரும் சாதாரண தர பரீட்சைகளை 2025 ஆம் ஆண்டிலிருந்து உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கல்வி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி பெரும் பங்களிப்பு வழங்குகிறார். உலகிற்கு பொருத்தமான வகையில் கல்வி முறையை மாற்றியமைக்க அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார். இந்த அனைத்து வேலைத்திட்டத்துடனும் உலகை வெல்லக்கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும்.

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் யாதாமினி குணவர்தன, மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் தி எயார் ரொஷான் குணதிலக்க,கல்வி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, கல்வி வெளீயீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.தாஜூதீன் உள்ளிட்டவர்களுடன் சென். புனித அந்தோனியார் பெண்கள் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்

துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்

நேற்றிரவு (13) மோதரையில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளன.

உணவகத்திற்கு முன்பாக காத்திருந்த நபர் ஒருவரை காரில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு மோதரையில் சிக்கிய CCTV காட்சிகள்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் வலது தோள்பட்டை, கழுத்து மற்றும் கால் ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உணவகத்தின் முகாமையாளராகப் பணியாற்றிய கொழும்பு 14 ஐ சேர்ந்த 51 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ஹிஸ்புல்லா தலைவர்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ஹிஸ்புல்லா தலைவர்


மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ஹிஸ்புல்லா தலைவர்

போர் ஆரம்பிக்க பட்டால் மில்லியன் இஸ்ரேலு மக்கள் ஓடுவார்கள் ,
ஹிஸ்புல்லா தலைவர் திடீர் அறிவிப்பு ,இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையில் மீள மோதல் உச்சம்

வீடியோ

வவுனியாவில் ஒருவர் மீது கத்திக்குத்து
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் ஒருவர் மீது கத்திக்குத்து

வவுனியாவில் ஒருவர் மீது கத்திக்குத்து

வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். இரவு குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி நின்றுள்ளனர்.

வவுனியாவில் ஒருவர் மீது கத்திக்குத்து

இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு பணியாற்றுபவருக்கும் இடையில் நேற்று (13) அதிகாலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்தார்.

காயமடைந்த சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காவலாளியின் உடல் கடலில் சடலமாக மீட்பு

காவலாளியின் உடல் கடலில் சடலமாக மீட்பு

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விமானங்கள் சுட்டு வீழ்த்தல் வெடிக்கும் எதிரி கோட்டைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானங்கள் சுட்டு வீழ்த்தல் வெடிக்கும் எதிரி கோட்டைகள்


விமானங்கள் சுட்டு வீழ்த்தல் வெடிக்கும் எதிரி கோட்டைகள்

விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ,வெடிக்கும் எதிரி கோட்டைகள் ,
அலறும் பகை கோட்டைகள்

வீடியோ

காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி
Posted in இலங்கை செய்திகள்

காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி

காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி

பல வருட காதலை தவிர்க்க முயன்ற 22 வயது காதலனை கத்தியால் குத்திய 19 வயது காதலியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதவான் நந்தனி காந்திலதா உத்தரவிட்டார்.

கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி கம்பளை நகரில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

சிறிது காலத்திற்கு பின்னர் குறித்த இளைஞன் தன்னை கைவிடுவதாக உணர்ந்தர் அவர், இதுபற்றி காதலனிடம் கேட்டாலும், அவனது முடிவு மாறாது என்பதை அறிந்து, அவர்கள் இருவரின் புகைப்படங்களையும் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் அந்த யுவதி.

காதலனை வைத்தியசாலைக்கு அனுப்பிய காதலி

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞன், முகநூலில் இருந்து புகைப்படங்களை அகற்றுமாறு கூறி, அவரை தாக்கியுள்ளார், இதனை அறிந்த அவரது தாயும் சகோதரரும் சம்பவத்தில் தலையிட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த இளைஞன் வியாபாரம் செய்யும் கம்பளை பொதுச் சந்தைக்கு யுவதியின் தாயும் சகோதரனும் சென்று இது குறித்து கேட்டபோது, ​​குறித்த இளைஞன் காதலியின் சகோதரனை தாக்கியுள்ளார்.

அங்கு தாக்கப்பட்ட மகனை மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றுள்ள நிலையில், அந்த யுவதி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த காதலன் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலின் பின்னர் அங்கிருந்த ஏனையவர்கள் யுவதியை பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல் இஸ்ரேலியர்கள் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல் இஸ்ரேலியர்கள் காயம்


ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல் இஸ்ரேலியர்கள் காயம்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல் வீச்சில் சிக்கி
இஸ்ரேலியர்கள் காயம் என இஸ்ரேல் அறிவிப்பு .

தொடர்ந்து வெடிக்கு ஏவுகணைகள் ரொக்கட்

வீடியோ

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் லெப்கேணல் உள்ளிட்ட 3 தளபதிகள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் லெப்கேணல் உள்ளிட்ட 3 தளபதிகள் பலி


ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் லெப்கேணல் உள்ளிட்ட 3 தளபதிகள் பலி

ஹமாஸ் இராணுவ தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தின்
லெப்கேணல் உள்ளிட்ட 3 தளபதிகள் பலியாகிள்ளனர் .இஸ்ரேலுக்கு மிக பெரும் இழப்பு

வீடியோ

வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
Posted in இலங்கை செய்திகள்

அறிக்கை வெளியிட்டார் மஹிந்த ராஜபக்ச

அறிக்கை வெளியிட்டார் மஹிந்த ராஜபக்ச

விக்டோரியா, கொத்மலை மற்றும் மேல் கொத்மலை மின் நிலையங்களுக்குப் பிறகு இலங்கையின் மிகப்பெரிய நீர்மின் நிலையங்களில் ஒன்றாக உமா ஓயா திட்டத்தின் 120 மெகாவாட் நீர்மின் நிலையம் இம்மாதம் இயங்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அறிக்கையொன்றை வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைவர், உமா ஓயா திட்டம் இலங்கைக்கு மிகவும் தேவையான குறைந்த விலை மின்சாரத்தை வழங்கும் என்று கூறினார்.

ஸ்தாபனத்திற்கு எதிரான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) சாதகமான பங்களிப்பை வழங்கிய ஒரே பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக உமா ஓயா திட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

“மத்திய மலைநாட்டிலிருந்து தென்கிழக்கு உலர் வலயத்திற்கு நீரை திருப்பும் இந்த திட்டத்தின் கட்டுமானம் மார்ச் 2010 இல் தொடங்கியது. பல தசாப்தங்களாக விவாதிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள், ஆனால் எந்த அரசாங்கமும் உண்மையில் செயல்படுத்த முடியவில்லை. நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், பொறாமை கொண்ட நபர்கள் இந்தச் சாதனைகளை இழிவுபடுத்தினர், இந்த திட்டங்களின் செலவு மதிப்பீடுகளை எனது அரசாங்க உறுப்பினர்கள் பணம் சம்பாதிப்பதற்காக உயர்த்தியுள்ளனர்.

அறிக்கை வெளியிட்டார் மஹிந்த ராஜபக்ச

இதுபோன்ற முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் பொதுமக்களின் முன் வைக்கப்படவில்லை என்றாலும், ஒரு பெரிய அளவிலான திட்டத்தைத் தொடங்கும் எவரையும் திருடன் என்று நம்பும் ஒரு முழு தலைமுறையும் வளர்ந்துள்ளது. இப்படிப்பட்ட பிரச்சாரங்கள் வலுப்பெறும் போது, ​​நாட்டிற்கு ஏதாவது செய்யும் திறன் உள்ளவர்கள் வில்லன்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள், அதே சமயம் பேசுவது, விமர்சிப்பது, பொய் சொல்வதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியாதவர்கள் ஹீரோக்களாக மாறுகிறார்கள்.

திட்ட அமலாக்கத்தில் ஊழல் நடந்ததற்கான ஆதாரம் இருந்தால், அதற்கான ஆதாரங்களை ஆய்வு செய்வது ஒன்றுதான், ஆனால், எந்த ஆதாரமும் இல்லாமல் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அரசு மற்றும் தலைவர்களை, அத்தியாவசியமான பெரிய திட்டங்களை கூட தொடங்க விடாமல், தேசிய நலனுக்கு எதிராக செயல்படுகிறது,” என்றார்.

2006 முதல் 2014 வரையான தனது ஒன்பது வருட ஆட்சிக் காலத்தில், நெடுஞ்சாலைகள், மின் உற்பத்தி, நீர்ப்பாசனம் போன்றவற்றுக்கான பல தசாப்தங்களாக திட்டமிடப்பட்ட ஆனால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த திட்டங்களைத் தீர்த்து வைக்க முடிந்தமை அதிர்ஷ்டம். அந்த சாதனை படைக்க கூடிய அரசாங்கத்தை 1950 களில் இருந்து நான் கனவு காண்கிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

“எனது அரசாங்கம் வீதிகளுக்கு தரைவிரிப்பு செய்தது, மருத்துவமனைகள் மற்றும் பதடசாலைகளை கட்டியது மற்றும் மேம்படுத்தியது மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு புதிய வீடுகளைக் கட்டியது. எனவே அந்த நேரத்தில் செய்த வேலை சில ஆண்டுகள் நீடிக்கும். எவ்வாறாயினும், நான் ஜனாதிபதியாக இருந்து தற்போது பத்தாவது வருடம் ஆகிறது, மேலும் தொழில்துறை மற்றும் சேவைத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த விலை மின்சார உற்பத்தி போன்ற துறைகளில் புதிய முதலீடு தேவைப்படுகிறது.

“உமா ஓயா திட்டத்தின் செயற்பாடு இலங்கைக்கு இந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது – இது மக்களின் நல்வாழ்வுக்காக முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களால் வழங்கப்பட்ட பங்களிப்பை வரவேற்கும் மற்றும் பாராட்டுகிறது. 1948 ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் பல தசாப்தங்களாக நாட்டில் தற்போதுள்ள உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பைச் செய்துள்ளன. எவ்வாறாயினும், உமா ஓயா திட்டமானது ஸ்தாபனத்திற்கு எதிரான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கூட சாதகமான பங்களிப்பை வழங்கிய ஒரே பெரிய உட்கட்டமைப்பு திட்டமாகும்.

“எனது அரசாங்கம் உமா ஓயா திட்டத்தை நிர்மாணிப்பதை ஆரம்பிக்கும் முன்னர், பல்வேறு அரசாங்கங்களின் கீழ் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக கலந்துரையாடப்பட்டு வந்தது. United States Operations Mission மற்றும் Canadian Hunting Survey Corporation ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1959 இல் உமா ஓயாவின் திசைதிருப்பல் முதன்முதலில் முன்வைக்கப்பட்டது.

இது டட்லி சேனாநாயக்க அரசாங்கத்தின் போது மகாவலி திட்டத்திற்கான UNDP/FAO மாஸ்டர் திட்டத்தில் இடம்பெற்றது மற்றும் ரணசிங்க பிரேமதாச மற்றும் சந்திரிகா குமாரதுங்க அரசாங்கங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வுகளுக்கு உட்பட்டது.

2001-2004 ஐ.தே.க அரசாங்கத்தின் போது கரு ஜயசூரிய மற்றும் ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் மின்சாரம் மற்றும் எரிசக்தி மற்றும் நீர்ப்பாசனம் ஆகிய பதவிகளை வகித்த போது உமா ஓயா திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது,” என்றார்.

இவற்றையெல்லாம் மீறி அரை நூற்றாண்டுக்கும் மேலாக வரையப்பட்ட இந்த திட்டத்தை தனது அரசாங்கம் நிர்மாணிக்க ஆரம்பித்த போது, ​​தனது அரசியல் எதிரிகள் அவரது கிராமத்தில்

ஹம்பாந்தோட்டைக்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்ததாக குற்றம் சாட்டினார்.

“திட்டம் கைவிடப்பட்ட பின்னர், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உமா ஓயா திட்டத்தை மிகவும் வெளிப்படையாக விமர்சித்ததுடன், அதன் தலைவர் பாராளுமன்றத்தில் இந்தத் திட்டத்தை திசைதிருப்பத் தொடங்கப்பட்டதாகத் தெரிவித்ததன் மூலம் தரைமட்டத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.

ராஜபக்சக்களின் கனவான ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் விமான நிலையத்திற்கும் தண்ணீர் வழங்க செய்யப்படும் திட்டமென கூறப்பட்டது. இது எனது தலைமையிலான அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றிகளுக்கான எந்தவொரு அரசியல் நன்மதிப்பையும் மறுக்க ஒரு கண்மூடித்தனமான மற்றும் சிந்திக்காத முயற்சியின் ஒரு பகுதியாகும்.

“இருப்பினும் 2005 ஜனவரியில், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவரே உமா ஓயா திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்தார்.

அவரது அமைச்சரவைப் பத்திரம் எண்: 05/0036/039/002 ஜனவரி 4, 2005 இன் பிற விஷயங்களில், இலங்கையின் தென்கிழக்கு உலர் வலயத்தில் நம்பகமான நீர் ஆதாரம் இல்லாத நிலையில், உமா ஓயாவிலிருந்து தண்ணீரைத் திருப்புவதைத் தவிர வேறு வழியில்லை. முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றினார்.

” ஜே.வி.பி கூட சாதகமான பங்களிப்பை வழங்கிய ஒரே பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக இது இருப்பதால், உமா ஓயா திட்டத்தை செயல்படுத்துவது இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இவ்வாறான திட்டங்களில் இருந்து நாட்டுக்கு, இரண்டாவதாக, நிதியைப் பெற்று, திட்டத்தை நிர்மாணிப்பதன் மூலம், அத்தகைய திட்டங்களை யதார்த்தமாக மாற்றும் அரசாங்கத்திற்கு உரிய அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்களை இத்திட்டம் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறினார்.

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பலி

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பலி

உஸ்வெடகெய்யாவ தல்தியவத்த கடற்கரையில் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி பலி

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஏனைய அதிகாரிகள் குழுவுடன் நீராடச் சென்ற கான்ஸ்டபிள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

ராகம வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த கான்ஸ்டபிளின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

அரச பேருந்தும் இராணுவத்தினரின் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (12) மாலை 4.30 மணியளவில் A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்காவில் பகுதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துணுக்காயிலிருந்து காரைநகர் நோக்கி பயணித்த அரச பேருந்து எதிரே பயணித்த இராணுவ ட்ர​க் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

முல்லைத்தீவில் கோர விபத்து 6 பேர் காயம்

விபத்துக்குள்ளான இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 4 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பேருந்தை செலுத்திய சாரதியும் காயங்களுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் குறித்த சாரதி பொலிசாரால் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சகத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தாதியர் சேவையின் பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையால் நாளை (14) கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதிவத்த தெரிவித்தார்.

வாகன விபத்தில் நால்வர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 15 ஆம் தூண் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அளுத்கம மேல் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த எச்.எம். ஹர்ஷன பிரதீப் என்பவரே விபத்தில் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் சிகிச்சைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்தில் சிக்கியது

பாராளுமன்ற உறுப்பினர் புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த போது, ​​பாராளுமன்ற உறுப்பினரின் கார் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தை ஓட்டிச் சென்றவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.