40 000 டன் குண்டுகளை வீசிய இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெடித்த குண்டு

பாகிஸ்தானில் வெடித்த குண்டு

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர்.

பெஷாவரில் உள்ள சந்தைக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தன.

மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்ததைத் தொடர்ந்து இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் பலி 78 பேர் மருத்துவமனையில்
Posted in உலக செய்திகள்

ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் பலி 78 பேர் மருத்துவமனையில்

ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் பலி 78 பேர் மருத்துவமனையில்

சான்சிபாரின் பெம்பா தீவில் கடல் ஆமை இறைச்சியை சாப்பிட்ட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சான்சிபார் தீவுக்கூட்டத்தில் உள்ள பெம்பா தீவில் கடல் ஆமை இறைச்சியை சாப்பிட்ட 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெரியவர் உயிரிழந்தனர் மற்றும் 78 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.

கடல் ஆமை இறைச்சியானது சான்சிபார் மக்களால் ஒரு சுவையான உணவாகக் கருதப்படுகிறது, இருப்பினும் அது உணவு விஷத்தின் ஒரு வகை செலோனிடாக்சிசத்தால் அவ்வப்போது இறப்புகளை விளைவிக்கிறது.

இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் பல மில்லியன் இழப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் பல மில்லியன் இழப்பு


இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் பல மில்லியன் இழப்பு

இஸ்ரேல் துறைமுகத்தில் எரியும் எண்ணெய் கூதம் .


பல மில்லியன் இழப்பு ,காசா ஆதரவு போர் படை விமானங்கள் கடும் தாக்குதல் .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் இன்றைய களநிலவரம் ஆபத்தானதாக மாற்றம் ,

வீடியோ

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்


அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

செங்கடலில் பாதுகாப்பில் ஈடுபட்ட அமெரிக்கா விமான தாங்கி கப்பல் மீது
எமன் ஹவுதிகள் தாக்குதல் .

ஹவுதிகள் ஏவுகணைகள் DRONE
ரக விமானங்கள் தாக்குதல் திணறும் செங்கடல்

வீடியோ

கனடாவின் ஒட்டாவாவில் இலங்கை ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கனடா ஒட்டாவாபடுகொலை குடும்பத்தவர்களின் விருப்பப்படி இறுதிக் கிரியைகள்

கனடா ஒட்டாவாபடுகொலை குடும்பத்தவர்களின் விருப்பப்படி இறுதிக் கிரியைகள்

கனடா ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகளை கனேடிய அதிகாரிகளுடன் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தொடர்புகொள்வதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி ஒட்டாவாவில் உள்ள Barrhaven இல் உள்ள ஒரு இல்லத்தில் தாய், நான்கு பிள்ளைகள் மற்றும் ஒரு குடும்பத்தில் அறிமுகமானவர் உட்பட ஆறு இலங்கையர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குறித்து ஒட்டாவாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினால் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சகம் அறிக்கையினூடாக தெரிவித்துள்ளது.

“பாதிக்கப்பட்டவர்களின் கணவர் மற்றும் குறித்த சிறுவர்களின் தந்தையுமாகிய நபர் சம்பவ இடத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலைச் சம்பவம் தொடர்பாக 19 வயதுடைய இலங்கையர் ஒருவரை சட்ட அமலாக்க அதிகாரம் கைது செய்துள்ளது. அவர் தற்போது பொலிஸ் காவலில் உள்ளார்” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலங்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் விருப்பத்தின்படி இறுதிச் சடங்குகள் உரிய நேரத்தில் நடத்தப்படும்.

கனடா ஒட்டாவாபடுகொலை குடும்பத்தவர்களின் விருப்பப்படி இறுதிக் கிரியைகள்

வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக விவகாரப் பிரிவு, ஒட்டாவாவில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்துடன் நெருக்கமாக தொடர்பு கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தேவையான சம்பிரதாயங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள்” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குற்றம் நடந்த இடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக ஒரு விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மார்ச் 9, 2024 சனிக்கிழமையன்று நகர ஆளுநர் ஒரு சிறப்பு விழிப்புணர்வைத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களின் தந்தையை (கணவரை) மருத்துவமனையில் பார்வையிட்டுள்ளனர்.

அமைச்சு இலங்கையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக சம்பந்தப்பட்ட கனேடிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளது ” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் இன்று மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்து தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு

முல்லைத்தீவு பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று சட்டவிரோதமாக தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (09) மாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக வாகனத்தில் தேக்கு மரகுற்றிகளை கடத்துவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் செஞ்சோலை பகுதியில் வைத்து தேக்கு மரக்குற்றிகளை கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனத்தினையும் , பட்டா ரக வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

13 தேக்கு மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாளையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

22 இந்திய மீனவர்கள் கைது

22 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே நேற்று இரவு (09) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் கஞ்சாவுடன் கண்காட்சிக்குள் நுழைந்த பெண்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கஞ்சாவுடன் கண்காட்சிக்குள் நுழைந்த பெண்

யாழில் கஞ்சாவுடன் கண்காட்சிக்குள் நுழைந்த பெண்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் இலங்கை விமானப் படையின் கண்காட்சிக்கு கேரள கஞ்சாவுடன் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த 26 வயதான பெண்ணே இரண்டு கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஜந்தாவது நாளாகவும் இடம்பெற்றுவருகிறது.

இதன்போது கண்காட்சி பிரதான நுழைவாயிலில் கண்காட்சிக்கு பொதியுடன் வந்த பெண்ணை சோதனையிட்டபோதே கஞ்சா இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பெண் விமானப்படையினரால் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாமனாரை கொலை செய்த மருமகன்

மாமனாரை கொலை செய்த மருமகன்

குடும்ப தகராறு காரணமாக மருமகன் , மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மயில்குளம் பகுதியைச் சேர்ந்த 81 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மருமகன் தனது மாமனாரை இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனது மாமனாரை கொலை செய்த மருமகன், பின்னர் சில மருந்து மாத்திரையை உட்கொண்டதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மருமகன், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

வைத்தியசாலையில்… கொழும்பு ஹைலெவல் வீதியின் கொஸ்கம மிரிஸ்வத்த பகுதியில் நேற்று (08) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த சீமெந்து ஏற்றிய லொறி ஒன்று டயர் வெடித்து வீதியை விட்டு விலகி எதிர் திசையில் ஓடி மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை மகன் பலி தாய்

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன், படுகாயமடைந்த தாய் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொஸ்கம, அலுபோடல பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தந்தையும் 8 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.

லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா


இஸ்ரேல் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா

இஸ்ரேல் தலைநகர் துறைமுகத்தில் துப்பாக்கி சண்டை ,
சிலர் மரணம் ,ஆயுத படைகள் குவிப்பு .


உக்ரைன் தாக்குதலில் எரிகிறது ரஷ்யா

வீடியோ

காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்|கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்|கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்


காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்|கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

காசா மக்களுக்கு உணவுகளை வீசிய அமெரிக்கா விமானங்கள்,
இஸ்ரேல் பாலஸ்தீன போர் களத்தில் உணவு இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு பொதிகள் வீசிய அமெரிக்காவிமானங்கள் .

ஏடன் வளைகுடாவில் பயணித்த சரக்கு கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல்

வீடியோ

பள்ளமடு வீதியில் தீ பற்றிய மோட்டார் சைக்கிள் இருவர் தப்பினர்
Posted in இலங்கை செய்திகள்

பள்ளமடு வீதியில் தீ பற்றிய மோட்டார் சைக்கிள் இருவர் தப்பினர்

பள்ளமடு வீதியில் தீ பற்றிய மோட்டார் சைக்கிள் இருவர் தப்பினர்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி, வெள்ளிக்கிழமை (08) மாலை இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது குறித்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியது.

இதன் போது குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

குறித்த சம்பவம் யாழ் -மன்னார் பிரதான வீதி பள்ளமடு வீதியில் இடம் பெற்றுள்ளது.

தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் தீக்கிரை யானது.

கோட்டாவின்முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவு பாட்டலி சம்பிக்க ரணவக்க
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவின்முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவு பாட்டலி சம்பிக்க ரணவக்க

கோட்டாவின்முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவு பாட்டலி சம்பிக்க ரணவக்க

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்ற தேசிய மற்றும் சர்வதேச சூழ்ச்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், அவரது முட்டாள்தனமாக நிர்வாகத்தால் பாரிய விளைவுகள் ஏற்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நுகேகொட நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பொருளாதார படுகொலையாளி என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே கடந்த காலம் பற்றி புத்தகம் எழுதுவது பயனற்றது. ராஜபக்சர்களின் வியாக்கியானத்தை நாட்டு மக்கள் கவனத்தில்கொள்வதில்லை என்றார்.

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சதியினால் தான் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றதாக கோட்டாபய ராஜபக்ச குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராதபுரம் ரம்பேவ கோர விபத்தில் மூவர் பலி

அனுராதபுரம் ரம்பேவ கோர விபத்தில் மூவர் பலி

அனுராதபுரம் ரம்பேவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் ரக வாகனமொன்று வீதியில் சென்ற பாதசாரிகள் குழு மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பெண்கள் காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சிலர் மீதே கெப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் பின்னர் கெப் ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

கரையோர ரயில் வீதியின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையான பகுதியில் ஒரு ரயில் வீதிக்கு ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (09) நாளை (10) மற்றும் நாளை மறுதினம் (11) ஆகிய மூன்று நாட்களுக்கு இது அமுல்படுத்தப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெம்பனித்தெரு வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்றின் பராமரிப்பு பணிகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாகவே இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர வீதியில் ரயில் தாமதம் ஏற்படக் கூடும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றைய தினம் (08.03) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும்,

பொலிஸாரின் கட்டளையை மீறும் பட்சத்தில் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது
வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்கள் என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்தில் குவிக்கப்பட்டனர்.

வவுனியா வெடுக்குநாறி மலையில் பொலிஸார் அத்துமீறல் 8 பேர் கைது

சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த பொலிசார் கலந்து கொண்ட பெண்களையும் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் மேற்கொண்டு பொலிசார் கைது செய்ய முயன்றதுடன், அவர் பாராளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டு விட்டு சென்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்
Posted in இலங்கை செய்திகள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார் இந்நாட்டின் பொல்கஹவெல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என தெரியவந்துள்ளது.

35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்கவின் தாயார் கண்ணீர் மல்க தெரணவிடம் இன்று தெரிவித்தார்.

கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவன் இல் இலங்கை குடும்பம் ஒன்று வாழ்ந்த வீட்டில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.

கடந்த புதன்கிழமை கனடா நேரப்படி இரவு 11 மணிக்கு சற்று முன்னர் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தின் போது 35 வயதுடைய தாய், அவரது நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களுடன் வசித்த மேலும் இரு இலங்கையர்களும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது குழந்தைகளின் தந்தையான 38 வயதுடைய தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டுக்கு வந்தபோது, ​​வீட்டில் விளக்குகள் வழமைபோல் எரியவில்லை.

அவர் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே யாரோ அவரைத் தாக்கியதால், இருள் சூழ்ந்திருந்ததால், அப்போது தாக்கிய நபரை அடையாளம் காண முடியவில்லை.

எவ்வாறாயினும், தம்மைத் தாக்கிய இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் கண்ட தனுஷ்க, அவரது குடும்ப உறுப்பினர்கள் குறித்து கேட்டுள்ளார்.

சிறிது நேரம் கழித்துதான் தனுஷ்கவின் கைகள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதையும் உணர்ந்தார்.

அப்போது, ​​தனுஷ்க ஃபேப்ரியோவின் கையில் இருந்த கத்தியை பறித்துக் கொண்டு, தனக்கு உதவுமாறு கூச்சலிட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாபடுகொலை சம்பவம் மேலும் பல தகவல்கள்

911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு இரவு 10:52 மணிக்கு அவசர நிலை குறித்து அழைப்பொன்று வந்ததாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.

அழைப்பினை ஏற்படுத்திய நபர் 911 என்ற இலக்கத்திற்கு அழைத்து உதவி கோருமாறு கத்தியபடி உள்ளதாக தெரிவித்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாந்தி ரமேஷ் (அயல் வீட்டுப் பெண்)

“வீட்டுக்கு வரும் வழியில் ஒருவர் தரையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அவரை இரண்டு பொலிஸ்காரர்கள் அழைத்துச் சென்று பொலிஸ் காரில் ஏற்றினார்கள்.

அப்போது இப்படியொரு சோகம் நடந்ததாகத் தெரியவில்லை. இது மிகவும் சோகமானதும், துயரமானதும் சம்பவம். “

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஒட்டாவா பொலிஸார் முதலில் காயமடைந்த தனுஷ்கவை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிறகு, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் கொல்லப்பட்டதை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

பொலிஸ் பிரதானி – எரிக் ஸ்டப்ஸ்,

“எங்கள் குழு உடனடியாக அனுப்பப்பட்டது. அதிகாரிகள் சந்தேக நபரை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்தனர். அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து சோதனை செய்தனர். அப்போதுதான் இந்த சம்பவத்தில் இறந்த 6 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

இந்த குடும்பங்கள் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள். அவர்கள் இலங்கையில் இருந்து வந்தவர்கள். உயிரிழந்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்துள்ளார்..

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது, ஆனால் தற்போது அவரது உடல்நிலை சீராகி உள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு கூரிய ஆயுதம் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.”

சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்
Posted in உலக செய்திகள்

சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்

சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் குவிப்பு போர் பதட்டம்

சீனா எல்லை அருகில் 10 000 இந்தியா இராணுவம் திடீர் குவிப்பு போர் பதட்டம் , சீனா இந்தியாவுக்கு இடையில் கடும் முறுகல் .

இந்தியா இராணுவத்தினர் திடீரென சீனா பகுதிகளில் குவிக்க பட்டுள்ளனர்

3400 கிலோ மீட்டர் அகல எல்லைகளில் இந்த இராணுவம் குவிக்க பட்டுள்ளது ,.

இந்தியாவின் எல்லைக்குள் ஊடுறுவி சீனா பெரும் நெருக்கடியை இந்தியாவுக்கு வழங்கி வருகிறது . எல்லை புறங்களில் புதிய சீனா குடியேற்றங்களை நிறுவி வருகிறது .

இதனை அடுத்தே தற்போது சீனா இந்தியாவுக்கு இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது குறிப்பிட .தக்கது

வீடியோ