பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு ,யாழ். ஏழாலை மயிலங்காடு ஞான வைரவர் ஆலய நித்திய பூசகர் ஆலய அர்த்த மண்டபத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மானிப்பாயைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன்

இவ்வாறு உயிரிழந்தவர் கோவில் வீதி, சுதுமலை தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்பவராவார்.

குறித்த, பூசகர் இருமல் சளி காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

பின்னர் மறுநாள் சளிக்கு ஆவியும் பிடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்துக்கு பூசைக்கு சென்ற நிலையில், அர்த்தமண்டபத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை

மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனையில் நுரையிரலில் இரத்த அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்
Posted in இலங்கை செய்திகள்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார் இன்று மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு விளக்கமறியல்

இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்து தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.