Tag: பஸ் விபத்தில்
பஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்
பஸ் விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்
தொலஸ்பாகேவில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில், மூன்று பாடசாலை மாணவர்கள், ஐந்து பயணிகள் மற்றும் பஸ் சாரதி ஆகியோர் காயமடைந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09) காலை 6.45 மணியளவில் நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்துள்ளனர்.
Featured
தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 26 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
அத்துடன், காயமடைந்த பெண் தொழிலாளர்கள் சிலர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய
வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
ஹோமாகம, பிடிபன பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், மேலும் 13 பேர் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
கெலின்கந்தயில் இருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகெலி எல்ல பிரதேசத்தில் வீதியில் வழுக்கிச் சென்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பஸ்ஸின் சாரதி உட்பட 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



















