ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்


ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல்

ரபா தாக்குதலை ஆரம்பிக்கும் இஸ்ரேல் ,திறக்கப்படும் போர் முனை ,பதட்டமாகும் நாடுகள் .

இஸ்ரேல் இராணுவம் தமது இராணுவத்தை தயார் செய்துள்ளது . இஸ்ரேல் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேல் போருக்கு ஆதரவாக அமெரிக்கா மக்கள் எழுபது வீதம் உள்ளனர் என அமெரிக்கா அறிவித்துள்ளது .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பி ஈழ வேந்தன் மரணம் என அறிவிக்க பட்டுள்ளது ,வயது மூப்பு நோய் வாய்ப்பட்டு இருந்த அவர் காலமானார் .

வடகொரியா நாடானது ஈரானுக்கு இராணுவ தொழில் நுட்ப உதவிகளை உள்ளதாக வடகொரியா ஈரான் என்பன கூட்டாக அறிவித்துள்ளது .


சாட்டை எடுத்து சுழட்ட ஆரம்பித்துள்ளது அரேபிய தேசம் .
எகிப்து காசா எல்லை வழியான ரபா வீதிகள் ,இடி மின்னல் போல குண்டு மழை வெள்ளம் போல பாய போகிறது .

நெருங்கி விட்டது தாக்குதல் நகர்வுகள் .மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அண்ணாமலைக்காக கட்சியை கலைகிறேன் சீமான்
Posted in சீமான் பேச்சு

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான்

அண்ணாமலைக்காக கட்சியை கலைக் கிறேன் சீமான் பகிரங்க சவால் விட்டுள்ளாதால், பர பரப்பாக நாம் தமிழர் கட்சி காணப்படுகிறது .

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ,தமிழகத்தின் தாமரை கட்சியில் தலைவராக அண்ணாமலை தலைவராக தெரிவு செய்யப்பட்டார் .

அவ்வாறு தலைவரான அண்ணாமலை அனைத்து தமிழ் காட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் .

நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம்

அவ்வாறன மிக கொடூரமான நயவஞ்சக தாக்குதல் ஊடாகவே ,நாம் தமிழர் கட்சியின் விவசாய சின்னம் பறிக்க பட்டகாக நம் தமிழர் கட்சியின் செந்தமிழன் சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார் .

நாற்பது தொகுதிகளில் தனித்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது .அவ்வாறு துணிவும் தெளிவும் அறிவும் முதிர்ச்சியும் இருந்தால் ,தமிழகத்தின் மோடி கட்சி தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என சீமான் கேள்வி எழுப்பினர் .

ஆட்சியில் உள்ளவர்கள் ,அனைத்து அடக்குமுறை அதிகாரங்களையும் தன்னகத்தே வைத்துள்ள அண்ணாமலை ஏன் நாற்பது தொகுதியில் தனித்து போட்டியிட முடியவில்லை என சீமான் கேள்வியை எழுப்பியுள்ளார் .

சீமான் நாம் தமிழர் அமோக வெற்றி பெறும் மக்கள்

நாற்பது தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சீமான் அமோக வெற்றி பெறுவார் என வாக்களித்த மக்கள் தமது கருத்தய் வெளியிட்டுள்ளனர் .

வரலாறு காணாத அதிகளவான வெற்றியை நாம் தமிழர் கட்சி ,ஈட்டும் என்பதாக ,சீமான் நாம் தமிழருக்கு வாக்களித்த மக்கள் கருத்து அதிகம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது .

திருட்டு தனமாக தேர்தல் ஆணையம் நாம் தமிழர் காட்சியின் , வாக்குகளை ஆளும் தேர்தல் திணைக்களம் திருடியுள்ளதாக ,நம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பலர் ,தாறுமாறாக குற்றம் சுமத்தி இருந்தனர் .

அவ்வாறு பர பரப்பான தேர்தல் களமாக மாற்றம் பெற்றுள்ள இவ்வேளையில் ,விவசாய சின்னம் முடக்க பட்டுவேளையில் .

புத்திய சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வழமையான வாக்கு வீதம் ,அல்லது அதனை மேவிய வாக்குகள் பெற்றால் ,அது சீமானுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என்றே எதிர் பார்க்கலாம் .

வீடியோ

Error: View 1833908z1f may not exist
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ள செயல் இலங்கை அரசியலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சியாளர்களுக்கு ஆதரவை தருவிக்க ,சாராய கடை நடத்துவதற்கான அனுமதி பாத்திரத்தை கோரியுளளார் .

அவரது கொறிக்கியை ஏற்றுக்கொண்ட ஆளும் அரசு ,அவருக்கு இரண்டு அனுமதி பத்திரங்கள் வழங்கி உள்ளதாம் .

அதனை இரண்டு கோடிக்கு அந்த தமிழ் அரசியல்வாதி ,சாராய கடை வார்த்தர்களிற்கு விற்பனை செய்துள்ளார் .

விலை போகும் தமிழ் அரசியல்வாதிகள்

மேற்படி சாராயக் கடை நடத்துவதற்கான அனுமதி பத்திரம் இரண்டு கோடிக்கு பெற்று கொண்டவர்கள் ,புத்த பிக்குவிடம் சிக்கிய நிலையில் ,அது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் காதுக்கு எட்டியுள்ளது .

அவர் அதனை உடைத்து வெளியிட்ட நிலையில் ,ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

காற்றில் பறந்த தமிழ் உரிமைகள்

தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பதாக பேசி கொள்ளும் ,தமிழ் அரசியல்வாதிகள் ,தமது குடும்ப பொருளாதாரத்தில் , நலனில் அக்கறை செலுத்தி ,மக்களை ஏமாற்றி பிழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை மேற்படி விடயம் காண்பிக்கிறது .

கட்டி கொடுப்பதும் ,கூட்டி கொடுப்பதையும் வழக்கமாக வைத்துள்ள சில தமிழ் எம்பிக்கள் செய்திடும் இவ்விதமான ,இழி செயல்கள் ஊடாக அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இழிநிலை ஏற்படுவதாக சுட்டி காட்ட படுகிறது .

எவர் எப்படி போனால் நமக்கு என்ன பணம் வந்தால் சரி மாப்புள்ள ,நீங்க சாராய கடையை திறவுங்கள் .

குடி மகன்கள் குடித்து விட்டு ,உங்களுத்தான் குடி மகன்கள் குத்துக்கரணம் அடித்து ஒட்டு போடுவார்கள் சாமியோ .

வாலிபன் மேல் விழுந்த இடி
Posted in இலங்கை செய்திகள்

வாலிபன் மேல் விழுந்த இடி

வாலிபன் மேல் விழுந்த இடி

முல்லைத்தீவு ஐயன்குளம் பகுதியில் வாலிபன் மேல் விழுந்த இடி யில் ,அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .

மரத்தின் கீழ் நின்ற 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் மீதே இடி விழுந்துள்ளது .

கனமழை மின்னல் இடித்தாக்கம் ஏற்பட்ட பொழுதே ,மேற்படி வாலிபன் பலியாகியுள்ளார் .

மரத்தின் கீழ் மழைக்கு ஒதுங்கி நின்ற பொழுது அவ்வேளை ,அந்த இடியானது வாலிபனை தாக்கியதாக அங்கிருந்த்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இடி விழுந்து முன்னாள் போராளி பலி

தமது குடும்ப தலைவரை இழந்து மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் கண்ணீரில் உறைந்துள்ளனர் .

சடலமானது மல்லாவி மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு ,மரண பரிசோதனைகள் முடிவுற்றதும் ,உறவினர்களிடம் சடலம் கையளிக்க பட்டுள்ளது .

வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி
வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

இடி விழுந்து பலியான வாலிபர் சடலம் இறுதி நல்லடக்கம் செய்வதற்கு குடும்பத்தினர் தயாராகி வருகின்றனர் .

மேற்படி சம்பவம் அந்த ஐயன்குளத்து மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இயற்கையின் தாக்குதலில் முன்னாள் போராளி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்
Posted in இலங்கை செய்திகள்

ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்

ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்

ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார் .தமிழீழத்தை நேசித்து அதன் மீட்புக்காகத் தன் வாழ்நாளை வரித்துக்கொண்ட திரு.ஈழவேந்தன் ஐயா
அவர்கள் காலாமானார்.(M.K eelaventhan passed away)

தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்
தமிழ் அரசியவாதி சாராய விற்பனையில்


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த ஈழவேந்தன் காலாமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக கனடா – டொராண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழவேந்தன் முன்னாள் எம்பி காலாமானார்


நல்லூரைச் சேர்ந்த புகையிரத நிலைய அதிபர் கனகசபாபதி அவர்களின் மகனான கனகேந்திரன் என்னும் ஈழவேந்தன் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார்.

ஈழவேந்தன் மறைவையொட்டி மக்கள் இரங்கல்


அவரின் மறைவையொட்டி பலரும் இரங்கல் வெளியிட்டுள்ளனர். Toronto Western வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று ஞாயிறு இரவு (உள்ளூர் நேரம்) உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 91 ஆகும்.
கனகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட அவர் தமிழீழ மண் மீது கொண்ட காதலால் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக்கொண்டார்.


2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஈழவேந்தன் நாடாளுமன்றம் சென்றார்.


1932 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிறந்த அவர் தனது 72 வது வயதிலேயே நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


எனினும் மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது.


இதனையடுத்து இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறினார். 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் தமிழகத்தில் இருந்து ஈழவேந்தன் அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயலாற்றிய ஈழவேந்தன்


விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இந்தியாவை கடுமையாக விமர்சித்திக் கொண்டிருந்த காரணத்தினாலும் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.


கொழும்பு – இரத்மலானையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த ஈழவேந்தன் 2004 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக சமரசமில்லாத போராளியாக இறுதி வரை இருந்தவர்.

ஈழம் வெல்ல எழுந்தவன் – பல
இன்னல் தாங்கி நடந்தவன்
பாரில் ஏறி அழுதவன்
பகை நிலை சொன்னவன்

அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்


அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்

செங்கடலில் எரியும் கப்பல் ,அமெரிக்கா கப்பலை தாக்கிய விமானம்,
சரக்கு கப்பல்கள் மற்றும் அமெரிக்கா போர் கப்பல்களை இலக்கு வைத்து ஏமன் ஹவுதி போர் படைகள் .


வெடிகுண்டு விமானங்கள் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா மத்திய கட்டளை தலைமையகம் தெரிவித்துள்ளது .

செங்கடல் வழியாக பயணிக்கும் போக்குவரத்து கப்பல்களுக்கு ,ஏமன் ஆயுத குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்து இருந்தது .

தற்போது கடல் பகுதியில் பலத்த யுத்தம் இடம்பெற்று வருவதால் ,உலக பொருளாதாரம் மற்றும் கடல்வழி போக்குவரத்து கலங்கள் சேவைகள் பாதிக்க பட்டுள்ளன .

கடல் பகுதியில் பலத்த யுத்தம்

இஸ்ரேல் காசா மீதான போரினை நிறுத்தினால் செங்கடல் வழியாக மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம் என ,ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்தன .

ஆனால் போரை நிறுத்த மறுத்து இஸ்ரேல் தொடர்ந்து மக்களை தாக்குவதால் ,தற்போது செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல் மற்றும் ,அமெரிக்கா ,பிரிட்டன் ,இஸ்ரேல் போர் கப்பல்கள் மீது ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி கொண்டுள்ளனர் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்
Posted in இலங்கை செய்திகள்

சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்


சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்

இந்தியா தமிழக தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலை காட்சியில் இடம்பெறும் சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்.

இலங்கை மலையகத்தில் இருந்த இந்திரஜித் எனும் மலையக வம்சாவளியான தமிழ் வாலிபன் இந்திரஜித் ஜீ தமிழ் தொலைக்காட்சி பாடல் போட்டியில் பாடுகிறார் .

சரிகமபாவில் பாடும் இந்திரஜித்துக்கு உலக தமிழர்கள் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து வருகின்றனர் .

சரிகமபா இந்திரஜித் யார்

பண்டாரவளை பூனாகலை கபரகலையூரை சேர்ந்தவர் தான் இந்த சரிகமபா வில் பாடும் இந்திரஜித்.


ஜீ தமிழ் தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில்
தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி அசத்தியுள்ளார் இந்திரஜித் .


தனது ஆளுமை திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் ,வியப்படைய செய்து அசத்தி இருக்கிறார் சரிகமபா இந்திரஜித்

பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா ..?

இந்த சரிகமபா பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

கண்டிப்பாக அவர் வெற்றி பெறாவிட்டாலும் ,இறுதி வரை நிகழ்ச்சியில் , ஜீ தமிழ் தொலை காட்சி பாடுவதற்கு அனுமதி வழங்கும் , அப்பொழுது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வை இலங்கை மக்கள் பார்வையிடுவார்கள் .

ஏதாவது சாட்டு போக்கு சொல்லி இறுதி நிகழ்வுகளில் ,சரிகமபாவில் இருந்து இந்திரஜித் தட்டி கழிக்கப்படலாம் .

அதுவரை சரிகமபா நிகழ்வில் இந்திரஜித்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி வைத்திருக்கும் என்பதை இப்போதே அடித்து கூறுகிறோம் .

வீடியோ

எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு


எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு

எரியும் இஸ்ரேல் ஆயுத கிடங்கு, ஹமாஸ் ஹிஸ்புல்லா இணைந்து ரொக்கட் தாக்குதல் ,நடத்தியதில் இஸ்ரேல் இராணுவத்தின் இராணுவ தளத்தின் ஆயுத கிடங்கில் ரொக்கட் வீழ்ந்து வெடித்தது .

அவ்வாறு வெடித்த ரொக்கட் தாக்குதலில் அந்த ஆயுத சேமிப்பு களஞ்சியம் பற்றி எரிவதாக ,தாக்குதலை நாடத்திய ,ஹமாஸ் ,ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

இஸ்ரேலிய இராணுவத்தின் ,இராணுவ முகாமில் பாய்ந்து தாக்கிய ரொக்கட் குண்டுகளினால் ,பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

குளம் கட்டுடைத்து வெள்ளம் பாய்ந்து ஓடியது போல், ஐம்பது ரொக்கட்டுக்களை வீசி தாக்கியதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா மீது தொடரும் போர்

பாலஸ்தீனம் காசா மீது தொடரும் போரினால் ,இவ்விதமான தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது .

அம்மா சமையல் ,அண்ணாவுக்கும் ,தம்பிக்கும் ,சிறப்பாக ஹிஸ்புல்லா ஹமாஸ் அமைப்பினால் தரமாக வழங்கி பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இஸ்ரேல் இன்றைய போர் நிலவரத்தின் ,இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்
Posted in உலக செய்திகள்

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்

தொலைபேசி கதைக்க தடையாக விளங்கிய சிசுவை பிரிட்சில் அடைத்த தாய் ,அதன் பின்னர் தொலைபேசி கதைத்த செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தொலைபேசி கதைப்பாற்கு தடையாக விலகியாய் சிசுவை ,பிரிட்சில் அடைத்து வைத்து விட்டு தாய் தொலைபேசி உரையாடலை தொடர்ந்துளளர் .

தாயின் இந்த செயல் மிக பெரும் சர்ச்சையையும் பபர ரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்

சிசு மூச்சை அடக்கமுடியாது காத்யுள்ளது ,எனினும் அவர்கள் குளிர்சாதன பெட்டியில் இருந்து சிசுவை வெளியில் எடுக்கவே இல்லை .

பிள்ளை எங்கே

அவ்வேளை தந்தை வீட்டின் மேல் இருந்து கீழே வந்து பொழுது ,தயார் உணவை வழங்குகினற ,அப்பொழுது பிள்ளை எங்கே என ,கணவன் வினவுகிறார் .

தாயார் சிசுவை குளிர்சாதன பெட்டியில் வைத்ததை மறந்து விட்டார் .

சிசுவை பிரிட்சில் அடைத்த தாய்

இவ்வாறான மூன்று நிமிடம் அடங்கிய காணொளி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பெற்ற பிள்ளயை தொலைபேசி உரையாடுவதற்கு தொந்தரவாக உள்ளது என கருதி ,ஈவ் இரக்கம் அற்று குளிர்சாதன பெட்டியில் அடைத்து ,வதை செய்த இந்த தாயை ,மக்கள் பார்க்க தூக்கிலிட வேண்டும் என் மக்கள் கொதிப்பில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றன .

இவர் சேலை அணிந்து இருப்பதால் இந்தியா ,அல்லது இலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் என கருத படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல்

Rafah எல்லையில் இஸ்ரேல் தாக்குதல் ,எகிப்த் rafah எல்லையில் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல் நாடத்தின .இதில் அந்த rafah பகுதியில் தங்கி இருந்த 20 காசா மக்கள் பலியாகியுள்ளனர் .

இஸ்ரேல் இராணுவம் நடத்திய விமான தாக்குதலில் , rafah வீதியில் தங்கி வாழ்ந்த இருபது மக்கள் பலியானதாகவும் ,அவ்வாறு பலியானவர்களில் ஐந்து சிறுவர்களும் உள்ளடங்கும் என காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இந்த rafah எல்லையில் காத்திருக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன காசா மக்களை ,எகிப்துக்குள் அகதிகளாக அனுப்பி வைக்கும் நடவடிக்கையில், இஸ்ரேல் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது .

ரபா போர் ஆரம்பிக்க இராணுவம் தயாரா நிலையில்

அதற்கு அமைவாகவே தற்போது எகிப்து எல்லையோர rafah பகுதியில் தாக்குதலை நடத்திட இஸ்ரேல் தயாராகி வருகிறது .

ரபா வீதியில் அருகில் உள்ள மறைவிடங்களிலேயே இஸ்ரேல் இராணுவம் ,மற்றும் கைதிகளை சிறை வைத்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் கருதுகிறது .

அதனால் அவர்கள் மீது தாக்குதலை நடத்தும் நகர்வில் இஸ்ரேல் இரானுவம் மிக பெரும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்க தயாராகி வருகிறது

Error: View 9293b2au4w may not exist
பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்

பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்

கொல்கத்தாவில் காண்டஸ் என்பவரால் பகிரங்கமாக தூக்கிலிடப்பட்ட பாஜக பிரமுகர்.நூற்று கணக்கன் மக்கள் சூழ்ந்திருக்க இவர் தூக்கிலிட படுகிறார் .

பாஜக பிரமுகர் தூக்கிலிட படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இவர் பாஜக பிரமுகர் என தெரிவித்து பல சமூக சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்தார் என குற்றம் சாட்டி மக்கள் முன் வைக்கின்றனர் .

அதனாலேயே பாஜக பிரமுகர் இவ்வாறு மக்கள் பார்க்க தூக்கிலிட பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

மக்கள் முன்பாக பாஜக பிரமுகர் தூக்கிலிடப்பட்டார்


சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததால், இதுபோன்ற சம்பவத்தை நேரில் பார்த்த நீதிமன்றம் என்ன செய்கிறது? என்கின்ற கேள்வியும் எழுப்ப பட்டுள்ளது .


அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரைக்க வேண்டும் மற்றும் சட்டப்பூர்வமாக தூக்கு மேடையில் ஏற்ற வேண்டும் என் சமூக ஆர்வளர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

இவர் தூக்கிலிட படும் காட்சிகள் நாம் பாரவியிட்ட பொழுது ,கைகள் இரண்டும் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் ,கழுத்தில் கயிறு மாட்டி ,தளி உரை பை ஒன்றினால் மறைக்க பட்டு அவர் தூக்கிலிட படுகிறார் .

மக்கள் சட்டத்தை தமது கையில் எடுத்து இவ்விதம் தூக்கு தண்டனை விதித்துள்ள சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் இந்த சம்பவம் பாஜக பிரமுகர்களுக்கு விடுக்க பட்ட நேரடி அச்சறுத்தலாக காண படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம்

போருக்கு செல்ல மறுக்கும் இஸ்ரேல் இராணுவம் .இஸ்ரேலிய சிறப்புப் படையணி ஒன்று மீள இஸ்ரேலிய இராணுவத்தில் சேர மறுத்து ,போர் முனைக்கு போக மறுத்து தப்பி ஓட்டம் .

ஹமாஸ் மழை வெள்ளம் போல குண்டுகள் வெடிக்க ,அந்த குண்டு வெள்ளத்தில் தண்ணீரில் மூழ்கி ,சாக மறுத்து இஸ்ரேல் இராணுவம் ஆமி தப்பி ஓட்டம் என்பதாக தகவல் .

தப்பி ஓடும் இஸ்ரேல் இராணுவம்

போர் களத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் ,இடையூறுகளை நேரடியாக சந்தித்த மிக பெரும் முக்கிய முதன்மை படையணியை சேர்ந்த, இஸ்ரேல் இராணுவத்தின் அணி ஒன்று மீள போருக்கு செல்ல மறுத்து தப்பி ஓட்டம் .

இவ்வாறு தப்பி ஓடிய இஸ்ரேல் இராணுவத்தின் நிலை கண்டு ,உலகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .

சமர்களத்தின் நிலவரங்கள்

சமர்களத்தின் நிலவரங்களை அறிய மறுத்து ,ஏசி ரூமில் குந்தி அமர்ந்து கடசிகளை பார்க்கும் ,இஸ்ரேல் ஆளும் இனவெறி கொள்கை வகுப்பளர்களின் ,ஆசைகளுக்கு ,அப்பாவி இஸ்ரேலிய மக்களும் ,இராணுவத்தினரும் பலியாகி வருகின்றனர் .

இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு

இஸ்ரேலிய இராணுவத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ,இந்த இராணுவத்தினர் தப்பி ஓட்டம் காண்பித்துள்ளது .

உளவியல் நிலையில் சோர்ந்து காணப்டும் இஸ்ரேலிய இராணுவத்தினர் ,சாக மறுத்து தப்பி ஓடும் செயல் ,இஸ்ரேல் இராணுவத்திற்குள் புயலை கிளப்பியுள்ளது .

உடனடியாக போரில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் ,இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தள்ள பட்டுள்ளார் .

அதானல் அவர் முக்கிய போரை நடத்தி வெல்ல வேண்டிய நிலையில் காணப்படுகிறார் .

அதற்காக இராணுவ போர் வெற்றி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார் .

ஆனால் எதிரிகள் இதனை நன்றாக அறிந்து கொண்டதால் ,இஸ்ரேலிய இராணுவத்தின் அணைத்து ,இராணுவத்தின் நகர்வுகளை துல்லியமாக இனம் கண்டு தடுத்து முறியடித்து வருகின்றனர் .

தோல்வி மேல் தோல்வியை சந்திக்கும் இஸ்ரேல் இராணுவம் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் இஸ்ரேல் ஆளும் பிரதமர் நெதன்யாகு பைத்தியம் பிடித்தவர் போல் காணப்படுவதை ,அவரது உடல் அசைவுகள் காண்பிக்கின்றன

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் இவை இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,

full video

Error: View 9293b2au4w may not exist
வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை
Posted in இலங்கை செய்திகள்

வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை

வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை

வீழ்ச்சியை நோக்கி செல்லும் தொழிற்படை இலங்கையில் கடந்த வருடத்தில் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைந்துள்ளது.

தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டை விட 2023 ஆண்டில் 4.7 சதவீதமாக மாறாமல் உள்ளது.

2022ல் 0.399 மில்லியனாக இருந்த வேலையில்லாத மக்கள் தொகை 2023ல் 0.39 மில்லியன் வரை சிறிதளவு குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2022 இல் 8.14 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.01 மில்லியனாகக் குறைந்துள்ளது.

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி

இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி

அடுத்தடுத்த இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வி யை சந்தித்த ருத்துராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரின் 46வது போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி ஹைதராபாத்துக்கு 213 ஒட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.

சென்னை அணியில் அதிகபட்சமாக ருத்துராஜ் கெய்க்வாட் 98 ஒட்டங்களும் டேரியல் மிட்செல் 52 ஒட்டங்களும் எடுத்தனர்.

பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியின் அனைத்து முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் கைப்பற்றி 134 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்தியது.

இதன் மூலம் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக துசார் தேஸ்பாண்டே 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரான தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சென்னை அணியின் வெற்றியை இலகுவாக்கினர்.

வானிலை இடியுடன் கூடிய மழை
Posted in இலங்கை செய்திகள்

வானிலை இடியுடன் கூடிய மழை

வானிலை இடியுடன் கூடிய மழை வெப்பமண்டல ஒன்றிணைப்பு மண்டலம் (வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் இருந்து வரும் காற்று சங்கமிக்கும் மண்டலம்) நாட்டின் வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கம் அதிகளவான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம்

கிழக்கு மற்றும் தென் மாகாணங்கள், முல்லைத்தீவு மாவட்டம் மற்றும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.

வானிலை இடியுடன் கூடிய மழை

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை கோரியுள்ளது.

இதேவேளை, இன்று (29) நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு

வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ, கிழக்கு, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பம் அதிகரிக்கக்கூடும்.

இதன்போது போதிய அளவு நீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுத்தல், வெட்ட வெளியில் நடமாடுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நாட்டின் வர்த்தக சமூகம்
Posted in இலங்கை செய்திகள்

இந்த நாட்டின் வர்த்தக சமூகம்

இந்த நாட்டின் வர்த்தக சமூகம்

இந்த நாட்டின் வர்த்தக சமூகம் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – ஜனாதிபதி.

சந்தைப் பொருளாதாரத்தை

சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும்,

இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறை

தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியப்படுகின்றதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா இல்லையா என்பது தற்போதைய

பிரச்சினை அல்லவெனவும், நாட்டுப் பொருளாதாரத்தின் எதிர்கால போக்கை தீர்மானிப்பதற்கான வாய்ப்பை மக்கள் இழந்துவிடக்கூடாதெனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (26) நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட 3220 சர்வதேச

ரோட்டரி கழகத்தின் 2023/24 வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பம்

இந்த வருடாந்த மாநாடு ஏப்ரல் 26/27 திகதிகளில் கொழும்பில் நடைப்பெறுவதோடு, மாநாட்டில் தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்புரையை நிகழ்த்தினார்.

1929 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட, இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகம் 17,000 க்கும் மேற்பட்ட

உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கும் இதன் பங்களிப்பு கிடைத்தது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1994 முதல் கொழும்பு சர்வதேச ரோட்டரி கழகத்தின் மாவட்ட 3220 மேற்கு பிரிவின் உறுப்பினராக இருந்து வருகிறார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,

“இலங்கை பயணிக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதன்போது எந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.

நாம் இங்கிருந்து நகர்வோமா? நாம் இங்கேயே நின்றுவிடுவோமா? அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

இன்று நான் சந்தித்த ஒரு இளைஞர் நாட்டிற்கான உங்கள் திட்டங்கள் என்னவென கேட்டார். இந்த நாட்டின் படித்த மக்களுக்காக என்ன திட்டங்களை எடுத்துள்ளீர்கள்? நாட்டின் பௌதீக உட்கட்டமைப்பை மேம்படுத்த நீங்கள்

என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்

என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? அந்த அப்படி எந்த திட்டமும் இல்லை என்றேன். நான் சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.

அதன்போது சந்தை சக்திகள் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முடிவு செய்யும். நமது கொள்கை கட்டமைப்பு என்ன என்பதை நாம் தீர்மானிக்கலாம்.

அதன்படி, அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து, செயல்படுத்தி, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.

ஆனால், எங்களுக்கு வளர்ச்சியைத் தரும் ஒரு நிலையான திட்டம் குறித்து நீங்கள் சிந்தித்தால், அதைச் செய்ய முடியாது என்று நான் அவரிடம் சொன்னேன். சந்தை செயற்பாடுகளில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது

வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தை சக்திகளை எவ்வாறு கையாள்வது அல்லது சந்தை சக்திகளை எவ்வாறு இயக்குவது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஒரு அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு ஒரு ஐந்தாண்டு திட்டம்

முன்வைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின்படி அரசாங்கமே அனைத்தையும் வழங்குகிறது. எமக்கு இவ்வளவு காலமும் திட்டங்கள் மாத்திரமே இருந்தன. அதனால் தான் இன்னும் வறுமையில் வாடுகிறோம்.

யுத்தத்திற்குப் பிறகு

யுத்தத்திற்குப் பிறகு, வியட்நாம் நம்மை விட மோசமான நிலையில் இருந்தது. 1991இல், வியட்நாமின் தொழில்துறை அமைச்சர் வந்து, வெளிநாட்டு முதலீட்டை எப்படி ஊக்குவிக்கிறோம் என்று கேட்டார்.

அன்னிய முதலீட்டை ஊக்குவிப்பது எப்படி என்பதை அவரிடம் கற்றுக் கொள்ள இன்று நான் வியட்நாம் செல்ல வேண்டும். அவர்கள் மாறினர். நாங்கள் ஒரே இடத்தில் இருந்தோம்.

உங்களுக்கு மலேசியா மற்றும் சிங்கப்பூர் பற்றி என்ன கூற முடியும்? இந்த ஒவ்வொரு நாடுகளையும் பற்றி நாங்கள் பேசுகிறோம். அந்த நாடுகள் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க விரும்புகிறோம்.

ஆனால் அந்த நாடுகளின் நிலையை அடைய, தேவையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். இப்போது நாம் அத்தகைய நிலையை அடைந்துள்ளோம்.

இனிமேலும் தேவையான முடிவுகளை எடுக்காமல் இருக்க முடியாது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. எந்த மாதிரியான பொருளாதாரம் வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை, அதை ஒரு மாதிரி மூலம் மாத்திரமே செய்ய முடியும். இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த, ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம்.

எங்களுக்கு பெரிய சந்தை இல்லை

இந்தியா, சீனா, அமெரிக்கா அல்லது ரஷ்யாவில் எங்களுக்கு பெரிய சந்தை இல்லை. பல நாடுகளில் உள்ள கனிய வளங்கள் நம்மிடம் இல்லை. நாம் அதிர்ஷ்டவசமாக இந்து சமுத்திரத்தில மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஒரு சிறிய தீவு.

இப்பகுதியில் பொருளாதார மையமாக மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இப்படிப்பட்ட உலகில் நாம் எப்படி முன்னேறுவது? நாம் இனி கற்பனை உலகில் வாழ்கிறோமா? அல்லது தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோமா என்பது நீங்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.

ஏனெனில் நாம் மேற்கொண்டுள்ள பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகள் இந்த வருடத்துடன் முடிவடையும். நாங்கள் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழு மற்றும் பெரிஸ் சமவாயத்துடன் கலந்துரையாடி

வருகிறோம். கடன் வழங்குநர்களுடன் அடைய வேண்டிய பெரும்பாலான விடயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் ஒரு விடயம் ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். அதுவும் விரைவில் தீர்க்கப்படும்.

ஆனால் நாம் இங்கிருந்து எங்கு செல்வது? பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளோம். நாம் உறுதிப்படுத்திய பொருளாதாரம் இறக்குமதி

இறக்குமதி சார்ந்த பொருளாதாரம்.

சார்ந்த பொருளாதாரம். இந்த இறக்குமதி சார்ந்த பொருளாதாரத்தில் நாம் முன்னேறிச் செல்கிறோமா? அப்போது நான் கடந்த காலத்தில் செய்த காரியங்கள் அனைத்தும் பயனற்றதாகிவிடும்.

ஏனென்றால் இன்னும் 10 அல்லது 15 வருடங்களில் இதுபோன்ற நெருக்கடியை மீண்டும் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே இந்த முடிவை நீங்கள் அனைவரும் எடுக்க வேண்டும். அதை யாரும் தவறவிட முடியாது.

இதுதான் இன்று நாடு எடுக்க வேண்டிய முடிவு. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்வதா அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை

இல்லாதொழிப்பதா என்ற பிரச்சினை இல்லை. இரண்டாவதாக கவனிக்கப்பட வேண்டிய கேள்விகள் அவை. நான் குறிப்பிட்டது போல் மக்களுக்கு பல பிரச்சினைகள் எழுகின்றன.

நமது கல்வி முறை என்ன? நாம் அதை மாற்ற வேண்டுமா இல்லையா? அதை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் நமது எதிர்காலம் என்ன? அதற்கான முடிவுகளை எடுக்க நாம் தயாரா?

ஏற்றுமதி சார்ந்த, அதிக போட்டித்தன்மை கொண்ட பொருளாதாரத்தை நாம் விரும்பினால், அதை எவ்வாறு அடைவது? போட்டி மிகுந்த பொருளாதாரம் வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

நீங்கள் போட்டித்தன்மையுடன் இருக்க விரும்பினால், நீங்கள் போட்டியை எதிர்கொள்ள வேண்டும். போட்டியை எதிர்கொள்ளாமல் போட்டித்தன்மையுடன் இருக்க முடியாது.

இலங்கையில் வர்த்தகத்தில் எனக்கு நம்பிக்கை

இலங்கையில் வர்த்தகத்தில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாம் அதை உருவாக்க முடியும். எங்களுக்கு கடினமான காலங்கள் குறுகிய காலம். ஆனால் நாம் அதை முறியடிக்க முடியும் என்று நான் நம்பிக்கையுடன் பரிந்துரைக்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சர்வதேச ரோட்டரி கழக

பிரதிநிதிகள், மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி

மட்டக்களப்பு வவுணதீவில் வாழ்வாதார உதவி Action unity lanka நிறுவனத்தின்
Gift of love and hope எனும் செயற்திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுணதீவில் இடம்பெற்றது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர்

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுய தொழில் முயற்சியாளர்களை

இனங்கண்டு அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய செயற்திட்டமாக ஒரு குடும்பத்திற்கு

75000/= பெறுமதியான, 21 குடும்பம்களுக்கும் 1,578,000 ரூபா பெறுமதியான ஆடுகள் இதன் போது கையளிக்கப்பட்டன.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவில்

இதன் போது வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 21 குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு தலா மூன்று ஆடுகள் வீதம் மொத்தம் 63 ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு Action unity lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.கஜேந்திரன், பிரதேச செயலகம் மற்றும் Action unity lanka நிறுவனம் என்பவற்றின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடை சுவையில் தேங்காய் தோசை
Posted in சமையல் சமையல் cook

கடை சுவையில் தேங்காய் தோசை

கடை சுவையில் தேங்காய் தோசை

கடை சுவையில் தேங்காய் தோசை வீட்டில் இப்படி செஞ்சு பாருங்க ,ஐந்து தேங்காய் தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .

தேங்காய் தோசை செய்வது எப்படி ..?

தேங்காய் தோசை செய்வது எப்படி ..? அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?இலகுவான முறையில் ,கடை சுவையில் இதுபோல வீட்டில் நாள்தோறும் தேங்காய் தோசை செய்து சாப்பிடுங்க .

தேங்காய் தோசை செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க .

இரண்டு கப் பச்சை அரசி எடுத்து அதனை நன்றாக , இரண்டு மூன்று தடவை கழுவி எடுத்திடுங்க .

அதன் பின்னர் மீண்டு சுத்தமான தண்ணீர் பிடித்து ,ஆறு மணி நேரம் அரிசியை நன்றாக ஊற வைத்திடுங்க .

கடை சுவையில் தேங்காய் தோசை

ஆறு மணிநேரம் கழித்து தண்ணீரை வடித்து ,மிக்சியில போட்டு ,அத்துடன் ஒரு கப் வடித்த சாதம் எடுத்து சேர்த்திடுங்க .

கூடவே தேங்காய் துருவல் ,தேவையான உப்பு அத்துடன் தண்ணீர் சேர்த்து ,நன்றாக தோசை பருவத்துக்கு ஏற்ப அரைத்து எடுத்திடுங்க.

கடை சுவையில் தேங்காய் தோசை

இப்போ அரைத்த மாவை மூடி போட்டு மூடி வைத்து ,இரவு முழுவதும் புளிக்க வைத்திடுங்க .அப்ப தான் தேங்காய் தோசை பொங்கி வரும் இது போல .சாப்பிடும் போது தோசை பஞ்சு போல சுவையாக இருக்கும் .

இது போல தோசை மாவு பதம் வந்தும் ,நாங்க இப்ப தேங்காய் தோசை சுடுவதற்கு ஆரம்பிக்கலாம் .

மாவு இது போன்று தோசை பருவத்திற்கு ஏற்ப நன்றாக அரைத்து எடுத்தால் தான் ,பஞ்சு போல சாப்டடா தோசை பொங்கி வரும் .

இப்போ அடுப்பில் தோசை கல்லை வைத்து ,நன்றாக் சூடானதும் ,ஒரு கரண்டி எடுத்து ,தோசை போல வட்டமா சுட்டு எடுங்க .

தோசை இரண்டாவது பக்கம் பிரட்டி போடக்கூடாது ,அதற்கு தோசை கல்லு மேலே அந்த தோசை மேலே ,மூடி போட்டு மூடிடுங்க .நன்றாக பொங்கி அழகாக வந்திருக்கும் .

இப்போ மொறு மொறு மிருதுவான தேங்காய் தோசை சமையல் ரெடியாகிடுச்சு.

இந்த தேங்காய் தோசையுடன் காரமிளகாய் சட்டினி ,முட்டை கிரேவி ,மட்டான் கிரேவி சேர்த்து,மீன்குழம்புடன் சேர்த்து சாப்பிடுங்க .

ரோட்டு கடை சுவை போல ,தேங்காய் தோசை அப்டி அட்டகாசமான சுவையாக மிருதுவாக இருக்கும் .

இலகுவான முறையில மிஞ்சிய சத்தத்தை கொட்டிடமா அதை வைத்து ,இப்படி நாளும் சமையல் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா அபாயகர எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு விடுத்துள்ளது .

வடக்கு இஸ்ரேல் முழுவதும் தாக்க பட்டு, எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் தாக்குதல்களை நடத்துவோம் என ஹிஸ்புல்லா அபாய அறைவிப்பை வெளியிட்டுள்ளது .

தெற்கு லெபனான் பகுதியை ரபா எல்லை அருகே மிக பெரும் படை நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .

அதனை அடுத்தே தற்போது ,மிக பெரும் எதிர் தாக்குதல்களை எதிரி மீது லெபனான் போர் படைகள் நடத்த தயாராகி வருகின்றனர் .

ரபா போர் ஆரம்பிக்க பட்டால் அதுவே மிக பெரும் மோதலை இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

காஸாவில் இருந்து எகிப்துக்குள் ,பலஸ்தீன மக்களை முற்றாக அகதிகளாக துரத்தும் நடவடிக்கையில், இஸ்ரேல் தயாராகி வருவதை இவை காண்பிக்கிறது .

நாடற்ற மக்களாக ஹமாஸ் கட்டு பாட்டு மக்கள் செல்ல வேண்டும் என்பதே இஸ்ரேல் ,இனவாதிகள் நிலைப்பாடாக உள்ளது .

அதற்கு அமைவாகவே இந்த இராணுவ நடவடிக்கை திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஹிஸ்புல்லா கருதுகிறது .

களமுனை நகர்வுகளும் ,இஸ்ரேல் அசைவுகளும் மிக பெரும் மனித படுகொலை ஒன்று அரங்கேற போவதை காண்பிக்கிறது .

Error: View 9293b2au4w may not exist
கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து

கார் விபத்தில் இஸ்ரேல் அமைச்சருக்கு எலும்புகள் உடைந்து. இஸ்ரேல் போர் அமைச்சரவை ,அமைச்சருக்கு விபத்தில் சிக்கிய கார் எலும்புகளை உடைந்து எறிந்தது .

தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்
தவறான வழியில் பயணித்த கார் விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென் ஜிவிர் கார் விபத்தில் சிக்கனார் . விபத்தில் சிக்கிய இவருக்கு 3 விலா எலும்புகள் உடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

எலும்பு முறிவுக்கு உள்ளான பென் ஜிவிர்

எலும்பு முறிவுக்கு உள்ளான பென் ஜிவிர் தற்போது வீட்டுக்கு சென்றுள்ளதாக இஸ்ரேலிய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வந்த போருக்கு இவரே முதன்மையான பங்கு வகித்தவர் .

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போல , இனவாதியாக இவர் காணப்படுகின்றார் .

போர் அமைச்சர் கார் கவிழ்ந்தது

இஸ்ரேலிய போர் அமைச்சராக காணப்படும் இவர் ,சென்ற கார் ,எதிரே பயணித்த கார் ஒன்றில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது .

அவ்வாறான கார் விபத்தில் சிக்கி மூன்று விலா எலும்புகள் முறிந்த நிலையில் காணப்படும் இவரது உடல் நிலை மோசமாக காணப்படுகிறது .

இதன் செயல் தாக்கம் ,இவரினால் இயல்பு நிலையோடு எழுந்து நடக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

காசா மக்களின் கண்ணீர் கதறல்

அப்பாவி பாலஸ்தின காசா மக்களின் கண்ணீர் கதறல் ,போர் அமைச்சரின் விலா எலும்புகளை முறித்துள்ளது .

அப்படி பார்த்தல் இஸ்ரேல் நெதன்யாகு அமச்சரவையில் ஒரு விக்கட் அவுட் எனலாம் .

ஆடிய ஆட்டம் என்ன ,அடங்க மறுத்த நிலை என்ன என ,அரேபிய தேச மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .

போரின் வலியை இப்பொழுது உணர்வார்

போரின் வலியை இப்பொழுது உணர்வார் போர் அமைச்சர் என்பது ,பாதிக்க பட்ட மக்களின் கருத்தாக உள்ளது .

நெதன்யாகுவும் ,விரைவில் அதே வலியை அதே மக்களினால் அனுபவிப்பர் என்கின்ற நிலையே காணப்படுகிறது .

இன படு கொலையாளி

மக்களை கொன்று அதில் சந்தோசம் காண்கின்ற இவ்வாறன ,இன படு கொலையாளி களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை இதுவாகவே காணப்படுகிறது .

இலங்கையில் கோட்டபாய எப்படி ,அதே சிங்கள மக்களினால் துரத்தியடிக்க பட்டரோ ,அதே போன்ற நிலை ,வரும் காலங்களில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு இடம்பெற போவதை இப்போதே அடித்து கூறலாம் .

பைடன் தோளில் ஏறிநின்று ஆடும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் ,கோட்டாவை போல விழுந்து கதற போகிறார் .

இனத்தை நசுக்கி கொன்று மகிழ்ந்த கூட்டம் ,கூண்டோடு சாய போகிறது .

Error: View 9293b2au4w may not exist