மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு
மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு
மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு ,மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் இராஜாங்க
அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.ஜே.முரளிதரன் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று11) தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனு ஏற்பு மற்றும் சின்னம் வழங்குவதற்கான கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் நடவடிக்கையின் போது ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம்
வியாழேந்திரனின் தலைமையில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சத்திய கடதாசி இணைக்கப்படாததால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்தார்.
கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் புளொட் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 2020ம் ஆண்டு தமிழ் தேசிய
கூட்டமைப்பில் இருந்து வெளியேறி கட்சி மாறி பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி இராஜாங்க அமைச்சரானார்.
இவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பைச்
சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது தலைமையில் போட்டியிடுவற்காக 8 பேர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.
இதேவேளை சுயேச்சைக் குழு ஒன்றின் தலைமை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யாது போட்டியிடும் 3வது நபர் வேட்புமனு தாக்கல்
செய்ததையடுத்து அதன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஒரு கட்சி 6 சுயேச்சைக்குளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வவுனியா வாள்வெட்டு
வவுனியா வாள்வெட்டு
வவுனியா வாள்வெட்டு ,வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
வவுனியா, ஓமந்தை, கதிரவேலுபூவரசன்குளம் பகுதியில் காணி முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது.
குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் இருவர் மீதும் மிளகாய் தூளை அள்ளி வீசி வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ என்ற 38 வயதான நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன், 42 வயதுடைய மூன்று
பிள்ளைகளின தந்தையான ரூ.திலீபன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரும் நேற்று (11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது
சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது
சுங்கத்தை ஏமாற்றி இறக்குமதியான கார் அரசுடமையானது ,இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு காரொன்றை அரசுடமையாக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
போலியான தகவல்களை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்து அரசாங்கத்திற்கு ஐந்தரை கோடிக்கும் அதிகமான வரியை மோசடி செய்து இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பதுளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் இருந்த Mitsubishi Montero ஜீப் வாகனமே இவ்வாறு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை
மக்களுக்கு அவசர எச்சரிக்கை ,புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான
கடற்பரப்புகளில் கடல் அலைகளின் உயரம் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரும் சாத்தியம் காணப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அலைகள் நிலத்தை நோக்கி வரும் போது உயரமாகாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், மறு அறிவித்தல் வரை இந்த கடற்பரப்புகளுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் கடல்சார் மற்றும் மீனவ சமூகங்களுக்கு அறிவித்துள்ளது.
யாழில் பணத்தை எரித்த தமிழர்
யாழில் பணத்தை எரித்த தமிழர், யாழ்ப்பாணம் அராலி தெற்கு பகுதியில் தமிழர் ஒருவர் பத்து லட்சம் பணத்தை எரித்துள்ளார் .
பத்து லட்சம் ரூபாய்களை எரித்ததுடன் மேலும் வைத்திருந்த ஏழு லட்சம் பணத்தையும் தூக்கி வீசியுள்ளார் .
பணத்தை எரித்தும் ,வீசிய தமிழர் செயல் யாழ்பாணத்தில் மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
ஒத்த ரூபா பணத்தை சேகரிக்க மக்கள் பெரும் இன்னல் படும் இவ்வேளையில் ,பல லட்சம் ரூபாயை ஏன் இவர் இவ்விதம் எரித்தார் என்கின்ற விடயம் கேள்வியை எழுப்பியுள்ளது .
யாழ் அரியாலை பகுதியில் மேற்படி சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா
சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா
சற்றுமுன் தனது சின்னத்தை அறிவித்த வைத்தியர் அர்ச்சுனா,சுயேட்ட்சையாக காலம் இறங்கிய அரசிஜுனா இராமநாதன் தனது சின்னத்தை அறிவித்துள்ளார் .
மருத்துவ ஊசி சின்னத்தில் போட்டியிடுகிறார் .
நோயாளிகளை குணம்படுத்தவல்ல ஊசி இப்பொழுது உங்களுக்கான சின்னமாக கிடைக்க பெற்றுள்ளது .
ஆகவே அதன் ஊடாக லஞ்ச ஊழல் வாதிகள் ,ஊழல் நோயால் பாதிக்க பட்டுள்ள வெள்ளை வேட்டிகள் ,தமிழ் கட்சிகளுக்கு உரக்க ஏறி இருந்து குத்து போடுங்கள் மக்களே .
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள்
அரசியலில் அர்ச்சுனா குதிப்பு அலறும் எதிரிகள் ,சற்றும் எதிர்பாராத அதிரடி ஆட்டத்தை மருத்துவர் அர்ச்சுனா ஆரம்பித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனையில் இருந்து ஆரம்பித்த ,அரச லஞ்ச ஊழல் மருத்துவ மாபியா போராட்டம் ,இன்று மக்களுக்கான அரசியலில் பரிணாமம் பெற்றுள்ளது .
சற்றும் எதிர்பாரத இந்த பயணம் கண்டு அரசியல் தலைமைகள் திணறிய வண்ணம் உள்ளனர் .
நான்கு பெண்கள் ஐந்து ஆண்கள் என மக்கள் அறியப்பட்ட ,ஆளுமை மிக்கவர்களை இந்த அரசியல் களத்தில் அர்ச்சுனா இராமநாதன் களம் இயக்கியுள்ளார் .
இந்த வேட்பாளர் தெரிவில் அதிகம் பெண்களுக்கு இடம் வழங்கி , பெண்கள் சமவுரிமையை அர்ச்சுனா நிலை .நாட்டியுள்ளார் .அத்துடன் யாவரும் புதிய இளம் தலைமுறைகள் ஆகும் .

பெண் சம உரிமை ,பெண் சமத்துவம் ,என்பதாகவும் பெண்கள் ஆட்சியாளராகவும் ,தலைமை அரசியல் வாதிகளாகவும் மாறிட வேண்டும் என்ற எண்ணம் இதன் ஊடக வெளிப்பட்டுள்ளது .

இதுவே மக்கள் மத்தியில் மிக பெரும் ஆதரவை மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனுக்கு தருவித்துள்ளதுடன் ,எளிய மக்களுக்கான அரசியலை அர்ச்சுனா செய்து வருகிறார் என்கின்ற நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .
வெல்லட்டும் தமிழ் ,ஆளட்டும் எளிய அரசியல் இயக்கம் .எதிரி இணையமும் உங்களை மனதார வாழ்த்துகிறது
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது

ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார்
ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார்
ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார் ,பென்சில்வேனியாவின் முக்கிய ஸ்விங் மாநிலத்தில் ஹாரிஸுக்கு ஒபாமா பிரச்சாரம் செய்தார்
நவம்பர் வாக்கெடுப்புக்கு முன்னதாக கமலா ஹாரிஸுக்கு ஆதரவை அதிகரிக்க ஜனநாயகக் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரச்சாரப் பேரணியின் போது, அமெரிக்கர்களைப் பற்றி
கவலைப்படாத ஒரு பிரிவினைவாதி டொனால்ட் டிரம்ப் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடுமையாக சாடினார்.
வியாழன் மாலை பிட்ஸ்பர்க்கில் பேசிய ஒபாமா, வெள்ளை மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்காவிற்கு “இன்னும் நான்கு ஆண்டுகள் தேவையில்லை” என்றார்.
இன்னும் நான்கு வருடங்கள் ஆணவமும், குமுறலும், கொதிப்பும், பிரிவினையும் நமக்குத் தேவையில்லை. அமெரிக்கா பக்கம் திரும்ப தயாராக உள்ளது, ”என்று முன்னாள் ஜனநாயக ஜனாதிபதி கூறினார்.
“ஒரு சிறந்த கதைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம், இது ஒருவருக்கொருவர் எதிராக மாறுவதற்குப் பதிலாக ஒன்றாக வேலை செய்ய உதவுகிறது. பென்சில்வேனியா, கமலா ஹாரிஸ் ஜனாதிபதிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
நவம்பர் 5 வாக்கெடுப்புக்கு ஒரு மாதத்திற்குள் தேர்தல் போட்டி சூடுபிடித்த நிலையில், ஹாரிஸிற்கான பிரச்சாரப் பாதையில் ஒபாமாவின் முதல் தோற்றத்தை இந்த நிகழ்வு குறித்தது.
வெள்ளை மாளிகையை வெல்வதற்காக டிரம்புடன் ஹாரிஸ் கழுத்து மற்றும் கழுத்து சண்டையில் ஈடுபட்டதாக சமீபத்திய கருத்துக் கணிப்புகள்
காட்டுகின்றன, இதன் விளைவாக பென்சில்வேனியா, மிச்சிகன், அரிசோனா மற்றும் வட கரோலினா போன்ற முக்கிய ஸ்விங் மாநிலங்களில் வேட்பாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து வரலாம்.
20பேர் பலி பாகிஸ்தானில் தாக்குதல்
20பேர் பலி பாகிஸ்தானில் தாக்குதல்
20பேர் பலி பாகிஸ்தானில் தாக்குதல் ,தென்மேற்கு பாகிஸ்தானில் ஆயுதமேந்திய தாக்குதல்காரர்கள் 20 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களைக் கொன்றனர்
பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த தாக்குதல் சமீபத்தியது மற்றும் இஸ்லாமாபாத்தில் ஒரு முக்கிய சர்வதேச உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே பாதுகாப்பு கவலைகள் அதிகரித்து வருகின்றன.
தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு சிறிய தனியார் நிலக்கரி சுரங்கத்தில் ஆயுதமேந்திய தாக்குதலாளிகள் 20 சுரங்கத் தொழிலாளர்களைக் கொன்றனர்
மற்றும் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர், நாட்டில் ஒரு பெரிய சர்வதேச உச்சி மாநாடு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு கவலைகளை எழுப்பியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அமைதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள டுக்கி மாவட்டத்தில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள்
வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியவர்கள், தொழிலாளர்களை ஒன்று திரட்டி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஹமாயுன் கான் நசீர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஆயுதமேந்திய ஒரு குழு [டுக்கி] பகுதியில் உள்ள ஜுனைட் நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்களை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி
[அதிகாலை] தாக்கியது,” என்று அவர் கூறினார், தாக்குபவர்கள் சுரங்கங்கள் மீது ராக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசினர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பலுசிஸ்தானில் உள்ள பஷ்தூன் மொழி பேசும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று நசீர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் மூவர் மற்றும் காயமடைந்தவர்களில் நான்கு பேர் ஆப்கானிஸ்தான் பிரஜைகள்.
இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
பலுசிஸ்தான் ஆயுத இயக்கங்களின் மையமாக உள்ளது, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) அவற்றில் மிகவும் முக்கியமானது.
ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரிய மற்றும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணத்தில் உள்ள
உள்ளூர் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மாகாணத்தின் வளமான எண்ணெய் மற்றும் கனிம வளங்களை இஸ்லாமாபாத்தில் உள்ள மத்திய அரசாங்கம் சுரண்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
22 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்
22 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்
22 பேர் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டனர் ,லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்
லெபனான் தலைநகர் தாக்குதலின் மையமாக மக்கள் அடர்த்தியான பகுதியில் உள்ள இரண்டு குடியிருப்புத் தொகுதிகள் புகைந்து வருகின்றன.
மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 22 பேர்
கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 117 பேர் காயமடைந்துள்ளனர் என்று லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் செய்தி சேனல்களால் வெளியிடப்பட்ட மற்றும் அல் ஜசீராவின் உண்மைச் சரிபார்ப்பு ஏஜென்சியால் சரிபார்க்கப்பட்ட வீடியோக்கள்,
பெய்ரூட்டில் உள்ள ராஸ் எல்-நபா மற்றும் அல்-நுவேரி மீது வியாழக்கிழமை வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு குழப்பமான காட்சிகளைக் காட்டுகின்றன.
இரண்டு குடியிருப்புத் தொகுதிகளில் இருந்து தீ மற்றும் புகை எழுந்ததால், மக்கள் அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதாகத் தெரிகிறது.
அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததால் பல குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் உள்ள உயரமான தொகுதிகளில் தங்கள் குடியிருப்புகளை விட்டுவிட்டு முற்றங்களில் கூடினர்.
இந்த பகுதி நகரின் தெற்கு புறநகர் பகுதிகளுக்கு வெளியே உள்ளது, அங்கு இஸ்ரேலிய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழ்கின்றன.
அல் ஜசீராவின் லாரா கான், பெய்ரூட்டில் இருந்து செய்தியாளர், தாக்குதல்கள் லெபனான் தலைநகரின் மையத்தில் நடந்ததாகக் கூறினார், அங்கு இடம்பெயர்ந்தவர்களில் பலர் கடந்த சில வாரங்களாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
தெற்கு லெபனானில் இருந்து வெளியேறிய பலர் இங்கு தங்குமிடம் கண்டுள்ளனர், மேலும் அது மீண்டும் அதிர்ச்சியளிக்கும், கணிக்க முடியாத மற்றும் ஆபத்தானதாக மாறி வருகிறது” என்று கான் கூறினார்.
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டனர், இது இரத்த தானம் செய்ய வேண்டாம் என்று மக்களைக் கேட்டு
எச்சரித்தது, ஏனெனில் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வருகையால் அதிகமாக உள்ளனர்.
மில்டன் புயலால் 16 பேர் பலி
மில்டன் புயலால் 16 பேர் பலி
மில்டன் புயலால் 16 பேர் பலி ,அமெரிக்கா – புளோரிடா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மில்டன் புயலால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது.
மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால், அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழை பெய்தது.
அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். டாம்பா வளைகுடா பகுதியில் புயல் கரையைக் கடந்தபோது 15 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தது.
இந்த புயலால் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டு, இருந்த ஒரு ராட்சத கிரேன் கவிழ்ந்தது. இதில் அடுக்குமாடி குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன.
புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26ஆம் திகதி, ஹெலீன் புயல் தாக்கியமை குறிப்பிடத்தக்கது.
வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு
வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு
வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு ,2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக 349 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
அத்துடன், 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேச்சைக் குழுக்களும் நேற்றைய தினம் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், பொதுத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட வேண்டிய பணத்தின் அளவு எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும், இராஜகிரியிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தைச் சுற்றியும்
வேட்புமனு கையளிக்கும் காலப்பகுதியில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் ஊடாக பொதுத் தேர்தலை ஒருங்கிணைக்க பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.
பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து
பயணிகள் பேருந்துகள் இரண்டு மோதி விபத்து ,இன்று (11) காலை இரண்டு பயணிகள் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பிரதேசத்தில் இன்று காலை 8:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான.
விபத்தில் காயமடைந்த சுமார் 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து ஒன்று, கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
பாணந்துறையில் இருந்து வந்த பேருந்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
மக்களிடம் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை
அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்துவது தொடர்பில் தகவல் தெரிந்தால் இலங்கை பொலிஸின் 1997 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தால் பல்வேறு நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட வாகனங்கள் மோசடியாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ சில இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளமை அல்லது ஏதேனும் ஒரு வகையில் பிரித்து மறைக்கப்பட்டுள்ளமை
அல்லது குறிப்பிட்ட சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு சிதைவடைய இடமளிக்கப்பட்டுள்ளமை குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொலைப்பேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் கொடுப்பவர்களின் அடையாளம் முழுமையாகப் பாதுகாக்கப்படுவதாகவும், தகவல் கொடுப்பவர்களின் அடையாளத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், உண்மைத் தகவல்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும், தவறான தகவல்களைத் தருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.
கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்
கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும்
கம்பஹா வௌ்ளத்தில் மூழ்கும் அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்நிலங்களில் கடந்த சில மணித்தியாலங்களாக கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அத்தனகலு ஓயா தாழ்நிலப் பகுதியில் பராமரிக்கப்பட்டு வரும் நீர் மானிகளின் நீர் மட்ட பகுப்பாய்வின் படி எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேச
செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட அத்தனகலு ஓயா மற்றும் உறுவல் ஓயாவின் தாழ்வான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது
சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது
சவுதிக்கு புறப்பட்ட விமானம் கட்டுநாயக்க திரும்பியது ,கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் ரியாத் நோக்கி, வியாழக்கிழமை (10)
இரவு புறப்பட்ட இலங்கை விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 01 மணித்தியாலங்கள் 35 நிமிட பயணத்தின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-265 215 பயணிகளுடன் 10/10 மாலை 06.15 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
இந்த விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10/10 இரவு 07.50 மணிக்கு மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்திற்குப் பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.
இங்கு சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்குச் செல்ல வேண்டிய விமானப் பயணிகளை வேறு, மாற்று விமானங்கள் மூலம் அனுப்ப ஸ்ரீலங்கன்
ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்ததுடன், மீதமுள்ள விமானப் பயணிகளை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறில் சிக்கிய ஏ.330 விமானம் தற்போது பழுதுபார்க்கும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு
பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிய வீடு கையளிப்பு ,யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இராணுவத்தால், பெண்
தலைமைத்துவக் குடும்பத்திற்காக புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று(10) கையளிக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் பி.ஆர். பத்திரவிதான, இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பெயர்
பலகையை திரைநீக்கம் செய்து பயனாளிகளிடம் வீட்டை உத்தியோக பூர்வமாகக் கையளித்தார்.
“இமேசன் கொம்பேசன்” என்ற அவுஸ்ரேலியா நிறுவனத்தின் சுமார் 35 இலட்சம் ரூபா நிதி உதவியில், இராணுவத்தின் மனித வலுவுடன் இந்த வீடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பெண் தலைமைத்துவ குடும்பத்திற்கான புதிய வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் யாழ்.கொடிகாமம் தெற்கில் இன்று இடம்பெற்றது.
100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ,இஸ்ரேல் வேண்டுமென்றே தங்களை குறிவைப்பதாக லெபனானில் உள்ள மருத்துவர்கள் கூறுகின்றனர்
லெபனானில் போர் வெடித்ததில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு லெபனானில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் முன்னணி மருத்துவ மையங்கள் மூடப்பட்டுள்ளன. அக்டோபர் 8 முதல் அவர்களில் குறைந்தது 40
பேர் – இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் அவற்றின் வளாகங்களுக்கு மிக அருகில் வருவதால், மருத்துவர்கள் மற்றும் முன் வரிசை ஊழியர்கள் இங்கு பாதுகாப்பாக செயல்பட முடியும் என்று கூறுகின்றனர்.
அதனால் அவற்றை மூடிவிட்டனர். இந்த 120 கிமீ எல்லையில் உள்ள 137 மருத்துவமனைகளில் குறைந்தது 40 ஆகும்.
எனவே முன் வரிசை அவசர சேவைகள் நம்பமுடியாத அளவிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளன, இவை அனைத்தும் அவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கின்றன.
மருத்துவ ஊழியர்கள் தாங்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதாகவும், காசாவில் உள்ள மருத்துவ வசதிகளுக்கு இஸ்ரேலியர்கள் செய்ததைப் போலவே இருப்பதாகவும் உணர்கிறார்கள்.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது ,கான் யூனிஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முன்னதாக, தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் அல்-ஃபாத்ரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டுவீசித் தாக்கியதாக நாங்கள் தெரிவித்தோம்.
ஷெஹாப் செய்தி நிறுவனம் மற்றும் பாலஸ்தீன தகவல் மையத்தின்படி, அந்த தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
எங்களிடம் கூடுதல் புதுப்பிப்புகள் இருக்கும்போது நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருவோம்.
இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்
இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்
இலங்கைக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் ,இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான A/HRC/57/L.1 வரைபு தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வின் போது வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.
இது ஆளும் அனுரா அரசுக்கு ஆதரவாக மாற்றம் பெறும் நிலையாக காணப்படுகிறது .
கடந்த கால அரசுகளுக்கு பல தீர்மானங்கள் வாக்குறுதிகள் வழங்க பட்ட நிலையில் ,தற்போது அவை தட்டி கழிக்க பட்ட நிலையில் ,அனுரா குமார திசாநாயாக்கவுக்கு மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .





































