ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது
Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது ,ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு வருகிறது.

இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு ,கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகின

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடமான வீட்டு அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை
Posted in உலக செய்திகள்

மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை

மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை

மூடி முத்திரையிடப்பட்டது போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை ,போப் பிரான்சிஸின் நல்லுடல் பேழை மூடி முத்திரையிடப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் நிலையில் ரோமிலும் வத்திகனிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் இலங்கையில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

சர்வதேச விசாரணைக்கு தயார்
Posted in உலக செய்திகள்

சர்வதேச விசாரணைக்கு தயார்

சர்வதேச விசாரணைக்கு தயார்

சர்வதேச விசாரணைக்கு தயார் ,பஹல்காம் தாக்குதல் குறித்து சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பாகிஸ்தான் ஒத்துழைக்கத் தயாராக உள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார்.

மேலும், “இந்தப் போர் வெடிப்பதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்தப் போர் வெடிப்பது இந்தப் பிராந்தியத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும்.

“பயங்கரவாத தாக்குதலின் பின்விளைவை இந்தியா ஒரு சாக்காகப் பயன்படுத்தி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து உள்ளது. உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறது.

“எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானைத் தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. லஷ்கர்-இ-தொய்பா செயலிழந்து போய் இருக்கிறது. பாகிஸ்தான் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் இருந்து தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ எந்த திறனும் அந்த அமைப்பிடம் இல்லை.

“அந்த அமைப்பில் உள்ள எஞ்சியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், மேலும் சிலர் காவலில் உள்ளனர்” எனவும் கூறினார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் இராணுவ வீரர்களின் விடுமுறைகளை அரசு இரத்து செய்துள்ளது. மேலும் பலூச் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் இருந்து வீரர்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். இதன்மூலம் எல்லையில் வீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.

காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் 12 இலட்சம் முன்பதிவுகள் இரத்து
Posted in உலக செய்திகள்

காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் 12 இலட்சம் முன்பதிவுகள் இரத்து

காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் 12 இலட்சம் முன்பதிவுகள் இரத்து

காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் 12 இலட்சம் முன்பதிவுகள் இரத்து ,காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை இரத்து செய்துள்ளனர்.

இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது காஷ்மீர். இதன் ஒரு பகுதியாக அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம் உள்ளது. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த பஹல்காம், இந்தியாவின் ’மினி சுவிட்சர்லாந்து’ என்றழைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22இல் இங்கு திடீர் என 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர்.

இந்த தாக்குதல் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வர திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை இரத்து செய்துள்ளனர்.

இவர்கள் முன்கூட்டியே செய்திருந்த 12 இலட்சத்துக்கும் அதிகமான தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களின் பதிவுகளை இரத்து செய்துள்ளனர்.

2024ஆம் ஆண்டின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரைப் பார்வையிட 2 கோடியே 36 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 9,500 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இதனால், அம்மாநிலத்தின் தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் நிரம்பியிருந்தன. டாக்சிகள் முன்பதிவு செய்யப்பட்டு, காஷ்மீரின் விற்பனை சந்தைகள் பரபரப்பாக இருந்தன.

இங்குள்ள சுற்றுலாத் துறை மாநிலத்தின் பொருளாதாரத்தில் 8 சதவிகிதம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு சுற்றுலா மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இங்குள்ள உணவு மற்றும் தங்கும் விடுதிகள், டாக்சிகள், கடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் லாபம் பெறுகின்றன.

குல்மார்க் பகுதி மட்டுமே 2024இல் ரூ.103 கோடி சம்பாதித்தது.ஆனால், இந்த ஒரு தாக்குதலுக்குப் பிறகு, நிலைமை திடீரென மாறியது.

காஷ்மீருக்கான பயணங்களை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ பயண முகவர்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. வாடகை வாகனங்களின் நிறுவனங்களுக்கும் இதேநிலை.

பஹல்காமின் பயங்கரவாதச் செயலால், அடுத்த 4-5 மாதங்களுக்கு யாரும் காஷ்மீருக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள் என்ற கருத்து அம்மாநிலத்தவரிடம் காணப்படுகிறது.

மின்னல் தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி ,அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் நேற்று வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதில் மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது ,பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்த துறவிகளுக்கான ஒதுக்கப்பட்ட வரிசை வழியாகதலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்துகண்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
Posted in இலங்கை செய்திகள்

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர ,அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றார்.

உலகில் எங்கு இடம்பெற்றாலும், பயங்கரவாதத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்தார்.

மேலும், எழுந்துள்ள நிலைமையால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

Posted in வன்னி மைந்தன் உதவி

பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா

பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா

பிரதீபா வழங்கிய அசத்தல் சாப்பாடு வவுனியா.வவுனியாவில் சிறப்பாக ஏற்பாடு செய்ய பட்ட இடம் ஒன்றில் இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த உணவை வழங்கிய பிரதீபா ரவீந்திரன் அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம் .

CLICK HERE VIDEO

சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan

சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan

சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan ,அமரர் அம்பிகைபாகன் கணேசலிங்கம் அவர்களின் 15ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு லண்டனில் இருந்து அவரது மகன் உதயனால் வழங்கப்படுகிறது.

CLICK HERE வீடியோ

லண்டன் கீதாவின் 45வது களைகட்டிய பிறந்த நாள் கொண்டாட்டம்
Posted in வன்னி மைந்தன் உதவி

லண்டன் கீதாவின் 45வது களைகட்டிய பிறந்த நாள் கொண்டாட்டம்

லண்டன் கீதாவின் 45வது களைகட்டிய பிறந்த நாள் கொண்டாட்டம்

லண்டன் கீதாவின் 45வது களைகட்டிய பிறந்த நாள் கொண்டாட்டம் ,லண்டனை சேர்ந்த கீதா அவர்கள் தனது 45 வது பிறந்த நாளினை 19-04-2025 அன்று கொண்டாடினார் .அதன் காட்சி பதிவுகள் இவை .

பிறந்த நாள் நிகழ்வு வவுனியாவில் இடம்பெற்றுள்ளது ,கீதா அக்கா அவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் நாம் தெரிவித்து கொள்கிறோம் .

Posted in வன்னி மைந்தன் உதவி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி

மன்னாரில் மாணவிகள் மகிழ்ச்சி உணவளித்த காரை சேனாதி,மன்னார் மாவாட்டத்தில் மாணவிகள் தங்கியுள்ள ஆச்சிரம ஒன்றுக்கு காரை சேனாதி அண்ணா வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதி பங்களிப்பில் இந்த உணவு வழங்க பட்டுள்ளது .

இந்த சிறார்களுக்கு அன்னதானம் வழங்கிய அவர்களை மகிழ்வூட்டிய காரை சேனாதி அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா
Posted in வன்னி மைந்தன் உதவி விசேட செய்திகள்

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா

உணவின்றி சாக முனைந்த குடும்பம் |கண்ணீர் வீடியோ வவுனியா ,வவுனியா சமானன் குளம் பகுதியில் , ஒருவேளை உணவின்றி வாடிய குடும்பம் .

வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தில் இதனை கண்ணுற்ற மக்கள் ஓடி உதவியுள்ள செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

முழுமையாக காணொளி பாருங்கள் .

click here video

கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ்
Posted in வன்னி மைந்தன் உதவி

கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ்

கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ்

கலக்கல் பிறந்த நாள் அசத்தல் சாப்பாடு ரேனோஸ் சுவிஸ் ரேனோஸ் அவர்கள் வவுனியாவில் வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்கள் பசியை போக்கியுள்ளார் .

எனவே இந்த உதவியை வாழங்கிய ரேனோஸ் சுவிஸ் அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan
Posted in வன்னி மைந்தன் உதவி

இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan

இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan

இந்த சாப்பாடு எம்மை உயிர் காக்கிறது மக்கள் கண்ணீர் நன்றி கே கே அக்கா |Vanni mainthan ,கனடாவை சேர்ந்த கே கே அக்கா அவர்கள் அமைப்பாறையில் வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி அவர்கள் பசியை போக்கியுள்ளார் .

எனவே இந்த உதவியை வாழங்கிய கே கே அக்கா அவர்களுக்கு எமது அந்நரிகளை தெரிவித்து கொள்கிறோம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார
Posted in இலங்கை செய்திகள்

புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார

புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார

புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார ,புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். முஸ்லிம் மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். பிளவுபட்டிருந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாம் ஒன்றிணைத்துள்ளோம்.

கடந்த காலங்களில் ஆட்சியமைத்தவர்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைப் பரப்பினார்கள். சிங்கள முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.

இனவாத அமைப்புகளை வலுப்படுத்தினார்கள். அளுத்கமையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. திகனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. தற்போது இவ்வாறான செய்திகளுக்கு இடமில்லை.

எமது நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒருபோதும் இனவாதத்திற்கு இடமளிக்கப்போவதில்லை எனும் உறுதிமொழியை வழங்குகின்றோம்.

இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் போதுமானதாக இல்லாத நிலையில், புதிதாகச் சட்டத்தினை வகுத்தேனும் இனவாதத்தைத் தோற்கடிப்போம் என்றார்

சுகாதார பரிசோதகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார் ,மித்தெனிய பொலிஸ் பிரிவில், பெப்ரவரி (18) ஆம் திகதியன்று நடந்த மூன்று கொலைகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என

சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்க, இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, வௌ்ளிக்கிழமை(25) அன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவர் உஸ்வேவகெதர, டெபொக்காவ பகுதியைச் சேர்ந்தவர், மேலும் இந்த மூன்று கொலைகளுக்கு மேலதிகமாக, கொலை, கைக்குண்டுகளை வைத்திருத்தல் மற்றும் ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள்

வைத்திருந்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக மித்தெனிய, ஊருபொக்க, வலஸ்முல்ல மற்றும் மித்தெனிய ஆகிய மாத்தறை பிரிவுகளில் உள்ள பல பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேக நபராவார்.

இந்த மூன்று கொலைகளில், விதானகமகே அருண பிரியந்த, அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று போலியான பெயரில் அங்கு தங்கியிருந்துள்ளார். குற்றப் புலனாய்வுத்

துறையால் நாட்டிற்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, வௌ்ளிக்கிழமை (25) அன்று கட்டுநாயக்கவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை

யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை

யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை ,யாழில். இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட மாங்குளம்

பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் குழுவினர் கடந்த 22ஆம் திகதி யாழில். இருந்து வவுனியா நோக்கி காரில் பயணித்த போது, மாங்குளம் பொலிஸார், டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்ணில் பாய்ச்சி வழி மறித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு வழி மறிப்பது தவறு என அந்த இளைஞர் குழு எடுத்து கூறிய போது அவர்களுடன் பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டு, அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தகட்டு இலக்கத்தையும் வழங்க மறுத்து, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அந்த இளைஞர் குழுவினர் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி

கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி

கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி ,ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக சென்ற மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) கண்டிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

அங்குள்ள மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு குறித்த பகுதிகளுக்குச் சென்றுள்ளார்.

இதேவேளை, வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேற்றிரவு தன்சல் (உணவு தானம்) வழங்கப்பட்டுள்ளன.

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்
Posted in இலங்கை செய்திகள்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய் ,அப்பா எங்கே‘? என்ற என் குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கணவனை இழந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிடன் அதிகாரி, மனைவி மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருகிறார். கடந்த 8-ம் திகதி சொந்த ஊருக்கு வந்த அவர்கள், காஷ்மீருக்கு

சுற்றுலா சென்றனர். இந்நிலையில்தான், பஹல்காமிலம் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடன் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அவருடைய மனைவி கூறும்போது, “தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் ஊர் பற்றி கேட்டார்கள். பின்னர் ஆண்களை தனியாக நிற்க வைத்து அவர்களின் மதம் பற்றி கேட்டார்கள்.

அதன் பிறகு ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டனர். என் குழந்தையின் கண் முன்னே என் கணவரை சுட்டுக் கொன்றனர். இப்போது, அப்பா எங்கே என என் மகன் அடிக்கடி கேட்கிறான்.

அப்பா இனி வரமாட்டார் என அவனிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை” என மனம் உடைந்த நிலையில் தெரிவித்தார்.