முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது
Posted in இலங்கை செய்திகள்

முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது

முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது

முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது .

மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில்

செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள்

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு

இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முத்துஐயன்கட்டு பகுதியை சேர்ந்த 05 இளைஞர்களை இரும்பு சேகரிக்க வருமாறு அழைத்து இராணுவ சிப்பாய்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன்போது அங்கிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்த போதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (11) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்களையும் ஒன்பது படகுகளையும்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

மீனவர்களின் இந்த தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை படகுகளுடன் உடனடியாக விடுதலை

செய்யுமாறு வலியுறுத்தியும் இன்று (11) காலை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மீன்பிடி விசைப் படகுகள்

இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 20,000 மேற்பட்ட

மீனவர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தவறும்

பட்சத்தில் வரும் 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும், 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது
Posted in இலங்கை செய்திகள்

பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது

பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது

பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின்

பணம் வசூலித்த மூன்று நபர்

வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலித்த மூன்று நபர்களை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள், ஹபராதுவ பிரதேச சபையின் அதிகாரிகள் என்று கூறி வாகனங்களிலிருந்து பணம் வசூலித்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உனவடுன சுற்றுலாப் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேருந்தை நிறுத்துவதற்கு 1,500 ரூபா

பேருந்தை நிறுத்துவதற்கு 1,500 ரூபாவும் கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட பிற வாகனங்களை நிறுத்துவதற்கு 1,000 ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34, 35 மற்றும் 41 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (11) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழில் கத்திகுத்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கத்திகுத்து ஒருவர் பலி

யாழில் கத்திகுத்து ஒருவர் பலி

யாழில் கத்திகுத்து ஒருவர் பலி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

புங்குடுதீவு முதலாம் வட்டாம்

புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்

காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

அம்பருடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அம்பருடன் ஒருவர் கைது

அம்பருடன் ஒருவர் கைது

அம்பருடன் ஒருவர் கைது அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல்

திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று

(10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபரின் வசம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன் பெறுமதி 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் வத்துருகம, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர்கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர்கைது

பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர்கைது

பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர்கைது ,பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து

பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு

மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்ததற்காக மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக சந்தேக நபர் இவ்வாறு அழைப்பு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸார் எடுக்கும் எந்தவொரு கைதுகள் அல்லது நடவடிக்கைகளிலும் அமைச்சரோ அல்லது அமைச்சரின்

பணிக்குழாமோ தேவையற்ற அழுத்தங்களையோ அல்லது தேவையற்ற தலையீட்டையோ மேற்கொள்ளாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவை எதிர்த்துப் போராடுவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பொது

மக்கள் பாதுகாப்பு அமைச்சு தற்போது விசேட தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரின் பெயரில்

அதன்படி, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரின் பெயரில் அல்லது அமைச்சின் பணிக்குழாம் என்ற பெயரில் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்தால் அல்லது பொலிஸ் நிலையங்கள்

உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டாலோ அமைச்சுக்கு அறிவிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது

வீதி விபத்துகளில் மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்துகளில் மூவர் பலி

வீதி விபத்துகளில் மூவர் பலி


வீதி விபத்துகளில் மூவர் பலி ,நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்துகள் நேற்று (09) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதவாச்சி பொலிஸ் பிரிவில்

அதன்படி, நேற்று அதிகாலை, மதவாச்சி பொலிஸ் பிரிவில் கெபிதிகொல்லேவ – மதவாச்சி வீதியில் இரண்டாவது கிலோ மீட்டர் மைல்கல் அருகில் மதவாச்சி

திசை நோக்கிச் சென்ற வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மதவாச்சியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், படபொல பொலிஸ் பிரிவில் உடுவில, எத்கந்துர வீதியில் தொரல சந்திக்கு அருகில், எத்கந்துர திசையிலிருந்து தொரல திசை நோக்கிச் சென்ற

துவிச்சக்கர வண்டியொன்று வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியுள்ளது.

துவிச்சக்கர வண்டி செலுத்துனர்

விபத்தில் துவிச்சக்கர வண்டி செலுத்துனர் பலத்த காயமடைந்து உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் படபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் வரகாபொல பொலிஸ் பிரிவில் கொழும்பு – கண்டி வீதியில் மாஹேனபாத சந்திக்கு அருகில் கொழும்பு திசை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இறந்தவர் தொலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் இன்று விசேடஉரை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் இன்று விசேடஉரை

ஜனாதிபதி ரணில் இன்று விசேடஉரை

ஜனாதிபதி ரணில் இன்று விசேடஉரை முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இளைஞர் சமூகங்கள் தொடர்பான

இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிடவுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள்

இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள்

மன்றம் மற்றும் இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள் தனது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து கருத்து தெரிவிக்க உள்ளார்

காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள்
Posted in இலங்கை செய்திகள்

காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள்

காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள்

காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள் ,காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ

அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீப்பரவலில் இதுவரை 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி
Posted in இலங்கை செய்திகள்

ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி

ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி

ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி இந்தியாவில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய ரக்பி எழுவர் அடங்கிய செம்பியன்ஷிப் தொடரின்

இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிப் பெற்றுள்ளது.

இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டி

இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீனாவை 26-17 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில், இலங்கை அணி இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது

நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்
Posted in இலங்கை செய்திகள்

நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்

நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட

குழுவினர் இன்று (10) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.

திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி

அமரசூராய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.

அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர

அனுகூலங்களை வழங்கும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது

மேலும், சமந்தா ஜோய் மோஸ்டின், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதோடு பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகமவில்

அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களை

அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைப் பார்வையிட்டார்.

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை வழியனுப்பும் நிகழ்வில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன

மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இணைந்து கொண்டனர்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம்

புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம் ,நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும்

என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார்.

மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின்

குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே, இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத்

தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் கருத்து வௌியிட்ட அவர்,

“குறிப்பாக இந்த சிறு பிள்ளைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.

புலமைப்பரிசில் பரீட்சையை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.

பிள்ளைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகிறார்கள்.

பிள்ளைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இன்று பரீட்சையில் மாணவர்கள் என்ன எழுதினார்கள் என்று கேட்டு?

அவர்கள் தவறான பதில் எழுதினால், அவர்களை திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம்.

அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் பிள்ளைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.

பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி

எனவே நம் பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி, பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நாம் திரும்பப் பெற முடியாது.

எனவே இந்த குழந்தைப் பருவத்தை பதில்களை எழுதுவதை அடிப்படையாகக் கொள்ளாதீர்கள்.

புலமைப் பரிசில் பரீட்சை என்பது பிள்ளைக்கு ஒரு பரீட்சை மட்டுமே. இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர்.

அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி

மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் வருடாந்த எசல பெரஹெராவின் நிறைவு நிகழ்வில்

கண்டிக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார

கலந்துகொள்ள கண்டிக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (09) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மாநாயக்க தேரர் வண,

திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றதுடன், சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

அஸ்கிரி மகா விஹாரை

பின்னர் அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி தரப்பின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ

ஞானரதன தேரரை சந்தித்து நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்,

அமெரிக்காவின் CDC அருகே துப்பாக்கிச்சூடு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவின் CDC அருகே துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் CDC அருகே துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவின் CDC அருகே துப்பாக்கிச்சூடு ,அமெரிக்காவின் CDC தலைமையகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி மரணம்

எமோரி பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தலைமையகத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.

வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் “ஒற்றை துப்பாக்கிச் சூடு நடத்தியவர்” ஒருவர் உயிரிழந்ததாக அட்லாண்டா காவல் துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் காயமடைந்ததாக எந்த தகவலும் இல்லை என்று அட்லாண்டா நகர மேயர் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத சட்ட அமலாக்க அதிகாரியை மேற்கோள் காட்டி, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் கொரோனா வைரஸ்

தடுப்பூசியின் விளைவாக தான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக நம்புவதாக ஒரு கோட்பாட்டை அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளில் அந்த நபரின் தந்தை சட்ட அமலாக்கத்தை அழைத்து தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக நம்பியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

CDC இயக்குனர் சூசன் மோனரெஸ், இந்த தாக்குதலால் மையம் “மனம் உடைந்துவிட்டது” என்று கூறினார்.

“ஒரு துணிச்சலான உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரி தனது உயிரைக் கொடுத்தார், மற்றொருவர் காயமடைந்தார், துப்பாக்கிதாரி குறைந்தது நான்கு

CDC கட்டிடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில்,” என்று அவர் X இல் ஒரு பதிவில் எழுதினார்.

“டெகால்ப் கவுண்டி காவல்துறை, CDC பாதுகாப்பு மற்றும் எமோரி பல்கலைக்கழகம் உடனடியாகவும் தீர்க்கமாகவும் பதிலளித்து, எங்கள்

ஊழியர்களுக்கும் சமூகத்திற்கும் மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க உதவியது

பல தடவைகள் மழை பெய்யும்
Posted in உலக செய்திகள்

காசாவில் 39 பாலஸ்தீனியர் பலி

காசாவில் 39 பாலஸ்தீனியர் பலி

காசாவில்  39 பாலஸ்தீனியர் பலி ,கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் 39 பாலஸ்தீனியர்களைக் கொன்றது

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய படைகள் 39 பாலஸ்தீன மக்களைக் கொன்றதாக காசா பகுதியில் உள்ள பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 491 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உணவு உதவிக்காகக் காத்திருந்தபோது கொல்லப்பட்டவர்களில் 21 பேர் இறந்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலால் தூண்டப்பட்ட பஞ்சம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை 98 குழந்தைகள் உட்பட 212 ஆக உயர்ந்துள்ளது.

அக்டோபர் 2023 இல் போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களால் குறைந்தது 61,369 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பரில், காசாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் போர் மந்திரி யோவ் காலன்ட் ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்டுகளை பிறப்பித்தது.

அந்த நிலப்பகுதி மீதான போருக்கு இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை வழக்கையும் எதிர்கொள்கிறது.
அலாஸ்காவிற்கு வருகை தரும் புடின்
Posted in உலக செய்திகள்

அலாஸ்காவிற்கு வருகை தரும் புடின்

அலாஸ்காவிற்கு வருகை தரும் புடின்

அலாஸ்காவிற்கு வருகை தரும் புடின் ,அலாஸ்காவிற்கு வருகை தரும் முதல் ரஷ்யத் தலைவர் புடின்: மாநிலத் துறை

அமெரிக்க வெளியுறவுத் துறையின் தரவுகளின்படி, அமெரிக்க மாநிலமான அலாஸ்காவிற்கு வருகை தரும் முதல் ரஷ்யத் தலைவர் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆவார்.

அமெரிக்க ஜனாதிபதி இல்லத்திற்கும் சென்றார்

கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் நீடித்த அவரது பயணத்தின் போது, அவர் வாஷிங்டனுக்கும் கேம்ப் டேவிட்டில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி இல்லத்திற்கும் சென்றார். குருஷேவைத் தொடர்ந்து அமைச்சர்கள் குழுவின்

ரஷ்யாவின் முதல் ஜனாதிபதி

தலைவர் அலெக்ஸி கோசிகின் (1967), மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் லியோனிட் பிரெஷ்நேவ் (1973)

ஆகியோர் வந்தனர். மிகைல் கோர்பச்சேவ் 1987, 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ததாக டாஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவின் முதல் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் 1992 ஆம் ஆண்டு கேம்ப் டேவிட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷை சந்தித்தார்.

பின்னர், அவர் அமெரிக்காவிற்கு மேலும் நான்கு முறை விஜயம் செய்தார்: 1992, 1994, 1995 மற்றும் 1997 ஆம் ஆண்டுகளில்.

புடின் முதன்முதலில் செப்டம்பர் 6-7, 2000 அன்று நியூயார்க்கில் நடந்த ஐ.நா. பொதுச் சபையின் 55வது அமர்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மில்லினியம் உச்சி மாநாட்டில் பங்கேற்று அமெரிக்காவிற்கு

பயணம் செய்தார். அதன் பிறகு, புடின் மேலும் ஆறு முறை அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார், கடைசியாக 2015 இல். டிமிட்ரி மெட்வெடேவ் ரஷ்யாவின்

ஜனாதிபதியாகவும், ஒரு முறை பிரதமராகவும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அலாஸ்காவில் ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடினை சந்திப்பார் என்று ட்ரூத் சோஷியலில்

அறிவித்தார். கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் பின்னர் சந்திப்பு அடுத்த வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் நடைபெற திட்டமிடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.

போதை கடைபக்கதில அருளினி பாடல்
Posted in பாடல்கள்

போதை கடைபக்கதில அருளினி பாடல்

போதை கடைபக்கதில அருளினி பாடல்

போதை கடைபக்கதில அருளினி பாடல் ,போதை கடை பக்கதில அருளினி அவர்கள் எழுதிய பாடல் பாடியவர் =- பாவேந்தன்
இசை – இளங்கோ செல்லப்பா


பாடல்வரிகள் – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து உருவாக்கும் 100 பாடல் உருவாக்கத்தில் அட்டகாசமான நிகழ்காலத்தை பறை சாற்றும் பாடலாகவும் ,போதையில் உலவுகிறவர்களுக்கு சாட்டை அடியாக ,இந்த போதை கடை பக்கதில பாடல் வெளிவந்துள்ளது குறிப்பிட தக்கது.

அருளினி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ,மற்றும் பாடல் ஆசிரியர்களை தொடராக அறிமுகம் செய்து வைக்க உதவிடும் இசை அமைப்பாளர் இளங்கோ செல்லப்பா மற்றும் பாடகர் பாவேந்தன் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் .

பாடியவர் =- பாவேந்தன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது
Posted in உலக செய்திகள்

பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது

பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது

பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக 150பேர் கைது பாலஸ்தீனத்தை ஆதரித்ததற்காக இங்கிலாந்து போலீசார் 150 பேரை கைது செய்தனர், காசாவில்

பாலஸ்தீன நடவடிக்கை குழுவை

பாலஸ்தீன நடவடிக்கை குழுவை தடை செய்வதற்கான பிரிட்டனின் முடிவுக்கு எதிரான போராட்டத்தில் 150 பேரை கைது செய்ததாக லண்டன் பெருநகர

காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது, மேலும் அது மேலும் கைதுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற சதுக்கத்தில் குழுவிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் பதாகைகளை அசைத்து, கூட்டத்தினர் கூடியதை அடுத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக படை X இல் தெரிவித்துள்ளது.

கருப்பு மற்றும் வெள்ளை

கருப்பு மற்றும் வெள்ளை பாலஸ்தீன ஸ்கார்ஃப்களை அணிந்திருந்த போராட்டக்காரர்கள், சிலர் “உங்களுக்கு அவமானம்” மற்றும் “காசாவை விட்டு வெளியேறு” என்று கோஷமிட்டனர், மேலும் “இனப்படுகொலையை நான்

எதிர்க்கிறேன். பாலஸ்தீன நடவடிக்கையை நான் ஆதரிக்கிறேன்” போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர், சம்பவ இடத்தில் ராய்ட்டர்ஸ் எடுத்த வீடியோ காட்டியது.

இந்தத் தடை குழுவில் உறுப்பினராக இருப்பது குற்றமாகும், அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

பாலஸ்தீன நடவடிக்கையின் இணை நிறுவனர் ஹுடா அம்மோரி கடந்த வாரம் தடைக்கு எதிராக சட்டப்பூர்வ சவாலை முன்வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றார்.

தலதா மாளிகையின் எசல பெரஹெரா
Posted in இலங்கை செய்திகள்

தலதா மாளிகையின் எசல பெரஹெரா

தலதா மாளிகையின் பெரஹெரா

தலதா மாளிகையின் எசல பெரஹெரா ,வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக வீதி வலம் வர உள்ளது.

ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய இந்தத் திருவிழா, கடந்த 9 நாட்களாக வீதி வலம் வந்து, இன்று 10வது நாளாக இறுதி

ரந்தோலி பெரஹெரா

ரந்தோலி பெரஹெராவுடன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது என்று தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கை ரயில்வே திணைக்களம் விசேட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பு-கோட்டை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து இன்று பல விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.

இதற்கிடையில், இலங்கை பொலிஸ் இறுதி ரந்தோலி பெரஹெராவிற்காக விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

வீதித் தடைகள், வாகனங்கள்

இதில் வீதித் தடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்டவை அடங்கும்.

மேலும், பெரஹெரா பாதைகளில் ட்ரோன் இயக்கங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இறுதி ரந்தோலி பெரஹெராவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாரம்பரிய கண்டிய நடனக் கலைஞர்கள், தீச்சாலை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் குழுவினர் பங்கேற்கின்றனர்.

ஓகஸ்ட் 9 அன்று நீர் வெட்டும் விழா மற்றும் பகல் பெரஹெராவுடன் 2025 கண்டி எசல பெரஹெரா முடிவடைகிறது.

யாழில் துண்டான பெண்ணின் கால்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் துண்டான பெண்ணின் கால்

யாழில் துண்டான பெண்ணின் கால்

யாழில் துண்டான பெண்ணின் கால் ,யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார்.

இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த யுவதி உடனடியாக

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.