Tag: தலதா மாளிகை
தலதா மாளிகையின் எசல பெரஹெரா
தலதா மாளிகையின் பெரஹெரா
தலதா மாளிகையின் எசல பெரஹெரா ,வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக வீதி வலம் வர உள்ளது.
ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய இந்தத் திருவிழா, கடந்த 9 நாட்களாக வீதி வலம் வந்து, இன்று 10வது நாளாக இறுதி
ரந்தோலி பெரஹெரா
ரந்தோலி பெரஹெராவுடன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது என்று தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கை ரயில்வே திணைக்களம் விசேட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொழும்பு-கோட்டை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து இன்று பல விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.
இதற்கிடையில், இலங்கை பொலிஸ் இறுதி ரந்தோலி பெரஹெராவிற்காக விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
வீதித் தடைகள், வாகனங்கள்
இதில் வீதித் தடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்டவை அடங்கும்.
மேலும், பெரஹெரா பாதைகளில் ட்ரோன் இயக்கங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இறுதி ரந்தோலி பெரஹெராவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாரம்பரிய கண்டிய நடனக் கலைஞர்கள், தீச்சாலை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் குழுவினர் பங்கேற்கின்றனர்.
ஓகஸ்ட் 9 அன்று நீர் வெட்டும் விழா மற்றும் பகல் பெரஹெராவுடன் 2025 கண்டி எசல பெரஹெரா முடிவடைகிறது.
ரணில் தலதா மாளிகையில் வழிபாடு
ரணில் தலதா மாளிகையில் வழிபாடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் காலை கண்டி வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்குச் சென்று சமயக்கிரியைகளில் ஈடுபட்டார்.
தலதா மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், கண்டி நகரபிதா திரு.கேசர சேனநாயக்க மற்றும் அமைச்சர்களினால் வரவேற்கப்பட்டு தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல மற்றும் நான்கு மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேமார் வரவேற்றனர்.
அதன் பின்னர், தலதா மாளிகையில் புனித தந்ததாது பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மேல்மாடிக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அங்கு மலர்
அஞ்சலி செலுத்தி சமய வழிபாடுகளில் ஈடுபட்டு மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
சமய வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், தலதா மாளிகையில் சிறப்பு விருந்தினர்களுக்காக
ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்துக்குக்குச் சென்று நினைவுக் குறிப்பேட்டில் நினைவுக் குறிப்பொன்றை இட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று பிற்பகல் மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்திக்க உள்ளார்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அலுத்கமகே, திலும்
அமுனுகம, குணதிலக ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதி ஆலோசகர் ருவன் விஜயவர்தன, ஐ.தே.க பொதுச் செயலாளர்
பாலித ரங்கே பண்டார, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, ஐக்கிய லக் வனிதா.
முன்னணியின் தலைவி சாந்தினி கோன்கஹகே, கம்பளை நகரபிதா சமந்த அனுரகுமார
உள்ளிட்ட கண்டி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.








