Tag: சிக்கியது
பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது
பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது
பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின்
பணம் வசூலித்த மூன்று நபர்
வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலித்த மூன்று நபர்களை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள், ஹபராதுவ பிரதேச சபையின் அதிகாரிகள் என்று கூறி வாகனங்களிலிருந்து பணம் வசூலித்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உனவடுன சுற்றுலாப் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்தை நிறுத்துவதற்கு 1,500 ரூபா
பேருந்தை நிறுத்துவதற்கு 1,500 ரூபாவும் கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட பிற வாகனங்களை நிறுத்துவதற்கு 1,000 ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34, 35 மற்றும் 41 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (11) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது
தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் பொலிசிடம் சிக்கியது.
விடுதலை புலிகளினால் புதைக்க பட்ட தங்க நகைகள் உள்ள பகுதியை தோண்டியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுளள்னர் .
இவர்கள் தேடி தோண்டிய தங்க புதையல் சிக்கவில்லை .ஆனால் தங்கம் தேடிய தங்க கொழுந்துகள் வசமாக பொலிசாரிடம் சிக்கின .
புலிகள் தங்கம் தேடியவர்கள் கைது
வடக்கு பகுதியை தமது ஆளுகைக்குள் வைத்து ஆட்சி புரிந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் , சுற்றிவளைக்க பட்ட பொழுது ,அவர்கள் தமது தங்கம் போன்றவற்றை குழி தோண்டி புதைத்து வைத்தனர் .
அவ்வாறு புலிகள் புதைத்து வைத்த தங்கம், சிலாவத்துறை பகுதியில் உள்ளதாக பொலிஸ் அதிகாரிக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து ,அந்த தங்க குழி தோண்ட பட்டுள்ளது .
சிலாவத்துறை பொலிஸ் நிலையதின் அருகில் இவை உள்ளதாக தெரிவிக்க பட்டு தோண்ட பட்ட பொழுதும், அங்கு அவை காணப்படவில்லை .
அதனை அடுத்து புலிகள் தங்க தேடிய போலீஸ் ,அதிகாரி உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .
புலிகளை தேடும் சிங்களவர்கள்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பொழுதும் ,தமிழீழ விடுதலை புலிகள் பயன் படுத்திய தங்கம் ,பணம் என்பனவற்றை சிங்கள மக்களும் ,சிங்கள படைத்துறை தேடி வருவது அம்பலமாகியுள்ளது .
சிலாவத்துறை பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் தங்க புதையல் உள்ளதாக தெரிவித்து ,அதனை தோண்டிய இலங்கை அரச கடற்படை சிப்பாய் மற்றும் பொலிஸ் அதிகாரி உள்ளிடட மூவர் சிக்கியதில் இருந்து ,சிங்களவர்களும் இப்பொழுது புலிகளை தேட ஆரம்பித்துள்ளது புரிகிறது .

















