புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
Posted in இலங்கை செய்திகள்

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை ,காங்கேசன்துறையிலிருந்து கோட்டைக்கு செல்லும் மதியம் 1.30 புகையிரதத்தில் முன்பதிவு செய்த நால்வர் யாழ்ப்பாணத்திலிருந்த ஏறியிருக்கின்றனர்.

காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள்

ஆனால் அவர்கள் முன்பதிவு செய்து பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த ஆசனங்களில் காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள் அமர்ந்து வந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் முன்பதிவு செய்த நான்கு தமிழர்களும் பயணச்சீட்டைக் காட்டி, அது தம்மால் முன்பதிவு செய்யப்பட்டது எனவும், ஆசனத்தை விட்டுத்தருமாறு கேட்டபோது,

தாமும் முன்பதிவு செய்துதான் புகையிரத த்தில் பயணிக்கிறோம் எனவும் தாம் முன்பதிவு செய்த ஆசனங்கள் வேறொரு பெட்டியில் இருப்பதாகவும், தமிழர் நால்வரும் அந்த ஆசனங்களில் அமர்ந்து வருமாறும் கூறியிருக்கின்றனர்.

தாம் முன்பதிவு செய்துள்ள ஆசனத்தை தம்மிடமே ஒப்படைத்துவிட்டு, நீங்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்கே சென்று அமருங்கள் என யாழ்ப்பாணத்தவர்கள் கோரியபோதும் அதற்கு சிங்களவர்கள் செவிசாய்க்கவில்லை.

சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்

இதனையடுத்து புகையிரத பரிசோதகர்களிடம் இந்த விடயத்தை பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தபோது சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்

புகையிரதம் நிறுத்தப்பட்டு சிங்களவர்களை அவர்கள் முன்பதிவு செய்த ஆசனத்தில் சென்று அமருமாறு புகையிரத பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதனை ஏற்காத சிங்கள பயணிகள், தாம் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றும் தம்மோடு பகைத்துக்கொண்டு யாரும் புகையிரத த்தில் பயணித்து கொழும்பு வரமுடியாது எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளால் 30நிமிடம் வரை சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க்க்கப்படதாகவும்,

சிங்கள பயணிகள் அடாத்தாக அமர்ந்த ஆசனங்களிலேயே தொடர்ந்தும் பயணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்

கெஹலியவின் வழக்கு நிறைவு
Posted in இலங்கை செய்திகள்

கெஹலியவின் வழக்கு நிறைவு

கெஹலியவின் வழக்கு நிறைவு

கெஹலியவின் வழக்கு நிறைவு ,நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட

கொழும்பு பிரதான நீதவான்

வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (9) அறிவித்தார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளதால், கொழும்பு நீதவான்

நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அதன்படி, பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில்

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள்

இதன்போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக

கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடியும் என தெரிவித்தனர்.

அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தொடரப்பட்ட குறித்த வழக்கின் நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடிவு செய்த பிரதான நீதவான்,

பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள்

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அமைச்சராக இருந்த காலத்தில் 97 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வங்கிக் கணக்குகள், ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வாகனங்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு அவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை ,தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தாய்லாந்து உயர் நீதிமன்றம்

அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தாய்லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்நாட்டின் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார்.

தாய்லாந்து பிரதமராக பதவி

2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007ம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் துவங்கினார்.

ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து 2009ம் ஆண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மொண்டெனேகுரோ-வுக்கு தப்பிச் சென்ற ஷினவத்ரா சுமார் 15 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு தாய்லாந்து வந்தார்.

பியூ தாய் கட்சி ஆட்சி

பியூ தாய் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் அவர் மீதான வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சிறை தண்டனை தாய்லாந்து மன்னரால் ஒரு வருடமாக குறைக்கப்பட்டது.

கால் நூற்றாண்டாக தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தி வரும் கோடீஸ்வரரான தக்சின் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே சிறைச்சாலையில் இருந்த நிலையில் வைத்திய சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார்.

6 மாதங்களில் விசேட பிணை

பின்னர், 6 மாதங்களில் விசேட பிணையில் வெளியே வந்த தக்சின் ஷினவத்ரா தாய்லாந்து அரசியலில் மீண்டும் செல்வாக்கு செலுத்தினார்.

இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தாய்லாந்து பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வி அடைந்தது.

அவருக்கு எதிரான விசாரணை

இதனை அடுத்து அவருக்கு எதிரான விசாரணையின் போது ஏற்கனவே வைத்தியசாலையில் இருந்தபடி தண்டனையை அனுபவித்ததால் அது தண்டனையாக கருதப்படாமல் ஓராண்டு தண்டனையை விதிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன
Posted in இலங்கை செய்திகள்

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன

கொள்கலன்கள் எவ்வாறு வெளியே வந்ததன ,ஐஸ் உற்பத்தியுடன் தொடர்புடைய மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைக்

கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் செயல்பாட்டில் ஓர் முன்னேற்றமாக அமைந்து காணப்படுகின்றது. இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டதுடன் பல

கேள்விக்குரிய விடயங்கள் வெளிவருவதனால், அரசாங்கம் இந்த விடயத்தின் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த 2 கொள்கலன்களும் துறைமுகத்திலிருந்து எவ்வாறு வெளியே வந்தன என்பதுதான் இங்குள்ள கடுமையான பிரச்சினையாக காணப்படுகின்றன.

சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருளினது பரவல் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.

இந்த இரண்டு கொள்கலன்கள் குறித்தும் சர்வதேச புலனாய்வு அமைப்புகள் நமது நாட்டிற்கு ஏலவே தகவல்களை தெரிவித்தனவா என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டி காணப்படுகின்றது.

இந்த புலனாய்வு தகவல் கிடைக்கப்பெற்ற திகதி, தகவல் குறித்து விசாரணைகளை நடத்திய நபர்கள் மற்றும் விசாரணைகள் நடத்தப்பட்ட காலப்பிரிவு, இந்த பரிசோதனைகளுக்குப் பிறகும், ஐஸ் உற்பத்திக்கான

மூலப்பொருட்கள் அடங்கிய இந்த இரண்டு கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனவா போன்ற தகவல்களை அறிந்து கொள்வது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களினது ஒன்றியத்தினருடன் நேற்று (08) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டிருந்தால், விடுவிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பிலான உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

சர்வதேச புலனாய்வு அமைப்புகள் இது குறித்த தகவல்களை தெரிவித்த பின்னர், குறித்த கொள்கலன்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதா ? இந்த கொள்கலங்களை விடுவிப்பதற்கு ஏதுவாக அமைந்து

காணப்பட்ட விடயங்கள் யாவை? அதே போல் சமீபத்தில் பரிசோதனை மேற்கொள்ளாமல் விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களும் இதைச் சேர்ந்ததா ? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

போதைப் பொருள் உற்ப்பத்திக்கான மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்கப்பட்டமை குறித்தான சகல தகவல்களையும் நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.

இந்த மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதனைச் சுற்றியுள்ள கேள்விகளுக்குரிய உண்மைகளை வெளிக்கொணர முடியும்.

இனம், மதம், சாதி, வர்க்கம் மற்றும் கட்சி வேறுபாடு இல்லாமல் போதைப்பொருள் அச்சுறுத்தலின் பரவலைத் தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தப் பயணத்தின் போது உண்மையான தகவல்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொலைச் சம்பவம் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலைச் சம்பவம் மூவர் கைது

கொலைச் சம்பவம் மூவர் கைது

கொலைச் சம்பவம் மூவர் கைது ,இரட்டை கொலை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த பகுதியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.

புலனாய்வுப் பணியக அதிகாரிகள்

இது தொடர்பான விசாரணையை தகுற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்று (08) விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் எம்பிலிபிட்டிய பகுதியில் குறித்த 3 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்கள் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன

சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பின்வரும் ஆதங்கள் மற்றும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட துப்பாக்கிச் சூட்டில் உஷி வகை துப்பாக்கி 09 மிமீ

அளவிலான கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது

09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கி

09 மி.மீ அளவிலான கைத்துப்பாக்கிக்கு பயன்படும் 53 தோட்டாக்கள்

T56 ரக 19 தோட்டாக்கள்

T56 ரக 2 வெற்று தோட்டாக்கள்

ஒரு ஜோடி கைவிலங்கு

300 கிராம் ஹெராயின் என்பனவற்றை தங்காலை குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜித பிணையில் செல்ல அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

ராஜித பிணையில் செல்ல அனுமதி

ராஜித பிணையில் செல்லஅனுமதி

ராஜித பிணையில் செல்ல அனுமதி ,ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் .

கொழும்பு நீதவான் நீதிமன்றம் Colombo Magistrate’s Court

ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க

உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் Bribery and Corruption Commission officials

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள்

முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு

இன்று (09) காலை சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம்

நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம்

நாட்டில் கடும் மழைபெய்யும் சாத்தியம் ,நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (9) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.Heavy rains possible in the country

பலத்த மழை பெய்யக்கூடும் Heavy rain possible.

சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் Thunderstorms are expected.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் , நடத்திக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது .Israel attacks Lebanon

லெபனான் கிஸ் புல்லா போர்படை Lebanese Kisfullah Brigade

தெரிவு செய்யப்பட்ட லெபனான் கிஸ் புல்லா போர்படைகளின் இலக்குகளை இலக்கு வைத்து,

தமது ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருவதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .

தெரிவு செய்யப்பட்ட 12 இலகுககள் மீது தங்கள் கடும் தாக்குதே நடத்தியதாகவும் ,அதில் இஸ்ரேல் போர்படை வீரர்கள் பலர் பலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கியமான தளபதிகள் இலக்கு Target important commanders

மிக முக்கியமான தளபதிகள் இலக்கு வைத்து அவர்கள் மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, வழமை போன்று யூத ராணுவம் அறிவித்துள்ளது .

எனினும் எதிரி படைகள் நடத்திய இந்த தாக்குதலில், தமது தரப்பில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக வெளியாகவில்லை .

இந்த தாக்குதல்களில் யார் பலியானார்கள் என்பது தொடர்பாக, லெபனான் கிஸ் புல்லா போர்ப்படைகள் இதுவரை எதனையம் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு செய்துள்ளது.

யூத படைகளின் முக்கிய இராணுவ இலக்குகள் கேந்திர நிலையங்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர்

இவ்வாறு ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர் யாகா சாரீ தெரிவித்துள்ளார்.

யூத படைகளின் மிக முக்கியமான விமானத்தளங்கள் மற்றும் இரு இ ராணுவ நிலைகளை இலக்கு வைத்து தட்ரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள்

இதனால் மிகப்பெரும் இழப்பினை இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள் சந்தித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அப்பாவி காசா மக்களை படுகொலை செய்யும் எதிரி படைகளை இலக்கு வைத்து தமது நெருப்பு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் அறிவித்துள்ளார்.

பதிலுக்கு பதிலடி தாக்குதலை எமன் ஹவுதி அன்சார் அல்லா போர் படை இராணுவம் நடத்தி கொண்டுள்ளது

நான்கு இஸ்ரேல் படைகள் பலி
Posted in உலக செய்திகள்

நான்கு இஸ்ரேல் படைகள் பலி

நான்கு இஸ்ரேல் படைகள் பலி

நான்கு இஸ்ரேல் படைகள் பலி யாகி உள்ளதாக இஸ்திரேலிய அரச இராணுவ அறிவித்துள்ளது. Four Israeli soldiers killed

ஹமாஸ் போர்படை வீரர் Four Israeli soldiers killed

பாலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் போர்படை வீரர்களுக்கும் இஸ்திரேலிய படைகளுக்கு இடையில் நடந்த

சண்டையில் 4 இஸ்திரேலியா படை இடைநிலை தளபதியின் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.

இவர்கள் 401 ஆர்மட் 52வது பட்டாலியனை படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை அழித்து இனப்படுகொலை Genocide by destroying the habitats of the Palestinian people

பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை அழித்து இனப்படுகொலை வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த படைகளை இலக்கு வைத்து திடீர் சுற்றி வளைப்பு தாக்குதலை கமாஸ் போர்படை வீரர்கள் நடத்தினர்.

இதன் பொழுதே இஸ்ரேலிய இராணுவத்தின் அதிகாரிகள் தரத்திலான நான்கு சிப்பாய்கள் பலியாகி உள்ளார்கள்.

இந்த சிப்பாய்கள் நீண்ட நெடுங்கால யுத்தத்தில் ஈடுபட்டு அனுபவம் கொண்டவர்கள் எனவும் அவ்வாறான மிக முக்கியமான தளபதிகளே பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா | ஆட வைக்கும் பாடல்

இங்கிலாந்து பெண்ணா யாழ்பாணம் கண்ணா |ஆட வைக்கும் பாடல் |லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது SONGS

பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே
பத்து திங்கள் வயிற்றில் சுமந்து கஸ்ரங்களை பார்த்தவளே

லண்டனில் பிறந்த 14 வயது சிறுவன் கம்பியூட்டர் ஜீ எழுதிய மூன்றாவது பாடலாக

இங்கிலாந்து பொண்ணா என்ற பாடல் இன்று வெளியீடு செய்ய படுகிறது .

மதுரக்குரலோன் – பாவேந்தன் குரலில் ,இளங்கோ செல்லப்பா இசையில் ,

கம்புயூட்டர் ஜீ வரிகளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடக வெளியீடு செய்ய பட்டுள்ளது .

CLICK HERE VIDEO

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம்

மஹிந்தா வீட்டை விட்டு வெளியேற்றம் ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீட்டிலிருந்து தற்போது வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகை Privilege given to former presidents

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளில் பல ரத்து செய்யும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதிகள் அரசினால் வழங்கப்பட்ட அரச வீடுகள் மற்றும் ஆடம்பர பங்களாக்கள் அனுபவிக்க முடியாத சட்ட மூலம் கொண்டுவரப்படுகிறது .

அத்துடன் அதற்கான பாதுகாப்பு மற்றும் ஏனைய சலுகைகளும் நீக்கப்படுகிறது.

வேறு எதுவுமே அவர்கள் பெற்றுக்கொள்ள முடியாதவாறு புதிய சட்டமூலத்தை அரசு மேற்கொண்டு வருகிறது .

இதனால் முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவித்து வந்த சலுகைகள் பல நிறுத்தப்படுகின்றன .

ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மஹிந்த

இதனால் ஆடம்பரமாக வாழ்ந்து வந்த மஹிந்த அரச வீட்டில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ வெளியேறி தற்போது தமது சொந்த வீட்டில் குடிகொள்ள சென்று கொண்டிருக்கிறார் .

இந்த நிலவரம் என்பது மிகப் பெரும் இடரை ஏற்படுத்தி உள்ளதான தகவல் வெளியாகியுள்ளது

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்
Posted in இலங்கை செய்திகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள்

உயிர் குடிக்கும் இலங்கை பேருந்துகள் நிலவரத்தால் பயணிகள் பெரும் அச்ச நிலையில் உறைந்துள்ளனர். Sri Lankan buses are life-giving

பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து Public passenger transport bus

இலங்கையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற பொது பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகள் மக்கள் உயிர் குடிக்கும் எமனாக மாறியிருக்கிறது .

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வரும் பேருந்து விபத்துக்களினால் மக்கள் பலியாகி வருகின்றார்கள் .

தொடரும் இந்த பேருந்து விபத்துக்கள் ஏன் இடம்பெறுகிறது இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது தொடர்பாக இதுவரை இலங்கை காவல்துறை எதனையும் தெரிவிக்க மறுத்து வருகிறது .

தொடரும் பேருந்து விபத்துக்கள் Bus accidents continue

இடைவிடாது தொடரும் பேருந்து விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது? அதற்கான அடிப்படை காரணம் என்ன.

என்பதை கூட ஆராய்ந்து விளக்க முடியாத நிலையில் இலங்கை காவல்துறை சிக்கி இருக்கிறது.

பயணிகளை ஏற்றியபடி வேகமாக பயணிக்கும் தனியார் பேருந்து அரச பேருந்துகள் என்பன போட்டி போட்டு வீதியில் ஓட்ட போட்டி நடத்துகிறது .

இதன் காரணமாக அப்பாவி பொதுமக்கள் அவர்கள் வியாபார போட்டியில் சிக்கி பலியாகி வருவதாகவே தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அரச நிர்வாகமும் அதன் இயக்கமும் தான் காரணமென மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றார்கள்.

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா

ஐக்கியநாடுகள் மனித உரிமையில் இலங்கை சிக்குமா ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சீக்குமா என்கின்ற விடயம் இன்று தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது . Will Sri Lanka be caught in the United Nations human rights trap?

மனித உரிமை பேரவையின் அறுபதாவது கூட்டம் இந்துஇன்று பெறுகிறது .

இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட தமிழின படுகொலை The genocide of Tamils ​​by the racist Sri Lankan government

இதில் இறுதி யுத்தத்தில் இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட தமிழின படுகொலைக்கு எதிரான இனப்படுகொலை விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நாயகன் இலங்கைக்கு எதிரான பல்வேறுபட்ட நெருக்கடியான கருத்துக்களை வெளியிட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கை Military and government action

இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கை தொடர்பாகவும் அவர்கள் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்கள் தொடர்பாகவும் இங்கு பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் அது மகிந்த குடும்பத்திற்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் .

இலங்கை ராணுவத்தினருக்கு மிகப்பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

அதனால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நாயகன் அவர்கள் இலங்கை தொடர்பாக என்ன பேச போகிறார்கள் என்பதான பதற்றத்தில் உறைந்துள்ளது .

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தி
Posted in விசேட செய்திகள்

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தி

அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய உலங்குவானூர்தி , அமெரிக்காவில் விழுந்து நெருங்கிய உலங்குவானூர்தி யில் பயணித்த அனைவரும் பலியாகி உள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன. Helicopter crashes in America

உலங்குவானூர்தி திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு Helicopter suffers sudden mechanical failure

அமெரிக்காவின் டி ஆர் லேக் விமானத்தளத்தில் தரையிறங்க முற்பட்ட உலங்குவானூர்தி திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கி உள்ளது .

இந்த விமான விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட நிறுவனம் ஒன்றுக்கு மேல் விழுந்து நொறுங்கிய பொழுதும் அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இயந்திர கோளாறு காரணமாகத்தான் இந்த உலங்குவானூர்தி வீழ்ந்து நொறுங்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .

இது பயணிகளை ஏற்றி இறக்கும் நடவடிக்கை ஈடுபட்டுள்ள உலங்கு வானூர்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்துக்கள் Airplane accidents

அமெரிக்காவில் இது தொடராக இடம்பெற்று வரும் இவ்வாறான விமான விபத்துக்கள் பல்வேறுப்பட்ட சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இவை திட்டமிடப்பட்ட ஒன்றா அல்லது திட்டமிடப்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சதி செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
Posted in விசேட செய்திகள்

747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல்

747 விமானங்கள் சுட்டு வீழ்த்தல் ரஷ்யா உக்கிரனுக்குள் ஆள ஊடுருவி 810 தற்கொலை தாக்குதல் விமானங்கள் தாக்குதலை நடத்தின.747 planes shot down

ஏவுகணைகள் தாக்குதல் Missile attack

அவற்றில் 747 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் 13 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தப்பட்டது அதில் நான்கு

ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்கிரன் படைகள் தெரிவித்துள்ளன .

உக்கிரேன் 54 டிரோன்கள் ரஷ்யாவை நோக்கி பறந்து சென்று தாக்குதல் நடத்திய து .

இதன் பொழுது அவற்றை தாங்கள் முற்று முழுதாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது .

உக்கிரனின் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் Ukraine’s infrastructure suffers severe damage

கடந்த 24 மணித்தியாலத்தில் உக்கிரனின் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கீ பகுதியின் அரச கட்டிடங்கள் மீது இந்த ஏவுகணைகள் விமானங்கள் விழுந்து வெடித்ததில் கட்டடங்கள் எரிந்த நிலையில் காணப்படுகின்றன .

அவ்விதமான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யா நடத்திய இந்த திடீர் அதிரடி அதிபக தாக்குதலின் ஊடாக உக்கிரைன் இராணுவத்தினருக்கும் மக்களுக்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன் , ஹவுதி போர்படைகள் தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது . Yemen attacks Israel on Ramon airbase

ஏமன் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மந்திரிகளை இஸ்ரேல் விமான வழி தாக்குதல் ஊடாக படுகொலை செய்தது.

இஸ்ரேலின் மிக முக்கியமான சர்வதேச விமான நிறுவனம் Israel’s most important international airline

அதை எடுத்து இஸ்ரேலின் மிக முக்கியமான சர்வதேச விமான நிறுவனமாக விளங்கும் ராமுன் விமானத்தளத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன .

இவர்கள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

தமது நாட்டின் பிரதமர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர்படை Yemeni Houthi Ansar Allah Force

இஸ்ரேலுடைய இந்த விமான தளம் மீது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர்படைகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

போர்படைகளின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன விழுந்து வெடித்திருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது .

எனினும் இந்த விமான தளத்தில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு எதனையும் தெரிவிக்கவில்லை.

துருக்கியில் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலக்கத்தால் ஏற்பட்ட முழுமையான செயற்கை விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை . . Earthquake in Turkey

இன்று ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அதிர்வு நாலு தசம் ஆறு புள்ளியாக பதிவாகியுள்ளது .

முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை Full damage details not known

கட்டடங்கள் பல அதிர்வு ஏற்பட்டதாகவும் , இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்களை துருக்கி அரசு உடனடியாக தெரிவிக்கவில்லை .

நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சொத்துகளுக்கு சேதம் Damage to property

இங்கு சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் மக்கள் பலியாக இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது .

எனினும் இந்த செய்தி இங்கே பதியப்படுகின்ற நேரம் வரை துருக்கியில் ஏற்பட்ட முழுமையான செய்த விவரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மூன்று நிலாக்கத்தில் சிக்கி 20200க்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள் .

அதேபோன்று துருக்கியில் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலக்கத்தில் 14000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாளர்கள் .

இவ்வாறான நிலையில் மீளவும் துருக்கியை நிலடுக்கும் தாக்கியுள்ளது ,பெரும் அச்சத்தை அங்கு வாழ்கிற மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in விசேட செய்திகள்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்

பிரான்ஸ் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் ,ஆளும் அதிபர் மைக்ரோனுக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளார்கள். People protest against the French president

பதவி விலக்குமாறு கோரி போராட்டம் Protest demanding resignation

உடனடியாக பதவி விலக்குமாறு கோரி இந்த போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டுள்ளார்கள் .

தேர்தல் வருகிற பொழுது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் கோசம் எழுப்புகின்றனர் .

மக்களுக்கு ஒதுக்கப்படுகிற நிதிகள் வரிகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக எல்லாம் மக்கள் தமது எதிரான கருத்துக்களை வைத்துள்ளார்கள் .

எனவே இவர் நாட்டு மக்களை ஆட்சி செய்வதற்கு உரியவர் அல்ல எனவும் இவர் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி மக்கள் தன்னார்வ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

பிரான்ஸ் அதிபர் மைக்கிரோன் French President Macron

இந்த போராட்டம் தொடர்ந்தால் வேறு வழி இன்றி பிரான்ஸ் அதிபர் மைக்கிரோன் அவர் தனது பதவியை விட்டு விலகிச் செல்ல நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறே அதிபர் மைக்கிரோன் பதவி விலகினால் மீளவும் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா உக்கிரன் இடையில் மூளும் யுத்தம் மிகப்பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் மக்களது வாழ்வாதாரம் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

அதை எடுத்து இஸ்ரேலுக்கும் ஈரானுக்கு இடையிலான யுத்தமும் இந்த நிலைகளை நெருக்கடியாக மாற்றி இருக்கிறது.

அதனால் ஐரோப்பிய அரசுகள் பல நெருக்கடிகளை மக்கள் மத்தியில் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
Posted in உலக செய்திகள்

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது ,லண்டனில் 800 பலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன .800 Palestinians arrested in London

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டம் Protest in support of the Palestinian people

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இந்த யுத்தத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது .

800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு 14 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய அந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பும் இந்த பிரித்தானிய மண்ணில் தடை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது Arrest under the Terrorism Act

இவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கப்பெறும் என தெரிவிக்க படுகிறது .

இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இராணுவ விமான தளங்களின் தாக்கி இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதாகும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 1500க்கு மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் செய்ததால் இந்த கட்சி பயங்கரவாத தடை சட்டத்த்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது .

மனிதாபிமானிகள் நீதி சட்டம் பேசுகிற உலகம் இந்த கைது சரியா என்ற கேள்விக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது .