முல்லைத்தீவு நடுக்காட்டில் மாவீரர் அனுஷ்டிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நடுக்காட்டில் மாவீரர் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவு நடுக்காட்டில் மாவீரர் அனுஷ்டிப்பு

CLICK HERE VIDEO

முல்லைத்தீவில் சிறுவன் உட்பட இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி முல்லைத்தீவில் 10 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதி

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை

இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள் முல்லைத்தீவில் இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களை கவலையில் மூழ்கவைத்துள்ளது.

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணி

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்

மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

மாஞ்சோலை வைத்தியசாலை

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை
Posted in வன்னி மைந்தன் உதவி

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை


ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை ,கந்தசாமி தவநாயகி அம்மாவின் மூன்றாம் 3ம் மாத (மாசியம்) நினைவு நாள் நினைவை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுளமுனை பகுதியில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் .

20 க்கு மேற்பட்ட மக்களுக்கு இந்த அன்னதானம் வழங்கி வைக்க பட்டுள்ளது , 31-03-2025 ஆகிய இன்று 7500 ரூபாய்கள் வழங்கி வைக்க பட்டது .அந்த நிதி பங்களிப்பின் ஊடாகவே இந்த அன்னதானம் வழங்க பட்டுள்ளது .

தானத்தில் சிறந்தது அன்னதானம் ,அதை வழங்கிய கவுரி அக்கா ஜேர்மன் உங்களுக்கு வன்னி மைந்தன் தளமும் எதிரி இணையம் மற்றும் ,வன்னிமைந்தன் YOUTUBE தளம் ஆகியன நன்றிகளை தெரிவித்து கொள்கின்றன .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இந்த அன்னதான நிகழ்வை நடத்தி வைத்த அக்காவிற்கு எமது நன்றிகள் .


முல்லைதீவினு மாவட்டத்தின் முதலாவது ஆரம்ப நிகழ்வு இதுவாகும் |vanni mainthan TikTok.

மேலதிக தொடர்புகளுக்கு 0044 7536707793

ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை
ஏழை மக்கள் பசி போக்கிய ஜேர்மன் கவுரி அக்கா |முல்லைத்தீவு குமுளமுனை

click here full video

முல்லைத்தீவு பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு

முல்லைத்தீவு பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று சட்டவிரோதமாக தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (09) மாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக வாகனத்தில் தேக்கு மரகுற்றிகளை கடத்துவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் செஞ்சோலை பகுதியில் வைத்து தேக்கு மரக்குற்றிகளை கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனத்தினையும் , பட்டா ரக வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

13 தேக்கு மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாளையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவு - புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்

முல்லைத்தீவு – புதுமாத்தளன் கடற்கரையில் அசம்பாவிதம்

முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் உறவினர்களுடன் புதுமாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று (28) நீராடச் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு 10 ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார்.

கடற்படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவடைந்துள்ளது. முத்தையன்கட்டுக்குளம், மதவாளர்சிங்கம்குளம், முறிப்புக்குளம் என்பன நந்திக் கடலில் கலந்ததன் காரணமாக வற்றாப்பளையின் வடக்கு வெளி,

அம்மன் கோவில் வெளி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற்பயிர்ச் செய்கை பெரும் அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நந்திக் கடலினை முழுமையாக நிரம்ப விடாமல் நேரத்துடன் பெருங்கடலுடன் கலக்கும் பகுதியில் வெட்டி விடுவதன் மூலம் வற்றாப்பளை பகுதியில்

விவசாயத்தினை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கும் நிலையில் அவ்வாறு நேரத்துடன் நந்திக் கடல் வெள்ளத்தினை வேகமாக பெருங்கடலுடன் கலக்க வைக்க முடியாது.

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

ஏனெனில் நந்திக் கடலின் கடல் உணவுப் பெருக்கம் பாதிக்கப்படும் என கடற்றொழிலாளர்களும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் இதற்கான நிரந்தர தீர்வாக வட்டுவாகல் பாலத்தில் இருந்து வட்டுவாகல் பக்கமாக

குறைந்தது 600 மீற்றர் துரமாவது நந்திக் கடலில் காணப்படுகின்ற சேற்றினை அகற்ற வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.

வீடியோ

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள்

வெள்ளத்தில் மூழ்கிய முல்லைத்தீவு வீடுகள் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு
மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலையை எட்டியுள்ளன.

நேற்று பகல் திடீரென வந்த வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம். பண்டாரவன்னி உள்ளிட்ட கிராம் மக்களின் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க்கும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

இதேபோன்று குளங்களுக்கான நீர் வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலைமையில் பல்வேறு குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்கொண்டுள்ளன

வீடியோ

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (04) காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில்

நீளுகின்ற வகையில் சில இடங்களில் குறித்த மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

இதன் போது மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக்

கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதுடன் பல பொது அமைப்புகளும் இணைந்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும்,

இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு

அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும்

தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்,அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நிகழ் நிலை காப்பு சட்டத்தின்

ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

அப்பிள், அமேசான், கூகுள், மொட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition கடுமையான எதிர்ப்பை

வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்குமாறும்,ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இவற்றை விரட்டியடுத்து

விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நிகழ் நிலையில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும்,அரசாங்கத்தின்

பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும் என்றும்,இது

சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ன

அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன

முல்லைத்தீவு மனித புதைகுழி 13 உடலங்கள் இனங்காணப்பட்டன

முதல் நாள் அகழ்வில் 13 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஆண், பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வு பணி இடம்பெறவுள்ள நிலையில் அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் வருகின்ற வியாழக்கிழமை இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் குளம் காட்டு பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் குளம் காட்டு பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .

மாடு மேய்க்க சென்ற ஒருவர் துணியால் சுற்ற பட்டு கிடந்த, சிசு சடலம் ஒன்றை கண்டு காவல்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து ,உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சிசு சடலம் மீட்க பட்டுள்ளது .

கள்ள தொடர்பு கிரணமாக பிறந்த சிசுவை, இங்கு பெற்று போட்டு தாய் தப்பித்து ஓடி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .

இந்த சிசுவின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் ,காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

No posts found.
முல்லைத்தீவு இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்

முல்லைத்தீவு இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்

கார்த்திகை நாயகரை வணங்கிட தயாராகும் தமிழர் தேசம் .

தமிழ் மக்களின் விடுதலைக்கு போராடி அவர் தம் கன்வுகளை சுமந்து வீழ்ந்தஹ் வீர புதல்வர்கள் நினைவு நாள் .

Posted in இலங்கை செய்திகள்

முல்லைதீவில் ரவுடி குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு

முல்லைதீவில் ரவுடி குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு

இலங்கை ,முல்லைத்தீவு – முள்ளியவளை தெற்குப் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.

இதன்போது வாள்வெட்டுக்கு இலக்கான முள்ளியவளை தெற்கைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32 வயதுடைய பெருமாள் சதீஸ்வரன் என்பவர்

படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு நடைபெற்ற போதும் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கிராமத்தவர்கள்

தெரியப்படுத்தியும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைதரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

கும்பஸ்தரின் சடலம், மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார்
விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Posted in இலங்கை செய்திகள்

    முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

    முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

    முல்லைதீவு பகுதியில் பல நாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளம் வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

    இந்த இளம் வயது திருடனினால் 15 சைக்கிள்கள் திருட பட்டுள்ளன .மிக லாவகமாக வந்து சைக்கிள் திருடி செல்லும் இவரது திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியில் பதிவாகிய நிலையில் குறித்த இளம் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுளளார்.

    முல்லைத்தீவில் பரவலாக சைக்கிள்கள் திருட்டு சம்பவம் இடம்பெற்று வந்தது .இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் பொலிசார் மிக லாவகமாக அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

    முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
    முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

    திருட பட்ட சைக்கிள் அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை முல்லைதீவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதால் சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.


    அதனால் சைக்கிள் திருட்டில் பல திருடர்கள் தொடராக ஈடுபட்டு அதிக விலைக்கு சைக்கிள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

      இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

      இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயன்ற 91 பேர் இலங்கை கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் ,

      இவர் யாவரும் புத்தளம் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மீன் பிடி படகு ஒன்றை சோதனை செய்தபொழுதே மேற்படி நபர்கள் சிக்கினார்

      ஐரோப்பிய நாடுகளுக்கு நுழையும் முகமாக கடல் வழியாக பல லட்சம் ரூபாய்களை செலுத்தி ஆபத்தான கடல் வழியூடாக பயணிக்க முனைந்தவர்களே இவ்வாறு சிக்கினார்

      இவர்கள் அனைவரும் இலங்கை சிலாபம் ,மாரவில,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,திருகோணமலை ஆகிய பகுத்தியை சேர்ந்தவர்களாகும் ,இந்த படகில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 91 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

      வெளிநாடுகளுக்கு சென்றால் அதிக பணம் உழைக்கலாம் என ஆசை வார்த்தையை கேட்டு பல லட்சம் பணத்தை செலவு செய்து பயணிக்கும் இவர்கள், வெளி நாடுகளில் எவ்விதம் சூழல் உள்ளது அங்கு சென்றால் போரின் பின்னரான காலப்பகுதிகியில் எமக்கு விசா கிடைக்குமா என்பது தொடர்பில் ஆராய்வதில்லை

      ஆனாலும் இலங்கையை விட்டு தப்பி சென்றால் நாங்கள் செல்வந்தராகிவிடலாம் என எண்ணுகின்ற சிந்தனை பிழைகளின் செயல்பாடுகள் ஒன்றாக இது உள்ளது

      ஆபத்தான கடல் வாழி பயணங்கள் மனித உயிரை கூட மாய்க்கும் நிலையில் உள்ளது ,உணவு குடிநீர் இன்றி கடலில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் ,

      இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற 91 பேர் கைது

      இவ்வாறு இலங்கையை விட்டு தப்பி கடலில் பயணித்த பல நூறு இலங்கையர்கள் கடலில் காணாமல் போன நிலையில் உள்ளமை கவனிக்க தக்கது

      இலங்கையை விட்டு தப்பியோட முயன்ற அனைவரும் கடற்படையால் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த நீதிமன்றில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்

      இலங்கையை விட்டு தப்பியோட பல நூறு மக்கள் தற்கால சூழலில் தயாராகி
      வருகினற்னர் ,

      அவ்விதம் இலங்கையை விட்டு தப்பிக்க முனையும் பல மக்கள் இந்தியாவுக்கு
      உயிர் பாதுகாப்பு தஞ்சம் தேடி செல்கின்றனர்

      ஆனால் இவர்கள் அது தாண்டி உயிரோடு விளையாடி பெரும் கடல்களில் சிறு படகில் பயணிக்க முயல்வது மிக பெரும் ஆபத்தான ஒன்றாகும் என்பது இங்கே சுட்டி கட்ட தக்கது.

      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

      12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

      12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

      முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்

      இவர் தமது வீட்டை விட்டு காதலனுடன் தப்பி போக முன்னர் ,அங்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்

      காதலனுடன் ஓட்டம்
      அதில் என்னை தேட வேண்டாம் நான் வீடு வரமாட்டேன் என அதில் குறிப்பிட்ட பட்டிருந்தது
      அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கடிதத்துடன் காவல்துறை நிலையம் சென்று முறையிட்டுள்ளார்
      அப்போது சிறுமியான மகள் தந்தையின் பணம் ,மற்றும் கைபேசி என்பனவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்துள்ளது

      சிறுமி கண்டு பிடிப்பு
      போலீசார் சிறுமியின் கைபேசியில் தொடர்பு கொண்டு
      வினவிய பொழுது அவர் கட்டனில் உள்ளது கண்டு
      பிடிக்க பட்டுள்ளது ,சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில் காதலன் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

      காதல் புரிந்த அலங்கோலம்

      அறியா பருவத்தில் புரியா வந்த காதல் மோகத்தினால் தனது எதிர்கால வாழ்வினை குழி தோண்டி புதைத்துள்ளளார் இந்த சிறுமி ,பெற்றவர்களை மறந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை திருடி கொண்டு காதலனுடன் ஓடிய மகளின் செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

      12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்

      பட்டினி கிடந்தது பகலிரவாய் பிள்ளைகளுக்கு என உழைத்த தந்தை , தயார் இவருடன் கூடி பிறந்தவர்கள் வாழ்வில் மண்ணை தூவி இன பால் கவர்ச்சியில் சிக்கி சீரழிந்து போகும் இந்த சிறிசுகளை என்னவென்று சொல்ல

      பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்

      குறித்த காதலனுடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் ,அவரது இனிப்பான பேச்சும் அந்தரங்க உரையாடல்களும் இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது

      பிள்ளைகள் விரும்பும் கைபேசியை அவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்கி குடும்ப மானத்தை ரோட்டில் விற்றுள்ளனர் ,

      இந்த விடயங்கள் அனைத்திற்கும் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் , பாசமுமே காரணம் ,அதனை புரியாது பிள்ளைகள் பெற்றவர்களை ஏமாற்றியதாக கருதி தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் இழி செயல்களே இவையாகும்

      இளைய சமுதாயமே கொஞ்சம் சிந்தியுங்கள் ,அழகான வாழ்வை அறியா பருவத்தில் தொலைத்து விடாதீர்கள் ,வாழ்க்கை வாழ்வதற்கே ,இடையில் கண்ணீரில் அலைவதற்க்கு அல்ல ,ஒன்றை செய்திட முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் .

      12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் எங்கே செல்கிறது எமது தேசம் ..?

      • வன்னி மைந்தன் –