Posted in Uncategorized

சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா

சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா

இலங்கை சர்வாதிகாரியும் ,தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டா பாயாவின்

செயலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்ற வண்ணம் உள்ளனர்

சில மணி நேரங்களில் அந்த செயலகம் முற்றுகையிட படும்

இவ்வாறு தொடராக மக்கள் கொதித்து போராட்டம் நடத்தி வரும் நிலையிலும்


எவ்வித சலனமும் இன்றி பதவி விலகிட கோட்டா மறுத்து வருகிறார்

    Posted in Uncategorized

    நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?

    நாளை நம்பிக்கையில்லா பிரேரணை – ஆட்டம் காணுமா கோட்டா அரசு ..?

    இலங்கையில் தம்மை சிங்கள மக்களின் வாக்குகளை பெற்று தனிப்பெரும்பான்மை

    பலத்துடன் ஆட்சியில் அமர்ந்து ஏப்பம் இட்டு வந்த கோட்டா அரசு மீது நாளை

    நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படுகிறது

    இதன் மூலம் ஆளும் கோட்டா ஆட்சி கவிழ்க்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது ,சஜித்

    கட்சியினரால் முன்னெடுக்க படும் இந்த விடயம் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும்

    பேசப்பட்டு ஒன்று பட்டு செயல்பட
    முடிவுகள் எட்ட பட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை

      வங்கி வட்டி வீதம் அதிகரிப்பு – மக்களை குஷிப்படுத்த நடவடிக்கை

      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது வங்கியில்

      பணம் நீண்ட நாள்கணக்கில் வைப்பு புரிந்தால் அதற்கு 13,50 வீதம் வட்டி வழங்க படுகிறது

      அதே போல அரசு வழங்கும் வட்டிக்கு வீதம் 14.50 ஆக அதிகரித்துள்ளது ,இதன்


      மூலம் வீழ்ந்த பொருளாதாரத்தை நிலை நிமிர்த்த அரசு முயன்று வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு

        நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு

        இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நாடளாவிய ரீதியில் பலத்த எதிர்ப்பு போராட்டங்களை தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர்

        கோட்டாவே வீட்டுக்கு போ என்ற வாசகங்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது

        எனினும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா அதிகாரத்தை விட்டு செல்ல மறுத்து வருகிறார்

        சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் காலி ,கொழும்பு,அம்பன்தோட்டை என விரிந்து

        கொழும்பின் பல பகுதிகளும் இந்த போராட்டம் முன்னெடுத்து செல்ல படுகிறது

        மக்களின் தொடர் போராட்டங்கள் அதிகாரித்து செல்லும் நிலையில் பலத்த நெருக்கடியில் ஆளும் அரசு சிக்கியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

          பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்

          பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்

          இலங்கை தலவாக்கலை பகுதியில் தனிமையில் வசித்து வந்த 84 வயது மூதாட்டி

          கழுத்தை நெரித்து கொன்று அவரது காதணியை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்


          இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

          தனிமையில் உள்ளதை அறிந்த திருடர்கள் அவரது வீட்டுக்கு சென்று இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்

          குறித்த கொலையினை புரிந்த திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

            Posted in Uncategorized

            புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது

            புலிகளுக்கு ஏவுகணைகள் விற்ற நபர்கள் அமெரிக்காவில் கைது

            இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு

            ஏவுகணைகள்,ரொக்கட்,இயந்திர துப்பாக்கி , automatic weapons, rockets, machine guns and surface-to-air missiles ஆயுதங்கள் என்பனவற்றை

            விற்பனை புரிந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஆயுத முகவர் ஒருவர் உள்ளிட்ட

            மூவரை அமெரிக்கா உளவுத்துறையினர் கைது செய்துள்ளனர்

            இவர்கள் மியன்மாரில் உள்ள கிளர்ச்சி படைகளிற்கும் ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

            அமெரிக்கா குடியுரிமை பெற்ற இவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு

            விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

            Posted in இலங்கை செய்திகள்

            இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள்

            இருவர் குத்திக் கொலை – எகிறும் படுகொலைகள்

            இலங்கை செவனகலை ,மற்றும் கதிர்காம பகுதியில் இருவர் குத்தி


            கொலை செய்ய பட்டுள்ளனர்

            இருவேறு சம்பவங்களும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறை அடுத்தே

            இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு

              இலங்கையில் அமெரிக்கா டொலர் ஒன்றின் விலை 321.49 ஆக அதிகரிப்பு

              இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ற்போது

              நாட்டில் ஒரு அமெரிக்கா டாலரின் விற்பனை விலை 321.49 ஆக அதிகரித்துள்ளது

              மேலும் இது ஐநூறு ரூபாவை எட்டி பிடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை

                நிதி அமைச்சராக சாணக்கியன் வருகிறார் – தொங்கும் பதாகை

                இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கமாக விளங்கும் சாணக்கியன் இலங்கையின்


                புதிய நிதி அமைச்சராக பதவி ஏற்கிறார் என கல்லடி பாலத்தின் அருகே பதாகை ஒன்று தொங்குகிறது

                  Posted in Uncategorized

                  கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச

                  கள்ளருடன் சேர நான் தயாரில்லை – சஜித் பிரேமதாச

                  இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்கள் தீர்வு காண முடியவில்லை எனின்

                  எம்மிடம் பொறுப்பை தாருங்கள் இல்லா விடின் வீட்டுக்கு செல்லுங்கள்

                  கள்வர்களுடன் இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தாம் தயார் இல்லை என சஜித் தெரிவித்துள்ளார் ,


                  பாராளுமன்றில் இது தொடர்பாக காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றுள்ளன

                    Posted in Uncategorized

                    யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்

                    யாழில் வட்டிக்கு பணம் கொடுத்த பெண்ணை அடித்து புதைத்த கடன் காரர்கள்

                    யாழ்ப்பாணம் மணியன்தோட்டம் 11ஆம் குறுக்கு தெருவில் பெண் ஒருவரிடம்

                    கடனை பெற்றுக்கொண்ட நபர்கள்


                    அதனை மீள செலுத்திட குறித்த பெண்ணின் வீட்டுக்குசென்றுள்ளனர்

                    ,அப்போது அங்கு எழுந்த வாய் தகராறை அடுத்து குறித்த பெண் அடித்து

                    கொலை செய்ய பட்டு அவரது வீட்டின் பின்புறத்த்தில் புதைக்க பட்டுளளார்

                    குறித்த பெண்ணை காணவில்லை என போலீசாரிடம் மேற்கொள்ள பட்ட

                    முறைப்பாட்டை அடுத்து , இந்த கொலை குற்றத்தில் தொடர்புடைய கணவன் ,மனைவி உட்பட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்

                    விசரணையின் முடிவில் மேலதிக விடயங்கள் தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்

                      மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்

                      மகிந்தா அலுவகம் தற்போது போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டு

                      ,உடனே பதவி விலகும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது கோசம் எழுப்பி வருகின்றனர்

                      எங்களை வாழ விடுங்கள் சுடு காட்டுக்கு அனுப்பாதீர்கள் என்ற கோசமும் அங்கே முழங்க படுகிறது

                      அழகான இலங்கையை சுரண்டி கொள்ளையடித்து ஏப்பம் விட்ட மகிந்தா

                      குடும்பத்தினால் இன்று இலங்கை இந்த சீரழிவை சந்தித்துள்ளது என்பது மக்கள் பேச்சாக உள்ளது

                      மக்கள் போராட்டங்களுக்கு தலை வணங்கி பதவி திறப்பதை ஆளும் இனவாத கொலைகாரர்கள் மறுத்து வருகின்றதால் ,


                      மக்கள் ஆத்திரம் உற்ற நிலையில், இந்த போர் உக்கிரம் பெற்றுள்ளது

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்

                        இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்

                        இலங்கையில் எரிபொருள் காரணமாக மின்சார பாவனை தடை பட்டுள்ளது


                        இதன் காரணாமாக முக்கிய சில வங்கிகள் திறப்பு குறைக்க பட்டுள்ளது

                        மின்சார பாவனையை காரணம் காண்பித்து குறித்த வங்கிகள் பயன்பாட்டு

                        நேரத்தை குறித்துள்ளது மக்கள் மத்தியில் அசத்தை ஏற்படுத்தியுளளது

                        தனியார் வங்கிகள் நஷ்டம் என தெரிவித்து மூடி விடும் நிலை ஏற்படலாம்

                        என்பதால் மக்கள் வங்கிகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்

                          பிரபாகரன் இவர்களை கொன்றே இயக்கத்தை வளர்த்தாராம்

                          இந்த போராட்டங்கள் உண்மையானவை, ஆனால், அந்தப்

                          போராட்டங்களுக்குப் பின்பாக யாரும் இல்லையென நினைக்கவேண்டாம்.

                          சில சக்திகள் இருக்கின்றன என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

                          ஜே.வி.பியின் புரட்சியில் முதலில் கொல்லப்பட்டவர்கள், நந்தசேன ஆவார்.

                          ஜே.வி.பியின் முக்கியஸ்தரான அவர், அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொல்லப்பட்டார்.

                          இந்நிலையில், பிரபாகரன் பலமடைந்து கொண்டு வந்தபோது,

                          அமிர்தலிங்கத்தை கொன்றார். தங்களுடைய அணிக்குள் வளர்ந்துவருவோரே முதலில் கொல்லப்பட்டனர்.

                          பிள்ளைகள் வெளியேறினர் கோபம், அம்மாமார்கள் வீதிக்கு இறங்கினர் கோபம்,
                          அதனை ஆயுத போராட்டமாக மாற்றிவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

                            இலங்கை பயணம் செய்யும் பயணிகளுக்கான தமது பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.

                            இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும் சிவில் போராட்டங்கள் மற்றும் வன்முறைச் செயல்கள்

                            குறித்து முழுமையாக அறிந்து கொள்ளுமாறும், முடிந்தவரை அவ்வாறான இடங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

                            COVID-19 , எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு காரணமாக

                            இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு தமது

                            பிரஜைகளுக்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை

                              கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை

                              இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும்

                              நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே மகிந்தா ,கோட்டா பதவி விலக வேண்டும் என


                              பவுத்த பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

                              பதவி விலக மறுத்து மகிந்த கோட்டா அடம் பிடித்து வரும் நிலையில்


                              வரும் நாட்களில் மக்களின் போராட்டம் அதிகமாக இடம் பெறுமென


                              ஏதிர்பார்க்க படுவதுடன் ,மகிந்த குடும்பத்தினர் வீடுகள் சுற்றிவளைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா

                                இலங்கைக்கு பெட்ரோல் ,டீசல் வழங்கி அதிரடி காட்டிய இந்தியா

                                இந்திய கடந்த 24 மணித்தியாலத்தில் 2,70,000 மர்டிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோலை
                                வழங்கியுள்ளது

                                சீனாவுடன் ஒட்டி உறவாடி இந்தியாவை பகைத்து கொண்டு ஆணவத்தில்

                                ஆடிய இலங்கை தற்போது இந்தியாவுக்கு நல்ல பிள்ளையாக தன்னை காட்டி கொள்கிறது

                                முதுகில் குத்திய கோட்டா ,மகிந்த அரசுகளை மீளவும் மோடி அரசு

                                நம்புகின்றமை கோமாளித்தனம் என்பது குறிப்பிட தக்கது

                                  Posted in உளவு செய்திகள்

                                  புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                                  புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                                  இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது

                                  அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது

                                  புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்


                                  இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது

                                  சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்

                                  இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது

                                  அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது

                                  அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க

                                  குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்

                                  புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்


                                  அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,

                                  அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,

                                  இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்

                                  இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்

                                  புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது

                                  போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது

                                  காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .


                                  இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !

                                  எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .

                                  • வன்னி மைந்தன் –
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

                                  கோட்டாபாயா எங்களை கொலை செய்யலாம் – பீதியில் எம்பிக்கள்

                                  இலங்கையில் கோட்டபாயவுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்


                                  அந்த போராட்டங்களுக்கு மூளையாக செயல் பட்டவர்களை கொலை செய்யும்

                                  திட்டத்தில் கோட்டபாய உள்ளதாக ஜேவிபியின் பிரமுகர் அனுராச திசாநாயக்க தெரிவித்துள்ளார்

                                  தமது பாதுகாப்பை தனக்கே உறுதி செய்வதாகவும் ,நிகழ்வு இடத்திற்கு

                                  செல்லும் முன்னரும் பின்னரும் நமது சகாக்கள் தமக்கு பாதுகாப்பு பணியில்

                                  ஈடுபடுகின்றனர் என அவர் தெரிவித்தார்

                                  கோட்டாபாயவின் மறுமுகம் எமக்கு நன்கு தெரியும் என அவர் கூறியுள்ள

                                  விடயம் சர்வதே தேச அளவில்
                                  கவனத்தை ஈர்த்துள்ளது .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

                                    லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

                                    இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாபாயாவுக்கு எதிராக


                                    இன்று -06-04-2022 மதியம் 12 மணியளவில் லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன பேரணி இடம்பெற்றது

                                    இலங்கையில் மக்கள் படும் அவலம் ,மற்றும் பொருளாதார நெருக்கடி ,பட்டினி ,மற்றும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கோஷமிட பட்டன

                                    இங்கு கலந்து கொண்ட மக்களை சிங்கள உளவுத்துறையினர் மறைந்திருந்து காணொளி மற்றும் படங்கள் பிடித்துள்ளனர்

                                    எனினும் அதனை மீறி மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்தனர் ,இலங்கையில் தொடர்ந்து ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் இணைந்து

                                    போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளதும் ,இவர்கள புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு வழங்க படவேண்டும் எனவும் மக்கள் கோரி வருகின்றனர்

                                    தமிழர்களை அழித்த அதே மே மாதம், மற்றும் அந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது உயிர் நீத்த இதே சித்திரையில் அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக

                                    சிங்கள மக்கள்
                                    உள்ளிட்டவர்கள் எதிராக பொங்கி எழுந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது