Tag: ராஜபக்ஸ
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்துவ பண்டார தெரிவித்துள்ளார்.
வவுனியாவிற்கு நேற்று (13) விஜயம் செய்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு மிகவும் மோசமாக சீரழிந்த நிலையில் உள்ளது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளையும், இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளையும் சாப்பிடும் வங்குரோத்து நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலையில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளில் மாணவர்கள் மரணிக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயத்தை மையமாக கொண்டு வாழ்கிறார்கள்.
ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார்
நோயுற்ற நிலையில் வைத்தியசாலை செல்லும் போது அங்கு மருந்துகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் பலர் மரணிக்கும் நிலை உள்ளது. சுகாதார அமைச்சராக இருந்த ஒருவர் ஊழல் மோசடி செய்து சிறையில் உள்ளார்.
போசாக்கு இன்றி குழந்தைகள் மோசமான நிலையில் காணப்படுகின்றனர். இந்தநிலைக்கு தற்போதைய அரசாங்கமும் பதில் சொல்ல வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களும் ஏனையவர்களும் எமது குழந்தைகள் தொடர்பில் சிந்திக்காது தமது அரசியல் குறித்து சிந்திக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தேர்தல்கள் வர இருக்கின்றது. மொட்டு சின்னமோ அல்லது ரணிலோ வந்தால் தற்போதைய நிலை தான் நீடிக்கும். ஐக்கிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். கடந்த கடந்த காலத்தில் மக்கள் வீதிக்கு இறங்கி மகிந்த ராஜபக்ஸ, கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினர். ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தையே வாழ வைத்துள்ளார் என தெரிவித்தார்.
ராஜபக்ஸ குடும்பத்திற்கு தயாராகும் சிறை – அரங்கேறும் தலைக்கீழ் சம்பவங்கள்
ராஜபக்ஸ குடும்பத்திற்கு தயாராகும் சிறை – அரங்கேறும் தலைக்கீழ் சம்பவங்கள்
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி ராஜபக்ஸ குடும்பம் தனி சிங்கள மக்கள் வாக்குகளை பெற்று அரியணையில் எறியது ,அந்த திமிரோடு தனது மிதவாத போக்கில் செயல் பட்டது ,
எதிர்வரும் ஐம்பது ஆண்டுகள் தாமே இலங்கையில் ஆட்சியில் அமர்வோம் என்ற மாயையில் செயல் பட்டனர்
அதற்க்கு சீனா ஆள குழிவெட்டி அதற்குள் தள்ளி விட்டது ,பவுத்த பீடம் ,பவுத்த மதம்
என்ற தோரணையில் மொட்டை தலைகளின் முடியில் தொங்கியபடி , கூடி மகிழ்ந்த மகிந்தா ஆளும் அரசுகளுக்கு இன்று பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது
உலகை தனது குடையின் கீழ் கொண்டுவந்து ,தனது சர்வாதிகாரத்தை காண்பித்து
தானே உலகின் முதல் வல்லரசாக திகழ சீனா திட்டம் போட்டு காட்சிதமாக காய்களை நகர்த்தி வருகிறது
2050 ஆண்டு சீனாவே உலகின் வல்லரசாக திகழும் என தெரிவிக்க படும் நிலையில் அதற்கான முழு வீச்சில் சீனா செயல் பட்டு வருகிறது .
இப்போது நாடுகளின் ஆட்சி கவிழ்ப்பிற்கு பணத்தை வீசி கவிழ்த்து வருகிறது
இவ்விதம் ,பாகிஸ்தான் ,நையீரியா,இலங்கை என இதன் செயல் பாடுகள் விரிந்து செல்கிறது
இப்போது கம்போடியா,வியட்நாமும் இதில் சிக்கியுள்ளன
விரைவில் அங்கும் இந்த ஆட்சி கவிழ்ப்புக்கள் அரங்கேற போகிறது ,மேலும் இவர்கள் அடித்த மெகா கொள்ளை சம்பவங்கள் தொடராக அவிழ்த்து விட படவுள்ளன
அவ்விதம் இவர்கள் கொள்ளைகள் தொடராக வெளிவரும் பொழுது மேலும் இலங்கை
மக்கள் கொதித்து எழுந்து இவர்களுக்கு எதிராக விளக்குமாறுடன் , இவர்களை துரத்தும் நாள் விரைவில் எழும் என்பது உள்ளக கசிவுகளாக உள்ளன
அவ்விதம் நோக்கின் நாட்டை விட்டு வெளியேற முடியாத படி நீதிம்னற கட்டளை பிறப்பிக்க பட்டு ,இவர்கள் லஞ்ச ஊழல் மோசடிகள் விசாரணைக்கு உள்ளாக்க பட்டு,
மகிந்தா குடும்ப ஆட்சி மீள் இலங்கையில்
காலூன்றா வண்ணம் அமர போகும் ஆட்சிகள் ஏற்படுத்தும் என அடித்து கூறலாம்
இப்பொது புலிகளும் இல்லை,அவர்களை அழித்த மகிந்த குடும்பமும் இல்லை என்கின்ற வரலாற்று சரிதம் மீள எழுத பட போகிறது
இது வரும் ஆட்சியாளர்களுக்கு ஒரு பாடமாகவும் ,தமிழர்களை எப்பொழுதும் பகைத்து
கொள்ள முடியா நிலையில் முதிர்ச்சியான அரசியல் நிலையோடு செல்ல வேண்டிய வரலாற்று கற்றலை புகட்டியுள்ளது ,
வரும் காலம் இலங்கையில் தலைகீழ் மாற்றங்கள் அரங்கேற போகிறது ,காத்திருந்து பார்ப்போம் அந்த காட்சிகளின் அகோரத்தை.
- வன்னி மைந்தன்-







