Posted in இலங்கை செய்திகள்

ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்

யாழ்ப்பாணம் ; ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆண் சடலம் தொடரும் மர்ம கொலைகள்

இலங்கை யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடலில் ஆனா ஒருவர் சடலமாக மீட்க மீட்க பட்டுள்ளார் .


கடலுக்கு சென்றவர்கள் சடலமாக மீட்க பட்டுள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குருநகர் பகுதியை சேர்ந்த ஐம்பத்தி எழுவயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்க ப்பட்டுள்ளார் .

ஊர்காவல்துறை கடல் பகுதியில் மிதந்த இவரது சடலத்தை கண்ணுற்ற சக மீனவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை அடுத்தகு சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.


இலங்கையில்நாள் தோறும் நீர் ஏரிகளில் இருந்து மிதந்த சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .

தொடரும் இந்த மர்மம் மரணங்கள் ,கொலைகள் பின்னல் உள்ளது யார் என்பது இதுவரை கண்டு பிடிக்கவில்லை.

இலங்கையை உலுப்பி வரும் நீர் நிலைகளில் மிதக்கும் மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.


ஜே ஆர் ஜேவர்தன காலப்பகுதியில் இடம்பெற்ற இதே போன்ற கொலைகள் ஆளும் கோட்டபாய ஆட்சியில் தொடர்கிறது.

இவரது மர்ம மரணத்தின் பின்னர் நடந்துள்ள சம்பவம் என்ன என்பதை யார் கண்டு பிடிப்பது .

இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கையாக தவறி வீழ்ந்து மரணித்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

நீரில் மூழ்கி மூச்சு திணறிஇறந்தார் என்றே மருத்துவ அறிக்கைகள் வழங்க பட்டு இவ்வாறான மரணங்களுக்கு முற்று புள்ளி வைக்க பட்டு விடுகிறது.

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடலில் மிதந்த ஆணின் மரணத்தின் பின்னால் உள்ளது என்ன ..?
மக்கள் அவரது குடும்பம் எழுப்பும் இந்த கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்குமா ..?

தொடரும் இந்த மர்ம கொலைகள் மறுநாள் என்று நிறுத்த படும் ..?

    Posted in இலங்கை செய்திகள்

    முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

    முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

    முல்லைதீவு பகுதியில் பல நாட்களாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த இளம் வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

    இந்த இளம் வயது திருடனினால் 15 சைக்கிள்கள் திருட பட்டுள்ளன .மிக லாவகமாக வந்து சைக்கிள் திருடி செல்லும் இவரது திருட்டு சம்பவ காட்சிகள் காணொளியில் பதிவாகிய நிலையில் குறித்த இளம் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுளளார்.

    முல்லைத்தீவில் பரவலாக சைக்கிள்கள் திருட்டு சம்பவம் இடம்பெற்று வந்தது .இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில் பொலிசார் மிக லாவகமாக அந்த திருடனை மடக்கி பிடித்தனர்.

    முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
    முல்லைதீவில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்

    திருட பட்ட சைக்கிள் அதன் உரிமையாளர்களிடம் வழங்கும் நடவடிக்கையை முல்லைதீவு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இலங்கையில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்து காணப்படுவதால் சைக்கிள் விலை அதிகரித்துள்ளது.


    அதனால் சைக்கிள் திருட்டில் பல திருடர்கள் தொடராக ஈடுபட்டு அதிக விலைக்கு சைக்கிள் விற்று வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .

      Posted in இலங்கை செய்திகள்

      தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது

      தங்கம் திருடிய திருடர்கள் 177 பவுன் நகையுடன் கைது

      இலங்கை ; கண்டி கட்டன் பகுதியில் உள்ள நகை அடைவு பிடிக்கும் கடையொன்றுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த 177பவுன் தங்க நகைகளை திருடி தப்பி சென்றனர் .

      இந்த தங்க நகை திருட்டில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட மூன்று ஆண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

      இந்த தங்க நகை திருட்டு தொடர்பாக ஆறு மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணைகளின் பின்னர் தங்கம் திருடிய நபர்கள் அதே திருடிய தங்கத்துடன் சிக்கியுள்ளனர் .

      இந்த நகை திருடிய திருடர்கள் நால்வரும் திருடிய நகைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

      ஆறுமாதங்கள் கழித்து திருடர்கள் திருடிய நகைகளுடன் சிக்கியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்

        தீயில் எரிந்த பெண் திருகோணமலையில் சம்பவம்

        திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ) இடம்பெற்றுள்ளது.

        வீட்டின் சுவாமி அறையில் காலையில் விளக்கேற்றி விட்டு வீசிய தீ குச்சியின் தீ மூலமாக, சேமித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் கொள்கலனில் தீ ஏற்பட்டதனாலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது .

        தீ பிடித்து உயிரிழந்தவரின் உடல் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

        பதுக்கிய பெற்றோலில் தீயில் எரிந்து இறந்த பெண் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

        பைஷல் இஸ்மாயில்

        Posted in இலங்கை செய்திகள்

        அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற 54 பேர் கைது

        அவுஸ்ரேலியாவுக்கு படகில் செல்ல முயன்ற 54 பேரை கைது செய்த கடற்படை

        இலங்கை ; அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக செல்ல முயன்ற 54 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

        கைதானவர்கள் பொலீஸ் விசாரணைக்கு உபடுத்த பட்டு நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை படுத்தப்படவுள்ளனர் .

        அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து கடல்வழியாக பயணிப்பவர்கள் கிரிஷ்மஸ் தீவில் சிறை வைக்க பட்டு இலங்கைக்கு மீள அவுஸ்ரேலியாவால் நாடுகடத்த பட்டு வருகின்றனர் .

        அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 35 பேர் கைது

        இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

        அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது

        அவ்விதமான நாடு கடத்தல் செயல்பாடுகள் தொடராக இடப்பெற்ற வண்ணம் இருக்க ,இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு மக்கள் அகதிகளாக சென்றவண்ணம் உள்ளனர்.

        இலங்கை கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்லும் படகுகள் எரிக்க படும் என இலங்கை அரசு எச்சரித்துள்ள போதும் இந்த அகதிகள் பயணம் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

        தமது நாட்டுக்குள் இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவதை தடுக்க அவுஸ்ரேலியா அரசு இலங்கைக்கு கண்காணிப்பு படகுகளை இலவசமாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு

          தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கிய நிலையில் தம்பதிகள் மீட்பு

          இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற வயதான தம்பதிகள் கடற்கரையில் மயங்கிக் கிடந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .

          இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரையிலும் 85-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தமிழகம் தனுஷ்கோடி வழியாக சென்றுள்ளனர்.

          இந்த நிலையில் திருகோணமலை பகுதியில் இருந்து படகு மூலம் வயதான தம்பதிகள் 2 பேர் இன்று (27) அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்து இறங்கினர்.

          இவர்கள் இருவரும் மயக்கமுற்ற நிலையில் கடற்கரையில் சுருண்டு விழுந்து கிடந்தனர்.

          கடற்கரையில் 2 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்கள்

          தம்பதிகள் சடலமாக மீட்பு

          இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மயக்க நிலையில் இருந்த அவர்களை மீட்டு அம்பியூலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

          இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

            பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

            மட்டக்களப்பு ; மட்டக்களப்பு, சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிவேம்பு பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகிலுள்ள பதுக்கி வைக்க பட்ட எண்ணெய்கள் மீட்க பட்டுள்ளன .

            பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த கட்டிடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டனர் .

            இந்த எண்ணெய் திருட்டு பதுக்களில் சம்பந்த பட்ட ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

            பதுக்கி வைக்கப்பட்ட எண்ணெய் மீட்பு

            குறித்த எண்ணெய் பதுக்கல் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவிற்கு அமைய நடத்த பட்ட விசேட சோதனையில் இந்த பெரும் எண்ணெய் பதுக்கல் முறியடிக்க பட்டுள்ளது .

            கடலில் எரியும் எண்ணெய் கப்பல்

            இந்த சோதனையின் போது பெரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 550 லீற்றர் டீசல், 258 லீற்றர் மண்ணெணையை மீட்டதுடன் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளார் ,

              Posted in இலங்கை செய்திகள்

              எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து

              எரிபொருள் வாங்க காத்திருந்தவர்கள் மீது பேரூந்து மோதி விபத்து

              மட்டக்களப்பு ; மட்டக்களப்பு ஊரணி பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வாங்கிட கடத்திருந்த மக்கள் மீது பேரூந்து ஒன்று மோதியுள்ளது.


              பேரூந்து சாரதியின் காட்டு பாட்டை இழந்த பேரூந்து மக்கள் மீது மோதி விப்பதுக்குள்ளானது .

              இந்த பேரூந்து விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .,

              இவ்வாறான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

              பொதுநலவாய உச்சிமாநாட்டில் சிறிலங்கா ! இராணுவ நீக்கத்தை கோரிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

              பொதுநலவாய நாடுகள் சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு காரணங்களில் முதன்மையாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து கவனம் செலுத்த

              வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

              பொதுநலவாய நாடுகளின் 24வது உச்சி மாநாடு ஆபிரிக்காவின் றுவண்டாவில் யூன் 24ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது. பிரித்தானிய இளவரசர் தலைமையில்

              தொடங்கியுள்ள இந்த உச்சி மாநாட்டில் 54 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ள நிலையில், சிறிலங்காவின் அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டுள்ளார்.

              பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியினை சந்தித்து வருகின்ற நிலையில், அதற்கு

              முக்கிய காரணியாக இருக்கின்ற இராணுவச் செலவினங்கள் குறித்து பொதுநலவாய நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நா.

              தமிழீழ அரசாங்கம், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினை விலக்குவத்தற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளது.

              6 சிவிலியன்களுக்கு 1 இராணுவம் என தமிழர் தாயகத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதோடு, தமிழர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் நா. தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

              2022 ஆண்டுக்கான நிதியொதிக்கீட்டில் 12.3 வீதத்தினை தனது இராணுவச் செலவினங்களுக்கு ஒதுக்கியுள்ள சிறிலங்கா, மக்கள் எரிபொருளுக்காகவும், உணவுக்காகவும் வரிசையில் மணிக் கணக்கில் காத்திருக்கும் நிலையிலும்,

              இராணுவத்துக்கான செலவினங்கள் எந்தவகையிலும் குறைக்கப்படாது என்ற சிறிலங்கா அதிபர் கோத்தபாய இராஜபக்சவின் சமீபத்திய கூற்றினையும் நா.தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

              பொதுநலவாய நாடுகளில் அதிக இராணுவச் செலவினங்கள் கொண்டுள்ள
              நாடாக சிறிலங்கா இருக்கின்றது என்பது இங்கு குறிப்பிடதக்கது.

                Posted in இலங்கை செய்திகள்

                யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை

                யாழில் பெண் கற்பழித்து வெட்டி கொலை

                யாழ்ப்பாணம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் , தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய பெண்மணி கற்பழிக்க பட்டு பின்னர் கழுத்து வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார் .

                மருத்துவர்கள் மேற்கொண்ட மரண விசாரணை சோதனையில் மூதாட்டி கோரமாக கற்பழித்து பின்னர் கழுத்து வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.

                குறித்த பெண்ணை கற்பழித்து கொலை செய்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் .


                கற்பழிப்பு குற்றம் புரிந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

                  ஆயிரம் லீற்றர் டீசல் காவல்துறையால் மீட்பு

                  கொட்டகலை, கொமர்ஷல் பகுதியிலுள்ள மொத்த வியாபார நிலையமொன்றில் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

                  ஐந்து பெரல்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த டீசலே திம்புள்ள – பத்தனை பொலிஸாரால் இன்று (26) பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

                  குறித்த வர்த்தக நிலையத்தில் டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திம்புள்ள – பத்தன பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றில் அடிப்படையில், சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

                  இதன்போது ஆயிரம் லீற்றர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட நடவடிக்கைக்காக அவர் நாளை (27) அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

                  ” நாங்கள் மொத்த வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். போக்குவரத்து சேவைக்கு எமக்கு டீசல் தேவை. அதற்காகவே சேமித்து வைக்கப்பட்டது.” என கைதானவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

                  இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                    Posted in இலங்கை செய்திகள்

                    சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு

                    சாப்பாட்டு விலைகள் அதிகரிப்பு

                    இலங்கையில் சாப்பாட்டு விலைகள் அதிகரிக்க படவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .


                    தொடர்ந்து இலங்கையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து

                    செல்வதால் மக்கள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்

                    மக்கள் வருமானம் இன்றி வாடும் நிலையில் உணவு பொருட்கள் விலை

                    மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை


                    அதிகரிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                      Posted in இலங்கை செய்திகள்

                      செல்வந்தர் சுட்டு கொலை

                      செல்வந்தர் சுட்டு கொலை

                      இலங்கை – எம்பிலிப்பிட்டிய மீத்தேனிய பகுதியில் மலர்சாலை உரிமையாளர் ஒருவர் தனது கடையினை திறக்க சென்ற பொழுது மறைந்திருந்த மர்ம ஆயுத தாரி நபரால் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

                      ஐம்பத்தி இரண்டு வயதான நபரே இவ்வாறு சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

                      இலங்கையில் சமீப காலங்களாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதும் இவ்வாறான கொலைகள் தொடர்கிறது .

                      இந்த துப்பாக்கி சுட்டு கொலைகளை நிறுத்த அரசு இவ்வாறு எவ்வித நகர்வுகள்
                      மேகொள்ளாது இருப்பது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

                        எரிபொருள் விலை 60 ரூபாவால் அதிகரிப்பு


                        இலங்கையில் உடனடி அமுலுக்கு வரும் நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்க பட்டுள்ளது.


                        இதன் அடிப்படையில் பெட்ரோல் 50 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 470 ரூபாவாகவும்


                        டீசல் ஓரி லீட்டர் 60 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 460 ஆகவும்


                        ஓக்கேடான ஒரு லீற்றர் 100 ரூபாவினால் அதிகரிக்க பட்டு 550 ரூபாவான் விலை அதிகரிக்க பட்டுள்ளது.

                        கோட்டாபய ராஜபக்சவின் இந்த விலை அதிகரிப்பு செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

                          இரானுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ஏழு பீரங்கி துப்பாக்கிகள் கையளிப்பு

                          இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு, ஏழு 25 பவுண்டர் பீரங்கி துப்பாக்கிகளை புதுப்பித்து,

                          பனாகொடவில் உள்ள இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவினருக்கு சம்பிரதாய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக சமீபத்தில் கையளித்தது.

                          மின் மற்றும் இயந்திரப் பொறியியலாளர்கள் (SLEME) படைப்பிரிவு துருப்புக்கள் அந்த பீரங்கிகளை புதுப்பித்ததன் மூலம் இராணுவத்திற்கு பாரியளவு நிதியை மீதப்படுத்த முடிந்துள்ளது என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

                          இந்நிகழ்வில் இலங்கை பீரங்கி (SLA) படைப்பிரிவின் கட்டளைத் தளபதியும் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க,
                          உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகளும் படையினரும் கலந்துகொண்டனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

                            அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

                            இலங்கை ;அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

                            மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு
                            அவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

                            இவ்வாறு இலங்கை வந்தடைந்த அமெரிக்கா அக்குழுவினர் பதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ஜனாதிபதி கோட்டபாயவுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் .

                            இதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கு உதவும் திட்டங்களும் முன் வைக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

                              Posted in உலக செய்திகள்

                              உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

                              உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

                              உக்கிரேன் – ரசியா இராணுவம் உக்கிரேன் மீது தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .ரசியாவின் தாக்குதலில் உக்கிரேன் உள் கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது. இவ்வேளை உக்கிரேனுக்கு 6 பில்லியன் கடனுதவி வழங்க பட்டுள்ளது.

                              அவசர நிதி உதவியாக ஆறு பில்லியன் யூரோக்கள் கடனாக வழங்க பட்டுள்ளது .

                              இந்த கடனுதவி மிக குறுகிய காலத்தின் தேவைக்கு ஏற்ப குறைந்த வட்டியுடன் வழங்க பட்டுள்ளது என உதவி புரிந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

                              உக்கிரேன் அருகில் உள்ள ஜெர்மன் நாடானது ஒரு பில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது .

                              இலங்கை பாகிஸ்தானுக்கு சீனா எப்படி பெரும் தொகையில் பணத்தை கடனுதவி வழங்கி அந்த நாடுகளை வறுமை நாட்டு பட்டியல் இணைத்ததோ, அதே போன்ற செயல் பாடு உக்கிரேனில் இடம்பெறுகிறது.

                              பணத்தை அவசரமாக அள்ளி வழங்கும் நாடுகளுக்கு இந்த கடனுதவி பணம் மீள வளங்கபடுமா என்பதை சிந்திக்க வேண்டும் .

                              இவ்வாறு மாற்றி யோயுங்கள் -உக்கிரேன் முழுவதுமாக ரசியாவின் கட்டு பாட்டில் சென்றால் ஆயுதங்களை ,பணத்திற்காக கடனுதவி வழங்கிய நாடுகளுக்கு அந்த பணம் யார் கொடுப்பது..?

                              உக்கிரேன் நாடானது ராசியாவின் ஆளுகைக்குள் சென்று விடும் .அப்படி சென்றால் இந்த ஐரோப்பா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஏன் உக்கிரேனின் இத்தனை மில்லியன் பணத்தை கடனுதவியாக கொடுக்கின்றன.

                              புரிந்துள்ளதா மக்களே தமது நாட்டை காப்பாற்ற அவசர கடனுதவி என்ற போர்வையில் வெள்ளம் வரும் முன் அணையை கட்டுவது போன்ற செயல் பாட்டு சமாச்சாரம் இங்கே கச்சிதமாக நடக்கிறது.

                              உக்கிரேன் இலங்கை போல நாறுமா – 6 பில்லியன் கடனுதவி

                              உக்கிரேன் போரில் தமது ஆயுதங்கள் மூலமே உக்கிரேன் நாடு உயிர் வாழ்கிறது என்கின்ற நிலையில்,

                              இந்த நாடுகள் இத்தனை பில்லியன் பணத்தை கடனடிப்படையில் வழங்குகின்றன என்றால் அதற்க்கு காரணம் இது தான் மக்களே .

                              ரசியா இதுவரை சோவியத் தயாரிப்பு ஏவுகணைகளையே அதிகமாக பயன் படுத்தி வருகிறது .

                              அப்படி நோக்கின் தனது பழைய சேமிப்புக்களை இப்பொழுது உக்கிரேன் களத்தில் வீசி முடிக்கிறதா என்ற கேள்வி அல்லாவா எழுகிறது.

                              உக்கிரேனில் ரசியாவை ஆழம் பார்க்க முனைந்த அமெரிக்கா பிரிட்டன் நேட்டோ நாடுகளுக்கு ரசியா விளையாடடு காட்டிய வண்ணம் நாளை கடத்துகிறது.

                              இந்த நாள் கடத்தல் எது வரை என்பது தான் கேள்வியாகிறது .அப்படி என்றால் ரசியா ஜனாதிபதி புட்டீன் திடீர் பாய்ச்சல் ஒன்றை வேறு திசையில் வேறுமாதிரி நடத்த திட்டம் போட்டு விட்டார் என்பதை இது காண்பிக்கிறது.

                              அப்படி என்றால் விரைவில் வேட்டை நடக்க போகிறது .அந்த வேட்டையில் முண்டு கொடுத்து நகரும் நாடுகளின் முதுகில் ஏறி ஆடும் உக்கிரேன் வீழ்ந்து

                              சிதறும் நிலையே உருவாக போகிறது என்பது களத்தில் இருந்து வெளியாகும் செய்திகள் வாயிலாக ஊகிக்க முடிகிறது.

                              உள்ளே நடக்கிறது பெரும் விளையாட்டு .தாம் தப்பிக்க பலியாகும் உக்கிரேன் .நமது ஊகம் சரி தானா என்பதை காத்திருந்து பார்க்கலாம் .

                              • வன்னி மைந்தன் –
                                Posted in இலங்கை செய்திகள்

                                கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                                கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                                கொமுகொமுவ : இலங்கை கொமுகொமுவ பகுதியில் கிணறு ஒன்றுக்குள் இருந் சிறுவன் சடலம் மீட்க பட்டுள்ளது .

                                வீட்டில் காணாமல் போன சிறுவனை தேடிய பொழுது கிணற்றுக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்க பட்டுள்ளான் .

                                பதினொரு வயதாகும் இந்த சிறுவன் எவ்வாறு இறந்தான் என்பது தொடர்பில் தெரியவில்லை .

                                கிணற்றில் இருந்து சிறுவன் சடலம் மீட்பு

                                சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நீதவான்முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து சடலம் மீட்க பட்டு விசாரணைகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளன .

                                இந்த சிறுவன் தவறி வீழ்ந்தானா அல்லது கொலை செய்யப்பட்டானா என்பது தொடர்பில் போலீசார் விசாரணைங்களை ஆரம்பித்துள்ளனர்.

                                சமீப காலங்களாக நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் தொடராக மீட்க பட்டு வருகின்றமை சுட்டி காட்ட தக்கது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

                                  தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

                                  திருச்சி ;தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் 30 தமிழர்கள் மாத்திரை உட்க்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                                  இந்த முகாமில் தடுத்து வைக்க பட்டுள்ள 21 அகதிகள் தம்மை விடுதலை செய்யக்கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

                                  இவ்வாறான நிலையில் திருச்சி மத்திய சிறையில் முப்பது பேரும் மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள மேற்கொண்ட செயல் உலக தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                                  பாதிக்க பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதுடன் தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

                                  ஈழ தமிழ் அகதிகள் இந்த கூட்டு தற்கொலை முயற்சி என்பது ஆளும் தமிழக முதல்வருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

                                  இந்த உண்ணாவிரதிகள் கோரிக்கை ஏற்க பட்டு இருந்தால் இந்த அபயா முடிவுக்கு அவர்கள் சென்று இருக்க மாட்டார்கள் என்பது மக்கள் கருத்தாக உள்ளது

                                  தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

                                  தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைந்துசெயல் பட்டு இந்த மக்களை விடுதலை செய்வதன் ஊடாகவே அவர் மீது விழுந்துள்ள கலங்கத்தை போக்கிட முடியும் என்பது அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது .

                                  ஈழத்தில் இருந்து அகதிகளாக சென்ற ஈழ தமிழ் மக்கள் இந்தியாவில் இவ்வாறு கூட்டு தற்கொலை செய்துகொள்ள ஒருபோதும் முனைந்ததில்லை

                                  தமிழக முகாமில் 30 பேர் தற்கொலை முயற்சி

                                  தமிழக முகாமில் ஈழ தமிழர் தற்கொலை முயற்சி

                                  உளவியல் ரீதியில் ஏற்பட்ட தாக்கம் அதன் எழுந்த மனவிரக்தி நிலையில் இந்த உயிர் மாய்க்கும் நிலைக்கு அவர்கள் சென்றுள்ளனர் .

                                  ஒருவன் தனது உயிரை மாய்த்து கொள்ளும் நிலைக்கு செல்கிறான் எனின் அவர் மன நிலை எவ்வாறு பாதிக்க பட்டு இருக்கும் என்பதை மக்கள் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் .

                                  திருச்சி மத்திய சிறையில் நடந்துள்ள இந்த தற்கொலை முயற்சி தமிழக வரலாற்றில் எழுத பட்ட கறைபடிந்த வரலாறாக மாற்றம் பெற்றுள்ளது .

                                  இந்த தற்கொலை முயற்சி பின்னர் எனினும் இவர்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் விடுவிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

                                    இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

                                    கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக 200 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது .


                                    தற்போது கையிருப்பில் உள்ள மருந்து பாவனை அதிகரிதத்தினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது .

                                    மேலும் இரண்டு அல்லது மூன்று மதங்களில் 160 ,மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது .

                                    இவ்வாறு தொடர்ந்து மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் இலங்கையில் மக்க அதிகம் பலியாகும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது.

                                    மக்கள் பலிகளை தடுத்து நிறுத்திட ஆளும் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விரைந்து செயல் பட வேண்டும் என கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .

                                    இலங்கையில் 200 மருந்து தட்டுப்பாடு

                                    இலங்கையில் மக்களின் உயிர்களை காப்பற்றி வரும் மருந்து இறக்குமதி தடை பட்டால் இலங்கையில் மக்கள் போராட்டங்கள் அதிகம் வெடித்து பறக்கும்நிலை ஏற்பட போகிறது .

                                    இது இலங்கை நாட்டில் என்றும் இல்லாத அளவுக்கு பெரும் போராக வெடிப்பதுடன் இந்த போராட்டங்களில் சிக்கி பலநூறு மக்கள் பலியாகும் நிலையம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                                    இலங்கை நாட்டில் ல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் ஒருபுறம் ,மறுபுறம் உயிர் காக்கும் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு என தொடரும் அவலம் .

                                    இறந்த பிணங்களை எரித்திட எரிபொருள் இன்றி மக்கள் தவிக்கும் பரிதாபம் என தொடரும் துயர்களை துடைத்திட ஆளும் ஜனாதிபதி கோட்டாபய

                                    ராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகினால் மட்டுமே இந்த நிலைக்கு முடிவு காணலாம் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது .

                                    எரிபொருளுக்கு காத்திருந்து இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் மக்கள் தொழில் துறைகள் பாதிக்க பட்டுள்ளன .

                                    அவ்விதமான தொடர்ச்சியாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால் மருத்துவமனைகள் அடித்து பூட்டும் நிலை ஏற்படுவதுடன் தனியார் மருத்துவமனைகள் அதிக இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்று விடும் .

                                    இந்த பேராபத்தில் இருந்து மக்களையும் இலங்கை நாட்டையும் ஆளும் ஜனாதிபதி கோட்டபாய அரசு எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதே மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .