Tag: அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு ,அமைச்சு உல்லாச பயணிகள் வருகை திடீர் அதிகரிப்பு சம்பவம் இம்மாதம் இடம்பெற்றுள்ளதாக உல்லாச துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளில் இந்த மாதம் வருகை தந்தவர்கள் கடந்த 13 நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் கடந்த 13 நாட்களில் இலங்கைக்குள் வருகை தந்தவர்கள் 59,75 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதால் அந்நிய செலாவணி அதிகரிப்பு மற்றும் இலங்கை உடைய பல்வேறுபட்ட நகரங்கள் அதனுடைய பார்வைக்கு செல்கிறது.
அதன் அடிப்படையில் இலங்கைக்கு இம்மாதம் வருகை தந்தவர்களில் அதிகமானவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த 18,812 பேர் அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் உல்லாச பயணிகளாக இந்தியர்கள் மற்றும் சீனா நாட்டக்காரர்கள் அதிகமாக வருகை தந்து செல்வது பல்வேறுப்பட்ட விடயங்களில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இலங்கை சீனா வாசமான நிலையில் இந்தியர்களுக்கும் சீனத்தர்களுக்கும் இலங்கைக்குள் அதிகமாக உல்லாச பயணிகளாக வருகை தந்து செல்வதே சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றது.
திட்டமிடப்பட்டு இந்தியாவினுடைய உளவு முகவர்கள் இவ்வாறு வந்து செல்கிறார்களா என்கின்ற விடயத்தை இவை காண்பிக்கிறது.
இலங்கை மூலபாய வருமானத்தில் உல்லாச பயணத்துறை முதலிடம் பிடித்துள்ள நிலையில் .உல்லாச பயணிகள் வரவில்லாமல் விட்டால் இலங்கையினுடைய பொருளாதாரம் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு
கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு
கொத்மலை விபத்து உயிரிழப்பு அதிகரிப்பு, என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொத்மலை பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்தவர்களில் 21 பேர் பலியாகி இருந்தனர் .
தற்பொழுது அதி ஆபத்தில் இருந்த, 21 வயதுடைய வாலிபரம் தற்பொழுது மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை அறிவித்துள்ளது.
அதனை அடுத்து கொத்மலை பேருந்து விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
44 பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்தும் இந்த விபத்தில் காயப்பட்டவர்கள் அதிதீவிர சிகிச்சை பெற்ற சிலருக்கு சிகிச்சை பெற்று வருவதால், அவர்களும் ஆபத்தானில் உள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நாட்களுக்குள் மூன்று பேருந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் பேருந்துகளில் பயணிப்பதற்கு தற்பொழுது மக்கள் பெரும் அச்சத்தில் நுழைந்துள்ளது இந்த விபத்துக்கள் கோடிட்டு காட்டுகின்றன.
அரசும் ,அரச அதிகாரிகள் காவல்துறையின் அலட்சியப் போக்கும், இந்த வீதி விபத்துக்களை தடுக்க மறுத்து வரும் செயல்பாடே , இந்த உயிர்ப்பலிக்கு காரணம் என மக்கள் சமூகம் குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு
பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு
பேருந்துவிபத்து உயிரிழப்பு 21ஆக அதிகரிப்பு ,கடந்து நிற்கறிகள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 21 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
இந்த விபத்தில் பலியானவர்களில், சிறுவர்கள் முதியவர்கள் உள்ளடங்களாக 21 பேர் என இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து விபத்தில் சிக்கிய பொழுது .அதில் 70 க்கு மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும் ,அதன் பொழுது இந்த 21 பயணிகள்மரணித்துள்ளதாகவும், பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக ,மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற .வீதி விபத்தில் நால்வர் பலியாகி .எட்டுக்கு மேற்பட்டவர்கள் காயப்பட்டு வருகின்றனர் .
இவ்விதம் நோக்கின் ,மாதம் ஒன்றுக்கு 120க்கு மேற்பட்டவர்கள், வீதி விபத்தில் இலங்கையில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையில் வருடம் தோறும் 36,000 விபத்துக்கள் ஏற்படுவதாகவும் ,மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாகவும் புள்ளி விவரம் கூறுகிறது .
இந்த விபத்துக்களை தடுக்க ,அரசு என்ன வழி செய்யப்போகிறது. மக்களை எவ்வாறு காப்பாற்ற போகிறது என்பதை மக்கள் கேள்வியாக உள்ளது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு ,மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் திடீர் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.63 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
கடந்த வாரமே மசகு எண்ணெயின் விலை குறைப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
விலை குறைப்பு, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக வாக்குகளை கொள்ளையடிக்கின்ற அரசியல் தந்திரபாய நடவடிக்கை சித்து விளையாட்டாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் திடீரென விலை குறைக்கப்படுவதும் ,தேர்தல் முடிவுற்றதும் அதே கதியில் விலை வானளாவிய உச்சத்தை தொடுவதும் வழக்கமாக உள்ளது.
எனவே இந்த எரிபொருள் விலை குறைப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் தொடர்பாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
ஏமாற்று அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்ற தற்கால நவீன அரசியல்வாதிகளை ஓட விரட்டி அடிக்க வேண்டும்.
அனுரா அரசின் இந்த விலை குறைப்புகளும் விலை மாற்றங்களும் தமிழ் மக்கள் முதுகில் ஏற்றப்பட போகின்ற .மிகச்சுமையின் முன்னெற்பாட்டு அறிகுறியாகவே காணப்படுகிறது.
ஆகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் யாவரும் தற்பொழுது விழித்துக் கொள்ளவேண்டும்.
எனவே, தேர்தல் காலத்தில் குறைக்கப்பட்ட விலைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு
தேநீர் சீஸ் விலைகள் அதிகரிப்பு ,பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று திங்கட்கிழமை (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால்
அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் (AICROA) ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,
பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.
இது தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீஸ், கொட்டு உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படும் என்று சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்டு வருகின்றனர்.
தற்போதுள்ள பற்றாக்குறை காரணமாக, வணிகர்கள் இரண்டு வகையான அரிசியையும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.
அரிசி விலை உயர்வை அடிப்படையாகக் கொண்டு, உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தினால், மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வார்கள் என்பதால், உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த மாட்டோம்.
அரிசி பற்றாக்குறை மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
பியர் விலை அதிகரிப்பு
பியர் விலை அதிகரிப்பு
பியர் விலை அதிகரிப்பு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, இன்று (11) முதல் மதுபானம் மற்றும் சிகரெட் மீதான கலால் வரிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேஷ சாராயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு விதிக்கப்படும் வரி 7,244 ரூபாய் ஆகும்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு, மொலேசஸ், பனை, தேங்காய் மற்றும் பதப்படுத்தப்பட்ட சாராயத்திற்கு விதிக்கப்படும் வரி 7,752 ரூபாய் ஆகும்.
இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு லீற்றர் மதுபானத்திற்கு 7,969 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 9 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரிகள் இன்று முதல் திருத்தப்பட்டுள்ளன.
இந்தப் புதிய வரித் திருத்தங்களால், 3,580 ரூபாய் ஆக இருந்த ஒரு போத்தல் அதி விசேஷ சாராயத்தின் விலை 102 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
3,850 ரூபாவாக இருந்த ஒரு போத்தல் தென்னஞ் சாராயத்தின் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 4,000 ரூபாயாக இருந்த பழைய சாராய போத்தல் ஒன்றில் விலை 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
4,250 ரூபாவாக இருந்த அதிவிசேஷ பழைய சாராய போத்தல் ஒன்றில் விலையும் 109 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், செறிவு குறைந்த பீர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாவாலும், செறிவு கூடிய பீர் போத்தல் ஒன்றின் விலை 40 ரூபாவாலும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெளிநாட்டு விஸ்கி போத்தல் ஒன்றின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு மதுபானங்களின் விலைகள் அவற்றின் செறிவை பொறுத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு
பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு
பச்சைமிளகாய் விலை அதிகரிப்பு,பச்சை மிளகாய் கிலோ 1000 ரூபாய்க்கு மேலாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை பொழிந்து வருவதால் பல அழிவுகள் ஏற்பட்டுள்ளதால் சந்தையில் பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென பச்சை மிளகாய் விலை அதிகரித்தது அடுத்து மக்கள் சொல்லு நான் துயரை சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.
காலநிலைக்கு ஏற்ப தமது பயிர்களை பயிரிட மறுப்பதே இந்த விலையேற்றத்திற்கு காரணமாக உள்ளதாக தெரிவிககப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இலங்கையில் பருவகால மழை பொழிந்து வருவதும் இவ்வாறான விலைகள் அதிகரித்துச் செல்வதையும் கருத்தில் எடுக்காது விவசாயிகள் உள்ளதை இந்த விலையேற்றத்தை காரணமாக உள்ளது.
திடீரென பச்சைமிளகாய் மிளகு அதிகரிப்பு காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் இதற்கு மாற்றீடாக ஏதாவது செய்ய வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொழிலுக்காக வௌிநாடு செல்லும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இந்த
வருடம் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 300,162 பேர் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக புலம்பெயர்ந்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தையும் தாண்டியுள்ளது இது இரண்டாவது முறையாகும்,
இதற்குமுன்னர், 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண்களும், 122,358 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்துள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில், 40.7 வீதமான பெண்களும், 60 வீதத்திற்கும் அதிகமான ஆண்களும் உள்ளடங்குவர்
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலை ரூ1 000 ஆக அதிகரிப்பு சில பகுதிகளில் ஒரு கிலோ கிராம் போஞ்சி, பச்சை மிளகாய், கறிமிளகாய் ஆகியவற்றின் சில்லறை விலை 900 முதல் 1000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் சில்லறை விலை 400 ரூபாவாகவும், முட்டையின் விலை 44 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சி 1400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
பாகற்காய் மற்றும் தும்பகரவில ஆகியவற்றின் சில்லறை விலை 600 ரூபாவாகவும், தம்பல,வெட்டக்குளு,மேக்கரல் சுண்டைக்காய், நோகோல்,
தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய், கிழங்கு ஆகியவற்றின் சில்லறை விலை 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
புடலங்காய், முள்ளங்கி, கெரட், பூசணிக்காய் ஆகியவற்றின் சில்லறை விலை 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
பொருளாதார மையத்தில் ஒரு கிலோ கிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 550 ரூபாவாக இருந்தது. ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 700 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் கறிமிளகாய் மொத்த
விற்பனை விலை 800 ரூபாவாகவும், சிவப்பு முட்டைக்கோஸ் ஒரு கிலோ கிராம் மொத்த விற்பனை விலை 550 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் உள்ளது. .
இது தவிர சில பகுதிகளில் தேங்காய் 200 ரூபாவாகவும், அதே தரம் கொண்ட தேங்காய் எண்ணெய் போத்தல் 800 ரூபாவாகவும் உயர்ந்துள்ள நிலையில், ஒரு
கிலோ கிராம் சிவப்பு வெங்காயத்தின் சில்லறை விலை 450 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு ,இந்த மாதத்தின் முதல் 20 நாள்களில் 120,961 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 26,717 ஆகும்.
அதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 17 லட்சத்து 41 ஆயிரத்து 676 ஆகும்.
இந்தநிலையில், கடந்த வருடம் இலங்கை வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 87 ஆயிரத்து 303 என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு ,இலங்கை சுற்றுலா அக்டோபர் மாதத்தில் வலுவான சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் அதிகரிப்பு
ஒக்டோபர் மாதத்தின் முதல் 15 நாட்களில் 63,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்கிறது, இது 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 1.54 மில்லியனுக்கும் மேலாக உயர்த்தியுள்ளது.
புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், நாட்டின் சுற்றுலாத் துறையின் நிலையான மீட்சியை பிரதிபலிக்கிறது; விசா செயலாக்க சிக்கல்கள், குறிப்பாக மாதத்தின் ஆரம்ப வாரங்களில் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
அக்டோபர் முதல் பாதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஒரு நாளைக்கு சராசரியாக 4,233 பார்வையாளர்கள், முதல் இரண்டு வாரங்கள் வாரத்திற்கு 35,000 சுற்றுலாப் பயணிகளைத் தாண்டுவதற்கு சிரமப்படுகின்றனர்.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை தொடர்ந்து கணிசமான எண்ணிக்கையை ஈர்க்கிறது, இந்தியா முதன்மையான மூல சந்தையாக
உள்ளது. அக்டோபர் முதல் பாதியில் 18,078 சுற்றுலாப் பயணிகளுக்கு அண்டை நாடான நிறுவனம் பங்களித்தது, அதைத் தொடர்ந்து சீனா 4,504 மற்றும் இங்கிலாந்து 4,495 பார்வையாளர்களுடன் அடுத்ததாக உள்ளது.
இலங்கையின் சுற்றுலா மீள் எழுச்சிக்கு இந்தியா ஒரு சிறந்த பங்களிப்பாளராக உள்ளது, ஆண்டுக்கு 304,634 வருகையுடன் (YTD). UK 140,959 வருகையுடன் பின்தொடர்கிறது,
மேலும் ரஷ்யா 130,701 வருடத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் பல சவால்கள் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையால்
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த தனது சுற்றுலாத் துறையை மீட்பதற்காக இலங்கை செயற்படுவதால் இந்த முக்கிய சந்தைகள் மிகவும் தேவையான ஆதரவை வழங்கியுள்ளன.
2024 இல் நாடு நிலையான வளர்ச்சியைக் கண்டாலும், தாமதமான விசா செயலாக்கம் போன்ற சவால்கள் அதிகரித்து வரும் உலகளாவிய பயணத் தேவையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான இலங்கையின் திறனைத் தடுக்கின்றன.
2024 ஆம் ஆண்டில், இலங்கை 2.3 மில்லியனை ஈர்த்து 4 பில்லியன் டாலர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு
இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு ,இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் தற்போது நாட்டினுடைய பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்பொழுது வீதிகள் பிரதான நகரங்கள் என்பவை சுற்று காவலுக்கு உள்ளாக்கப்பட்டு ,ராணுவம் போலீசார் என்பன குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து எவ்வளையும் எங்கும் எதுவும் நடக்கலாம் என்று நிலை காணப்படுகிறது .
அதனை அடுத்து தற்பொழுது தேர்தல் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்களில் சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில்,
நாட்டின் உடைய பாதுகாப்பை பலப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது.
தமக்கு பிடித்தவரை தெரிவு செய்யும் நடவடிக்கையில் வாக்காளர்கள் தயாராகி வருவதாகவும் ,
வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்களிப்ப்பு
அவ்வாறு வாக்காளர்கள் நேரடியாக வந்து வாக்களிப்பதற்கான அனைத்து நடைமுறையை மேற்கொள்ள வேண்டும் என்கின்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் உரிய முறையில் நடத்துவதற்கு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதன் ஊடாகவே தேர்தலில் சீர் குழைவு இல்லாத முறையில் நடத்த முடியும் என்பதால்,
தற்பொழுது நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு மற்றும் சுற்றி வளைப்பு தேடுதல் என முடிக்கி விடப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றனர்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு வரும் உல்லாச பயிர்களின் வருகை சமீப நாட்களாக அதிகரித்துள்ளதாக இலங்கையின் உல்லாச பயணத்துறை தெரிவித்துள்ளது .
ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் 43,000க்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாகவும் அதனால் இலங்கை உல்லாச பயணத்துறை மகிழ்ச்சியில் உறைந்துள்ளது .
பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உல்லாச பயணிகளை கவரும் கவர்ச்சிகரத் திட்டங்கள் கொழும்பு மற்றும் அதனை அறிவித்த பகுதிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதனை அடுத்து இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் வருகை தொடராக அதிகரித்து வருகிறது .
விடுமுறை காலமாக காணப்படும் முதல் தொடராக வருவதாகவும் இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது .
அதனால் உல்லாச இலங்கை பெரும் உல்லாச பயணிகளை மிக நல்ல முறையில் நட்போடும் பழகுந்த விதத்திலும் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் உயிருக்கும் ,உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற பட்சத்திலேயே மக்கள் , இலங்கை வருவதற்கான வாய்ப்புகள் திட்டம் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .
தற்பொழுது புதிய நடைமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாக உல்லாசத்துறை தெரிவித்துள்ளது .
கவர்ச்சிகர விமான திட்டங்கள் மற்றும் விசா திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நல்லெண்ண உரையாடல் என்பன இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உல்லாச துறையில் அதிகம் வருமானத்தை பெற்று வருகின்றது.
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்தால் அதுவே இலங்கைக்கு மிகப்பெரும் பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு கடந்த நான்கு நாட்களில் 21,000 மேற்பட்ட உல்லாச பயிர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்கள் அதிகளவானவர்கள் சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியாவை சேர்ந்தவர்களை அதிகமாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு வருகை தந்துள்ளவர்களில், இந்தியாவிலிருந்து 5245 பேர் அதேபோன்று பிரித்தானியாவில் இருந்து 17 41 பேரும்
,அதே போன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 1253 பேரும் அதேபோன்று ,ஜெர்மனியில் இருந்து 878 பேரும்வருகை தந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உல்லாச பயணத்துறை வருகை அதிகரிப்பு
இலங்கையின் உல்லாச பயணத்துறை வருகியிலே இலங்கையின் பொருளாதரம் தங்கியுள்ளது .
இலங்கை உல்லாச பயணிகள் வருகை இலையே தாங்கியுள்ளதையும் அவர்களது வருகை அடுத்து தான் இலங்கை உடைய பொருளாதார மேம்படும்
என்ற நிலையில் தற்போது இலங்கைக்கு உல்லாச பயிர்களை அழைத்துவரும் நடவடிக்கையில் இலங்கையின் உல்லாச துரோகிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அதற்காக பல மில்லியன் செலவிலும் விளம்பரங்களையும் செய்து வருகின்றனர் .
நாடு நாடாக உள்ள மக்களை இலங்கைக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெருகின்ற்ன .
தீடிரென அதிகரித்த வெளிநாட்டு பயணிகள் வருகை
உல்லாச பயணிகளை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் மூலம் தமது நாடுகளுக்கு செல்லும் வரை பாதுகாப்பு வழங்குவது ஊடாகவே
தமது நாட்டுக்கு நல்ல எதிர்க்கலாம் உள்ளது என்பதாகி கருத்தில் கொண்டே இந்த விடயம் முன்னெடுக்க பட்டுள்ளது .
இதன் காரணத்தினால் தற்பொழுது உள்ள சபைகளுக்கு ஆதரவாக பல்வேறுப்பட்ட விடயங்களை இலங்கை அரசு புரிந்து வருகின்றது .
அதன் அடிப்படையில் தற்போது இலங்கை வந்திருந்த 21,000 பேரினுடைய வருகை மிகப்பெரும் வெற்றிகரமான ஒன்றாக காணப்படுவதாகவும் ,அவை இலங்கை சீரான முறையில் சென்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிக பெரும் வெற்றியின் ஒன்றாக பார்க்க படுவதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

- இலங்கையில் நிதி மோசடி அதிகரிப்பு அனுரா வண்டவாளம் அம்பலம்

- அநுர நிதி அமைச்சர் தலை உருளுகிறது பதவி ராஜினாமா விரைவில்

- காசிப்புச் சோதனையின்போது காவலரைச் சுட்டுக் கொன்ற நபருக்கு 18 ஆண்டு கால விசாரணை

காசாவில் வேலையின்மை அதிகரிப்பு
காசாவில் வேலையின்மை அதிகரிப்பு
காசாவில் வேலையின்மை அதிகரிப்பு காசாவில் எட்டு மாத கால யுத்தம் பாலஸ்தீன பகுதியில் வேலையின்மை “அதிர்ச்சியூட்டும்” 79.1 சதவீதத்தை எட்டியுள்ளது என்று ஐ.நாவின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன மாநிலத்தில் சராசரி வேலையின்மை
இந்த எண்ணிக்கை பாலஸ்தீன மாநிலத்தில் சராசரி வேலையின்மையை 50.8 சதவீதமாகக் கொண்டு வருகிறது, மேற்குக் கரையிலும் வேலையின்மை 32 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கூடுதலாக, காசா பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கடந்த எட்டு மாதங்களில் “வியக்க வைக்கும்” 83.5 சதவீதமும், மேற்குக் கரையில் 22.7
சதவீதமும் சுருங்கியுள்ளது, அதாவது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 32.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இன்னும் வேலையில் இருக்கும் மேற்குக் கரைத் தொழிலாளர்களில் 51 சதவிகிதத்தினர் குறைக்கப்பட்ட வேலை நேரத்தை எதிர்கொண்டுள்ளனர், அதே நேரத்தில் 62.8 சதவிகிதத்தினர் குறைந்த ஊதியத்தை அனுபவித்துள்ளனர் என்றும் ILO கூறியது.
காசா வில் “கிட்டத்தட்ட அனைத்து தனியார் துறை நிறுவனங்களும் உற்பத்தியை முற்றிலுமாக நிறுத்திவிட்டன அல்லது கணிசமாகக்
குறைத்துவிட்டன”, பாலஸ்தீனியப் பகுதிகள் போரின் முதல் நான்கு மாதங்களில் USD $19 மில்லியனுக்கு சமமான தினசரி தனியார் துறை உற்பத்தி இழப்பை சந்தித்துள்ளன.
இறைச்சி விலைகள் அதிகரிப்பு
இறைச்சி விலைகள் அதிகரிப்பு
இறைச்சி விலைகள் அதிகரிப்பு ,மீன் பிடித்தல் குறைவதால், உள்ளூர் சந்தையில் கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது.
மீன்பிடிக்க வேண்டாம் வானிலை ஆய்வு மையம்
கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியதால் மீன் விலை உயர்ந்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், மீனவ மற்றும் கடற்படை சமூகங்கள் மறு அறிவித்தல் வரை வெளியில் செல்லவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் இறைச்சி விலை அதிகரிப்பு
இதனால், உள்ளூர் இறைச்சி விலை அதிகரித்துள்ளது. அதன்படி, நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் புதிய கோழி 1,080. ரூபாயாகும்
ஃப்ரெஷ் சிக்கன் – ரூ.1,200
கோழி (தோல் இல்லாதது) – ரூ.1,100
உறைந்த கோழி – ரூ.1,100
கறி கோழி – ரூ. 1,100
ஹபேட் – ரூ.1,400
கட் ஆஃப் – ரூ. 600
ஆட்டிறைச்சி – ரூ.3,300
மாட்டிறைச்சி – ரூ.2,500
Featured
பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு
பாடசாலை மாணவர்களின் வருகை அதிகரிப்பு பகல் உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் 100ற்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளதா
என்பது பற்றியும், உணவுத் திட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் ஆரம்பப் பாடசாலை கற்கும் மாணவர்கள் மற்றும் 100 பேருக்குக் குறைவான பாடசாலைகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு
பாராளுமன்ற வழி வகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக ரணவக்க, கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். அத்துடன், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அறிக்கை கையளிக்குமாறு அவர் குறிப்பிட்டார்.
வழிவகைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்ற குழு அறையில் கூடியபோதே இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு
ஆரம்பப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் ஊடாக நன்மை பெறும் மாணவர்களின் தொகை 2024ஆம் ஆண்டு 11 இலட்சத்திலிருந்து 16 இலட்சமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக வழி வகைகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
இதற்கமைய ஒரு மாணவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 80 ரூபாவிலிருந்து 110 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவின் தரம் தொடர்பில் அளவுகோல்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மாகாணக் கல்வித் திணைக்களம்,
பிராந்தியக் கல்விப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குழுவில் தெரியவந்தது.
கடந்த காலத்தில் 6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் காலை உணவை எடுத்துக்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு வருகை தருவதாக
அறிக்கையிடப்பட்டதாகவும், இந்த உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதும் மாணவர்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்துக்காக வருடமொன்றுக்கு 16.6 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாகவும், எனினும், 4 பில்லியன் ரூபாவுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் பங்கெடுக்கும் நோக்கில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விருப்பத்துடன் உதவிகளை வழங்கினாலும்,
இந்த உதவிகளை நேரடியாக அரசாங்கத்திற்கு வழங்கத் தயாராக இல்லை எனவும் தலைவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்
ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களுக்கு இவ்வாறான உதவிகளை நேரடியாக வழங்குவதில் ஏதாவது சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது பற்றி ஆராயுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், சமூக ஊடகங்களின் அடிப்படையில் புகார்களைப் பெறுவதற்கான கட்டமைப்பைத் தயாரிக்குமாறு சுட்டிக்காட்டிய குழுவின் தலைவர், வழங்கப்படும் உணவின் தரம் தொடர்பில் புகராளிப்பதற்கு வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டு மே மாதம் 1,000,000 குடும்பங்களுக்கு அதன் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில், மிகவும்
வறுமையான பிரிவுகளின் கீழ்
வறுமையான மற்றும் வறுமையான பிரிவுகளின் கீழ் முறையே 313,947 குடும்பங்களும், 653,047 குடும்பங்களும் நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவின் தலைவருக்குப் பதில் வழங்கினர்.
தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் நலன்புரித் திட்டங்களைப் பெறுவதற்கு 200,000 பேர் தகுதியடைந்துள்ளபோதிலும் அவர்களுக்கு உரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதும் இங்கு தெரியவந்தது.
மேலும், மேன்முறையிடுகளில் காணப்படும் முன்னேற்றங்கள் குறித்தும் குழு கேட்டறிந்துகொண்டது. இந்த வருடத்தின் மே மாதத்தில் ஒவ்வொரு பிரிவின் கீழும் அஸ்வெசும நலன்புரி வழங்கிய முதல்,
நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை, கையளிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் தெரிவுசெய்யப்படவுள்ள பயனாளர்களின் எண்ணிக்கை போன்ற சரியான தகவல்கள் மற்றும் ஜூலை 2024 முதல் பயனாளிகளின்
எண்ணிக்கை 24 இலட்சமாக அதிகரிக்கப்படவுள்ளதால் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அளவுகோல்கள் குறித்த அறிக்கையை குழுவுக்கு வழங்குமாறும் வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
கிராம சேவகர் பிரிவில்
அத்துடன், கிராம சேவகர் பிரிவில் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு எந்த அதிகாரிகளைச் சார்ந்தது என்பது தொடர்பில் பிரச்சினை இருப்பதாகவும், இது தொடர்பான அறிக்கையொன்றையும், பெரும்
எண்ணிக்கையிலான நபர்கள் தவறான தகவல்களை வழங்கி அஸ்வெசும பயனாளிகளாகியிருப்பது புலனாகியிருப்பதால் நலன்புரித் திட்டத்தைப் பெற்றுக்
கொள்வதற்கான தகவல்களை வழங்கியவர்களின் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கையயும் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
விதாதா நிலையங்கள் மற்றும் வணிக வங்கிகளில் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்காக கடன் திட்டத்துடன் இதனையும் ஒன்றிணைக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவினால் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்
நடைமுறைப்படுத்துப்பட்டுள்ளன என்பது குறித்தும் குழுவின் தலைவர் வினவினார். உத்தேச குடும்ப அமுலாக்கத் திட்டம் குறித்த கால அட்டவணையுடன் தகவல்கள் அடங்கிய அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அதன் தலைவர்
வலியுறுத்தினார். முதியோர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித்தொகை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதுடன், சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த
உதவித்தொகைக்கான செலவு குறித்த விரிவான அறிக்கையை வழிவகைகள் பற்றிய குழுவிடம் வழங்குமாறு தலைவர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சிறிர ஜயகொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர,
எஸ்.எம்.எம்.முஷாரப், சஞ்சீவ எதிரிமான்ன, உதயன கிரிந்திகொட மற்றும் சுதத் மஞ்சுள ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Featured
விலை அதிகரிப்பால் மக்கள் கவலை
விலை அதிகரிப்பால் மக்கள் கவலை
வெட் வரி திருத்தத்திற்கு அமைய மதுபானம் மற்றும் சிகரெட் விலைகளும் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் மதுபானங்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என டிஸ்டில்லரீஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மது வரி மற்றும் வெட் வரி அதிகரிப்புடன் இன்று முதல் சிகரெட்டின் விலை 4 வகைகளின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிகரெட்டின் விலை 5 ரூபா, 15 ரூபா, 20 ரூபா மற்றும் 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் பிரச்சாரம் அறிவிக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.
புதிய நோயாளர்களை அடையாளம் காண, அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரை படமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிபுணர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து
- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு
- அதிக விலையில் கீரி சம்பா அரிசி
- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்
- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை
- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்
- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா
- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்
- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்
IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சிபெட்கோ விலைக்கு ஏற்ப தாங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்கவுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிபெட்கோ எரிபொருள் விலை இன்று (01) நள்ளிரவு முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 365 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
ஒக்டேன் 95 லீற்றர் ஒரு லீற்றர் 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 420 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு
இதேவேளை, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 351 ரூபாவாகும்.
லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 62 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, அதன் புதிய விலை 421 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் 11 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





















































