Posted in உலக செய்திகள்

படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை

படகு கவிழ்ந்து 4 பேர் மரணம் – 14 பேரை காணவில்லை

துருக்கியில் இருந்து கிரேக்க பகுதிக்குள் நுழையும் முகமாக பயணித்த படகு ஒன்று விபத்தில்

சிக்கியதில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நல்லவர் பலியாகியுள்ளனர் ,மேலும் 14 பேர் காணாமல் போயுள்ளனர்

ஏனையவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர்

காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் தேடுதல் நகர்வுகள் முடக்கி விட ப்பட்டுள்ளன .

    Posted in Uncategorized

    சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

    சிரியா இராணுவ முகாம்கள் மீது துருக்கி அகோர ஏவுகணை தாக்குதல்

    சிரியாவின் இட்லி பகுதியில் உள்ள சுமார் இருபது மைல் நீளமான சிரியா இராணுவ நிலைகள் அனைத்தும் துருக்கியின் ஏவுகணை தாக்குதல் கட்டு பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது

    மேலும் இந்த இராணுவ முகாம்கள் மீது தொடர் அகோர ஏவுகணை தாக்குதலை துருக்கி நடத்திய வண்ணம் உள்ளது

    எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெற்று வரும் சமரில் இதுவரை பத்து லட்சத்துக்கு அதிகமான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி கர தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    வடக்கு சைபிரஸ் புது நாடாக உருவாக்கம் – துருக்கி அதிரடி

    வடக்கு சைபிரஸ் புது நாடாக உருவாக்கம் – துருக்கி அதிரடி

    சைபிரஸ் மற்றும் கிரேக் ஆகியவற்றுக்கு இடையில் நீண்டு வந்த பெரும் பகைமை காரணமாக

    அந்த பகுதிகள் தொடர்ந்து பர பரப்பு மிகுந்த வலயமாக இருந்து வந்தது ,இவ்வேளையில் துருக்கிய அதிபர் எடகோன்


    வடக்கு சைபிரஸ் பகுதிக்கு இரு நாள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்

    இதனை அடுத்து வடக்கை சைபிரஸ் புதிய நாடக உருவாகும் நிலை இடம்பெறுகிறது

    இதற்கான அறிவிப்பை துருக்கி வெளியிட்டுள்ளது ஐரோப்பிய யூனியனுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள்து

    இதனை தடுக்க கிரேக்கம் என்ன செய்ய போகிறது என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

      Posted in உளவு செய்திகள்

      துருக்கிய இராணுவம் வெளியேற வேண்டும் – தலிபான்கள் மிரட்டல்

      துருக்கிய இராணுவம் வெளியேற வேண்டும் – தலிபான்கள் மிரட்டல்

      ஆப்கானில் அமெரிக்கா படைகள் அங்கிருந்து விலகி வரும் நிலையில் துருக்கிய இராணுவத்தினர் ஆப்கானில் நிலை கொண்டுள்ளனர்

      இதனை அடுத்து ,தமது நாட்டுக்குள் நுழைந்த துருக்கிய இராணுவத்தினர் அங்கிருந்து முற்றாக

      விலக வேண்டும் என தாலிபான் போராளிகள் மிரட்டல்,விடுத்துள்ளனர்

      விலக மறுத்தால் பேரழிவை அவர்கள் சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளனர்

      Posted in Uncategorized

      ஈரான் ,துருக்கி 144 KM பாதுகாப்பு உச்சம் – திடீர் ரோந்து அதிகரிப்பு

      ஈரான் ,துருக்கி 144 KM பாதுகாப்பு உச்சம் – திடீர் ரோந்து அதிகரிப்பு

      ஈசன் ,துருக்கியின் சுமார் 144 கிலோ மீட்டர் நீளமான எல்லைகளில், பாதுகாப்பபு கடுமையாக்க

      பட்டுள்ளது .உளவு விமானங்கள் ,வான் ஊர்திகள்,மற்றும் இராணுவ ரோந்து ,செய்திமதி

      கண்காணிப்பு என பல மடங்கு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

      இரு நாடுகளுக்குள்ளும் இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தலாம் என்பதால இந்த உச்ச கட்ட பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

      இஸ்ரேல் மீதான ,பலஸ்தீன போராளிகள் தாக்குதலுக்கு ஈரான் முக்கிய ஆயுதங்களை வழங்கியது

      என்ற குற்ற சாட்டை இஸ்ரேல்பாதுகாப்பு அமைச்சு முன் வைத்துள்ளது

      எனவே தான் ஈரானை அழித்திட இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொள்கிறது ,இவர்களது இலக்கு

      ,அணு உலை ,மற்றும் முக்கிய இராணுவவ நிலைகள் ,இதன் மீது தாக்குதல் நடத்திவிட்டால்

      ,ஈராக்கை போல ஈரான் அழிந்து விடும் ,பின்னர் அதன் மீது தாக்குதல் நடத்தலாம் என்பது இஸ்ரேல் அமெரிக்கா கூட்டு திட்டமாக உள்ளது

      இஸ்ரேலின் இந்த நப்பாசை ,பயனளிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

        Posted in உளவு செய்திகள்

        ஈராக்கில் இராணுவ தளத்தை அமைக்கும் துருக்கி – பதட்டமாகும் களமுனை

        ஈராக்கில் இராணுவ தளத்தை அமைக்கும் துருக்கி – பதட்டமாகும் களமுனை

        துருக்கிய நாட்டு இராணுவம் வடக்கு ஈராக்கின் பகுதிகளில் பெரும் இராணுவ தளத்தை அமைத்து வருகிறது ,

        அங்கு தமது தாயக மீட்புக்கு போராடி வரும் குருதிஸ் போராளிகள் மீது தாக்குதல் தொடுக்கும் முகமாக இந்த பிரமாண்ட இராணுவ தளத்தை துருக்கிய இராணுவம் அமைகிறது

        கனரக வாகனங்கள்,டாங்கிகள், ஏவுகணைகள்,பல்குழல் பீரங்கிகள்,என்பன குவிக்க பட்டு வருகின்றன

        அமெரிக்கா அதரவு பெற்று போராடி வந்த குருதீஸ் போராளிகள் இன்று அதே அமெரிக்காவினால்

        கைவிட பட்ட நிலையில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன

        இதனால் பேரழிவில் உள்ள போராளிகள் குழுவை முற்றாக அழித்துவிட வேண்டும் என துருக்கி

        முனைந்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

          துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்

          சிரியாவில் வடகிழக்கு பகுதி துருக்கிய இராணுவத்தின் கட்டு பாட்டில் உள்ளது , அந்த பகுதியில்

          உள்ள மிக பெரும் எண்ணெய் விற்பனை கிடங்கு மீது திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அந்த எண்ணெய் சந்தை பற்றி எரிந்துள்ளது

          இதன்பொழுது எண்ணெய்களை காவி செல்லும் நூற்றுக்கு மேற்பட்ட வண்டிகள் எரிந்து

          நாசமாகின ,இந்த ஏவுகணை தாக்குதலை யார் நடத்தியது என்பது இதுவரை தெரிவிக்கப்படவில்லை

          முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட துருக்கிய இராணுவம் குறித்த நாட்டின் எல்லைகள் வாயிலாக நுழைந்து சிரியா மீது போரை தொடுத்துள்ளமை குய்ப்பிட தக்கது

          துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் - எரியும் வாகனங்கள்
          துருக்கி எண்ணெய் சந்தைமீது ஏவுகணை தாக்குதல் – எரியும் வாகனங்கள்
          Posted in உலக செய்திகள்

          கிரேக்க வான் பரப்புக்குள் 31 தடவை அத்துமீறி பறந்து மிரட்டி சென்ற துருக்கிய விமானங்கள்

          கிரேக்க வான் பரப்புக்குள் 31 தடவை அத்துமீறி பறந்து மிரட்டி சென்ற துருக்கிய விமானங்கள்

          கிரேக்க நாட்டுக்கும் துருக்கிக்கு இடையில் கடும் பனிப்போர் வெடித்துள்ளது

          ,இதன் உச்சமாக துருக்கிய இராணுவ சண்டை விமானங்கள் கிரேக்க

          வான்பரப்புக்கள் சுமார் முப்பத்தி ஒரு தடைவைகள் உள்நுழைந்து பறந்து சென்றுள்ளன

          பிரான்ஸ் மற்றும் கிரேக் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன ,


          இவ்வேளையே இந்த அத்துமீறலை துருக்கிய இராணுவ விமானங்கள் மேற்கொண்டுள்ளன

          இதற்கு பிரான்ஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது

          20 குருதீஸ்தான் போராளிகள் -துருக்கிய இராணுவத்தால் கைது

          தனி நாடு கோரி போராடி வரும் குருதீஸ்தான் போராளிகள்

          இருபது பேரை துருக்கிய இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்

          இவ்விதம் கைதான அனைவரும் குறித்த போராளிகள் அமைப்புடன் தொடர்பில்

          உள்ளவர்கள் எனவும் பயிற்சி பெற்றவர்கள் எனவும் துருக்கிய இராணுவம் தெரிவிக்கிறது

          தொடர்ந்து குறித்த அமைப்பிற்கு எதிராக போர் தொடர்ந்த

          வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

          Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

          சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி

          சிரியாவின் முக்கிய பகுதியில் இருந்து இராணுவத்தை விலக்கிய துருக்கி

          சிரியாவின் அலெப்போவின் Jabal Anadanபகுதியில் இருந்து தமது இராணுவத்தை

          முற்றாக விலக்கியுள்ளது ,இடம் பெற்று வரும் சமரச முயற்சிகளின் பயனாக இந்த படை விலக்கல் இடம் பெற்றுள்ளது

          எனினும் மறுபுறத்தே இராணுவ குவிப்பை தொடர்ந்த வண்ணம் உள்ளது ,

          தேவை ஏற்படாது போது தமது இராணுவம் முற்றாக அங்கிருந்து விலக்க

          படும் என துருக்கிய அதிபர் எடகோன் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத் தக்கது

          துருக்கி
          துருக்கி
          Posted in உலக செய்திகள்

          துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி

          துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி

          துருக்கிய அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய

          தாக்குதலில் சிக்கி நாற்பது இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,

          தொடர்ந்து தமது தாக்குதலை தீவிர படுத்தி வருகின்றனர் ,இந்த

          படுகொலைகளுக்கு மனித உரிமை அமைப்பு
          கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

          Posted in உலக செய்திகள்

          துருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது

          துருக்கிய அதிபர் உத்தரவு – லோயர் உள்ளிட்ட 101 பேர் கைது

          துருக்கியில் ஆளும் சண்டியர் எடகோனின் ஆட்சியில் சர்வாதிகாரம் முற்றி உள்ளது

          ,தனி இனவெறியுடன் அவரது செயல் பாடுகள் இடம்பெற்று வருகிறது ,

          நாடுகள் மீது படையெடுப்பு மற்றும் தனக்கு பிடிக்காதவர்களை இரகசியமாக

          போட்டு தள்ளுவது மேலும் பயங்கரவசதிகளுடன் தொடர்பு என கோரி கைது செய்வது என்ற படலம் தொடர்ந்த வண்ணம் உள்ளது

          இவ்விதம் குருதீஸ்தான் போராளிகளுடன் தொடர்பு பட்டார் என்ற குற்ற

          சாட்டில் முக்கிய சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட நூற்றி ஆறுபேர் கைது செய்ய பட்டுள்ளனர்

          மேற்படி விவகாரம் உலக அரங்கில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in உலக செய்திகள்

          சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்

          சிரியாவுக்குள் 3,150 இராணுவ வாகனங்களுடன் நுழைந்த துருக்கிய இராணுவம்

          சிரியாவின் எல்லைப் பகுதிக்குள் துருக்கிய இராணுவத்தினர்

          மேலதிக படையினர் நுழைந்துள்ளனர்

          சுமார் மூவாயிரத்து நூற்றி ஐம்பது இராணுவ வாகனகளுடன் இவர்கள்

          உள்நுளைந்துள்ளனர் .தொடர்ந்தும் குறித்த பகுதியில் ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

          இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய இராணுவத்தின் ,

          இந்த ஆக்கிரமிப்பு நகர்வு இடம்பெற்று வருகிறது குறிப்பிட தக்கது

          சிரியாவுக்குள்
          சிரியாவுக்குள்
          Posted in உளவு செய்திகள்

          பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா

          பல்குழல் எறிகணைகளை வாங்கி குவிக்கும் சிரியா

          சிரியாவில் கடந்த எட்டு ஆண்டுகள் கடந்து பாரிய மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன .

          மூன்றுக்கு மேற்பட்ட வல்லரசு நாடுகள் இந்த களத்தில் அகல கால் பதித்துள்ளனர்


          சிரியா படைகளுக்கு ஆதரவாக ரசியா,ஈரான் களத்தில் நிற்கின்றனர் ,
          துருக்கிக்கு ஆதரவாக அமெரிக்கா,இஸ்ரேல் என்பன உள்ளன

              இவ்வாறான பலம் பொருந்திய நாடுகளின் ஆயுத உற்பத்தி சோதனைகள் இந்த களத்தில் கொடி கட்டி பறக்கின்றன

              இவ் வேளையில் தற்போது இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கியின் முப்பதாயிரம் படைகள் குவிக்க பட்டு மோதல்கள் வெடித்து பறக்கின்றன

              இரு பகுதியில் கடும் சமர் அவ்வப்போது இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              துருக்கிய படைகள் அதிகம் பாவனைக்கு உட்படுத்தியுள்ள பல்குழல் ரொக்கட்டுக்கள் ஆகும் .
              இவை பெரும் தாக்கத்தை சிரியா படைகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளன

              அவர்களை முறியடிக்க தற்பொழுது ரசியாவின் தயாரிப்பிலான பல்குழல் எறிகணைகளை உடனடியாக தருவிக்கும் படி சிரியா வேண்டியுள்ளது

              குறித்த ஆயுதங்கள் விரைவில் சிரியாவுக்கு அனுப்பி வைக்க படவுள்ளன ,


              ஆதரவு வழங்குவது போல் களத்தில் நிற்கும் ரசியா படைகள் இப்பொழுது அதே நாட்டுக்கு உதவும் அதே வேளையில் ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகிறது

              இதைத்தான் சொல்வது தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளி விடுவது என்பதாகும்

              பல்குழல் எறிகணைகளை
              பல்குழல் எறிகணைகளை
                Posted in உலக செய்திகள்

                துருக்கி ஆயுத வண்டிகளை தாக்கி அழித்த ரஷியா – படங்கள் உள்ளே

                துருக்கி ஆயுத வண்டிகளை தாக்கி அழித்த ரஷியா – படங்கள் உள்ளே

                சிரியாவில் இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்கையில் துருக்கிய படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .

                முப்பது ஆயிரம் இராணுவத்தினர் குவிக்க பட்டு தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளன .
                இரு பக்க தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றன

                துருக்கி ஆயுத வண்டிகளை
                துருக்கி ஆயுத வண்டிகளை

                  இன்று ரசியா படைகள் நேரடியாக துருக்கிய இராணுவத்தினர் நிலைகள்

                  மீது தாக்குதலை நடத்தினர் ,இதில் துருக்கியின் டாங்கிகள் ,மற்றும் கவச

                  வாகனங்கள் என்பன தாக்கி அழிக்க பட்டுள்ளன
                  முப்பதாயிரம்

                  வரையிலான துருக்கிய படைகள் குவிக்க பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது

                  ரசியா படைகள் தமது இராணுவம் மீது தாக்குதல்களை நடத்துவதாக

                  துருக்கி குற்றம் சாட்டியுள்ளதுடன்,ரசியா படைகள் அந்த களமுனையில் நிற்கும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது

                  மேலும் இருபது துருக்கிய இராணுவத்தினர் கொலை செய்ய பட்டுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது

                  துருக்கி ஆயுத வண்டிகளை
                    Posted in உளவு செய்திகள்

                    துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்

                    துருக்கிய இராணுவம் மீது ரொக்கட் தாக்குதல் – சிதறிய இராணுவ வாகனங்கள்

                    சிரியாவின் வட மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள துருக்கி ,மற்றும்

                    அதன் ஆதரவு படைகள் மீது சிரியா அரச இராணுவம் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்தியது .

                      2,800 இராணுவ வாகனங்களுடன் குவிக்க பட்டுள்ள துருக்கிய படைகள்

                      பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்

                      இதனை தடுக்கும் முகமாக ,சிரியா இராணுவத்தினர் இந்த ஏவுகணை

                      தாக்குதலை மேற்கொண்டனர் ,.குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ள

                      அப்பாவி குருதீஸ் மக்களை துருக்கிய படைகள் கைது செய்து இழுத்து சென்றுள்ளனர் .

                      துருக்கிய அரசுக்கு எதிராக குருதீஸ் படைகள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் ,

                      இவர்களின் தலைவர் அப்துல்லா ஒயிலானை அமெரிக்கா படைகள் கைது செய்து துருக்கியிடம் ஒப்படைத்தது

                      எனினும் தலைவன் இல்லாத போதும் அவர்கள் போராட்டம் நீர்த்து போகவில்லை ,

                      அமெரிக்கா ஆதரவுடன் வேகம் பெற்ற குருதீஸ் போராளிகள் தாக்குதல்கள் தற்போது கேள்வி குறியாக ஒன்றாகி மாற்றம் பெற்றுள்ளன .

                        சிரியா,துருக்கி,ஈரான்,ஈராக் ,போன்ற நாடுகளை பந்தாடிய வண்ணமே இவர்கள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

                        தமிழீழ விடுதலை புலிகளை போன்று இவர்களும் அழிவின் நிலையில் உள்ளனர் .தமது இருப்பை தக்க வைத்து கொள்வதில் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

                        துருக்கிய இராணுவம் மீது
                        துருக்கிய இராணுவம் மீது
                        Posted in உலக செய்திகள்

                        துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்

                        துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்

                        சிரியாவின் வடக்கு ,மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள நிலைகள் மீது தாக்குதலை நடத்தும் படி துருக்கிய புலனாய்வு

                        துறையால் ஆயுத குழுவுக்கு வழங்க பட்ட நவீன ரக புதிய ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                        வாகனத்தில் ஏற்றி சிரியாவின் Raqqa பகுதிக்கு கொண்டு செல்ல பட்ட பொழுதே இவர்களை துரத்திய சிரியா உளவுத்துறையினர் மேற்படி ஆயுதங்களை மீட்டனர்

                        இந்த ஆயுத கடத்தல்களில் இவர்கள் தினம் தோறும் ஈடுபட்டு வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது ,

                        தற்பொழுது இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்கையில் முப்பது ஆயிரம்

                        துருக்கிய படைகள் குவிக்க பட்டு தயார் நிலையில் உள்ளனர்எவ்வேளையும்

                        இங்கு பெரும் தாக்குதல்கள் இடம்பெறலாம் ,எனினும் சிறு சிறு சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        துருக்கி ஆயுத வாகனம்
                        துருக்கி ஆயுத வாகனம்
                        Posted in உளவு செய்திகள்

                        சிரியாவுக்குள் நுழைந்த 2,710 துருக்கிய இராணுவ வாகனங்கள் -பதட்டமாகும் களமுனை

                        சிரியாவுக்குள் நுழைந்த 2,710 துருக்கிய இராணுவ வாகனங்கள் -பதட்டமாகும் களமுனை

                        துருக்கிய இராணுவம் தமது நாட்டின் எல்லை கடந்து சிரியாவின் Iskenderun பகுதிக்குள்


                        நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்துடன் 2,710 இராணுவ வண்டிகளுடன் நுழைந்துள்ளது .

                        ஏவுகணை டாங்கிகள் , கவச வாகனங்கள் ,பீரங்கிகள் சகிதம் துருக்கிய படைகள் தொடர்ந்து சிரியாவின் பகுதிகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளன

                        எவ் வேளையும் இங்கு பெரும் போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

                        அவ்வப் போது ஏவுகணை ,பீரங்கி தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        இந்த படை நகர்வுக்கு சிரியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

                        சிரியாவுக்குள் நுழைந்த
                        சிரியாவுக்குள் நுழைந்த
                          Posted in உளவு செய்திகள்

                          சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி

                          சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி

                          துருக்கியின் ஆள் இல்லாத விமானம் ஒன்று லிபியாவின் Trahuna சிட்டிக்கு

                          மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்ட பொழுது அதனை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது

                          அதில் அந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது ,இரண்டு நாட்களுக்கு முன்னர்

                          லிபியாவின் வானூர்தியை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது

                          தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பர பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன

                          இதனால் அங்கு பெரும் போர் முண்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது .

                          சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி
                          சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி
                            Posted in உலக செய்திகள்

                            லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி

                            லண்டனுக்கு விமானம் ஓடிய -2 விமானிகள் கொரனோவால் பலி

                            துருக்கிய நாட்டின் மிக பெரும் திறமை வாய்ந்த விமானிகள் பலியாகியுள்ளனர்

                            துருக்கிய விமான சேவை நிறுவனத்தில் பணி புரிந்த இவர்கள் இருவரும்

                            கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளனர்

                            விமான பயணிகளிடம் இருந்து கடத்த பட்ட நோயினால் ,பாதிக்க பட்ட

                            இவர்கள் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் பலியாகினர் என்ற

                            தகவலை அந்த நாட்டு விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது

                            லண்டனுக்கான விமான சேவையை நடத்தி வந்த விமானத்தின் ஓட்டிகளாக இவர்கள் செயல்பட்டுள்ளனர் ,அவ்வாறானவர்களே இவ்விதம் பலியாகியுள்ளனர்

                            மேலும் லண்டனில் இருந்து துருக்கி சென்ற 262 துருக்கிய பயணிகள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளனர் .

                            மருத்துவ சோதனைகளின் பின்னர் நோயானது இல்லை என கண்டறிய பட்டால் மட்டுமே இவர்கள் விடுவிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது

                            லண்டனுக்கு விமானம் ஓடிய
                            லண்டனுக்கு விமானம் ஓடிய