ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள்

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள்

ஜனாதிபதியின் சீன விஜயத்தின் இறுதி நாள் ,சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின் அழைப்பின் பேரில் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது

விஜயத்தின் வெற்றிகரமான முடிவைக் குறிக்கும் வகையில், இன்று (17) சீனாவின் சாங்டு பிராந்தியத்தில் உள்ள பல மின் உற்பத்தி தொழிற்சாலைகளைப் பார்வையிட உள்ளார்.

பின்னர், வறுமை ஒழிப்புக்கான மாதிரி கிராமம் ஒன்றைப் பார்வையிட ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிச்சுவான் மாகாண செயலாளர் வாங் சியாவோஹயை (Wang Xiaohui) சந்திக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று பிற்பகல் தேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய மத்திய நிலையத்திற்கு விஜயம் செய்ய உள்ளார்.

இந்த நிகழ்வுகளில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இணைந்துகொள்வர்.

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை

ஜனாதிபதி கோட்டாபய சிஐடியில் முன்னிலை ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி

நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று ‘இலங்கையில் முதலீடு – வட்டமேசை கூட்டம் 2025’ இல் பங்குபற்றினார்.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த அமர்வில் சைனா தியானிங் இன்க். (சிஎன்டிஒய்), சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட், சைனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட், சைனா பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் (சினோபெக்

குரூப்), மெட்டலர்ஜிகல் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா லிமிடெட் உட்பட பல முக்கிய சீன நிறுவனங்கள் கலந்து கொண்டன. சைனா சிவில் இன்ஜினியரிங்

வீடியோ

கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷன் (சிசிஇசிசி), சைனா எனர்ஜி இன்டர்நேஷனல் குரூப் கம்பெனி லிமிடெட் மற்றும் குவாங்சோ பப்ளிக் போக்குவரத்து குழு, மற்றவற்றுடன்இடம்பெற்றது ,

தென் கொரிய ஜனாதிபதி கைது
Posted in உலக செய்திகள்

தென் கொரிய ஜனாதிபதி கைது

தென் கொரிய ஜனாதிபதி கைது

தென் கொரிய ஜனாதிபதி கைது பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்வதற்காக புலனாய்வாளர்கள் மேற்கொண்ட முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரிய ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கான வழக்கு நேற்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​அவரது பிடியாணையை நீட்டிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை அமுல்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதியை கைது செய்வதற்காக அவரது உத்தியோகபூர்வ இல்லத்தின் முன் கூடியிருந்த மக்களால் உருவாக்கப்பட்ட தடைகளை மீறி அவர் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி ,சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14) சீன நேரப்படி காலை 10.25

மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

video

இந்தப் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளன.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,இலங்கைக்கான

சீன தூதுவர் சீ ஜென்ஹொன்ங், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.

14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம்
Posted in இலங்கை செய்திகள்

14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம்

14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம்

14ஆம் திகதி ஜனாதிபதி சீனா பயணம் ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சீனாவுக்கு 2025, ஜனவரி 14 முதல் 17 வரையில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை

மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

வீடியோ

ஜனாதிபதியின், சீன மக்கள் குடியரசிற்கான இவ்விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும்

வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில்

ஜனாதிபதியின் தாய் மருத்துவமனையில் , இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி அதிர குமர திசநாயக்காவின் தாயார் சுதவீத மொத்த நிலையில் தற்போது அனுராதபுரம் போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை பார்ப்பதற்காக ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க வைத்தியசாலைக்கு வருகை தந்து அவரது உடல் நலம் தொடர்பாக விசாரித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தாயாரை சந்தித்து அவரது கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது உடல்நோயிற்று வயது மூப்பு காரணமாக அவதிப்படுகின்ற அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து வந்த சம்பவம் மக்கள் மத்தியில் மகன் பிள்ளையினுடைய பாசத்தினுடைய உணர்வை எடுத்துக்காட்டி இருக்கின்றது.

இலங்கை ஒன்பதாவது ஜனாதிபதியும் அதிக பெரும்பான்மையுடன் கூடிய பாராளுமன்றத்தை வைத்திருக்கக்கூடிய ஒருவராகவும் அனுரா குமார திசாநாயக்க காணப்படுகின்றார் .

வீடியோ

இவரது ஆட்சி இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பெரும் சவாலான ஒன்றாக மாற்றம் பெறும் என்ற கேள்வி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது .

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி மாளிகையை இடமாற்றும் திட்டம் ஒத்திவைப்பு

ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டைக்கு மாற்றும் திட்டத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசாங்கம் கிடப்பில் போட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கடந்த அரசாங்கம் இந்த அலுவலகங்களை இடமாற்றம் செய்ய திட்டமிட்டதுடன், இதன் மூலம் அவற்றின் தற்போதைய கட்டிடங்கள் கொழும்பு பாரம்பரிய கட்டிடங்களாக சுற்றுலாத்துறைக்காக அபிவிருத்தி செய்யப்படுவதற்காக எத்தனிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கம் 2025 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த திட்டம் தற்போதைய அரசாங்கத்தால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான மாற்றுத் திட்டம்

குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கம் மாதி​வெலவில் பாராளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் புதிய ஜனாதிபதி மாளிகையை நிர்மாணிக்க

திட்டமிட்டிருந்தது. இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கடந்த ஆட்சியில் அதனை மீள்பரிசீலனை செய்து அதை

முன்னெடுத்து செல்ல முடிவெடுக்கும் வரை சந்திரிக்காவுக்குப் பின் வந்த அரசாங்கங்கள் அதில் கவனம் செலுத்தவில்லை.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நன்கு அறிந்த ஒரு தரப்பு, குறித்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு பறவைகள் பூங்காவிற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினார்.

கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட இதேபோன்ற சில திட்டங்களை புதிய அரசாங்கம் கைவிட்டுள்ளதுடன், நுவரெலியாவில் அமைந்துள்ள

பிரசித்தி பெற்ற தபால் நிலைய கட்டிடத்தை சுற்றுலாவிற்கு பயன்படுத்துவதற்கான திட்டமும் இதில் ஒன்றாகும்.

அதனை தபால் திணைக்களத்தின் பிரத்தியேக பாவனைக்காக தக்கவைக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும், புதிய அரசாங்கம், அரச பங்களாக்களை அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களாக ஒதுக்காமல் பொருளாதார பயன்பாட்டிற்கு பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு

இலங்கை இந்திய ஜனாதிபதிகள் சந்திப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, இந்திய – இலங்கை இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துப் பரிமாறப்பட்டது.

சிநேகபூர்வ சந்திப்பின் பின்னர் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இராப்போசன விருந்து வழங்கினார்.

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரும் இந்தச் சந்திப்பில் இணைந்து கொண்டனர்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார்

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு ,மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வரவேற்று அளித்தனர்.

அத்துடன், சிறப்பு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

நேற்று (15) மாலை சுமார் 5.30 மணியளவில் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர் பயணித்த விமானம் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தது.

அங்கு, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கலாநிதி எஸ். முருகன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இராஜதந்திரிகள் குழுவினர் ஜனாதிபதியை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைப்பு

முன்னாள் ஜனாதிபதிகள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்ததன் பின்னர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு 116 பேரில் இருந்து 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டிருந்த மூன்று டிஃபென்டர்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 51 ஆகவும், முன்னாள் ஜனாதிபதி

சந்திரிகா குமாரதுங்கவின் பாதுகாப்பு எண்ணிக்கை 58 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பும் எதிர்காலத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மாளிகைக்குள் சிரியா கிளர்ச்சியாளர்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஜனாதிபதி மாளிகைக்குள் சிரியா கிளர்ச்சியாளர்கள்

ஜனாதிபதி மாளிகைக்குள் சிரியா கிளர்ச்சியாளர்கள்

ஜனாதிபதி மாளிகைக்குள் சிரியா கிளர்ச்சியாளர்கள், அசாத் குடும்ப உருவப்படங்களை கிழித்து விடுங்கள், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள

ஜனாதிபதி மாளிகைக்குள் கிளர்ச்சியாளர்கள் சுற்றித் திரிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவுகிறது.

இஸ்லாமியர் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்குதலில் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாக அறிவித்தனர்,

ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தப்பி ஓடி, சிரியாவில் ஐந்து தசாப்தகால பாத் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் கிளர்ச்சியாளர்கள் நடமாட்டம் இருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர்கள் ஜனாதிபதி மாளிகையில் அசாத்தின் குடும்ப உருவப்படங்களை அடித்து நொறுக்கினர்.

சிரிய தலைநகரில் வசிப்பவர்கள் தெருக்களில் ஆரவாரத்துடன் காணப்பட்டனர், கிளர்ச்சி பிரிவுகள் “கொடுங்கோலன்” அசாத் வெளியேறுவதை அறிவித்தனர்: “டமாஸ்கஸ் நகரத்தை நாங்கள் சுதந்திரமாக அறிவிக்கிறோம்.”

டமாஸ்கஸில் இருந்து AFPTV படங்கள் சூரிய உதயத்தின் போது கிளர்ச்சியாளர்கள் காற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் காட்டியது, சிலர்

வெற்றியின் அடையாளத்தை ஒளிரச் செய்து “அல்லாஹு அக்பர்” அல்லது கடவுள் பெரியவர் என்று அழுகிறார்கள்.

சிரிய கிளர்ச்சியாளர்கள் இப்போது டமாஸ்கஸ் ஜனாதிபதி மாளிகையில் தங்கம் பூசப்பட்ட அசாத் குடும்ப உருவப்படங்களை உடைத்து வருகின்றனர்.

டிசம்பர் 8, 2024
சிலர் கொண்டாட்டத்தில் தொட்டியின் மீது ஏறினர், மற்றவர்கள் அசாத்தின் தந்தை ஹபீஸின் இடிக்கப்பட்ட சிலையை சிதைத்தனர். “நான் இந்த தருணத்தில் வாழ்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை,” என்று

கண்ணீர் மல்க டமாஸ்கஸ் குடியிருப்பாளர் அமர் பாத்தா தொலைபேசியில் AFP இடம் கூறினார். “இந்த நாளுக்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்: “நாங்கள் சிரியாவிற்கு ஒரு புதிய வரலாற்றைத் தொடங்குகிறோம்.”

அசாத் குடும்பத்தின் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான ஆட்சிக்கு சவால் விடும் வகையில் இஸ்லாமிய ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) குழு தனது பிரச்சாரத்தைத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குள், ஜனாதிபதியின் புறக்கணிப்பு, போர் கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டது.

“பாத் ஆட்சியின் கீழ் 50 வருட அடக்குமுறை மற்றும் 13 வருட குற்றங்கள் மற்றும் கொடுங்கோன்மை மற்றும் (கட்டாய) இடம்பெயர்வுக்குப் பிறகு தற்போது முடிவுக்கு

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள்

ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தபாலட்டைகள் இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த கோரி

கையெழுத்திடப்பட்ட தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு முல்லைத்தீவு மக்களால் வியாழக்கிழமை (21) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 21 சர்வதேச மீனவர் தினமாகிய இன்று சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் (ECDO) ஏற்பாட்டில் இந்திய இழுவைப் படகுகளை இலங்கை கடற்பரப்பிற்குள் வரவிடாது தடுப்பதற்குரிய

நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கோரியே தபாலட்டைகள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை

ஜனாதிபதி திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை

ஜனாதிபதி திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை ,சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு

ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க ஆரம்பித்தார்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தேர்தல் உள்ளிட்ட முதற்கட்ட சம்பிரதாயங்களை அடுத்து பாராளுமன்றம் முற்பகல் 11.30 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகர் ஆசனத்திற்கு தலைமை தாங்கி, அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 ஆவது சரத்துக்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.

அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ், பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை

சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்பின் 33 (பி) பிரிவின்படி, பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உள்ளது.

அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும், அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதியே முன்வைப்பார். இந்த உரையின் மூலம், அரசாங்கத்தின் எதிர்கால பார்வையை

ஜனாதிபதி விரிவாக எடுத்துரைத்து, பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் விரிவான கொள்கை விளக்கங்களை முன்வைக்கிறார்.

வரலாற்று ரீதியாக, இந்த உரை “சிம்மாசன உரை” என்று குறிப்பிடப்பட்டது மற்றும் கவர்னர் ஜெனரலால் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையின் நேரடி காணொளியை மேலே பார்க்கவும்

ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம் ,இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க டிசம்பர்

மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் திங்கட்கிழமை தெரிவித்தார்.

அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். திஸாநாயக்க செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது அவரை

சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகரான வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.

திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செப்டம்பர் 23 அன்று பதவிக்கு வந்ததிலிருந்து ஜெய்சங்கர் அக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தார்.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் பின்னர் திஸாநாயக்கவின் முதலாவது அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சுப் பதவியைத் தக்கவைத்துக் கொண்ட ஹேரத், புதிய

அரசாங்கம் தீவின் ஆட்சியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த உலக நாடுகளுடன் இலங்கையின் உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஏப்ரல் 2022 இல், தீவு நாடு 1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் அதன் முதல் இறையாண்மை இயல்புநிலையை அறிவித்தது.

முன்னோடியில்லாத நிதி நெருக்கடி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உள்நாட்டு அமைதியின்மைக்கு மத்தியில் 2022 இல் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.

51 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாக அறிவித்த பின்னர், ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தீவு தேசத்தை மீட்டெடுக்க இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்

உதவியை வழங்கியது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, ‘சாகர்’

(பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் ‘அண்டை நாடுகளின் முதல் கொள்கை’ போன்ற அதன் முன்முயற்சிகளில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி

டிரம்புடன் ஒத்துழைக்கத் தயார் சீன ஜனாதிபதி ,எதிர்வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

பெருவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் போது இந்த சந்திப்பு நடந்தது.

இதன்போது அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக சீன அதிபர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீன-அமெரிக்க உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன, மேலும் கோவிட் ஒரு சீன வைரஸ் என்று டிரம்ப்

கூறிய பிறகு, அந்த உறவுகள் வீழ்ச்சியடையும் நிலையை எட்டியமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியை வாழ்த்தினார் இந்திய உயர்ஸ்தானிகர் ,பொதுத் தேர்தலில் விசேட வெற்றியை பதிவு செய்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு வாழ்த்து

தெரிவிப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளார்.

அருகிலுள்ள ஜனநாயக நாடாக தேசிய மக்கள் சக்தி பெற்றுள்ள ஆணைக்காக இந்தியா வாழ்த்து தெரிவிப்பதுடன் இருநாட்டு மக்களின் நலனுக்காக

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து விளக்கம் ,முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் மருந்து வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட

அதிகம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை விவரித்தார்.

அதற்காக நூற்றுக்கும் அதிகமான பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் சில ஜனாதிபதிகளுக்கு 180 வரையான பாதுகாப்பு அதிகாரிகள் கடமையாற்றுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அதிகாரிகள் மாத்திரமன்றி பாதுகாப்பு வாகனங்கள், பஸ், டிபன்டர் ரக வாகனங்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், அம்பியூலன்ஸ் வண்டி என சகலதும் வழங்கப்பட்டுள்ளதுடன் சராசரியாக

பொலிஸ் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஏனைய பராமரிப்பு செயற்பாடுகளுக்காக 1,100 மில்லியன் ரூபா வரை செலவிடப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்கட்டினார்.

ஒரு வருடத்திற்கு செலவாகும் இந்த செலவு பொலிஸ் வைத்தியசாலையின் ஒரு வருடத்திற்கான செலவை விட அதிகம் என குறிப்பிட்ட அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளை மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். அதற்காக குழு

ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் சிபாரிசுக்கு இணங்க எதிர்காலத்தில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு இணங்க சகல முன்னாள்

ஜனாதிபதிகளுக்குமான சலுகை முறைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விசேட பாதுகாப்பு தேவைப்பாடு உள்ள முன்னாள் ஜனாதிபதிகளுக்காக விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விபரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு நீக்கப்படவில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே 57 பாதுகாப்பு அதிகாரிகள் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள்

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள்

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள் ,ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்