ஜனாதிபதி திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை

ஜனாதிபதி திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை

ஜனாதிபதி திஸாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை ,சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (21) காலை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு

ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க ஆரம்பித்தார்.

இலங்கையின் 10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணியளவில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தேர்தல் உள்ளிட்ட முதற்கட்ட சம்பிரதாயங்களை அடுத்து பாராளுமன்றம் முற்பகல் 11.30 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகர் ஆசனத்திற்கு தலைமை தாங்கி, அரசியலமைப்பின் 32(4) மற்றும் 33 ஆவது சரத்துக்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை சமர்ப்பித்தார்.

அரசியலமைப்பின் 33(a) பிரிவின் கீழ், பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை

சமர்ப்பிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அரசியலமைப்பின் 33 (பி) பிரிவின்படி, பாராளுமன்றத்தின் சம்பிரதாய அமர்வுகளுக்கு தலைமை தாங்கும் அதிகாரமும் ஜனாதிபதிக்கு உள்ளது.

அதன்படி, பாராளுமன்றத்தின் ஒவ்வொரு புதிய கூட்டத் தொடரின் தொடக்கத்திலும், அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதியே முன்வைப்பார். இந்த உரையின் மூலம், அரசாங்கத்தின் எதிர்கால பார்வையை

ஜனாதிபதி விரிவாக எடுத்துரைத்து, பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் விரிவான கொள்கை விளக்கங்களை முன்வைக்கிறார்.

வரலாற்று ரீதியாக, இந்த உரை “சிம்மாசன உரை” என்று குறிப்பிடப்பட்டது மற்றும் கவர்னர் ஜெனரலால் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியின் கொள்கை அறிக்கையின் நேரடி காணொளியை மேலே பார்க்கவும்

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு

அர்ச்சுனாவின் கட்சிக் கொள்கைகள் வெளியீடு ,இன்று யாழ்ப்பாணத்தில் கொட்டல் ஒன்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வு தொடர்பாக வெளியிட பட்டுள்ளது .

அந்த நிகழ்வில் கலந்து கொண்ட நிகழ்வு தொடர்பில் வெளியிட பட்ட முக்கிய சந்திப்பு மற்றும் கேள்வி பதில்கள் ,கீழே உள்ள காணொளியில் முழுமையாக பார்க்க .

வீடியோ

ஊடகங்களை நெறிப்படுத்தும் கொள்கை வருகிறது
Posted in இலங்கை செய்திகள்

ஊடகங்களை நெறிப்படுத்தும் கொள்கை வருகிறது

ஊடகங்களை நெறிப்படுத்தும் கொள்கை வருகிறது

ஒழுக்கமான ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தும் தேசிய கொள்கையொன்றிற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை

அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் இரண்டும் தேசிய ரீதியாக கொண்டு வரப்படுவதன் நோக்கத்தை அடைய வேண்டும் என்பதற்காக, அந்நிறுவனங்கள் இரண்டையும் ஒன்றிணைப்பதற்காக துறை சார்ந்தவர்களின் குழுவொன்றை நியமிப்பதாகவும் தெரிவித்தார்.

அதனூடாக இந்நிறுவனங்களில் வளங்களை நன்றாக முகாமைத்துவம் செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தொலைக்காட்சியை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் எதிர்வரும் வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படவிருப்பதாக அமைச்சர் விபரித்தார்.

ஊடகங்களை நெறிப்படுத்தும் கொள்கை வருகிறது

அரச ஊடக நிறுவனங்களின் நட்டத்தை இவ்வருடத்தில் குறைக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய தொலைக்காட்சியில் கடந்த வருடத்தில் 541 மில்லியன் ரூபா வாகக் காணப்பட்ட நட்டம் இவ்வருடத்தில் 274 மில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.

சுயாதீன தொலைகாட்சி சேவையில் 361 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்ட நட்டத்தை 189மில்லியன் ரூபவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கடந்த வருட நட்டம் 236 மில்லியன் ரூபாய்கள். அது இவ்வருடத்தில் 147 மில்லியன் ரூபாய்களாகும்.

லேக் ஹவுஸ் நிறுவன நட்டம் கடந்த வருடம் 198 மில்லியன் ரூபாய்களும், இவ்வருடம் 66மில்லியன் ரூபாய்களாகக் குறைந்துள்ளது.

இந்த நிறுவனங்கள் நீண்ட காலமாக நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்நிறுவனங்கள் மிகவும் சிரமப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.

இந்நிறுவன ஊழியர்களுக்காக சுயமாக ஓய்வு பெறும் முறை காணப்படுவதாகவும், அதற்கிணங்க இந்த அரச ஊடக நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் மற்றும் நூல்களுக்காக வரி அறவீடு தொடர்பாகவும் தான் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.