Tag: சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு ,மல்லாவி பாலிநகர் 3 வாய்க்கால் வயற்பகுதியிலிருந்து சனிக்கிழமை(17) சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இல 53, கட்சன் வீதி , வட்டகச்சியை சேர்ந்த இளையதம்பி ராஜ்மோகன் (49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
துணுக்காய் விநாயகபுரம் பகுதியில் வசித்து வந்த நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தபோதே இவர் காணாமல் போயிருந்ததாகவும், இவர் ஏற்கனவே
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் இவர் தனது உறவினரால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
பல்கலைக்கழகத்தில் மாணவன் சடலமாக மீட்பு
பல்கலைக்கழகத்தில் மாணவன் சடலமாக மீட்பு
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மஹரகம, கட்டுவல பிரதேசத்தில் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் மாணவர் விடுதியின் கீழ் தளத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த விடுதியில் ஏறக்குறைய 64 மாணவர்கள் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 23 வயதான மாணவா் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து, உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் நீதவான் விசாரணையை கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு நகர் முனைவீதி 2ம் குறுக்கில் வீதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் இன்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
குறித்த நபர் நகர் பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
நாவுல –மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் எல்பிட்டிய பிரசேத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரிவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு
இலங்கையின் OPEX ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநரும்,
செல்வந்த தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவின்,
ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் தனது குடும்பத்தினர் சகிதம் ஜகார்த்தாவில் சுற்றுலா
சென்றவேளை இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
45 வயதான தொழிலதிபரே இவ்வாறு பலியாகியுள்ளார் .
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இது ஒருதிட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
தாண்டிக் குளத்தில் காவல்துறை அதிகாரி சடலமாக மீட்பு
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் போலீஸ் அதிகாரி ,ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
வவுனியா ஈச்சங்குளம் காவல் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய காவல்துறை சார்யனே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் சடலம் காணப்படுவதாக, பொதுமகன் ஒருவர் காவல்துறைக்கு வழங்கிய தகவலை அடுத்து ,காவல்துறைக்கு தகவல் வழங்க பட்டது .
விபத்தில் சிக்கி குறித்த காவல்துறை அதிகாரி பலியாகி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு
பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு
இலங்கை பொலிஸ் சார்யன் தர அதிகாரி ஒருவர் பொலனறு மாதூறு ஓயா ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர்கள் பயணித்த உழவு இயந்திரம் , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது .
இதன் போது உழவு இயந்திரத்தில் நசியுண்டு அவர் பலியாகியுள்ளார் .
இவருடன் கூட பயணித்த இருவர் காப்பாற்ற பட்டுள்ளனர் ..
எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இறந்த பொலிஸ் அதிகாரி சடலம் சுழியோடிகள் துணையுடன் மீட்க பட்டுள்ளது .
குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு
குளத்தில் மூழ்கிய மூன்று சிறுமிகள் சடலமாக மீட்பு
இலங்கை ஆரா குள பகுதியில் படகு ஒன்று குளத்தில் கவிழந்ததில் ,அதில் பயணம் செய்த மூன்று சிறுமிகளும் பலியாகினர் .
இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 மற்றும் 18 வயது சிறுமிகள் அடங்குவர் .
காணாமல் போன சிறுமிகள் சடலம் இன்று மீட்க பட்டது .
இந்த சிறுமிகள் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
யாழில் கிணற்றில் தாய் சிசு சடலமாக மீட்பு
யாழில் கிணற்றில் தாய் சிசு சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதேவேளை சவாகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து , சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,
கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்
முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் விமானப்படை சிப்பாய் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் விமானப்படை வீரர் தனது துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளது.
விமானப்படைத்தளத்தில் கடமையில் இருந்த விமானப்படை சிப்பாய் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குருநாகல் பகுதியினை சேர்ந்த 26 அகவையுடைய சிப்பாயே இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளார்.
உயிரிழந்த சிப்பாயின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு மரண விசாரணை அறிக்கையின் பின்னர்
உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு
காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு
இலங்கை மெல்சிறிபுர, ரேஸ்வத்த பகுதியில் காணாமல் போன நபர் ஒருவர் ,வீட்டின் அருகில் உள்ள குப்பை மேட்டில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவரது சடலம் துணியால் சுற்ற பட்ட நிலையில் கண்டெடுக்க பட்டுள்ளது .
இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு பின்னர் குப்பை மேட்டில் வீச பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சதேகிக்கின்றனர் .
இதனால் விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளது .இலங்கையில் இவ்விதமான கொலைகள் அதிகரித்து காணப்படுகிறது .
- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா

- தெற்கு லெபனான் முழுவதும் தாக்குதல்

- ஈரான் பிரான்ஸ் கப்பல் மீது தாக்குதல்

- பெய்ஜிங்கில் சீனாவின் வாங் யீயுடன் ஈரானின் அராக்சி பேச்சுவார்த்தை

- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு

- கைப்பற்றப்பட்ட ஈரானியக் கப்பலின் பணியாளர்களை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஒப்படைத்தது

கடலில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு
கடலில் நீராட சென்றவர் சடலமாக மீட்பு
இலங்கை திருக்கோவில் பகுதியில் நண்பர்களுடன் நீராட சென்றவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
ஆறு நண்பர்களுடன் கடலுக்கு சென்று ,உணவு சமைத்து உண்டு ,களியாட்டத்தில் ஈடுபட்டவர் ,வெற்றிலை போட்டு வருவதாக சென்றுள்ளார் .
ஆனால் நீண்ட நேரமாக திரும்பி வராத நிலையில் ,அவரை தேடி நடத்த பட்ட தேடுதலில் ,சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் 38 வயதுடைய நபர் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் நீர் நிலைகளில் நீரட சென்று இவ்வாறு பலர் உயிரிழந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்
இலங்கை கட்டன் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கடந்த தினம் வயலுக்கு சென்றவரே இவ்விதம் , சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இறந்தவர் 72 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு ,வீதிகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .
இந்த மர்ம கொலைகளின்பின்னால் யார் உள்ளது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது .
பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
பிரான்ஸ் நீச்சல் குளத்தில் பிரிட்டன் தம்பதிகள் சடலமாக மீட்பு
பிரான்ஸ் ; தெற்கு பிரான்ஸ் நாட்டின் Gignac, பகுதியில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் பிரிட்டனை சேர்ந்த தம்பதிகள் சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
நீச்சல் குளத்தில் சடலமாகா மீட்க பட்ட பிரிட்டன் தம்பதிகள் எண்பது வயதுடையவர்கள் என அடையாளம் காண பட்டுள்ளது.
எவ்வாறு இந்த நீச்சல் குளத்தில் பலியானார்கள் என்பது தொடர்பில் தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
குறித்த பிரிட்டன் தம்பதிகள் சடலத்தை அவர் தம் உறவினர்களிடம் ஒப்படைக்கும் நகர்வில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
கொட்டலில் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
கொட்டலில் இறந்த நிலையில் ஆண் சடலமாக மீட்பு
அனுராத புரம் பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில் வசித்து வந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்க
பட்டுள்ளார் ,இவர் எவ்விதம் இங்கு இறந்தார் என்பது தொடர்பிலான விசாரணைகள் ஆம்பிக்க
பட்டுள்ளன
சடலம் மீட்க பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
Zoom இல் கல்வி கற்ற சிறுமி சடலமாக மீட்பு
Zoom இல் கல்வி கற்ற சிறுமி சடலமாக மீட்பு
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு அரசடி, பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்றிரவு (27) கிடைத்த தகவல்களை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி Zoom ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது Zoom கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தனது உயிரை மாய்த்துள்ள நிலையிலிருந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு
யாழில் கோயிலுக்கு வந்தவர் – ஆற்றில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் தொண்டமனாரு பகுதியில் கோயிலுக்கு வருகை தந்த முதியவர் ஒருவர் அந்த நீரேரியில் குளிக்க முயன்ற பொழுது நீரில் அடித்து செல்ல பட்டு இறந்துள்ளார்
மீன் பிடிக்க வந்தவர்கள் சடலத்தை கண்ணுற்று காவல்துறைக்கு தெரிவித்த நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது
மேற்படி சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
அடித்து கொலை செய்ய பட்ட நிலையில் தமிழ் பெண் சடலமாக மீட்பு
வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம்
கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இன்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில்
சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின்
கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினார்.
குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தினை
மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா
என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது
நத்தார் தினத்தில் வீட்டுக்குள் இறந்த நிலையில் 5 பேர் சடலமாக மீட்பு
நத்தார் தினத்தில் வீட்டுக்குள் இறந்த நிலையில் 5 பேர் சடலமாக மீட்பு
நத்தார் தினத்தில் Arkansas பகுதியில் வீடு ஒன்றுக்குள் இருந்து மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐவர் சடலமாக மீட்க பட்டனர்
இறந்தவர்கள் எட்டு முதல் ஐம்பது வயதுடையவர்கள் என கண்டறிய பட்டுள்ளது ,
மீட்க பட்ட சடலங்கள் மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது ,
இவர்களது மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் உடனடியாக
தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது
































