Tag: வீதியில் ஆண்
Posted in இலங்கை செய்திகள்
வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 25/04/2023
வீதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு நகர் முனைவீதி 2ம் குறுக்கில் வீதியில் உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவர் இன்று (24) சடலமாக மீட்டகப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் இன்று காலை சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.
குறித்த நபர் நகர் பகுதியில் பிச்சை எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

















