47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு
47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு , கொக்கு தொடுவாய் மனிதப்புதைகுழி ஆய்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதிபன் முன்னிலையில் சட்ட அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர்கள் முன்னிலையில் இந்த அகழ்வ பணி இடம்பெற்றது.
இதன்பொழுதே இந்த புதைகுழியில் இருந்து 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவை விடுதலைப் புலிகள் உடைய சீருடைகள் அடங்கிய உடல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து மீட்கபட்ட அனைத்து போராளிகள் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என தெரிய வந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கழிந்து வருகின்ற பொழுதும் இலங்கை அரச ஆக்கிரமிப்பு ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின படுகொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன .
தமிழ் மக்களை கொன்று புதைத்து தனது வெறியாட்டத்தை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினருக்கு இவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அவ்வாறான ஒரு காலப்பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .
இந்த புதைகுழியில் இருந்து மீட்கப்படுகின்ற சடலங்கள் உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டு ,இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு ஆளும் அரசுகள் தயாராகி வருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
ராஜபக்ச ஆட்சியின் அங்கீகாரத்தில் ஆட்சியை நடத்தி வருகின்ற ரணில் விக்கிரமசிங்காவினால் இந்த புதைகுழிகள் உரிய விசாரணைகள் நடத்தப்படுமா என்ற கேள்வியை சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
15 ஆண்டுகள் கழிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்காது இழுத்தடித்து வரும் இலங்கை அரசாங்கத்தின் படுகொலைகள் ,என்று விசாரிக்கப்படுவது எப்போது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற கேள்வியை தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.












