கொலைச் சம்பவம் பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலைச் சம்பவம் பெண் கைது

கொலைச் சம்பவம் பெண் கைது

கொலைச் சம்பவம் பெண் கைது ,வெலிவேரியவில் கொலைச் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்

வெலிவேரிய, எம்பரலுவ தெற்கில் 58 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான கைது செய்யப்பட்ட பெண் சம்பவத்தின் பின்னர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்த போதிலும், நேற்று பாலும்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட போது, ​​அதிகாரிகள் அவளிடம் 5 கிராம் 600 மில்லிகிராம் ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்) இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுபோவிட்டியனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

காசாவில் டஜன் கணக்கானவர்கள் கொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசாவில் டஜன் கணக்கானவர்கள் கொலை

காசாவில் டஜன் கணக்கானவர்கள் கொலை

காசாவில் டஜன் கணக்கானவர்கள் கொலை ,கொடூரமான ஆண்டு நிறைவைக் கடந்து செல்லும் போது இஸ்ரேலிய தாக்குதல்கள் காசாவில் டஜன் கணக்கானவர்களைக் கொன்றன.

இஸ்ரேலிய இராணுவம் என்கிளேவ் மீது குண்டுவீசித் தொடர்ந்து வரும் நிலையில் வடக்கு மற்றும் மத்திய காசாவில் பேரழிவு தரும் காட்சிகள் பதிவாகியுள்ளன.


முற்றுகையிடப்பட்ட பிரதேசம் இஸ்ரேலின் போர் தொடங்கிய கொடூரமான ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வடக்கு மற்றும் மத்திய காசாவில்

இஸ்ரேலிய தாக்குதல்களில் டஜன் கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை இரவு வேலைநிறுத்தங்களின் போது குறைந்தது 56 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார

அமைச்சகம் தெரிவித்துள்ளது, இருப்பினும் ஆதாரங்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை வேறுபட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து போர் தொடங்கப்பட்டதில் இருந்து ஒட்டுமொத்த

இறப்பு எண்ணிக்கை 41,965 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 97,590 பேர் காயமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Bureij அகதிகள் முகாமில் உள்ள வீடுகள் தாக்கப்பட்டதை அடுத்து, ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 30 பேர் ஒரே

இரவில் மத்திய நகரமான Deir el-Balah அருகே கொல்லப்பட்டதாக Al-Aqsa Martyrs Hospital தெரிவித்துள்ளது.

செவ்வாயன்று இஸ்ரேலின் இராணுவம் 43 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாக மருத்துவ வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்தன. வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை வெயங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுரவ விகாரைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வத்துபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 49 வயதுடைய வதுரவ-வெயங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மருத்தவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக வெயங்கொட பொலிஸார் குறிப்பிடத்தக்கது

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு
Posted in இலங்கை செய்திகள்

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு

கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிசு ,லிந்துலை, என்போல்ட் தோட்டத்தில் எல்.ஜி. பிரிவில் சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிறந்த கையோடு வயர் ஒன்றில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த தோட்டத்தில் வீடொன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் இருந்தே கடந்த 10 ஆம் திகதி சிசுவின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஒரு பிள்ளையின் தந்தையான 28 வயதுடைய ஆட்டோ சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது மாவனல்லை பகுதியில் இருந்து தமது தோட்டத்துக்கு வந்திருந்த பெண் ஒருவரின் பையே அது என அவர் கூறியுள்ளார்.

இதற்கமைய 24 வயதான பெண் கைது செய்யப்பட்ட, விசாரிக்கப்பட்டார். தனக்கும், குறித்த ஆட்டோ சாரதிக்கும் இடையில் இருந்த தகாத உறவு காரணமாகவே குழந்தை பிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மாவனல்லை பகுதியில் தான் வேலை செய்யும் வீட்டில் வைத்து கடந்த 5 ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளதாகவும், தனது சகோதரியின் உதவியுடன் குழந்தையின் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சடலத்தை புதைப்பதற்காகவே ஆட்டோவில் அதனை அக்கரபத்தனை பகுதிக்கு எடுத்து வந்ததாகவும் பொலிஸாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதிகாலைவேளையில் சடலத்தை அடக்கம் செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சடலத்தை தாய் கண்டு அக்கம், பக்கத்தினருக்கு தகவல் வழங்கியதால் அதனை செய்யமுடியாமல்போனதாக ஆட்டோ சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள பெண் பொலிஸ் பாதுகாப்புடன் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார். இப்பெண்ணையும், ஆட்டோ சாரதியையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அத்துடன், குறித்த பெண்ணின் சகோதரியையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திவரும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை
Posted in இலங்கை செய்திகள்

10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை

10 ஆயிரம் ரூபாவுக்காக நடந்த கொலை

10 000 ரூபா பணம் கேட்டு அதனை தர மறுத்த 80 வயது மூதாட்டியின் கழுத்தை மிதித்து மூச்சு திணறடித்து கொலை செய்த சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கி பெண்ணின் வீட்டிற்கு செல்வது மற்றும் குறித்த பெண்ணிடம் இருந்து கழற்றிச் சென்ற காதணிகளை செட்டித் தெருவில் உள்ள கடையொன்றுக்கு விற்பனை செய்தமை சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

இவர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி விடுமுறை பெற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொட்டாவ மாலபே வீதியின் நான்கு வழிச் சந்திக்கு அருகில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கிருந்த பெண்ணிடம் 10,000 ரூபா பணம் கேட்டுள்ளார்.

பணத்தை தராததால் கோபமுன்ற நபர், அந்த பெண்ணின் காதணிகளை கழற்ற முயன்றுள்ளார்.

இதன்போது, சந்தேகநபர் பெண்ணை தரையில் வீழ்த்தி பெண்ணின் கழுத்தை காலால் மிதித்து அவர் அணிந்திருந்த காதணிகளை கழற்றி செட்டித் தெருவில் உள்ள நகைக்கடையில் விற்றுவிட்டு 5 ஆயிரம் ரூபாயுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சந்தேகநபர் ஆனமடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரார். அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டீச்சர் வைத்தியசாலையில் கொலை
Posted in இலங்கை செய்திகள்

டீச்சர் வைத்தியசாலையில் கொலை

டீச்சர் வைத்தியசாலையில் கொலை

டீச்சர் வைத்தியசாலையில் கொலை ,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிளிநொச்சி செந்திரேசா பாடசலையில் கல்வி பயிற்றுவித்து வந்த டீச்சர் ஒருவர்,

யாழ்ப்பாண போதனா வைத்தியாயசாலையின் முறையற்ற சிகிச்சையால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

கிட்னி சோதனை என கூறப்பட்டு நடைபெற்ற சோதனை தோல்வியில் முடிவடைந்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகள் சிலர் இவ்வாறான மருத்துவ சோதனை ஆராய்ச்சிக்கு உள்ளாக்க பட்டு அதன் ஊடக அவர்கள் ,படுகொலை செய்யப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

புதிய கண்டு பிடிப்பு என்கின்ற போரவையில் ஓசையின்றி நடக்கும் இவ்வாறான சம்பவங்கள் ஊடக அப்பாவி டீச்சர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுளளார் என பாதிக்க பட்ட தரப்பில் குற்றம் சுமத்த படுகிறது .

கடந்த சில மாதமாக இடம்பெற்று வரும் முறையற்ற சிகிச்சையால் சில நோயாளிகள் உயிர் இழந்தும் ,படு கொலை செய்ய பட்டு வருகின்றனர் என்கின்ற விடயம் மீளவும் அம்பலமாகியுள்ளது .

இதற்கு யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி சத்தியமூர்த்தியின் கருது என்ன என்பதே நமது கேள்வியாகவும் .

மனைவியை கொலை செய்த கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன்

மனைவியை கொலை செய்த கணவன் ,அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அருகில் உள்ள சென்டிஹர்ஸ்ட் என்ற இடத்தில் தனது விவாகரத்து பெற்ற மனைவியை வெட்டிக் கொன்ற இலங்கையர் ஒருவர் அந்நாட்டு நீதிமன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

47 வயதான தினேஷ் குரேரா தனது பாதுகாப்பிற்காகவே இவ்வாறு செயற்பட்டதாக நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால் அந்த கோரிக்கையை நடுவர் மன்றம் ஏற்கவில்லை.

விக்டோரியாவின் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (30) இந்த உத்தரவை பிறப்பித்தது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி, நிலோமி பெரேரா, வீட்டிற்குள் தாக்கப்பட்டதுடன், குரேரா அந்த கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவர் தனது உயிரைப் பாதுகாப்பதற்காக இதைச் செய்ததாகக் கூறினார்.

விவாகரத்து பெற்ற மனைவி தன்னை கத்தியைக் காட்டி மிரட்டி விரலை வெட்டிவிட்டதாக விசாரணையில் அவர் கூறியுள்ளார்.

அவர் தன்னைத் தாக்கிவிடுவாரோ என்று பயந்ததால், கோடரியால் பலமுறை தாக்கியதாக குரேரா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அந்த பெண்ணின் உடலில் 35 காயங்கள் இருந்ததாக அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

எனினும் தாயும் தந்தையும் சண்டையிடுவதை மகளும் மகனும் பார்த்ததாகவும், மகன் உதவி கேட்டு அலறிய போது, ​​குரேரா அவரையும் தாக்க முயன்றதாகவும் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

16 வயது மகளும் 17 வயது மகனும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து, அப்பா, அம்மாவை தாக்கிய விதத்தை விவரித்திருந்தார்கள்.

பெண் ஒருவர் வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி கொலை

பெண் ஒருவர் வெட்டி கொலை ,ஹொரணை, சிரில்டன்வத்தை பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்று (24) மாலை இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிரில்டன்வத்தை, மீவனபாலன பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபருக்கும், அவருடைய வீட்டுக்கு அருகில் வசித்த நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்தவர் மற்றும் அவரது சகோதரரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் கானன்வில பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா
Posted in இலங்கை செய்திகள்

யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா

யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா

யூனியன் கல்லூரியின் ஆசிரியர் வைத்தியக்கொலையா ,பாடசாலை ஆசிரியை ஒருவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் காலை கூட்டத்தில் மயங்கி விழுந்தார் அத்தோடு தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் .

உடனடியாக அரச ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைத்து வாகனத்தின் ஊடாக அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது அதில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருப்பதாகவும் அதனை நரம்பு சார்ந்த dr அசுரஆதி பகவனுக்கு காட்டுமாறு கூறப்பட்டது .

ஆனாலும் அவர் தனது விடுமுறைக்குச் சென்றதால் இரண்டு கிழமைகள் அவர் ஆஸ்பத்திரிக்கு வரவில்லை வேறு தெரிவுகளும் அந்த ஆசிரியருக்கு கூறப்படவில்லை மூன்று பிள்ளை கொண்ட அந்த தாய் இன்று மூளை நரம்பு வெடித்து கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.

இப்போது சொல்லுங்கள் நாங்கள் நகரத்தில் இருக்கின்றோமா அல்லது நரகத்தில் இருக்கின்றோமா?????

மீண்டும் ஒரு மருத்துவத்தவறால் அவரின் உயிர் போனது??????? பாடசாலை தொடங்கும் போது பாடசாலையில் கால் பதித்தவர் அவருக்கு சென்ற வருடம் 2023 உடன் எமது பாடசாலையின் பணிக்காலம் முடிவடைந்துவிட்டது

அவர் விரும்பி இருந்தால் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்றிருக்கலாம் நான் கேட்டபோது அவர் கூறிய ஒரே பதில் Sir நான் நீங்கள் இருக்கும் மட்டும் இருந்து விட்டுப் போகின்றேன் என்றார்.

பாடசாலைக்கு முதல் ஆசிரியராக எப்போதும் பிள்ளைகளை வழி நடத்திக் கொண்டிருப்பார் வந்துகற்பித்தலில் பிள்ளைகளிடம் அதீத ஈடுபாடு கொண்டவர் ஒவ்வொரு பிள்ளைகளிலும் தனித்தனி கவனம் கொண்டவர்.

தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்த ஒரு தாய் இன்று மூச்சடங்கி கிடக்கின்றாள்.

ஒரு மாதத்துக்கு முன்னர் தனது உடல் உபாதையும் கருத்தெடுக்காமல் பாடசாலைக்கு வந்து காலை கூட்டத்தில் நற்சிந்தனை கூறிக் கொண்டிருந்தபோது மயக்கமுற்து கீழே விழுந்தார் எந்தப் பாடசாலைக்கு அயராது உழைத்தாரோ அதே பாடசாலையின் மண்ணில் தலை சாய்ந்து விழுந்தார்.

கடந்த ஒரு மாத காலமாக தொலைபேசி ஊடாகவே பிள்ளைகளுக்கு என்ன படிப்பிக்க வேண்டும் என்பதை சக ஆசிரியர்களுக்கு கூறிவழிப்படுத்திக் கொண்டிருந்தார்.

இறுதியாக என்னிடம் பேசிய போது தான் பாடசாலைக்கு திங்கள் வரப்போவதாகவும் நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்றும் கூறினார் அவருக்கு விருப்பமான சக ஆசிரியை செல்வா வீட்டுக்குச் சென்று அவர்களின் கையால் டீ குடித்துவிட்டு சாரி ஒன்றையும் கொடுத்துவிட்டு சென்றிருக்கின்றார்.

பிள்ளைகளின் உணவு விடயத்திலும் அதீத ஈடுபாடு கொண்டவர் என்ன வேலை சொன்னாலும் முடியாது என்று சொல்லாமல் எனக்கு வலதுகரமாக தோளோடு நின்ற அன்பு தாயே சகோதரியே உமது பணி பலாலி வடக்கு பாடசாலையில் எ ப்போதும் நினைவு கூரப்படும்

சென்று வா தாயே உமது ஆத்மா சாந்திக்காக நாங்கள் எல்லோரும் தலை சாய்த்து வணங்குகின்றோம் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
அதிபர்

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது
Posted in இலங்கை செய்திகள்

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது

கிரிக்கெட் வீரர் கொலை கொலையாளி கைது ,2002 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இலங்கையின் இளைய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த தமிக்க நிரோஷாவை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வயதான சந்தேகம் நபர் பலப்படியா பிரதேசத்தில் வைத்து 2500 மில்லி கிராம் போதைவஸ்துதான் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்த பெறப்பட்ட ஒப்பற்றத்தின் அடிப்படையில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்கின்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

பல வருடங்கள் கழித்து கைது

அதனை அடுத்து குறித்த நபர் தற்பொழுது பல வருடங்கள் கழித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைக்கு அமர்த்தப்பட்ட குழுவாக இவர் காணப்படுவதாகவும், அதன் அடிப்படையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் முடிவில் இந்த விடயங்கள் தொடர்பாக தெரிய வரும் என நம்ப படுகிறது .

மேலதிக தகவல் வருகின்ற பொழுது அந்த நபர்கள் யாரால் இந்த கொலை செய்யப்பட்டது என்பது ஒரு பட மேலதிக விபரங்கள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல வருடங்களாக கொலை குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறி வந்த இலங்கை குற்ற பிரிவினர், தற்பொழுது அந்த நபரை கைது செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை வியப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மிகத் திறம்பட்ட கிரிக்கெட் வீரராக காணப்பட்ட எவர் இளமை இதிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டு சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் பெரும்அதிர்வல்களை ஏற்படுத்தி இருந்தது.

அவ்வாறான நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட நபர் தான் என்று தண்டனை வழங்க வேண்டும் என்கிற நிலையில் மக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய்
Posted in இலங்கை செய்திகள்

மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய்

மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய்

மகளை கிணற்றில்வீசி கொலை செய்ததாய் ,இலங்கை ரூபன் வெல்ல காவல்துறை பகுதியில் பெண் ஒருவர், தான் பெற்ற நான்கு வயது மகளை வீசி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நான்கு வயது சிறுமி வாய் பேச முடியாத நிலையில் காணப்பட்ட நிலையிலும் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அதனால் ஏற்படுத்த மன உளைச்சலுக்கு ஆளான தாயார்.

அந்த சிசுவை வீசி படுகொலை செய்துள்ளதாக தெரிய வருகின்றது .

இந்த படு கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண் சிசு தொடர்பாக தாயார் மிகவும் கவலை அடைந்ததாகவும் உளவியல் ரீதியில் பாதிப்பு கொள்ளாத நிலையில் அவரது வாழ்வை எப்படி இருக்கும் என்று நிலையிலேயே ,

படுகொலை செய்த தாய்

அந்த வாழ்வை அவருக்கு அளிக்கக்கூடாது என்பதற்காக இவ்வாறு படுகொலையில் ஈடுபட்டு இருக்க கூடும் தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.

வாய் பேச முடியாத பல ஆண் பெண் குழந்தைகள் இந்த உலகத்தில் மிகப் பெரும் அதிசயங்கள் செய்து அசத்தியுள்ளார் .

இவர்களினால் வாய் மட்டும் பேச முடியாது தவிர அவர்கள் கல்வியை கற்று அதன் ஊடாக பல சாதனையை நிலை நாட்டியுள்ளனர் .

குறித்த சிசுவானது கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியிலும் அந்த கிராம மக்கள் மத்தியிலும் பதட்டத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊமையாகப் பிறந்த காரணத்திற்காக இப்பொழுது அவரை உறக்கத்தில் அழைத்துச் சென்று அவரை கிணற்றில் வீசி படு கொலை செய்வதற்கு இவருக்கு எப்படி மனம் வந்தது என்கின்ற கேள்வியை எழுப்பப்பட்டுள்ளது .

தாயார் விசாரணைக்கு பூரணமாக ஒத்துழைக்கவில்லை என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது .

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற விசாரணையின் முடிவிலேயே விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது

கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது

கொலை புரிந்த நபர்கள் துபாயில்கைது ,இலங்கையில் பல கொலைகள் இடம்பெற காரணமாக இருந்து அந்த கொலைகளை புரிய காரணமாக துபாயில் இருந்து கட்டளையிட்ட இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் தொடராக இடம் பெற்று வரும் மர்மக் கொலைகளுக்கு காரணமானவர்கள் யாரென மக்கள் மத்தியில் பிற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில்

கொலைகளுக்கு காரணமாக இருந்த ,இருவர் டுபாயில் கைது

இலங்கையில் இடம்பெறுகின்ற பல கொலைகளுக்கு காரணமாக இருந்த ,இருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு துபாயில் கைது செய்யப்பட இளைஞர்கள் விசாரணை உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து துபாயில் பதுங்கி இருந்த இந்த இரண்டு இலங்கையர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாள்தோறும் நாடளாவிய ரீதியில் பல மர்மக் கொலைகள் இடம்பெற்று வருகின்றன .

சடலங்கள் நீர் ஏரிகள் காடுகள் ,பற்றை காடுகள், பாலங்கள் என கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன .

இந்த கொலைகளை புரிவது யார் என்ற கேள்விகளுக்கு தற்பொழுது இலங்கையை சேர்ந்தவர்கள் துபாயில் இருந்து செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டு விசாரணை உள்ளாக்கப்பட்ட இந்த இலங்கை இருவரிடம் வேறு ஏதாவது பேரு தகவல் கிடைக்கப் பெறலாம் என அஞ்சப்படுகிறது .

கொலைகள் வெளிநாடுகளில் இருந்து இயக்கம்

இவ்வாறான கொலைகள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை நபர்கள் , இளைஞர்கள் இயக்கப்படுகின்ற விடயங்கள் வெளியாகி இருந்தன .

வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட கடத்தல் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த நபர்களே வெளிநாடுகளில் இருந்து இயக்கி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .

அவர்களது பணத்தின் ஊடாகவே இந்த வேலைகள் இடம் பெற்று வருவதாக தெரிய வந்தது அடுத்து இந்த கைது இடம் பெற்றுள்ளது.

மேலும் சிலர் இலங்கையர்கள் வெளிநாடுகளில் விவரமான செயல்பாடு ஈடுபட்டு வருவதாகவும் ,அவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டுள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை
Posted in இலங்கை செய்திகள்

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை

மதுக்கடையில் இடம்பெற்ற கொலை மதுக்கடையில் ஒருவர் இறந்து கிடந்த நிலையில் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பிபில பொலிஸாருக்கு நேற்று (30) காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் போகஹமடித்த – ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவராவார்.

உயிரிழந்தவர் மதுபானக்கடை ஒன்றை நடத்திவருவதாகவும், ஊழியர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், குறித்த ஊழியர் இரும்பு கம்பியால் தாக்கி கொலையை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெட்டி கொலையான காதல் ​ஜோடி
Posted in உலக செய்திகள்

வெட்டி கொலையான காதல் ​ஜோடி

வெட்டி கொலையான காதல் ​ஜோடி

வெட்டி கொலையான காதல் ​ஜோடி ,முன்விரோதம் காரணமாக உறங்கிக் கொண்டிருந்த காதல் ஜோடி மீது கொடூரமான முறையில் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று சென்னையில் பதிவாகியுள்ளது.

சென்னை டி.பி.சத்திரம் 27-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 20). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு பட்டப்படிப்பு

படித்ததாக கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

பாடசாலை மாணவி

இவர், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் 2 பேரும் ஒன்றாக ஜாலியாக சுற்றி வந்தனர். கடந்த சனிக்கிழமை இரவு பெரியமேடு பகுதியில் ஒன்றாக கைகோர்த்தபடி நடந்து வந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி அப்பாஸ் என்பவர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இஸ்ரவேலின் காதலியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அதில் மோதல் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் தடுத்து அவர்களை விலக்கி விட்டுள்ளனர்.

ஆனால் அப்பாஸ் இஸ்ரவேலையும், அவரது காதலியையும் தீர்த்துக்கட்டாமல் விட மாட்டேன் என்று மிரட்டி அனுப்பியதாக தெரிகிறது.

இதனால் இஸ்ரவேல் மிகவும் எச்சரிக்கையோடு தனது காதலியோடு டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள வீட்டின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் இரவு படுத்து தூங்கி உள்ளார்.

அவர்களை தீர்த்துக்கட்டும் நோக்கத்தோடு அப்பாஸ் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து கொடூர தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

காதலிக்கும் அரிவாள் வெட்டு

இஸ்ரவேலுக்கும், அவரது காதலிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் இஸ்ரவேல் பலத்த காயமடைந்தார்.

அவரது காதலிக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம், பக்கத்தினர் திரண்டு வந்ததால் அப்பாசும், அவரது நண்பர்களும் தப்பி ஓடிவிட்டனர்.

இஸ்ரவேலும், அவரது காதலியும் கீழ்ப்பாக்கம் அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் பொலிசார் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அப்பாசும், மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Error: View 9293b2au4w may not exist
ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை

ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை

ஒரேகுடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை ,மீரிகம – மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவர் வீட்டில் வைத்து படுகொலை செய்துள்ளார்.

இன்று (19) காலை 42 வயதுடைய ஒருவரே இந்தக் கொலைகளை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

80 வயதான தந்தை, 77 வயதான தாய் மற்றும் 42 வயதான மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.

பொலிஸார் மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மாலதெனிய, பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்த்த மூன்று நபர்கள் ஒரே இரவில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இந்த மூவர் படுகொலைகானக காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
சடலங்களை மீட்ட போலீசார் தற்போது தொடர் கொலை குற்ற பின்புலத்தை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

இலங்கையில் சமீபகாலங்களாக இவ்வாறான கொலைகள் இடம்பெற்று நாட்டை உலுப்பி வருகிறது .

இந்த மர்ம படுகொலைகளின் பின்னால் மறைந்த்துள்ள அந்த நபர்கள் யார் என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியாது இலங்கை பொலிசார் திணறி வருகின்றனர்.

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண்

யாழில் கொலை செய்யப்பட்ட பெண் ,யாழ்ப்பாணம், தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மருதங்கேணி பொலிஸ்

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10 ஆம் திகதி பெண் ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார்.

கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.

அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.

உயிரிழந்த பெண் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

பெண் ஒருவர் கொலை

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டார்.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவதாக தெரியவந்தநிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவர் 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபரை நேற்று (16) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காதலனை கொன்ற காதலி கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலனை கொன்ற காதலி கைது

காதலனை கொன்ற காதலி கைது

காதலனை கொன்ற காதலி கைது ,குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காதலனை கொன்ற காதலியின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

சிறுமி கொலை மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்

சிறுமி கொலை மக்கள் போராட்டம்,வவுனியாவில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் நீதி கோரி வவுனியா மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

சிறுமியின் கொலையில் மர்மம்

இறந்த சிறுமியி கொலையில் மர்மம் காணப்படுவதாகவும் அதனால் அந்த மர்மத்தை கண்டறிந்து நீதியை நிலை நட்ட கோரி மக்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த சிறுமியின் கொலைக்கு அவரது சிறிய தந்தையே காரணம் எனவும் ,அதனால் அப்பாவி 17 வயது இளம் பெண் சாவுக்கு காரணமானவரை உடனே கைது செய்ய வேண்டும் என கோரியே, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஈச்சம் குளம் பொலிஸ் நிலையில் முற்றுகை

வவுனியா ஈச்சம் குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தாரணி குள மக்கள் இறந்த அப்பாவி சிறுமிக்கு நீதி நிலை நாட்டை கோரியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இளம் பெண்ணின் படுகொலையின் பின்புலத்தில் அரசியல் சக்திகள் ஆதரவு உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

இலங்கையில் தொடரும் மர்ம படு கொலைகள்

இலங்கையில் நாள் தோறும் தொடரும் இடம்பெறும் இவ்வாறன மர்ம படுகொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளது .

காடுகள்,நீர் நிலைகள் ,குளங்கள்,ஏரிகள்,கிணறுகள் ,குப்பை மேடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்டு வருகின்றன .

இவ்வாறு தொடரும் இந்த கொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை கண்டு பிடிக்க முடியாது ,இலங்கை காவல்துறை உள்ளதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

சிலரது வன்மத்திற்காக படுகொலை செய்ய படும் அப்பாவி உயிர்களுக்கு நீதி வேண்டும் என கோரிய, மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்துகின்றனர் .

இவ்வாறு போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகள் தட்டி கழிக்க பட்டு பல படுகொலைகள் சான்று இன்றி மவுனமாகவே மறக்கடிக்க பட்டு வருவதாக, பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர் .

அதுபோல இந்த சிறுமியின் மரணம் நிகழ கூடாது என்றே இந்த மக்கள் போராட்டம் நடத்துகின்றனர் .

அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை
Posted in இலங்கை செய்திகள்

அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை

அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை

அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை ,விரைந்து வந்த பொலிசார் காயத்துடன் துடித்த தந்தையை காப்பாற்றினர் ,மகன் கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

தந்தையின் மீது தாக்குதலை மேற்கொண்ட வாள்வெட்டு குழு பின்னர் 12 வயது மகன் மீது தாக்குதலை நடத்தியது ,

இந்த வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் காயமடைந்த தந்தை தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

காணி தகராறு காரணமாக இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


தந்தையை இலக்கு வைத்து வாள்வெட்டு தாக்குதலை நடத்திய குழு ,மகன் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதில் சிறுவன் துடிதுடித்து இறந்து போனான் .

இலங்கையில் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் ,மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு காணப்படுகிறது .

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்
Posted in உலக செய்திகள்

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

போயர் போர், 1899-1902 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால்
உயிர் இழப்பு: 100000க்கு மேல்
WW1 1914 ஆஸ்திரிய / ஹங்கேரிய கத்தோலிக்கரால்

20 மில்லியன் உயிர்கள் இழந்தன
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மூலம் ரஷ்ய உள்நாட்டுப் போர் 1918
10 மில்லியன் உயிர்கள் இழந்தன

1919 ஆம் ஆண்டு ஃபின்னிஷ் கிறிஸ்தவர்களால் ஃபின்னிஷ் உள்நாட்டுப் போர்
38000 உயிர்கள் இழந்தன

1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பு கிறிஸ்தவர்களால் ஆப்கான் போர்
உயிர்கள் இழந்தது 2000

ஐரிஷ் சுதந்திரப் போர் 1919 கிறிஸ்தவர்களுக்கு இடையே (பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து)
13000+ உயிர்கள் இழந்தன

ஸ்பானிய உள்நாட்டுப் போர் 1936 கத்தோலிக்கர்களிடையே
500000 உயிர்கள் இழந்தன

1936 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் கிரிஸ்துவர்/சியோனிஸ்டுகளுக்கு எதிராக அரபு ரெவெலட்
5000 இழந்தது வாழ்ந்தார்

இரண்டாம் உலகப் போர் 1939 இல் ஜெர்மன் கிறிஸ்தவர்களால் தொடங்கியது
85 மில்லியனைக் கொன்றது

கட்டாய பாலஸ்தீனத்தில் யூத கிளர்ச்சி, 1944-1948 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சியோனிஸ்ட்டால்
260+ உயிர்கள் இழந்தன

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிட்டிஷாரால் 1947 இந்தியப் பிரிவினை
1 லட்சத்தை இழந்தார்

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல், 1948 பாலஸ்தீனத்திற்கு எதிராக சியோனிஸ்ட்டால்
16000 உயிர்கள் இழந்தன

மயிலையன் எமர்ஜென்சி 1948 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் மற்றும் பிறரால்
3000 உயிர்கள் இழந்தன

கொரியப் போர் 1950 தென் கொரியா மற்றும் வட கொரியா கிறிஸ்தவர்கள்/பௌத்த மதங்களுக்கு இடையே
2.5 மில்லியன் உயிர்கள் இழந்தன

கென்யா எமர்ஜென்சி 1952 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால்
12000 உயிர்கள் இழந்தன

சைப்ரஸ் எமர்ஜென்சி 1955 கிரேக்க கூபே மூலம்
500 வரை

அமெரிக்க கிறிஸ்தவர்களால் வியட்நாம் போர் 1955
3.8 மில்லியன்

சூயஸ் நெருக்கடி 1956 சியோனிஸ்ட்/பிரிட்டிஷ்/பிரெஞ்சு மூலம் எகிப்து
6000 பேர் வரை உயிர் இழந்துள்ளனர்

பிரச்சனைகள் 1969 ஐரிஷ் கத்தோலிக்க கொலைகள்

அர்ஜென்டினா மற்றும் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு இடையே 1982 ஆம் ஆண்டு பால்க்லாந்து
900 உயிர்கள் இழந்தன

ஐரோப்பாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த கிறிஸ்தவர்களால் 1992 போஸ்னிய போர்.

மேமர் 2016ல் பௌத்தர்களால் ரோஹிங்கியா இனப்படுகொலை
உயிர்கள் 10000 உயிருடன் எரிக்கப்பட்டன, 1 மில்லியன் இடம்பெயர்ந்தன

ரோஹிங்கியா இனப்படுகொலை

போஸ்னியப் போர், 1992
உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

Error: View 9293b2au4w may not exist