இரு சகோதரர்கள் கொலை
Posted in இலங்கை செய்திகள்

இரு சகோதரர்கள் கொலை

இரு சகோதரர்கள் கொலை

இரு சகோதரர்கள் கொலை ,பத்தேகம பொலிஸ் பிரிவின் ஏத்கந்துர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை (27) இரவு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, பத்தேகம பொலிஸாரால் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

எத்கந்துர பகுதிகளில் வசிக்கும் 33 மற்றும் 36 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களே பலியாகியுள்ளனர்.

சடலங்கள் காலி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேர் காலி மற்றும் எல்பிட்டிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்
Posted in இலங்கை செய்திகள்

4 நாட்களில் 8 கொலைகள்

4 நாட்களில் 8 கொலைகள்

4 நாட்களில் 8 கொலைகள் ,நாட்டில் 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையே என எதிர்க்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்ததார்.அவர் மேலும் கூறுகையில்

கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி

குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையாகவே காணப்படுகிறது.

அண்மைய தினத்தில் நீதிமன்றத்தினுள் நடந்த மிலேச்சத்தனமான கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் வண்ணப் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் புலனாய்வு தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன.

இவ்வாறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டமை குறித்து தெளிவான விளக்கம் இங்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்
Posted in இலங்கை செய்திகள்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண் ,கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பெயர்:- இஷாரா செவ்வந்தி
வயது: – 25 ஆண்டுகள்
அடையாள அட்டை – 995892480
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.

குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின் பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 – 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 – 8591735 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஒருவர் படுகொலை
Posted in உலக செய்திகள்

4 மாத மகனைக் கொலை செய்த தாய்

4 மாத மகனைக் கொலை செய்த தாய்

4 மாத மகனைக் கொலை செய்த தாய் ,4 மாத மகனைக் கொலை செய்ததாக 26 வயது தாய் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“4 மாத குழந்தைக்கு வலிப்பு இருப்பது பற்றிய அழைப்புக்கு போலீசார் முதலில் பதிலளித்தனர்.

அலபாமாவில் ஒரு தாய் கைது செய்யப்பட்டு, அவரது 4 மாத மகனைக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்குப் பிறகு, பிரேதப் பரிசோதனையில் அவன் பலத்த காயம் அடைந்திருப்பதைக் கண்டறிந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஜன. 25 அன்று, அலபாமாவில் உள்ள லானெட்டில் உள்ள ஓல்ட் ஜாக்சன் ஹைட்ஸ் ஹவுசிங் ப்ராஜெக்டில் உள்ள ஒரு வீட்டில் 4 மாத குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதைக் குறிப்பிடும் வகையில், சேம்பர்ஸ் கவுண்டி அவசரகால அனுப்புதல் மையத்திற்கு சுமார் மதியம் 1:55 மணிக்கு 911 அழைப்பு வந்தது.

பரஸ்பர உதவிக்காக கிழக்கு அலபாமா தீயணைப்புத் துறையை தொடர்பு கொண்டு, கருப்பின ஆண் குழந்தையை கிழக்கு அலபாமா மருத்துவ மையத்திற்கு (EAMC) கொண்டு சென்றனர்,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

“குழந்தையின் நிலை EAMC இல் உள்ள மருத்துவ ஊழியர்களால் மதிப்பிடப்பட்டது, பின்னர் பர்மிங்காமில் உள்ள அலபாமா குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அலபாமா.”

இருப்பினும், 4 மாத சிறுவன் நான்கு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்துவிட்டான், மேலும் அலபாமாவின் மான்ட்கோமெரியில் உள்ள அலபாமா தடய அறிவியல் மருத்துவ ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான்,

அவனது மரணத்திற்கு என்ன காரணம் என்று பிரேத பரிசோதனை செய்ய போலீசார் சந்தேகித்தனர் மற்றும் “குழந்தையின் மரணத்திற்கான சூழ்நிலைகள் லானெட் காவல் துறையால் விசாரிக்கப்படுகின்றன” என்று கூறினார்.

மர்மமான முறையில் பெண் கொலை
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் பெண் கொலை

மர்மமான முறையில் பெண் கொலை

மர்மமான முறையில் பெண் கொலை ,கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

தற்போதைய விசாரணைகளில் இந்தக் கொலை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வௌியாகவில்லை.

இருப்பினும், கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றையும் பொலிஸார் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் அடித்து கொலை

ஒருவர் அடித்து கொலை

ஒருவர் அடித்து கொலை ,திஹாகொடவில் மத்தியஸ்த சபை விசாரணையில் 73 வயதான ஒருவர் தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டார்

திஹாகொட பெத்தங்கஹவத்த விகாரையில் நேற்று (25) இடம்பெற்ற சமரச சபை விசாரணையின் போது 73 வயதுடைய நபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகராறைத் தீர்ப்பதற்காக வரவழைக்கப்பட்ட இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், உடல் தகராறு ஏற்பட்டது.

இந்த சர்ச்சை முதலில் திஹாகொட பொலிஸ் நிலையத்தினால் சமரச சபைக்கு அனுப்பப்பட்டது.

மோதலின் போது, ​​ஒருவர் காயமடைந்து, முதலில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் திஹாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தையை கொலை செய்த தாய்
Posted in இலங்கை செய்திகள்

குழந்தையை கொலை செய்த தாய்

குழந்தையை கொலை செய்த தாய்

குழந்தையை கொலை செய்த தாய் ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வெவ பகுதியில் உள்ள வீட்டொன்றில் நேற்று முன்தினம் இரவு குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.

புலனகம, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை எனவும், அன்றிரவு (16) குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் குழிக்குள் வீசி பின்னர் குழந்தையை மீட்டு, வீட்டின் கட்டிலில் வைத்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

video

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனை கொலை செய்த தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மகனை கொலை செய்த தந்தை

மகனை கொலை செய்த தந்தை

மகனை கொலை செய்த தந்தை ,தந்தையும், இளைய மகனும் இணைந்து மூத்த மகனை பொல்லால் அடித்துக் கொலை செய்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டன்சினன் தோட்டத்தின் கீழ் பிரிவு பகுதியில் வசிக்கும் சிக்கன் நடேசன் நவின்குமார் என்ற 25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று (30 மாலை, தந்தையும், மூத்த மகனும் அதிக மது அருந்தியுள்ளனர். பின்னர் தந்தை வீட்டிற்கு வந்தபோது, மூத்த மகன் வீட்டில் அதிக ஒலியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.

தந்தை மகனிடம் ஒலியைக் குறைக்கச் சொல்ல, கோபமடைந்த மகன் தந்தையை தாக்கியுள்ளார், பின்னர் தனது தம்பியையும் கட்டையால் தாக்க, கடைசியில் தம்பியும்,

வீடியோ

தந்தையும் சேர்ந்து குறித்த மூத்த மகனை பொல்லுகளால் அடித்து கொலை செய்துள்ளதாக கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட மூத்த மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தையும் (வயது 46), தம்பியும் (வயது 16) பொலிஸ் பாதுகாப்பில் கொத்மலை பிரதேச

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் நீதவானின் ஸ்தல பரிசோதனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி

மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை

குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை

குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை , மதுரங்குளி போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சுடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்திற்கு இடையில் இடம்பெற்ற குடும்ப சண்டை உச்ச முருகல் காரணமாகவே இந்த கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ,

அதனால் இந்த நபருக்கு குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட போலீஸ் விசாரணை பெரிய வருகின்றது .

கடந்த தினம் இடம்பெற்ற இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாக காவல்துறையின் குற்றத்தை தடுப்பு பிரிவினர் தெரிவித்து இருக்கின்றனர் .

வீடியோ

இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதும் குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு இடையில் ஏற்படுகின்ற, வன்மம் காரணமாக இந்த படுகொலைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான படுகொலை சம்பவங்கள் அதிக வன்மம் காரணமாகவே இடம்பெறுவதாக விசாரணை நடத்துகின்ற போலீசாரும் மூக ஆர்வலர்களும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த கொலை தொடர்பான காரணம் முழுமையாக தெரியவில்லை .தொடர்ந்து விசாரணைகள் இடப்பட்டு வருகின்றன.

மேற்படி சம்பவம் அந்த கிராமத்து மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை

பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை

பொலிஸார் வாகனத்தால் அடித்துக் கொலை , போலீசார் வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இலங்கையில் பதிவாகியுள்ளது.

ஹபரனை போலீஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரனை திருகோணமலை வீதியில் கடந்த தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே இந்த ஊழியர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் போலீஸ் வாகன சோதனை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே வேகமாக வந்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் சோதனை சாவடி மீது மோதி தள்ளியது இதன் பொழுது அங்கு பணியில் இருந்த இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இறந்த போலீசார் மற்றும்,காயமடைந்த நான்கு மாத குழந்தை டிப்பர் சாரதி ஆகியோர் சார்ந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வீடியோ

இந்த சம்பவமானது தற்பொழுது இலங்கை எங்கும் மிகப்பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சாரதிகள் தமது கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை செலுத்துவது அவர்கள் வீதி சாலை விதிமுறைகளை மறந்ததன் காரணமாகவே இவ்வாறான விபத்துக்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்
Posted in இலங்கை செய்திகள்

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால்,

கொலை மிரட்டலாம் மகிந்தவுக்கு புலிகளினால் , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சனுக்கு தமிழில விடுதலை புலிகளின் ஆதரவு குழுக்களினால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மொட்டு கட்சி தெரிவித்துள்ளது .

இலங்கையில் விடுதலைப் புலிகளுடைய ஆயுதப் போராட்டம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு இலங்கை ஒரு நாடாக வருகை தந்திருந்த பின்னர்.

15 வருடங்களின் பின்னர் அதனை விடுதலைப் புலிகளை அழித்து அதே மஹிந்த ராஜபக்ஷை மற்றும் அதன்

குடும்பத்தினருக்கு எவ்வாறு விடுதலைப் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது ,

வீடியோ

அது தவிர தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்த மிகப் பெரும் சாதனையாளராகவும் எதிர்வரும் 50 ஆண்டு இலங்கையில் அசைக்க முடியாத ஜனாதிபதியாக விளங்கக்கூடிய மஹிந்தா

எதற்காக 12 வருடங்களில் அந்த குடும்பம் மக்களால் துரத்தி அடிக்கப்பட்டது என்று விடயம் கேள்வியாக வைக்கப்படுகிறது ,

ஜனாதிபதி ஆட்சியர் அவர்களை இழந்து தவித்துவரும் மஹிந்த குடும்பம் தற்பொழுது மீளவும் புலிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தில் உள்ளனர் ,

அடிப்படைக் கொள்கை கோட்பாட்டின் நிலைப்பாடாகவே தற்பொழுது உருவாக்கம் என இந்த கொள்கை செயல்பாடு காணப்படுவதை காணப்படுகிறது.

பாக்கிஸ்தானிய பெண்ணின் கொடூரமான கொலை
Posted in உலக செய்திகள்

பாக்கிஸ்தானிய பெண்ணின் கொடூரமான கொலை

பாக்கிஸ்தானிய பெண்ணின் கொடூரமான கொலை

பாக்கிஸ்தானிய பெண்ணின் கொடூரமான கொலைக்கு தந்தை, மாற்றாந்தாய் யு.கே. சாரா ஷெரீப் ஆகஸ்ட் 2023 இல் லண்டனின் தென்மேற்கு நகரமான வோக்கிங்கில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.

பிரித்தானியாவில் தனது வீட்டில் இறந்து கிடந்த 10 வயது சிறுமி சாரா ஷெரீப்பின் தந்தை மற்றும் மாற்றாந்தாய், கொலைக்கு முன் அவளது

சிகிச்சையின் கொடூரமான விவரங்களைக் கேட்ட விசாரணைக்குப் பிறகு புதன்கிழமை அவரது கொலைக்கு குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

சாரா ஷெரீப் ஆகஸ்ட் 2023 இல் லண்டனின் தென்மேற்கே உள்ள நகரமான வோக்கிங்கில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார், “தீவிரமான மற்றும்

மீண்டும் மீண்டும் வன்முறை” பிரச்சாரம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

சாரா ஷெரீப் கொல்லப்பட்ட உடனேயே குடும்பம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றது, அவர்கள் செப்டம்பர் 2023 இல் துபாயிலிருந்து பறந்து பின்னர் லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் கைது செய்யப்படுவார்கள்.

வழக்கு விசாரணையின் தொடக்கத்தில் வழக்கறிஞர் பில் எம்லின் ஜோன்ஸ், சாராவுக்கு தீக்காயங்கள், உடைந்த எலும்புகள் மற்றும் கடித்த காயங்கள் உள்ளிட்ட பல காயங்கள் ஏற்பட்டதாக ஜூரிகளிடம் கூறினார்.

சாராவின் தந்தை உர்ஃபான் ஷெரீப், 43, மற்றும் அவரது மனைவி பெய்னாஷ் படூல், 30, ஆகியோர் லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தனர், அவர்கள் அதை மறுத்தனர்.

சாராவின் கொலையில் உர்ஃபான் ஷெரீப் மற்றும் படூல் ஆகியோருக்கு நடுவர் மன்றம் தண்டனை விதித்தது. சாராவின் மாமா பைசல் மாலிக், 29, கொலைக்

குற்றம் அல்ல, ஆனால் சாராவின் மரணத்திற்கு காரணமானவர் அல்லது அனுமதித்ததற்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டது.

டிச., 17ல், ஷெரீப் மற்றும் படூலுக்கு தண்டனை விதிக்கப்படும்.

விசாரணையின் தொடக்கத்தில் ஜூரிகளிடம் எம்லின் ஜோன்ஸ் கூறுகையில், உர்ஃபான் ஷெரீப் பொலிஸை அழைத்து, “அவளைக் கொல்வது எனது நோக்கமல்ல, ஆனால் நான் அவளை அதிகமாக அடித்தேன்.”

ஷெரீப் ஆதாரங்களை அளித்தார் மற்றும் ஆரம்பத்தில் சாராவின் மரணத்திற்கான பொறுப்பை மறுத்தார். சாராவை ஒழுங்குபடுத்துவதற்காக

அறைவதை அவர் ஏற்றுக்கொண்டார், ஆனால் வழக்கமான அல்லது நிலையான முறையில் அவளை அடிப்பதை மறுத்தார்.

காவலாளியை கொலை செய்து கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

காவலாளியை கொலை செய்து கொள்ளை

காவலாளியை கொலை செய்து கொள்ளை

காவலாளியை கொலை செய்து கொள்ளை நுவரெலியா, டிப்போவில் பணிபுரிந்த காவலாளி ஒருவரைக் கொன்று, டிப்போவில் இருந்த 9 இலட்சம் ரூபா பணத்தை சிலர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டிப்போவில் காவலராகப் பணியாற்றிய நுவரெலியா கல்பாய பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதான கே.லோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிலர் காவலரை கொன்றுவிட்டு டிப்போவின் அலமாரியில் இருந்த சுமார் 9 லட்சம் ரூபாயை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவலர் தனது பாதுகாப்பு அறையில் தங்கியிருந்ததாகவும், அப்போது சிலர் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கி கொன்று பணத்தை கொள்ளையிட்டுச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்தின் போது டிப்போவிற்குப் பொறுப்பான அதிகாரியும் காசாளரும் டிப்போவில் தங்கியிருந்த போதிலும் அவர்கள் உறங்கிக்

கொண்டிருந்த வேளையில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா டிப்போவில் நேற்று (05) ஓடிய பேருந்துகளின் வருமானம், வங்கிப் பணிகளுக்காக அலமாரியில் வைக்கப்பட்டிருந்ததாக நுவரெலியா டிப்போவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருவர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

இருவர் வெட்டிக் கொலை

இருவர் வெட்டிக் கொலை

இருவர் வெட்டிக் கொலை நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓயாமடுவ – நவோதகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பண்டாரகம, பேமதுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு அதிகரித்து கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓயாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஓமந்தை – பரசன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ஓமந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை கெப் வண்டியில் வந்த குழுவினர் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில், வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன், அவர் பயணித்த கெப் வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

கழுத்தறுத்து ஒருவர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கழுத்தறுத்து ஒருவர் கொலை

கழுத்தறுத்து ஒருவர் கொலை

கழுத்தறுத்து ஒருவர் கொலை கொஸ்லந்த, ஹமுதுருகந்த பிரதேசத்தில், ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனமல்வில – அரம்பேகெம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய நபரே, இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார் என, பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட நபர் கடந்த 18ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் 45 வயதுடைய மற்றுமொரு நபருடன் ஹமுதுருகந்த பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் காணாமல் போனவரின் கழுத்தை அறுத்து தலையை புதைத்ததாக, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன்படி, கொலை செய்யப்பட்ட நபரின் தலை மற்றும் உடற்பகுதியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய பெண்ணொருவரையும் கைதுசெய்துள்ளனர்

நகர சபை ஊழியர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

நகர சபை ஊழியர் கொலை

நகர சபை ஊழியர் கொலை


நகர சபை ஊழியர் கொலை தெஹிவளை கல்கிசை மாநகர சபையின் ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விமானப்படை வீரர் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி தெஹிவளை நெதிமால பிரதேசத்தில் 46 வயதுடைய அநுர கொஸ்தா என்ற நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள், சந்தேகநபர்கள் சுட வந்த மோட்டார் சைக்கிள் என்பன பல பாகங்களாக பிரித்து வேறாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (18) ஹோமாகம பனாகொட இராணுவ முகாமிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை கைது செய்தனர்.

இதன்போது, அவரது சூட்கேஸில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இதன்படி, சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலின் பிரகாரம், கொலைக்காக மோட்டார் சைக்கிளில் சந்தேக நபருடன் வந்த மற்றைய நபர் அத்துகிரிய மொரட்டுவாஹேன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது, ​​மோட்டார் சைக்கிள் பல பாகங்களாக பிரிக்கப்பட்டு பாதுக்க பிரதேசத்தில் உள்ள விமானப்படை வீரர் தங்கியிருந்த வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தற்போது வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான படோவிட அசங்க மற்றும் அசந்த குமார் என்ற லெடா ஆகியோர் வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட விமானப்படை வீரர் ஹந்தபாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், மற்றைய சந்தேக நபர் அதுருகிரிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் படுகொலை

ஒருவர் படுகொலை

ஒருவர் படுகொலை விற்பனை நிலையம் ஒன்றுக்கு வந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி அதன் உரிமையாளரைக் கொலை செய்துள்ளார்.

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவதகல பிரதேசத்தில் நேற்று (18) இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

எல்பிட்டிய மேல் நவதகல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையில் விற்பனை நிலையத்திற்கு குடிபோதையில் வந்த நபரே இந்த கொலையை செய்தது தெரியவந்துள்ளது.

சந்தேக நபரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் நவதகல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவராவார்.

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணத்தை மறுத்ததால் ஒரு டீனேஜ் பெண் அவளது பெற்றோரால் கௌரவக் கொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

திருமணத்தை மறுத்ததால் ஒரு டீனேஜ் பெண் அவளது பெற்றோரால் கௌரவக் கொலை

திருமணத்தை மறுத்ததால் ஒரு டீனேஜ் பெண் அவளது பெற்றோரால் கௌரவக் கொலை

திருமணத்தை மறுத்ததால், ஒரு டீனேஜ் பெண், அவளது பெற்றோரால் ‘கௌரவக் கொலை ,நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்ததால், ஒரு டீனேஜ் பெண், அவளது பெற்றோரால் ‘கௌரவக் கொலை’ செய்ததாகக் கூறப்படும்

ஒரு குற்றச்சாட்டில், அவள் பள்ளிக்கு வெளியே கிட்டத்தட்ட மூச்சுத்திணறிக் கொல்லப்பட்டாள்.

இஹ்சான் அலி, 44, மற்றும் அவரது மனைவி சஹ்ரா சுபி மொஹ்சின் அலி, 40, ஆகியோர் மீது கொலை முயற்சி மற்றும் கடத்தல் முயற்சி ஆகிய

குற்றச்சாட்டுகள் அக்டோபர் 18 ஆம் தேதி கைது செய்யப்பட்ட பின்னர் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதிர்ச்சியூட்டும் காணொளியில், தந்தை தனது மகளை தரையில் வைத்து, அவர் கழுத்தை நெரித்ததைக் காட்டியது.

பெயர் குறிப்பிடப்படாத 17 வயதான சிறுமி, வாஷிங்டனில் உள்ள லேசியில் உள்ள டிம்பர்லைன் உயர்நிலைப் பள்ளிக்கு ஓடிவிட்டார், அங்கு அவரது 16 வயது காதலனும் படித்தார், அவரது பெற்றோர் அவளை ஈராக்கிற்கு விமானத்தில் ஏற்ற முயன்றதை அடுத்து.

‘வேறொரு மாவட்டத்தில் உள்ள வயதான ஒருவருடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்ததற்காக அவரது தந்தை சமீபகாலமாக தன்னை கவுரவக்

கொலை செய்வதாக மிரட்டினார்’ என்று சிறுமி பொலிஸாரிடம் கூறியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

காதலனின் தந்தையான விக்டர் பார்ன்ஸ், DailyMail.com இடம், சிறுமியின் பெற்றோர், அவள் எங்கே இருக்கிறாள் என்பதை அறியக் கோரி அன்று காலை பொலிசாருடன் அவனது வீட்டிற்கு வந்ததாகக் கூறினார்.

அவள் அங்கு இல்லை என்றும், பள்ளியில் இருப்பாள் என்றும் அவர் அவர்களிடம் கூறினார், பின்னர் அவரை எச்சரிக்க தனது மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்..

கூரிய ஆயதத்தால் தாக்கி ஒருவர் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கூரிய ஆயதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கூரிய ஆயதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கூரிய ஆயதத்தால் தாக்கி ஒருவர் கொலை களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருணைதாகொடவத்த அதிவேக நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பொலொஸ்கம பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இக்கொலை நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சம்பவ இடத்தில் இருந்த வேளையில், அருகில் இருந்த கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் இருந்து ஒருவர் கோழி இறைச்சி வாங்கிக் கொண்டு சென்றதாகவும், அவரே இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் உயிரிழந்தவரின் சகோதரி பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த நபரின் வீட்டிற்குச் சென்று சோதனையிட பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், குறித்த நபரைக் கொல்லப் பயன்படுத்திய கூரிய ஆயுதம் மற்றும் அவர் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை தெற்கு பொலொஸ்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இஸ்ரேலியப் படைகளால் சின்வார் கொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலியப் படைகளால் சின்வார் கொலை

இஸ்ரேலியப் படைகளால் சின்வார் கொலை

இஸ்ரேலியப் படைகளால் சின்வார் கொலை ,ஹமாஸ் தனது தலைவரான யாஹ்யா சின்வார் காசாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதை வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது மற்றும் காசாவில் போர்நிறுத்தம்

விமான தளத்தில் சிக்கிய புதையல்
விமான தளத்தில் சிக்கிய புதையல்

மற்றும் இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை ஒரு வருடத்திற்கு முன்பு இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளை கைப்பற்றிய போராளிக் குழு விடுவிக்கப்படாது என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. படைகள்.

ஒரு நாள் முன்னதாக இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் தனது நாட்டின் இராணுவம் பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வரை போராடும் என்றும்

கடுமையாக பலவீனமடைந்த ஹமாஸ் மீண்டும் ஆயுதம் ஏந்துவதைத் தடுக்க காசாவில் இருக்கும் என்றும் கூறியதற்கு எதிராக குழுவின் உறுதியான நிலை பின்னுக்குத் தள்ளப்பட்டது.

ஜனாதிபதி ஜோ பிடனும் மற்ற உலகத் தலைவர்களும் சின்வாரின் மரணம் ஒரு திருப்புமுனையாகும், அது தடைப்பட்ட போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளைத்

திறக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வழக்கை அழுத்தினாலும், முரண்பட்ட நிலைப்பாடுகள் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பிலும் ஆழ்ந்த எதிர்ப்பைத் தொடர்கின்றன.

ஈரானால் ஆதரிக்கப்படும் ஹமாஸ் கூட்டாளியான லெபனானின் ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலின் போர் சமீபத்திய வாரங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த நிலைப்பாடு வந்துள்ளது.

மேலும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை அனுப்புவதன் மூலமும், ட்ரோன்களை வெடிக்கச் செய்வதன் மூலமும் இஸ்ரேலுக்குள் ஒரு புதிய கட்ட சண்டையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஹிஸ்புல்லா வெள்ளிக்கிழமை கூறினார்.

போராளிக் குழுவின் நீண்டகாலத் தலைவரான ஹசன் நஸ்ரல்லா, கடந்த மாத இறுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டார், இஸ்ரேல் இந்த மாத தொடக்கத்தில் லெபனானுக்கு தரைப்படைகளை அனுப்பியது.

ஹமாஸின் முன்னாள் தலைவரான சின்வார், “தன் வாழ்வின் கடைசி தருணம் வரை ஆக்கிரமிப்பு இராணுவத்தை எதிர்கொண்டு இறந்தார்” என்று கத்தாரை

தளமாகக் கொண்ட அவரது துணை, பல சுற்று போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளின் போது ஹமாஸை பிரதிநிதித்துவப்படுத்திய கலீல் அல்-ஹய்யா கூறினார்.

ஹமாஸ் பணயக்கைதிகள் எவரையும் திருப்பித் தரப்போவதில்லை, அல்-ஹய்யா, “காசா மீதான ஆக்கிரமிப்பு முடிவடைவதற்கு முன்பும் காஸாவிலிருந்து வெளியேறுவதற்கும் முன்பு” என்றார்.