Tag: சம்பவம்
அவமதிப்பு சம்பவம் SJB PS உறுப்பினர் ராஜினாமா
அவமதிப்பு சம்பவம் SJB PS உறுப்பினர் ராஜினாமா
அவமதிப்பு சம்பவம் SJB PS உறுப்பினர் ராஜினாமா ,தலைவர் அவமதித்ததாகக் கூறப்படும் சம்பவங்களைத் தொடர்ந்து, SJB PS உறுப்பினர் ராஜினாமா செய்தார்.
ஆராச்சிகட்டுவ NPP பிரதேச சபைத் தலைவர்
ஆராச்சிகட்டுவ NPP பிரதேச சபைத் தலைவர் S.J.M. ஜெயரத்னே தொடர்ந்து அவமதித்ததாகக் கூறப்படும்
சம்பவங்களைக் காரணம் காட்டி, SJB கவுன்சிலர் நிகினி அயோத்தியா அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
நேற்று சிலாபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சித் தலைவரிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த மாநாட்டை உள்ளூராட்சி மகளிர் மன்றம் ஏற்பாடு செய்தது. நவம்பர் 12 ஆம் தேதி தலைவர் தனது அலுவலகத்தில் வாய்மொழியாக அவமதித்ததாக
அயோத்தியா கூறினார், இதனால் அவர் காவல்துறையில் புகார் அளிக்கத் தூண்டப்பட்டார்.
தலைவர் சமூக ஊடகங்களில் தன்னை மேலும் அவமானப்படுத்தியதாகவும், இதனால் தாங்க முடியாத அழுத்தம் ஏற்பட்டதாகவும், பதவி விலக முடிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
விசாரணையின் போது, புகார்தாரர் தரப்பு ஒரு தீர்வை எட்ட விரும்பவில்லை என்று ஆராச்சிகட்டுவ காவல்துறையின் OIC N.U.W.K. நெலும்தெனியா கூறினார்.
இந்த வழக்கு மத்தியஸ்த வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது
இந்த வழக்கு மத்தியஸ்த வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது, அடுத்த விசாரணை நவம்பர் 16 ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
“உள்ளூர் அரசியலில் 23 வயது இளம் பெண்ணுக்கு இது ஒரு கடினமான சூழ்நிலை. பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு பொது அலுவலகத்தில் இடமில்லை.
அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இல்லையெனில், நாடு முழுவதும் உள்ள பெண்கள், கட்சி
சார்பற்றவர்களாக, இதுபோன்ற செயல்களுக்கு எதிராக ஒன்றுபடுவார்கள்,” என்று உள்ளூராட்சி மகளிர் மன்றத்தின் தலைவர் தேவி பெர்னாண்டோ ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களின் ஏராளமான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்
கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்
கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் ,கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட
விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும், அனுமதிப்பத்திரம் இல்லாத போர 12 ரக 3
துப்பாக்கிகள் பொலிஸாரினால் பறிமுதல்
துப்பாக்கிகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்ததாகவும் தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.எம்.எம். சந்திரசிறி தெரிவித்தார்.
நேற்று (25) கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் உள்ளிட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, வஹகோட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் மான்களை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது.
இவர்களில் ஒருவரின் சகோதரர் பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரியவந்துள்ளது.
மானைக் கொன்ற பிறகு அதை கொண்டு செல்வதற்காகவும், பிரதேச மக்கள் சம்பவத்தைக் கண்டதன் காரணமாகவும் சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரான பொலிஸ் சார்ஜனின் உதவியை கோரியுள்ளனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றொரு சார்ஜனின் உதவியை நாடி, தனது சகோதரரால் சுடப்பட்ட மான் இருக்கும் இடத்திற்கு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நால்வரும் கிரானேகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படும் நிலைமை காணப்பட்டதால், அவர்கள் இன்று (26) அதிகாலையில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இதேவேளை, பிரதேச மக்களால் தாக்கப்பட்டதாகக் கூறி மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் ஜீப் வாகனத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில் மான் போர 12 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக துப்பாக்கி
கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் வனப்பகுதியில் உள்ள ஒரு மானை சுட்டுக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று (26) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இதுவல்லோ தரமான சம்பவம் மகிழ்வு தந்த உணவு |Vanni mainthan
இதுவல்லோ தரமான சம்பவம் மகிழ்வு தந்த உணவு |Vanni mainthan
இதுவல்லோ தரமான சம்பவம் மகிழ்வு தந்த உணவு |Vanni mainthan குமரபுரம் பரந்தனைச் சேர்ந்த மறைந்த ஆசிரியர் அமரர் ஞானேஸ்வரி சிவராஜசிங்கம் அவர்களின் மூன்றாவது ஆண்டு (09-04-2025) நினைவாக அன்னாரின் குடும்பத்தினரால் வழங்கப்பட்டது.
இந்த அன்னதானம் வழங்கிட உதவிய லண்டனை சேர்ந்த மகன் சந்தன் அண்ணாவுக்கு எமது நன்றிகள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றோம் .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்
3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்
3நாள் உணவின்றி தவிக்கும் குடும்பம் |எலும்பு கூடான சிறுவன் |வவுனியா நடந்த சம்பவம்
பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்
பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம் , வன்னி மைந்தன் tiktok தளத்தில் ஊடாக உதவி செய்யச் சென்ற பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்களுக்கு வீட்டிற்கு ஒரு கழிப்பறை திட்டம் கட்டும் நடவடிக்கையில் வன்னி மைந்தன் தளத்தின் ஊடான செயற்பாட்டு நடவடிக்கை தீவிரமாக இடம் பெற்று வருகிறது.
இதன்போது கட்டப்பட்டுள்ள மலசல கூடத்தை வேலைகள் முடிந்து விட்டதா என கண்காணிக்கு சென்ற பொழுது இந்த சம்பவம் திடீரென பதிவாகி இருக்கிறது.
கிட்னி நோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த சோதரி திடீரென உடல்நிலை சோர்வு ஏற்பட்டு ஆட்டோவில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த காட்சிகள் கீழ் உள்ள பதிவில் காணப்படுகிறது.
அரசியல்வாதிகள் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கி தங்களது சுயநலன்களுக்கு சம்பாதித்து வருகின்ற சம்பவம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள்.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்

கொலைச் சம்பவம் பெண் கைது
கொலைச் சம்பவம் பெண் கைது
கொலைச் சம்பவம் பெண் கைது ,வெலிவேரியவில் கொலைச் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
வெலிவேரிய, எம்பரலுவ தெற்கில் 58 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான கைது செய்யப்பட்ட பெண் சம்பவத்தின் பின்னர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்த போதிலும், நேற்று பாலும்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்ட போது, அதிகாரிகள் அவளிடம் 5 கிராம் 600 மில்லிகிராம் ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்) இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுபோவிட்டியனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
3 சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம்
கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.
3 சிறுவர்களும் கடலில் நேற்று (01) பிற்பகல் நீராடிக்கொண்டிருந்த வேளையில் இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தர்கள் உடனடியாக விரைந்து 3 சிறுவர்களையும் மீட்டு, அடிப்படை முதலுதவி அளித்த பின், களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
கொழும்பு 9 இல் வசிக்கும் 16 வயதுடைய 3 சிறுவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தேரர் ஒருவரும், இரண்டு பெண்களும் குழுவொன்றினால் நிர்வாணப்படுத்தப்பட்டு பொல்லால் தாக்கப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
தேரர் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களின் ஆடைகளை கலைத்து, அவர்களை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியமை பாரிய குற்றமாகும். எவருக்கும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது.
உடனடியாக குறித்த குழுவினர் கைது செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் நவகமுவ பொலிஸ் தலைமையகத்துக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்



















