அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை
Posted in இலங்கை செய்திகள்

அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை

அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை

அம்பாந்தோட்டையில் தந்தை மீது வாள்வெட்டு மகன் கொலை ,விரைந்து வந்த பொலிசார் காயத்துடன் துடித்த தந்தையை காப்பாற்றினர் ,மகன் கொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

தந்தையின் மீது தாக்குதலை மேற்கொண்ட வாள்வெட்டு குழு பின்னர் 12 வயது மகன் மீது தாக்குதலை நடத்தியது ,

இந்த வாள்வெட்டு குழுவின் தாக்குதலில் காயமடைந்த தந்தை தொடர் சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .

காணி தகராறு காரணமாக இந்த வாள்வெட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


தந்தையை இலக்கு வைத்து வாள்வெட்டு தாக்குதலை நடத்திய குழு ,மகன் மீதும் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதில் சிறுவன் துடிதுடித்து இறந்து போனான் .

இலங்கையில் இவ்வாறான வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் ,மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு காணப்படுகிறது .

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்
Posted in உலக செய்திகள்

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

போயர் போர், 1899-1902 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால்
உயிர் இழப்பு: 100000க்கு மேல்
WW1 1914 ஆஸ்திரிய / ஹங்கேரிய கத்தோலிக்கரால்

20 மில்லியன் உயிர்கள் இழந்தன
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் மூலம் ரஷ்ய உள்நாட்டுப் போர் 1918
10 மில்லியன் உயிர்கள் இழந்தன

1919 ஆம் ஆண்டு ஃபின்னிஷ் கிறிஸ்தவர்களால் ஃபின்னிஷ் உள்நாட்டுப் போர்
38000 உயிர்கள் இழந்தன

1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பு கிறிஸ்தவர்களால் ஆப்கான் போர்
உயிர்கள் இழந்தது 2000

ஐரிஷ் சுதந்திரப் போர் 1919 கிறிஸ்தவர்களுக்கு இடையே (பிரிட்டிஷ் மற்றும் அயர்லாந்து)
13000+ உயிர்கள் இழந்தன

ஸ்பானிய உள்நாட்டுப் போர் 1936 கத்தோலிக்கர்களிடையே
500000 உயிர்கள் இழந்தன

1936 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பிரிட்டிஷ் கிரிஸ்துவர்/சியோனிஸ்டுகளுக்கு எதிராக அரபு ரெவெலட்
5000 இழந்தது வாழ்ந்தார்

இரண்டாம் உலகப் போர் 1939 இல் ஜெர்மன் கிறிஸ்தவர்களால் தொடங்கியது
85 மில்லியனைக் கொன்றது

கட்டாய பாலஸ்தீனத்தில் யூத கிளர்ச்சி, 1944-1948 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு எதிராக சியோனிஸ்ட்டால்
260+ உயிர்கள் இழந்தன

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பிரிட்டிஷாரால் 1947 இந்தியப் பிரிவினை
1 லட்சத்தை இழந்தார்

இஸ்ரேலிய-பாலஸ்தீனிய மோதல், 1948 பாலஸ்தீனத்திற்கு எதிராக சியோனிஸ்ட்டால்
16000 உயிர்கள் இழந்தன

மயிலையன் எமர்ஜென்சி 1948 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் மற்றும் பிறரால்
3000 உயிர்கள் இழந்தன

கொரியப் போர் 1950 தென் கொரியா மற்றும் வட கொரியா கிறிஸ்தவர்கள்/பௌத்த மதங்களுக்கு இடையே
2.5 மில்லியன் உயிர்கள் இழந்தன

கென்யா எமர்ஜென்சி 1952 பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால்
12000 உயிர்கள் இழந்தன

சைப்ரஸ் எமர்ஜென்சி 1955 கிரேக்க கூபே மூலம்
500 வரை

அமெரிக்க கிறிஸ்தவர்களால் வியட்நாம் போர் 1955
3.8 மில்லியன்

சூயஸ் நெருக்கடி 1956 சியோனிஸ்ட்/பிரிட்டிஷ்/பிரெஞ்சு மூலம் எகிப்து
6000 பேர் வரை உயிர் இழந்துள்ளனர்

பிரச்சனைகள் 1969 ஐரிஷ் கத்தோலிக்க கொலைகள்

அர்ஜென்டினா மற்றும் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களுக்கு இடையே 1982 ஆம் ஆண்டு பால்க்லாந்து
900 உயிர்கள் இழந்தன

ஐரோப்பாவில் அப்பாவி முஸ்லிம்களை கொன்று குவித்த கிறிஸ்தவர்களால் 1992 போஸ்னிய போர்.

மேமர் 2016ல் பௌத்தர்களால் ரோஹிங்கியா இனப்படுகொலை
உயிர்கள் 10000 உயிருடன் எரிக்கப்பட்டன, 1 மில்லியன் இடம்பெயர்ந்தன

ரோஹிங்கியா இனப்படுகொலை

போஸ்னியப் போர், 1992
உலகில் ஏராளமான மக்கள் கிறிஸ்துவ பயங்கரவாதிகளால் கொலை இதோ பட்டியல்

Error: View 9293b2au4w may not exist
மனைவியை வெட்டி கொன்ற கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை வெட்டி கொன்ற கணவன்

மனைவியை கணவன் வெட்டி கொன்ற சம்பவம் கந்தேநுவர, ஹுனுகல பகுதியில் இடம்பெற்றுள்ளது,மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்

கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டத்தை அடுத்து ஆத்திரம் கொண்ட கணவன் மனைவியை கத்தியால் பலமுறை குத்தியும் வெட்டி கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

கொலைக்குற்ற சாட்டில் மனைவியை கொன்ற கணவன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

இலங்கையில் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து செல்கின்றமை மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த கொலை வழக்கு தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்
Posted in இலங்கை செய்திகள்

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

கலஹா, நீலம்ப, யோகலெச்சாமி தோட்டத்தில் காணி தகராறு காரணமாக நேற்று (12) நபர் ஒருவர் தனது இளைய சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

கிருஷ்ணசாமி கருணாநிதி என்ற 35 வயதுடைய நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

இவருடைய சகோதரர் ஏசுதாசன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சிறையில் இருந்து விடுதலையாகி அனுராதபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.

காணி தகராறு தம்பியை கொடூரமாக கொலை செய்த அண்ணன்

இந்நிலையில், கடந்த வியாழன் இரவு தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை திருமணமாகாத தம்பி விற்றதாக கூறிவிட்டு கருணாநிதியின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தார்.

பின்னர் அயலவர்கள் தலையிட்டு மோதலை சமரசம் செய்தனர், ஆனால் அது தோல்வியடைந்தது.

இரவு முழுவதும் இடம்பெற்ற தகராறு அதிகாலை 2.00 மணி முதல் அமைதி நிலவியதால் சந்தேகமடைந்த அயலவர்கள், அது தொடர்பில் தேடிய போது கருணாநிதி காயங்களுடன் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததுள்ளார்.

தடியடி, கூரிய ஆயுதங்கள், கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்ணனை தாக்கிவிட்டு தப்பியோடிய ஏசுதாசனை அயலவர்கள் பிடித்து கலஹா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல்

குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைது செய்ய முயன்ற விசேட அதிரடிப்படை அதிகாரி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் கடந்த10 ஆம் திகதி மாலை நடைபெற்றது.

குற்றச் செயல் ஒன்றைப் புரிவதற்காக தயார் நிலையில் இருந்த நபர் ஒருவரை கைது செய்வதற்காக விசேட அதிரடிப்படையினர் மன்னார் பெரிய கரிசல் பிரதேசத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர்.

இதன் போது குறித்த சந்தேக நபரிடமிருந்து மூன்று கூரிய வாள்கள், கூரிய கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து 40 வயதான சந்தேக நபரும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட நபரின் உறவினரான 17 வயது இளைஞன் ஒருவர் கூரிய கத்தியால் விசேட அதிரடிப்படையினர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்த முயன்றதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது காயத்திற்கு உள்ளான விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 17 வயதுடைய இளைஞன் பாடசாலை செல்லும் மாணவன் எனவும் தெரிய வந்துள்ளது

தாயால் கொலையாளியான மகள்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

தாயால் கொலையாளியான மகள்

தாயால் கொலையாளியான மகள்

கர்ப்பத்தில் அன்னை போதை உண்டாள்
கருவிலே பிள்ளை சிதையானாள்
குன்றிய மூளை வளர்வினால்
குற்றியே நண்பியை கொன்று நின்றாள்

இத்தகை இடர் இவள் புரிந்தால்
இதற்கு தாயே துணை நின்றாள்
பார்க்கையில் கண்ணீர் ஓடிகிறது
பாவை நிலை எண்ணி கலங்கிறது

அன்பிலா அன்னை வளர்த்து விட்டால்
அகிலத்தில் அந்தோ துடித்து விட்டாள்
விட்டு விலகிட பின்னடித்தாள்
விதியென்ற சதியிலே சிக்கி விட்டாள்

கொடும் துயர் சிறை சென்று விட்டாள்
கொடுமையாய் இறந்திட காத்திருக்காள்
வன்மத்தை நெஞ்சிலே தாங்கி விட்டால்
வலிகளை வாழ்வில் யார் தடுப்பார்

இத்தகை நிலை இனி வேண்டாம்
இவ் நிலை இன்றே தடுக்க வேண்டும்
இவ் வையம் ஆளும் மாந்தர்களே
இரங்கி இறவா அன்பாக வேண்டும் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-04-2024

யுடுப்பர் தோழர் சரவணன் டீகோட் ,பதிந்த குற்ற காட்சி ஒன்றை பார்த்து கலங்கிய பொழுது

வீடியோ
https://www.youtube.com/watch?v=x1_dT-k7qn8

மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று (03) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறங்குதுறை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர், கொலையை செய்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஈச்சலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் சடலமாக மீட்பு

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் தங்கொட்டுவ, கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகெந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே நேற்று (31) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அவரது மகன் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (28) காலை உயிரிழந்துள்ளார்.

லுணுகம்வெஹர பிரதேசத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை

கத்தரிக்கோலால் குத்தி ஒருவர் கொலை

கத்தரிக்கோலால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே உயிரிழந்தார்.

கடந்த 26 ஆம் திகதி சந்தேகநபருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து கத்தரிக்கோலால் தாக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் தாக்குதலில் பலத்த காயமடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கொலையுடன் தொடர்படைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்

பெற்ற குழந்தையை கொலை செய்த தாய்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கற்ப்பமடைந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் பிள்ளையை கொலை செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த விடயம் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தெரியபபடுததப்பட்ட நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்துள்ள நிலையில் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த குழந்தையை புதைத்த இடத்தில் நீதிபதி முன்னிலையில் சோதனை நடவடிக்கைகள் இன்று இடம்பெறவுள்ளது.

மிக ஒழுக்கம் மிக்க சமூகமாக இருந்த வன்னி மண்ணின் விடுதலைப்புலிகளின் காலத்துக்கு (2009) பின்னர் போதைப்பொருள் பாவனை மற்றும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள் மிகவும் அதிகரித்து வருவதோடு பாலியல் துஸ்பிரயோகம் தவறான உறவுகள் என சமூகத்தின் போக்கு மாறி வருகிறது.

எனவே மக்கள் விழிப்படைந்து எமது சமூகத்தின் மதிப்பை பாதுகாக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 21 கொலைகள்

30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 21 கொலைகள்

2024 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 12 ஆம் திகதி வரை பல்வேறு பகுதிகளில் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை

தேரர் படுகொலை சந்தேகநபர் சுட்டுக் கொலை

கம்பஹா மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

அத்தனகல்ல யடவக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதத்தை மீட்க சந்தேகநபரை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் ஒருவர் கடந்த ஜனவரி 23 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேகநபர் மொனராகலை ஹம்பேகமுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் இருப்பதாக ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான சந்தேக நபர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மாமனாரை கொலை செய்த மருமகன்

மாமனாரை கொலை செய்த மருமகன்

குடும்ப தகராறு காரணமாக மருமகன் , மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (08) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மயில்குளம் பகுதியைச் சேர்ந்த 81 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மருமகன் தனது மாமனாரை இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தனது மாமனாரை கொலை செய்த மருமகன், பின்னர் சில மருந்து மாத்திரையை உட்கொண்டதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மருமகன், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலைசெய்ய பட்டுள்ளார்.

பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரில் ஒருவர் குறித்த நபர் மீது திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் கத்தி குத்துக்கு இலக்கான நபர் படுகாயத்துடன் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடியுள்ளார்.

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

அதன்பின், வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், இருவரும் இறந்தவரின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர் மத்துகம வெத்தவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அப்பகுதியின் பிரதான வீதிக்கு அருகில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் கோபமடைந்த பிரதேசவாசிகள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வெலிபென்ன பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

தனிப்பட்ட தகராறால் ஒருவர் அடித்துக்கொலை

தனிப்பட்ட தகராறால் ஒருவர் அடித்துக்கொலை

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் பொல்லால் அடித்து கொல்லப்பட்டார்.

இக்கொலை நேற்று (12) சிறிபாகம – தெற்கு மல்கெல்ல – தவனாவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மல்வத்தை – இலுக்வத்தை – கிலிமலை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய 30 வயதுடைய நபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறிபாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

முல்லேரியாவில் ஒருவர் கழுத்தறுத்து கொலை

முல்லேரியா, வெகந்த பிரதேசத்தில் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலையாளி யார் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் வீட்டில் நேற்று (09) இரவு மதுபான விருந்து ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

பிக்கு கொலை துப்பாக்கியுடன் குற்றாவளி கைது

பிக்கு கொலை துப்பாக்கியுடன் குற்றாவளி கைது

பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த கொலையா புரிந்த நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார் .

மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியை சேர்ந்த பிக்குவே படுகொலை செய்ய பட்டு இருந்தார் .

இந்த பிக்கு படு கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணைகளின் பொழுதே கொலையை புரிந்த குற்றவாளி தாக்குதலுக்கு பயன் படுத்திய துப்பாக்கியதுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் சேமிப்பாக காலங்களாக இவ்வாறான துப்பாக்கி கலாச்சாரங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு பெண் ஒருவர் கொலை

கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு பெண் ஒருவர் கொலை

கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பஹா பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (05) மாலை இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்கு பெத்தேவெவ, சூரியவெவ பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்காதலில் ஏற்பட்ட தகராறு பெண் ஒருவர் கொலை

இதேவேளை, மாவத்தகம, உதானகம என்ற இடத்தில் வேனில் வந்த இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை வழிமறித்து வேனை நிறுத்தி தடியால் தாக்கிய பின்னர் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்கள் கொகரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 மற்றும் 53 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் படுகொலை

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் படுகொலை

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று (11) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் படுகொலை

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை இடம்பெற்ற இடத்திலேயே சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.