Tag: கைதிகள்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் பொலிசாரால் கைது
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தப்பி ஓடிய கைதிகள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர் ,சவகச்சேரி நீதிமன்றுக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே சிறை கைதிகள் தப்பி ஓடியுள்ள்ளனர் .
திருட்டு குற்ற சாட்டுக்கள் அடைப்படையில் பொலிஸாரால் கைது செய்ய பட்டு ,யாழ்ப்பாண சிறைச்சாலையில் அடைத்து வைக்க பட்டவர்களே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .
இவ்வாறு சிறையில் இருந்து தப்பித்தவர்களை தேடிய போலீசார் ,மீள அவர்களை கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் முன்னிலை படுத்தினர் .
அவ்வாறு தப்பித்த கைதிகளுக்கு மேலதிக சிறை தண்டனையும் ,குற்ற பணமும் அறவிட பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
Featured
வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை
வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை
வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம் (13) 10 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக் கைதிகள் இன்று (13) காலை விடுதலை செய்யப்பட்டனர்.
சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன, பிரதான சிறைச்சாலை பிரதானி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.
Featured
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் கைதிகள் தப்பி ஓட்டம்
அனுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
திறந்தவெளி சிறைச்சாலையின் சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றிய இரண்டு கைதிகளே, இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனுராதபுரம் – கிரவஸ்திபுர மற்றும் களனி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கைதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு
கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் இஸ்ரல் அறிவிப்பு
கைதிகள் தங்கியுள்ள பகுதி அருகில் தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு.
இஸ்ரேல் பாதுகாப்பது அமைச்சர் ஹமாஸ் போராளிகள் சிறைபிடித்து சென்றுள்ள கைதிகள் தங்க வைக்க பட்டுள்ள மறைவிடங்கள் அருகில் தாக்குதலை நடத்துவதாகவும் ,அவர்ககாலை விரைவில் மீட்டு ஓடுவோம் என அவர் முழங்கியுள்ளார்
கிட்ட தட்ட நமக்கு மாதங்கள் போர் முடிவுக்கு வரும் இவ்வேளையில் ,இதுவரை இஸ்ரேலிய இராணுவத்தால் கைதிகள் விடுவிக்க படவில்லை .
ஆனால் தொடர்ந்து போரில் வெற்றி பெற்று கைதிகளை மீட்டு வந்து விடுவோம் என இஸ்ரேல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 15 கைதிகளைத் தவிர ஏனையோர் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு நிலையம் தெரிவித்துள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தின் செயற்பாடுகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தப்பிச் சென்ற கைதிகள் தொடர்பில் அறிவிப்பு
நேற்று முன்தினம் (12) பிற்பகல், கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகள் குழுவிற்குள் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் கைதிகள் குழுவொன்று காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 05 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை
கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை
கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் 011 247 27 57 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.
கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை
அதுமட்டுமின்றி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
மேலும் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து பயணத் திட்டங்கள் இன்று இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூர சேவைகளுக்காக சுமார் 100 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், இன்றும் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில்
ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்சா தெரிவித்தார்.
சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் ஹமாஸ் அறிவிப்பு
சிறை கைதிகள் விடுவிக்க மாட்டோம் என ஹமாஸ் தலைமை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .
அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்த படுவது நிறுத்த பட்டால் மட்டுமே கைதிகள் விடுதலை என ஹமாஸ் அறிவிப்பு வெளியானதால் ,இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைவு .
தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள அவர் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை இது என்பது குறிப்பிட தக்கது .
கைதிகள் கண்டுபிடிப்பு அமெரிக்கா|hostage found|
கைதிகள் கண்டுபிடிப்பு அமெரிக்கா|hostage found|
கைதிகள் கண்டுபிடிப்பு அமெரிக்கா ,
மீட்பு நடவடிக்கை ஆரம்பம் ,மாற்றமடையும் களமுனை
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
- வன்னி மைந்தன் உதவி திட்டத்தை குழப்ப சதி
- தங்கத்தை சிறுநீரை குடிக்கவும் அர்ச்சுனா சர்ச்சை பேச்சு
ஹமாஸ் சிறை பிடித்த கைதிகள் 57 பேர் உயிரிழப்பு
ஹமாஸ் சிறை பிடித்த கைதிகள் 57 பேர் உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பினாரால் சிறை பிடித்து வைக்க பட்டிருந்த
கைதிகளில் 57 பேர் உயிரிழந்துள்ளனர் .
இவர்கள் தங்கி இருந்த பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி தாக்குதலில் அவர்கள் மறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தமது குடும்ப உறவுகள் உயிர் பிரிந்த துயர செய்தி கேட்டு அவர் தம் குடும்பம் கண்ணீரில் தத்தளித்து வருகிறது .
இனிய கைதிகளுக்கும் இது போன்ற நிலை ஏற்பட கூடுமோ என கைதிகள் உறவுகள் கலக்கத்தில் உறைந்துள்ளனர்
ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்
ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்
ஹமாஸ் சிறைபிடித்த கைதிகள் எண்ணிக்கை 240 ஐ விட அதிகம் என
இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது
240 குடும்பங்களுக்கு இது உறுதி படுத்த பட்டு தெரிவிக்க பட்டுள்ளது .
ஆனால் அவர்களிடம் மேலும் நூற்றுக்கு மேலானவர்கள்,
இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஹமாஸிடம் உள்ள சிறைக்கைதிகள் அதிகம் இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேலுக்குள் நுழைந்த கமாஸ் மக்கள் வாகனம்
,மற்றும் இராணுவத்தினரின் வாகனங்களை எடுத்து சென்றனர் .
.அதிலேஏ இஸ்ரேல் இராணுவத்தினர் சிறை பிடித்து செல்ல பட்டனர் .
ஆக்கிரமிப்பு எல்லையோரத்தில் குடி இருந்தவர்கள் இஸ்ரேல் இராணுவத்தின்
குடும்பங்களை சேர்ந்தவர் என்பதாலையே இஸ்ரேல் இராணுவம்
அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரியவருகிறது .
ஆனால் இந்த கூற்றை இஸ்ரேல் இராணுவம் ஏற்றுக்கொள்ளவில்லை .
- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்
- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்
- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்
- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்
- இத்தாலியில் மக்களுக்குள் நுழைந்த கார் 8பேர் காயம்
- சீனா பறக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்
- ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
- இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர் குறித்த போப்பின் நிலைப்பாட்டை ஈரான் அதிபர் பாராட்டினார்
காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பலி
காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பலி
அடையாளம் காணப்படாத நோய் நிலைமை காரணமாக காலி சிறைச்சாலையில் கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மேலும் 05 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த தொற்று நிலை கண்டறியப்படவில்லை எனவும், மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக சிறைச்சாலையில் முகக்கவசம் பயன்படுத்தப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலிby நிருபர் காவலன்
கைதிகள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
கைதிகள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
நீதிமன்றுக்கு அழைத்து செல்ல படவிருந்த இரண்டு கைதிகள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் .
இவ்வாரு தப்பி சென்ற கைதிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
மொரவக்க நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்படவிருந்த இரண்டு கைதிகள் இவ்விதம் தப்பி சென்றுள்ளனர் .
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை
நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை
இலங்கையில் இடம்பெறவுள்ள நத்தார் பண்டிகையை முன்னிட்டு ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 300 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
நீண்டகாலமாக சிறைகளில் அடைக்க பட்டிருந்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் இவ்வாறு விடுவிக்க படுகின்றனர் .
தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்
தப்பிய கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு ஓட்டம்
இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் பொழுது சிறைகளில் இருந்து தப்பித்து சென்ற
கைதிகள் கடல்வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதனால் தற்போது இந்தியா கடலோர பாதுகாப்பபு இறுக்க பட்டுள்ளது
தப்பியவர்களை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்
பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருந்த பிணைக்கைதிகள் 187 பேர் மீட்பு
பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருந்த பிணைக்கைதிகள் 187 பேர் மீட்பு
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் கடத்தி வைத்திருந்த பிணைக்கைதிகள் 187 பேரை அந்நாட்டு போலீசார் பத்திரமாக மீட்டனர்.
நைஜீரியா போலீஸ் அதிரடி – பயங்கரவாதிகள் கடத்திய 187 பிணைக்கைதிகள் மீட்பு
மீட்கப்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமியர்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களைக் கடத்தி அவர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசை மிரட்டி தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் பெண்கள், சிறுவர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இதற்கிடையே, அவர்களை பத்திரமாக மீட்க பயங்கரவாதிகளுடன் மாநில அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனாலும் பயங்கரவாதிகள் அவர்களை விடுவிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அப்பாவி மக்கள் சிபிரி வனப்பகுதிக்குள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 100-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் சிபிரி வனப்பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாரைக் கண்டதும் மக்களை சிறைப்பிடித்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, பிணைக்கைதிகளாக இருந்த 187 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
சிறைச்சாலைகளில் கைதிகள் உண்ணாவிரதம்
சிறைச்சாலைகளில் கைதிகள் உண்ணாவிரதம்
மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெலிகட சிறைச்சாலையின் கூரையில் மேல் ஏறி கைதிகள் சிலர் போராட்டம் நடத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்
தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்
தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்
செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது
இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து
போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது
கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை
கோட்டா மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை
இலங்கையின் 73 டாவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைகளில் அடைத்து
வைக்க பட்டிருந்த பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய
சுமார் 146 கைதிகள் ,ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை
செய்ய படுகின்றனர் என சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது
இவ்வாறு விடுவிக்க படுபவர்களில் தமிழர் பத்து வீதம் மட்டுமே
என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது
கைதிகள் பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்
கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்
ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விமானங்கள் கடத்தப்படல் மற்றும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படல் போன்ற சந்தர்ப்பங்களில் சர்வதேச விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கையில் முதன்முறையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவர் என்ற ரீதியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், மேற்படி புதிய நியமனங்கள் தக்க தருணத்தில் வழங்கப்ப்பட்டுள்ளது எனவும் இவை பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் பாரிய பொறுப்புகளை உள்ளடக்கியது எனவும் வலியுறுத்தினார்.
9/11க்குப் பின்னர் உலகில் விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெளிவுபடுத்திய பாதுகாப்பு செயலாளர், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்படி அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.
பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக இன்று நியமனம் பெற்ற இவர்கள் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட பயிற்சிநெறியில் பங்குகொண்டவர்களாவர்..
இந்த நியமனங்கள் அனைத்தும் சர்வதேச சிவில் விமான அமைப்பு உறுப்பு நாடுகளிடையே நடைமுறையில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விதிமுறைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இதற்கமையவே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை பிரதி பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த தெரிவித்தார்.
இந்த நியமனம் தொடர்பில் 2016ம் ஆண்டு முதல் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழு கூட்டங்களின் போது தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பணயக்கைதிகள் தொடர்பாக நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான ஹேக் மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கையும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன் சட்ட விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளின் தொழில்துறை சம்பந்தமான கோரிக்கைகளை பூர்த்தி செய்து அவர்களின் திறன்களை விருத்தி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமிய அபேவிக்ரம உறுதியளித்தார்

கொரனோ வேளையில் சிறை கைதிகள் அரை நிர்வாணமாக்கி கொடுமை
கொரனோ வேளையில் சிறை கைதிகள் அரை நிர்வாணமாக்கி கொடுமை
உலக நாடுகளில் பரவி வரும் கொரனோ வைரஸானது வேகமாக பரவி வரும் நிலையில்
ஒருவருக்கு ஒருவர் இடைவெளியானது மூன்று மீட்டர் இடை வெளி இருக்க வேண்டும் என தெரிவிக்க படுகிறது
இவ்வாறான சூழலில் லத்தின் அமெரிக்காவின் El Salvador சிறையில் கைதிகள்
அரை நிர்வாணமாக்க பட்டு ,கைகள் கட்ட பட்டு ,தலைகள் குனியும் நிலையில்
வைக்க பட்டு ,நிலத்தில் இருத்தி வைத்துள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
இவ்வாறு மிக நெருக்கமாக மனிதர்கள் இருப்பின் நோயானது விரைவாக
தொற்றி விடும் அபாயம் உள்ளது ,அதனை கருத்தில் கொள்ளாது அந்த நாட்டு
அரசு சிறைக் கைதிகளை இவ்வாறு நடத்தி கொள்வது கண்டிக்க தக்கது என
மனித உரிமை நிறுவனங்கள் குரல் எழுப்பியுள்ளன,
தற்பொழுது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது



















































