மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம்

மன்னாரில் குழந்தையை பறிக்க சதி திட்டம் ,மன்னர் மருத்துவமனையில் பலியான பட்டதாரி இறந்த பெண்ணுடைய குழந்தை இனம் வெளியில் எடுத்துச் சென்று அந்த குழந்தையின் உயிரை மாய்க்கும் நடவடிக்கையில் செந்தூரன் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டு வருவதாக மருத்துவர்கள் சிலர் கூட்டணி சுமத்தி இருக்கும்.

அர்ஜுனன் ராமநாதன் மன்னருக்கு சென்று பாதிக்கப்பட்ட தீர்வினை வேண்டி கொடுத்து அவர் சிறை சென்றிருந்தார்

அவர்ன காலப்பகுதியில் தற்பொழுது செந்துரனுக்கு எதிராக மக்கள் சர்வதேச அளவில் கொதித்து கிளம்பி எழும்பி வருகின்ற நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுடைய குழந்தை மற்றும் தாயாருக்கு நோய்களை ஏற்படுத்தி

அவர்களுக்கு அவதூறுகளை பரப்பி சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை அழித்தொழிப்பு நடவடிக்கையிலான சூழ்ச்சியாக இது பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு உதவி செய்த வருவதாக தெரிவித்து கொண்டு இருக்கும் இவர்கள் டேனீஸ்வரன் சத்தியமூர்த்தி மற்றும் சார்ஸ் நிர்மல் நாதன், செல்வமகள் போன்றவள் வழிநடத்தப்படுவதாகவும் மக்கள் மத்தியில் கூட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

இவர்கள் தமது தேர்தல் நிலம் கருதியே நிவாரண செயற்பாடுகள் ஈடுபட்டு வருவதாகவும் அதனை அடுத்து தற்பொழுது மக்கள் மத்தியில் இருந்து இவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்கின்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

அர்ச்சனா ராமநாதருக்கு ஆதரவாக சாட்சிகள் இருக்கின்ற பட்டதாரி பொண்ணுடைய தாயும் மற்றும் அந்த சிசுமை தற்போது பாதிப்புக்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இவர்களது வேலைகளில் யாரும் விழுந்து விட வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட மக்கள் இந்த சாதி வேலையில் இருந்து இந்த குடும்பத்தினை காப்பாற்றி பாதுகாக்க வேண்டும் என அர்ச்சனா ராமநாதன் தனது முகநூல் பக்கத்தில் இப்படி குறிப்பாக வெளியிடலாமே குறிப்பிடத்தக்கது..

கடலில் பிறந்த குழந்தை
Posted in இலங்கை செய்திகள்

கடலில் பிறந்த குழந்தை

கடலில் பிறந்த குழந்தை

கடலில் பிறந்த குழந்தை ,யாழ்ப்பாணம் நெடுந்தெடு பகுதியைச் சேர்ந்த பொன் ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டதை எடுத்து நெடுந்தொகை பிரதேச வைத்தியசாலையில் இருந்து கப்பல் மூலசம் யாழ்ப்பாணம் அழைத்து வர அழைத்துவரப்பட்டார்.

அப்பொழுது நடந்தது குறிக்கட்டுவான் கடந்து யாழ்ப்பாணம் வருவதற்காக படகில் வேற எப்பொழுது அவர் படகிலேயே குழந்தையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஆம்புலன்ஸில் மருத்துவர் மற்றும் மருத்துவ மாது ஒருவர் உடன் இருந்ததாகவும் ,அதனால் படகிலேயே அவர் குழந்தையை பெற்றதாக, தற்பொழுது தாயும் சேயும் யாழ் போதனை வைத்தியசாலையில் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் மாபாப்பேறு வாட் மிகவும் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்ற பொழுதும், இவ்வாறு கடல் வழியாக கர்ப்பிணி தாய்மார்களே அழைத்து செல்கின்ற பொழுது,

கடல் வழியில் குழந்தை பிறக்கின்ற சம்பவம்

அவர்கள் கடல் வழியில் குழந்தை பிறக்கின்ற சம்பவம் இந்த ஆண்டு இடம்பெற்ற இரண்டாவது சம்பவமாக பார்க்கப்படுகின்றது.

இலங்கையினுடைய சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சர்கள் மற்றும் வடமாகத்தினுடைய அமைச்சராக வழங்குபவர்கள் இதில் கவனத்தை செலுத்தி ,

அங்கு சத்திரசிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை நிறுவுவதன் மூலமாக, இவ்வாறான கடலில் குழந்தைகள் பிறப்பதையும் ,கர்ப்பிணிகள் உடைய பிரசவ வழிகளை குறைத்துக் கொள்ளவும் ,இது ஏதுவாக இருக்கும் என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பிராந்திய வைத்தியசாலைகள் மிகவும் தரமானதாக உயர்த்தப்படுகின்ற பொழுதுதான், மக்களும் அதனை பராமரிக்கின்ற வைத்தியசாலைகளுக்கு மிகவும் பெரும் புகழும் கிடைக்கும் எனவும் ,

அதனால் இந்த வைத்தியசாலையை உரிய முறையில் புனரமைத்து இவ்வட்டன சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது தடுப்பதற்கான ,வழிவகைகளை சுகாதார அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்கின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Posted in இலங்கை செய்திகள்

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது

குழந்தையை தாக்கிய சந்தேகநபர் கைது ,சமூக ஊடகங்களில் வைரலான குழந்தை ஒன்று கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புல்மோட்டை அரிசி

இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குறித்த நபரும் மேலும் தாக்குதல் சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் இரு பெண்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான 4 1/2 வயதுடைய குழந்தையும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி
Posted in இலங்கை செய்திகள்

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வடமராட்சி துன்னாலை

இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பிரசவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் இவ்வாறான சம்பவங்கள் செல்வதற்கு கரணம் என்ன அறிந்து .

பாதுகாப்பான பாலியல் கல்வி முறையை இலங்கையில் மாணவர்களுக்கு வாழங்குவதன் ஊடாகவே ஒரு சண்டஹ்தியின் துன்பியல் வாழ்வியலை தடுக்க முடியும்

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
Posted in உலக செய்திகள்

நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதந்த குழந்தை

நீச்சல் தடாகத்தில் சடலமாக மிதந்த குழந்தை

காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமது விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், தேடிய போது, குழந்தை நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டது.

உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கொழும்பு – தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த குழந்தை

கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த குழந்தை

இரண்டரை வயது குழந்தை ஒன்று கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ். இளவாலை வசந்தபுரம் பகுதியில் பதிவாகியுள்ளது.

நேற்று (09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற நிலையில், தாயார் வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குழந்தை தவறி வீழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள குழந்தையின் சடலம், உறவினர்களிடம் இன்று (10) கையளிக்கப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

80 குழந்தைகளை கடத்தல் கண்ணீரில் பெற்றோர்கள்
Posted in உலக செய்திகள்

80 குழந்தைகளை கடத்தல் கண்ணீரில் பெற்றோர்கள்

80 குழந்தைகளை கடத்தல் கண்ணீரில் பெற்றோர்கள்

ஜம்ஃபாராவில் கொள்ளையர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் செய்து,
80 குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்

ஏப்ரல் 7, வெள்ளிக்கிழமை அன்று ஜாம்ஃபாரா மாநிலத்தில்,
உள்ள ட்சேஃப் உள்ளாட்சிப் பகுதியில் 80குழந்தைகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர்

இவ்வாறு கடத்த பட்டவர்களில் , 12 முதல் 17 வயதுக்குட்பட்ட
சில குழந்தைகள் காட்டு பகுதி வழியாக கடத்தப்பட்டனர்.

காலை 8:00 மணியளவில் விறகுகளை எடுத்துக்கொண்டிருந்த போது ,
அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்து ,
காட்டுக்குள் கடத்தி இழுத்து சென்றனர் .

கடத்த பட்ட தமது பிள்ளைங்களை ,உறவுகளை விடுவிக்க பெற்றோர்கள் அரசைவேண்டுதல் விடுத்துள்ளனர் .
தொடரும் கொள்ளை கும்பல் அடடூழியத்தால் ,அபாயகர பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
Posted in உலக செய்திகள்

கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண் ,மருத்துவ உதவி, ஸ்கேன் எதுவும் இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்

நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர்

கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார்.

இவருக்கு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது,

சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன். இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன.

அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று கொண்டேன் என கூறியுள்ளார். இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.

ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை

எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார்.

ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர செய்தது என கூறுகிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ

ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன.

கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.

ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள்

கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக

தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு,
இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் என்று அவர் கூறுகிறார்.

    Posted in உலக செய்திகள்

    ஒரே நாளில் குழந்தைபிரசவித்துள்ள இரட்டை சகோதரிகள்

    ஒரே நாளில் குழந்தைபிரசவித்துள்ள இரட்டை சகோதரிகள்

    ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

    கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதியின் மகள்கள்

    ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர்.

    இந்தநிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர்.

    அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் 11ஆம் திகதி ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

    கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்று

    கொள்ள விரும்பினர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அன்றிரவு ஸ்ரீலெட்சுமிக்கும் பிரசவ வலி ஏற்பட்டு, அவரும் அதே மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண்

    குழந்தையை பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

    இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை

    ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே இரத்தப்பிரிவு என இந்தியச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

      Posted in Uncategorized

      குழந்தை பிரசவித்த தாய் கொரோனாவுக்கு பலி!

      குழந்தை பிரசவித்த தாய் கொரோனாவுக்கு பலி!

      யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண், குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

      யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார்.

      அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

      செப்டெம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

      அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அன்றைய தினமே பெண் குழந்தை பிறந்துள்ளது.

      தாயாருக்கு தொடந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று (15) அவர் உயிரிழந்துள்ளார் என இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

      சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை முன்னெடுத்தார்.

        Posted in Uncategorized

        இந்தியாவில் வருகிறது ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டம்

        இந்தியாவில் வருகிறது ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டம்

        ஒரு குடும்பம், ஒரு குழந்தை கொள்கையை பின்பற்றினால் மக்கள் தொகையை குறைக்க முடியும் என மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

        ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டம்’ அவசியம் தேவை… மசோதாவை பரிந்துரை செய்கிறது இந்திய குடியரசு கட்சி

        குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.

        ‘எனது தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, ‘ஒரு குழந்தை கொள்கையை’ ஆதரிக்கிறது. இந்த கொள்கையை பின்பற்றினால் மக்கள்தொகையை குறைக்க முடியும்

        . இதற்காக ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை’ உறுதிசெய்யும் சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டும். பிரதமரை சந்தித்து பாராளுமன்றத்தில் இதற்கான மசோதாவை கொண்டு வர

        எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்படும். கட்சி சார்பில் இதற்கான சட்ட முன்வடிவு பிரதமரிடம் வழங்கப்படும். சட்டத்தை கொண்டு வர முயற்சிப்போம்’ என்று அத்வாலே தெரிவித்தார்.

        இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே மக்கள் அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மை பற்றி பேச முடியும் என்று சமீபத்தில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல்

        கூறிய கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அத்வாலே, இந்து மக்கள் தொகை குறைய வாய்ப்பில்லை என்றார்.

        “இந்து மக்கள் தொகை குறையும் என்ற கேள்வி இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்துக்கள் இந்துவாகவும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு நபர்கள் மதம்

        மாறுகிறார்கள். அரசியலமைப்பானது மக்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான

        உரிமையை அளிக்கிறது. ஆனால் யாரும் யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது’ என்று அத்வாலே குறிப்பிட்டார்.

        Posted in Uncategorized

        கொவிட் தொற்று -குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி

        கொவிட் தொற்று -குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி

        கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

        பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண வைபவங்கள் நடக்காத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

        முன்னர் வருடம் ஒன்றிற்கு 350,000 குழந்தை பிறப்புக்கள் நாட்டில் பதிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

        கொரோனா தொற்று காரணமாக 3,500 பேர் உயிரிழந்துள்ள போதிலும் 350,000 குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

          Posted in Uncategorized

          2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – அரசு அதிரடி

          2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – அரசு அதிரடி

          உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்து உள்ளது.

          2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை – உத்தரபிரதேச அரசு அதிரடி

          இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு அரசு நலத்திட்டங்களை குறைத்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தடை உள்ளிட்டவை உத்தரபிரதேச அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு வரைவு மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

          உத்தேச மக்கள் தொகை கட்டுப்பாட்டு மசோதாவின் வரைவின் படி, உத்தரபிரதேசத்தில் இரு குழந்தைக் கொள்கையை மீறும் எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலில்

          போட்டியிடுவதிலிருந்தும், அரசு வேலைகளில் பதவி உயர்வு பெறுவதிலிருந்தும் அல்லது எந்தவொரு அரசாங்க மானியத்தையும் பெறுவதிலிருந்து தடை செய்யப்படுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

          2 குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும் 4 பேருக்கான ரேஷன் கார்டு மட்டுமே வழங்கப்படும், அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது ஆகிய அம்சங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

          உத்தரபிரதேச மாநில சட்ட ஆணையம் (யுபிஎஸ்எல்சி) இணையத்தளத்தில் வரைவு மசோதா குறித்து கூறி இருப்பதாவது:-

          மாநில சட்ட ஆணையம், உத்தரபிரதேச மாநில மக்கள் தொகை கட்டுப்பாட்டில் மற்றும் மக்கள் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. அதற்காக உத்தேச மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதாவை தயாரித்து உள்ளது.

          வரைவு மசோதாவை மேம்படுத்த பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் கேட்கப்படுகின்ற அதற்கான கடைசி தேதி ஜூலை 19 என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

          இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் :-

          இரண்டு குழந்தை விதிமுறைகளை பின்பற்றும் அரசு ஊழியர்களுக்கு முழு சேவையின் போது இரண்டு கூடுதல் ஊதிய உயர்வுகள் கிடைக்கும், மகப்பேறு அல்லது விடுப்பு 12 மாதங்கள், முழு

          சம்பளம் மற்றும் அலவனஸ் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதலாளியின் பங்களிப்பு நிதியில் மூன்று சதவீதம் அதிகரிக்கும்.

          ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்பவர்களுக்கு இவை தவிர மேலும் பல சலுகைகள் வழங்கப்படும் எனவும் வரைவு மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          அரசாங்கத்தின் சேவைகள்:-

          வரைவு மசோதா அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் மகப்பேறு மையங்கள் நிறுவப்படும் என்று கூறுகிறது. இந்த மையங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கருத்தடை

          மாத்திரைகள், ஆணுறைகள் போன்றவற்றை விநியோகிக்கும். சமூக சுகாதார பணியாளர்கள் மூலம் குடும்பக் கட்டுப்பாடு முறைகள் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதோடு, மாநிலம்

          முழுவதும் கர்ப்பம், பிரசவம், பிறப்பு மற்றும் இறப்புகளை கட்டாயமாக பதிவு செய்வதை உறுதி செய்யும்.

          அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மக்கள் தொகை கட்டுப்பாடு தொடர்பான கட்டாய பாடத்தை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும் என அதில் கூறப்பட்டு உள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு இரட்டை குழந்தை

          கொரோனா தொற்றுக்குள்ளான தாய்க்கு இரட்டை குழந்தை

          முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றுக்குள்ளான 23 வயதுடைய தாய் ஒருவருக்கு

          ஆரோக்கியமான நிலையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததன் காரணமாக சிசேரியன் சத்திர சிகிச்சை முறைப்படி பிரசவம் பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

          இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 170 கர்ப்பிணி பெண்களுக்கு

          அதிகமானவர்கள் முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

          Posted in உலக செய்திகள்

          பிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி- மருத்துவத்துறையினர் ஆச்சரியம்

          பிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி- மருத்துவத்துறையினர் ஆச்சரியம்

          சிங்கப்பூரில் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்திகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

          பிறந்த குழந்தைக்கு கொரோனா எதிர்ப்பு சக்தி- மருத்துவத்துறையினர் ஆச்சரியம்
          :

          சிங்கப்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மார்ச் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது அவர் கர்ப்பமுற்றிருந்தார். இந்நிலையில் இப்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில்

          , மருத்துவர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்யும்போது, குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

          ஆனால், அந்த குழந்தையின் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இது ஒரு அபூர்வ நிகழ்வாக மருத்துவர்களால் கருதப்படுகிறது. காரணம், கொரோனா தொற்றிய ஒரு

          கர்ப்பிணிப்பெண், தான் கர்ப்பமுற்றிருக்கும்போதோ அல்லது பிரசவிக்கும்போதோ தன் கருவிலிருக்கும் குழந்தைக்கு

          கொரோனாவை பரப்ப முடியுமா என்பது இதுவரை தெரியவில்லை என உலக சுகாதார அமைப்பே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

          இன்று வரை, ஒரு கர்ப்பிணியின் கருவிலிருக்கும் குழந்தையைச் சுற்றியிருக்கும் திரவத்திலோ அல்லது அவரது தாய்ப்பாலிலோ கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை.

          இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் ஒரு அபூர்வ சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள்,

          அவர்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அவர்களது உடல் கொரோனா எதிர்ப்பு சக்திகளை உருவாக்கியிருந்தது.

          அவர்களது பெற்றோர் ஒரு திருமணத்திற்கு சென்றபோது அவர்களுக்கு கொரோனா தொற்றியது, ஆனால், அந்த குழந்தைகள்

          அந்த திருமணத்துக்கு செல்லவில்லை. அந்த குழந்தைகள் மூவரும், தங்கள் பெற்றோருக்கு கொரோனா இருந்தாலும், அவர்களுடன் நெருக்கமாகவே இருந்துள்ளனர்.

          ஆனால், அவர்களுக்கு கொரோனா தொற்றவில்லை, அதே நேரத்தில் அவர்களுக்கு கொரோனா ஆன்டிபாடிகள் மட்டும் இருந்துள்ளன.

          இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், அந்த குடும்பத்திலுள்ள அனைவரது எச்சிலும் கொரோனா எதிர்ப்பு சக்திகள் இருப்பது தெரியவந்துள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்

          இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்

          இலங்கை மாத்தறை வைத்தியசாலையில் வயிற்று வலி என வந்த ஆன் ஒருவர் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது .

          தடியுடன் காணப்பட்ட இவர் குழந்தையை பெற்ற சம்பவம் மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .


          ஆண்கள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட இவர் பின்னர் பெண்கள் மகப்பேறு அறைக்கு மாற்ற பட்டுளளார் .

          கடும் வயிற்று வலியால் அவதி பட்ட இவர் குழந்தையை பெற்ரூ எடுத்துள்ளார் பெண்ணாக இருந்த இவர் தன்னை

          ஆணாக மாற்றி கொண்டு செயல் பட்ட நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாம்

          இவர் ஆட்டோ ஒட்டி வந்துள்ளார் ,என தெரிவிக்க பட்டுள்ளது

          இவரை பார்ப்பதற்கு குறித்த மருத்துவமனையில் மக்கள் கூடி வருகின்றனராம்

          இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்
          இலங்கையில் குழந்தை பெற்ற ஆண்
          Posted in சினிமா

          குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா

          குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா

          பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, நினைத்த நேரத்தில் குழந்தைபெற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

          நினைத்த நேரத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது – தீபிகா படுகோனே காட்டம்
          தீபிகா படுகோனே


          இந்தி நடிகை தீபிகா படுகோனேயும், நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு, இத்தாலியில் இருக்கும் லேக் கோமாவில் திருமணம் செய்து கொண்டனர்.

          அவ்வப்போது கர்ப்பம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் தீபிகா, நான் கர்ப்பமானால், அதை மறைக்க முடியாது; ஒன்பது மாதமானால், நான் சொல்லாமலேயே என்

          உடம்பும், வயிறும் உங்களுக்கு காட்டி விடப்போகிறது. இதில் மறைப்பதற்கு எதுவுமில்லை; மறைக்கவும் வாய்ப்பில்லை என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

          இந்நிலையில், சபாக் இந்தி திரைப்படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் பிசியாக இருக்கும் தீபிகா படுகோனே, சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை

          சந்தித்தார். அவரிடத்தில் கர்ப்பம் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது.

          இதனால் கடும் கோபம் அடைந்த தீபிகா படுகோனே கூறியதாவது:- நான் இப்போது கர்ப்பம் தரிக்கும் நிலையில் இல்லை. சினிமாவில் என்னுடைய முழு கவனமும் இருக்கிறது.

          தீபிகா படுகோனே

          நானும், ரன்வீரும் சினிமாவில் நடிப்பதைதான் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறோம். குழந்தைகள் மீது எங்களுக்கு ஆர்வமும், பாசமும் உண்டு.

          எங்களுக்கும் குழந்தைகள் வேண்டும் தான். அதற்காக, நினைத்த நேரத்தில், குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாது. எப்போது, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமோ,

          அப்போது, முடிவெடுத்து செயல்படுவோம். அதை உங்களிடமும் தெரிவிக்கிறேன். அடுத்த ஒன்பதாவது

          மாதத்தில், நான் சொல்லவில்லை என்றாலும், அதை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

          இவ்வாறு அவர் கூறினார்.