Tag: ஏவுகணை
சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி
சுட்டு வீழ்த்த பட்ட துருக்கி விமானம் -லிபியா இராணுவம் பதிலடி
துருக்கியின் ஆள் இல்லாத விமானம் ஒன்று லிபியாவின் Trahuna சிட்டிக்கு
மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்ட பொழுது அதனை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது
அதில் அந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியது ,இரண்டு நாட்களுக்கு முன்னர்
லிபியாவின் வானூர்தியை துருக்கி சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
தொடர்ந்து இரு நாடுகளும் பரஸ்பர பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளன
இதனால் அங்கு பெரும் போர் முண்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது .

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்
குண்டுகளால் அதிரும் களமுனை – தப்பி ஓடும் மக்கள்
சிரியாவின் தெற்கு இட்லி பகுதியில் தற்பொழுது பலத்த மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
ஏவுகணகள்,மோட்டார் குண்டுகளினால் அந்த பகுதி அதிர்ந்த வண்ணம் உள்ளது
ரசியாவின் ஆள் இல்லாத உளவு விமானம், வேவு பார்த்து கட்டளையிட ,துருக்கிய கிளர்ச்சி படைகள் உள்ள நிலைகள் மீது பல்
குழல் எறிகணை தாக்குதல் ,ஏவுகணை தாக்குதல் என்பன அகோரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன
துருக்கிய படைகள் தொடர்ந்து இட்லி பகுதி முன்னரங்க நிலைகள் நோக்கி நகர்ந்த வண்ணம் உள்ளனர்
அதே போல ரசியா இராணுவம் தமது டாங்கிகள் ,கவச வாகனங்கள் ,விமானங்கள் ,ஏவுகணைக என்பனவற்றை இட்லி ,மற்றும் அப்பலோ பகுதி நோக்கி நகர்த்தி வருகின்றனர்
தற்போது இடம்பெறும் இந்த மோதல்கள் விரைவில் இறுக்கமான சண்டைகளை தோற்றுவிக்கும் என இராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
பரஸ்பரம் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் ,இங்கே வெற்றி பெற போவது அமெரிக்கா கூட்டணியில் உள்ள
துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகளா …? அல்லது ரஷியா மற்றும் சிரியா,ஆதரவு கிளர்ச்சி படைகளா என்பதே கேள்வியாக உள்ளது
ஆபத்தான கட்டத்தை நோக்கி களமுனை நகர்ந்து செல்கிறது என்பதே அங்கிருந்து வரும் தகவல்களாக உள்ளன
இந்த போரின் அச்சம் காரணமாக தற்போது மக்கள் இடம்பெயர்நது வருகின்றனர் ,அவர்கள் தப்பி ஓடும் காட்சிக வெளியாகிய வண்ணம் உள்ளதை அவதானிக்க முடிகிறது

அமெரிக்காவிடம் இருந்து $63 மில்லியனுக்கு ஆயுதங்களை வாங்கி குவிக்கும் இந்தியா
அமெரிக்காவிடம் இருந்து $63 மில்லியனுக்கு ஆயுதங்களை வாங்கி குவிக்கும் இந்தியா
இந்தியா அரசானது அமெரிக்காவில் இருந்து $63 மில்லியனுக்கு டோர்பெடோஸ் ஏவுகணைகளை வாங்கி குவிகிறது ,
இரண்டாம் உலக யுத்தத்தில் இதன் பாவனை திறன் அதிகமாக காண பட்டது, அவ்வாறான கொடிய பாவனை ஆயுதங்களையே இந்தியா வாங்கி குவிகிறது
ஆண்டு தோறும் பல மில்லியன் டொலர்களை தமது பாதுகாப்புக்கு இந்தியா
ஒதுக்கி வருகிறது ,அவ்வாறு ஒதுக்கிய நிதியில் இருந்து தற்பொழுது இந்த ஏவுகணைகளை வாங்கி கொள்கிறது ,
மேலும் மிகையொலி விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் என்பனவற்றையும் கொள்வனவு செய்யும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளது
சீனாவை போன்று ஒரு பொருளை வாங்கி பின்னர் அதனை காப்பி அடித்து
அதே போல ஒன்றை உருவாக்கும் செயல் பாட்டில் இந்தியா ஈடுபட கூடும் என நம்ப படுகிறது

50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா video
50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா
உலக முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷியா உடைந்ததன் பின்னர்
தற்பொழுது அமெரிக்கா முதலாவது வல்லாதிக்க சக்தியாக விளங்கி வருகிறது
அதன் பின்னர் அரை நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவை வீழ்த்திட யாராலும் முடியவில்லை .
அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ரசியா தனது ஆயுத பலத்தை புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது
தற்போது தான் தயாரித்த, வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை திடீர் சோதனை செய்து பார்த்துள்ளது
சிரியாவில் இவ்விதமான வான் இடைமறித்து ஏவுகணைகள் செயல் இழந்து
காணப் பட்டதான குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் மிக பெரும் சோதனை ஒன்றை நடத்தியது
அதில் மோஸ்க்கோ எல்லை அருகே இந்த திடீர் பயிற்சி சோதனையை நடத்தியது
இதில் தாம் ஏவிய ஐம்பது ஏவுகணைகளை அது குறி தவறாது இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது
ரசியாவின் இந்த திடீர் மீள் சோதனை வெள்ளோட்டம் ஏன் என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது ,
இதற்கு ரசியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்க படும் புட்டினிடம் தான் பதில் உள்ளது

5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளம் இரண்டின் மீது ஈரான் 22 ஏவுகணைகளை வீசியது ,இதில் இரண்டு வெடிக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்தது ,
அங்கு எவரும் கொலை செய்யப்படவோ காயமடையோவோ இல்லை என அமெரிக்கா வழமையாக கூறுவது போன்று சொல்வதெல்லாம் ,உண்மையே என சொன்னது …?
எமது நோக்கு அங்குள்ள இராணுவத்தினரை கொல்வது அல்ல ,அங்குள்ள அமெரிக்கா படைகளின் முக்கிய சாதனங்களை அழிப்பது ,செயல் இழக்க வைப்பது ,
அதற்காகவே நாங்கள் அந்த இலக்கை தெரிவு செய்தோம் . அமெரிக்கா இராணுவத்தை படுகொலை செய்வதாயின் எமது இலக்கு தெரிவு வேறாக இருந்திருக்கும் 48
மணித்தியாலத்திற்குள் முதலாவதாக 500 இராணுவத்தை கொன்று இருப்போம் ,அதன் பின்னர் நான்காயிரம் முதல் ஐயாயிரம் படைகளை கொன்று குவித்திருப்போம் .
அதனை செய்து முடிக்க எம்மால் இயலும் நாம் அதனை செய்யவில்லை, எமது இலக்கு அதுவல்ல .
எமது நாட்டுக்கு அமெரிக்கா பாயங்கர வாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது ,எனவே இங்கிருந்து அவர்கள் முற்றாக விலக வேண்டும் என்பதே எமது கொள்கை நிலைப்பாடு .
அது தவறின் அவர்கள் நாம் முன்னர் தெரிவித்தது போன்று அங்கு நடக்கும் என மீளவும் மிரட்டல் விடுத்துள்ளார் .
அதேவேளை அந்தர் பெல்ட்டி அடித்து கதையை மாற்றியுள்ளார் .அதாவது உங்களை கொல்வதை விட
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்
உங்கள் சாதனங்களை அழித்தால் நீங்களாகவே கிளம்பி விடுவீர்கள் என்பது அவரது புதிய நிலைப்பாடாக மாற்றம் பெற்றுள்ளது .
அப்படியானால் இனிவரும் காலங்களில் அமெரிக்காவின் முக்கிய ராடார் நிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்க
படலாம் எனவும் ,அவர்கள் விமானங்கள் ,ஏவுகணைகள் உள்ள பகுதி அழிக்க ஈரான் தயராகி வருகிறது .
இதனை முன் எச்சரிக்கையாக மீளவும் ஈரான் அமெரிக்காவிற்கு தெரிவிக்கிறது ,இது ஒரு சாதாரண மிரட்டல் என அமெரிக்கா கருதினால் அது தவறான ஒரு
கணிப்பாக அமையும் ,இப்பொழுதே அமெரிக்கா ஈரான் தொடர்பாக தவறான கணிப்பை செய்ததன் விளைவே இந்த பெரும் முறுகளுக்கு காரணம் என இராணுவ நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர் .
அது தவிர ஐக்கிய நாடுகள் சபையில் எமது சுய பாதுகாப்பிற்காக நாங்கள் ஈரான் தளபதி சுலைமானியை படு கொலை செய்தோம் என அமெரிக்கா தெருவித்தது ,
ஆனால் எமது இரண்டு விமான தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது ,அது பெரும் படுகொலையை புரிந்திட முயன்றது என அமெரிக்கா தெரிவிக்க
அதற்குபதிலடியாக ஐக்கிய நாடுகள் சபையோ ஈரான் தமது சுய பாதுகாப்பிற்கு இந்த தாக்குதலை மேற்கொண்டது என
அமெரிக்காவின் விளக்கத்தை அப்படியே வழங்கியுள்ள நிகழ்வு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
செம காமெடியாக இது அமைந்துள்ளது ,அதாவது ஐக்கிய நடுகள்சபை அமெரிக்கா மீதே தவறு என்பதை சொல்லலாமால் சொல்லி விட்டது .
ஈரானில் வைத்து பயணிகள் விமானத்தை ரசியாவே சுட்டு வீழ்த்தியது என்றது ,ஆனால் இதில் ஒரு மர்மம் உள்ளது
,எதியோப்பிய ,கொலண்ட்,மலேசிய விமானங்கள் வீழ்ந்த பொழுது அதில் பயணித்த பயணிகள் உடல்கள் சுக்குநூறாகின .
ஆனால் இங்கே நிகழ்வு அப்படியான ஒன்றாக தெரியவில்லை ,அறுபதுக்கு மேற்பட்ட மனித உடல்களில் எதுவித காயங்களும் இன்றி மீட்க பட்டுள்ளனர் .
அப்படி என்றால் அதிர்வில் அவர்கள் இறந்திருக்க வேண்டும் ,என்றே நோக்க முடிகிறது .
இவர்கள் கூறுவது போன்று ஏவுகணை தாக்குதல் நடத்தி இருப்பின் அந்த விமானம் முற்றாக வெடித்து சிதறி இருக்கும்..?
,எரிபொருள் தங்கியினால் உடல்கள் எரிந்து சாம்பலாகி இருக்கும் அல்லவா ..?
அப்படி அதற்கு சாத்தியம் உள்ளது எனின் எப்படி இந்த உடல்கள் முழுமையாக கிடைக்க பெற்றிருக்க முடியும் ..?
இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு விமானத்தை இறக்கிட முன் எரிபொருளை விமானி ஊற்றி இருப்பாரா .?
இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன .அத்துடன்
இப்பொழுது அமெரிக்கா ஈரான் ரசியாவின் ஏவுகணையை பாவித்து விமானம் மீது தாக்கல் நடத்தியது என்றும் அது
தவறுதலாக விமானத்தில் பட்டு விட்டது ,இது ஒரு விபத்து என தெருவித்து சடைகிறது ,ஏன் இந்த அவசர சடையல் ..?
5000 அமெரிக்கா இராணுவத்தை கொல்வோம் -ஈரான் தளபதி முழக்கம்
எது எப்படியோ மத்திய கிழக்கில் ஈரான் கூட்டணியுடன் பின் கதவு வழியாக ரசியா நுழைகிறது .
ஆடுகளம் பலமாக தலைகீழ் நிலையை அமெரிக்காவிற்கு ஏற்படுத்த போகிறது
ஈரான் கூறிய புதிய கருத்து அமெரிக்கா சாதனங்கள் என்றால் ,அமெரிக்காவிடம் தற்போது அங்கு இல்லாத அந்த
புதிய தொழில் நுட்பத்தை ஈரான் பயன் படுத்த போகிறதா ..?
என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இதுவரை தமக்கு சிறிய சேதம் ஏற்பட்டது ,என கூறிய உலக சண்டியர் அமெரிக்கா ,அந்த விமான தளத்தின் சேதங்களை காண் பிக்கவே இல்லை .
அப்படி என்றால் ஈரான் கூறியதன் படி அவர்களது வான் மறிப்பு ஏவுகணைகள் செயல் இழக்க வைக்க பட்டுள்ளன .
அல்லது ஈரானின் பலாஸ்டிக் ஏவுகணை ,செய்மதியுடன் கூடிய புதிய சிக்கனல் வழிகாட்டி மேம்பட்ட தொழில் நுட்பம் இந்த ஏவுகணையில் ஈரான் பொருந்தியுள்ளது .
அதனால் தான் என்னவோ அமெரிக்காவின் ரேடார்களில் இந்த ஏவுகணை வரவு காண்பிக்க படமால் போயுள்ளது ,
அதனால் அமெரிக்காவினால் இந்த ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியாது தோற்று போயுள்ளது .
இஸ்ரேல் அவசர அவசரமாக லேசர் ஏவுகணை அறிவிப்பை நேற்று வெளியிட்டதில் இருந்து ,அதாவது ஈரானால்,ஈராக்கிய இரண்டு
விமான தளங்கள் தாக்கிய சில மணித்துளிகளில் அந்த விடயத்தை அது அறிவித்திருந்தது .
இப்பொழுது ஈரானின் இராணுவ தளபதி சாதனங்களை அழித்தல் எமது பிரதான நோக்கு என்பதாக தெரிவித்துள்ளது
அமெரிக்கா தோல்வியை சந்தித்துள்ளதை இடித்துரைக்கிறது .
நேற்றைய தினம் அமெரிக்கா ஜனாதிபதி பேயறைந்த முகத்துடன் வாடிய நிலையில் ,சோரவிழந்து காணப்பட்டார் .
ஈரான் கூறியது போல அமெரிக்காவின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டோம் என்பது டிரம்பின் முகத்தில் அதன் வலியை காண முடிந்தது .
அதுபோலவே இராணுவ தளபதிகள் முகத்திலும் அந்த அறை ,அதை அவர்கள் முகத்தை சிவக்க வைத்ததை அவதானிக்க முடிந்தது .read more
எரிபொருள் வரும் நாட்களில் அதிக விலையை எட்டி பிடிக்கும், இப்பொழுதே கலன்களில் வாங்கி வைத்து
கொள்ளுங்கள் ,நிலவரம் ,கலவரமாக மாற்றம் பெற போகிறது .பெரும் பதட்டம் ஏற்பட போகிறது .
களம் தடம் மாறி செல்கிறது ,இரு வல்லரசுகள் போட்டி இப்பொழுது ஆரம்பித்துள்ளது
இலங்கையில் எரிபொருள் பதுக்கல் இடம்பெற்றாலும் இடம்பெறலாம் .அங்கும் போராட்டமும் அரசுக்கு எதிராக வெடித்தாலும் வெடிக்கலாம் .
ஈரான் தாக்குதல் இலங்கையை பாதிக்க போகிறது ,தேர்தல் நேரம் கோட்டா காணாமல் போனாலும் போகலாம் .
- வன்னி மைந்தன் –

அமெரிக்கா தூதரகம் மீது-மீளவும் ஈரான் ஏவுகணை தாக்குதல்
ஈராக் -அமெரிக்கா தூதரகம் மீது-மீளவும் ஈரான் ஏவுகணை தாக்குதல்
கடந்த தினம் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக கிரீன் சோன் green zone பகுதியில் இரண்டு Katyusha rockets தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,
இந்த தாக்குதலில் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .
இந்த பகுதியில் தான் அமெரிக்கா உள்ளிட்ட பல் நாட்டு படைகள் குடி கொண்டுள்ளன .
இவரக்ளை இலக்கு வைத்தே ஈரான் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
இங்கிருந்து அமெரிக்காவின் இறுதி சிப்பாய் உள்ளவரை அவர்கள் மீது தாக்குதல் நடத்த படும் மேலும் அவர்களை
கண்ணுறங்க விட மாட்டோம் என ஈரான் புரட்சி படை அறிவித்துள்ளது
ஈரானின் தேசிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா படைகள் இங்கு நிலைகொண்டுள்ளது பெரும் அச்சுறுத்தல் என்ற நிலையில் ஈரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .
ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க படும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து சில மணி
நேரங்களில் இந்த தாக்குதல் அமெரிக்கா படைகள் மீது நடத்த பட்டுள்ளது .
நாங்கள் பெறுமதியான இராணுவம் ,எம்மிடம் நவீன ஏவுகணைகள் ,மற்றும் கைபர் ரக ஏவுகணைகள் உள்ளன என டிரம்ப் நினைவூட்டி மிரட்டி சென்றார் .
அவற்றை எல்லாம் பொருட் படுத்தாது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
மேலும் ஜிகாத் தாக்குதல் நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது
அமெரிக்கா பாயங்கரவாதிகளிற்கு எவரெல்லாம் அடைக்கலம் கொடுக்கிறார்களோ அவர்கள் மீது எல்லாம்
தாக்குதல் நடத்த படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்து தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,
இவ்விதம் தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேல் ,அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தும் நிலை மேலும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்கா அதிபர் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் தங்கத்தின் விலை சடுதி என வீழ்ச்சி கண்டது
,அதேபோலவே கச்சாய் எண்ணெயின்விலையும் வீழ்ச்சி அடைந்ததது .
ஆனால் ஈரான் தாக்குதலை அடுத்து மீளவும் அவை ஏற்றம் காணலாம் என எதிர் பார்க்க படுகிறது
எமது பழிவாங்குதல் தொடரும் ,அமெரிக்கா பயங்கரவாதிகள் உறக்கம் கொள்ள முடியாது என ஈரான் மீளவும் சூளுரைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது .
இந்த தாக்குதல்களை அடுத்து மீளவும் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதட்ட அதிகரித்துள்ளது,
இஸ்ரேல் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தும் அபாயம் மீளவும் எழுந்துள்ளது
நாளை அமெரிக்காவின் மறு பதிலடி எவ்விதம் இருக்கும் என்பதை பார்த்தே மிகுதி விடயங்கள் தெரியவரும் .
அமெரிக்கா ஈரான் மீது திறந்தவெளி போரை நடத்தும் நிலை ஏற்படும் என்றே எதிர்பார்க்க படுகிறது .
கழியும் நிமிடங்கள் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன .
- வன்னி மைந்தன் –

இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம்
உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம், உலகில் இடம்பெற்று முடிந்த இரண்டாம் உலக மக யுத்தம் முடிவடைந்தன பின்னர் அமெரிக்கா விமான தளத்தின் மீது
நாமே முதன் முறையாக இவ்வாறான பாரிய தாக்குதலை நடத்தியுள்ளோம் .
இது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உலக சண்டியர் அமெரிக்காவுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது ,மேலும்
அமெரிக்காவின் நடவடிக்கையை அடுத்தே எமது மறு கட்ட நகர்வுகள் தீர்மானிக்க படும் ,தொடுக்க படும் என
ஈரானிய பாதுகாப்பு மந்திரி தமது அரச சேவை செய்திக்கு முழங்கியுள்ளார் ,
எம்மை சீண்டியது அமெரிக்காவே ,எனவே அமெரிக்கா பயங்கரவாதிகள் எமது மண்ணிலும் அதனை
அண்மித்த பகுதியிலும் நிலை கொள்ள முடியாது எனவும் அவர் சூளுரைத்துள்ளார் .
ஈரான் ஏவிய ஏவுகணை ஐநூறு கிலோ வெடி குண்டுகள் கொண்டவை எனவும் இவர்கள் அழைக்கும் பலாஸ்டிக் ஏவுகணை இதுவல்ல வென தெரிவிக்க பட்டுள்ளது .
ஈரான் ஏவிய ஏவுகணைகளில் மூன்று விதமான ஏவுகணைகள் உள்ளதாக கணிப்பிட படுகிறது ,அதில்
விமானத்தை போன்ற வடிவிலான ஏவுகணைகள் செலுத்த பட்டுள்ளனவாம் .
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் அமெரிக்கா மீது வெற்றிகர தாக்குதல் – ஈரான் முழக்கம்
அப்படி என்றால் அந்த ஏவுகணை மேலதிகமாக குண்டுகளை தாங்கி சென்று தாக்கவல்ல ஏவுகணையாக இது அமைய பெற்றுள்ளது
ஈரான் வழங்கிய இந்த அடியை அடுத்து ஈராக்கில் நிலை கொண்டுள்ள மூன்று நாடுகள் அவசரமாக தமது
இராணுவத்தை அங்கிருந்து வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது .
இது அமெரிக்காவிற்கு மிக பெரும் இராயத்தந்திர நெருங்கடியை தோற்றுவித்துள்ளதுடன் .
ஈரானின் இந்த தாக்குதலுடன் புதிய உலக அரசியல் ஒழுங்கு விதி கட்டமைப்பு உருவாகும் நிலையை இது தோற்றுவித்துள்ளது .
நாம் எமது மக்களை பாதுகாக்க எம்மாலான அனைத்து வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம் என ஈரானிய
பாதுகாப்பு அமைச்சர் அமீர் கடாமி அதிரடியாக அறிவித்துள்ளார் .
அப்படி என்றால் ஈரான் அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும் பகுதியை நோக்கி தனது பார்வையை திசை திருப்பியுள்ளது
உளவு வட்டாரங்களில் ஈரான் வழங்கிய இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .அவை பீதியை கிளப் பியுள்ளன
- வன்னி மைந்தன் –

கொழும்பு – லண்டன் விமான பயணங்களில் திடீர் மாற்றம்
இலங்கை -கொழும்பு – லண்டன் விமான பயணங்களில் திடீர் மாற்றம்
ஈரான் நாட்டின் தலைநகரில் உக்கிரேன் நாட்டின் பயணிகள் விமானம் 180 பேருடன் வீழ்ந்து நொறுங்கியது ,இது சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
இதனை அடுத்து மத்திய கிழக்கிற்கான விமான போக்குவரத்தில் பாரிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன .
அந்த வகையில் இலங்கை விமான சேவைகள் லண்டன் விமான பயண வழிப் பாதையில் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன
ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
ஈரான் ஏவுகணை நகர்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
ஈரான் தமது நாட்டு இராணுவ தளபதி சுலைமானி அமெரிக்கா படைகளினால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது முக்கிய இதுவரை பாவிக்கப்படாத
ஏவுகணைகள்
உள்ளிட்டவையை சில பகுதிக்கு நகர்த்தியுள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .
எதிர்வரும் இரவு அல்லது அதற்கு பின்னராக அமெரிக்கா படைகள் , இராணுவ தளங்கள் மீது ஈரான் கடும் தாக்குதலை
உளவு விமானம் மூலமோ அல்லது ஏவுகணைகள் மூலமோ தாக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை எதிர் பார்க்கிறது .
அதை அடுத்து ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவம் மற்றும் ஜோர்டான் ,மற்றும் சவூதி மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதாக தெரிவிக்கிறது .
அமெரிக்கா இராணுவ உளவு தகவலின் படி இன்று இரவு ,அதிகம் இந்த தாக்குதல் நடத்த படலாம் என எதிர் பாரக்கிறது
அப்படி அமெரிக்கா உளவுத்துறை அடித்து கூறுவதற்கு ஏதோ கரணம் உள்ளது ,
அவர்கள் வழமையான முகவர்,இடங்கள் ,ஊடாக ஏதோ ஈரானின் தாக்குதல் செய்திகள் கசிந்துள்ளது .
அதனால் ஈரானின் உளவு விமானங்களை சுட்டு வீழ்த்த ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளதாகவும் ,ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் ,அவர்க்ளின்
ஏவுகணைகளை இடையில் மறித்து வெடிக்க வைக்கவும் வல்ல வான் காப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .
ஈரான் இராணுவ தளபதியின் உடல் நல்லடக்கம் செய்ய பட்ட நிலையில் ,அந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர் ,213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
ஈரான் ஏவுகணை நகர்த்தல் – தாக்குதல் இரவு நடக்கலாம்
இவ்வாறான நிலையில் ஒட்டு மொத்த ஈரான் மக்களும் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்ற கோசத்தை முன் வைத்துள்ளனர் .
அந்த மக்களின் கட்டளையை ஏற்று ஈரான் பழிவாங்கும் தாக்குதலை நிச்சயம் நடத்தும் என்றே அமெரிக்கா ,இஸ்ரேல் உளவுத்துறைகள் எதிர் பார்க்கின்றன
ஈராக்கில் இருந்து ஒரு தொகுதி இராணுவத்தை ஜெர்மன் விலக்கியது ,ஆனால் பிரிட்டன்,பிரான்ஸ் ,நாட்டு படையினர் இங்கேயே தொடர்ந்து நிறுத்த பட்டுள்ளனர் .
அமெரிக்கா படைகள் உள்ளிட்ட பல நாட்டு படைகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதே இன்றைய ஈராக்கின் நிலையாக உள்ளது .
இன்று ஐக்கிய நாடுகள் சபை செயலர் அவசரமாக ஈராக்கிய அதிபருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது
எழுந்துள்ள பதட்டமான நிலை தொடர்பாக ஆராய்ந்துள்ளதுடன் ,தீர்க்கமான நகர்வு நோக்கி பேசியுள்ளார் .
ஆனால் ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவின் வால் ,பொம்மை ,என்பதும் இதுவரை ஒரு நாட்டில் வைத்து ஒரு நாட்டினது இராணுவ தளபதியை கொன்றமைக்கு எந்த
கண்டனத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வில்லை என்பதையும் கவனிக்க .
அமெரிக்கா தான் நினைத்தை செய்யும் யாரும் அதனை தட்டி கேட்க முடியாது என்பதே அதன் நோக்காக உள்ளது
ரசியா அதிபர் சிரியாவில் தற்போது நிலை கொண்டுள்ளதும் ,அவசரமான அந்த நாட்டின் அதிபருடன் பேசியுள்ளதும் முக்கிய இராணுவ படைத்துறை தளபதிகள் உடனிருபதும்
எதையோ சொல்கிறது . .
சிரியாவில் ஈரான் ஆதரவு வழங்கி வருகிறது ,அங்கு இஸ்ரேல் ,அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் போர் புரிந்து வருகிறது .
இப்பொழுது சிரியாவில் நிலை கொண்டுள்ள ரசியா படைகள் ஈரானுக்கு உதவுமா ..?
அதன் நிலை என்ன என்பதை வரும் நாட்கள் அடையாளம் காண்பிக்கும்
தொடர்ந்து மத்திய கிழக்கில் பதட்டம் நிலவுகிறது .எவ்வேளையும் எங்கும் தாக்குதல் நடக்கலாம் .
அமெரிக்கா உளவுத்துறை கூறியுள்ளதில் இருந்து ஏதோ நடக்க போகிறது .
ரசியா மத்திய கிழக்கை அதாவது சிரியா,துருக்கியில் இருந்து ஈராக் வரை வளைத்து போடவுள்ளது ,என்பதையே புட்டின் திடீர் வருகை காண்பிக்கிறது
,தென் ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பல ப்படுத்தியுள்ள ரசியா தற்போது மத்திய கிழக்கையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அமெரிக்காவிற்கு கும்மி அடிக்க போகிறது போலும் ,
காரணம் நகர்வுகளை அவ்வேறே செல்கிறது ,அமெரிக்கா பொல்லை கொடுத்து அடி வாங்கியுள்ளது போல் தான் தெரிகிறது
- வன்னி மைந்தன் –

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்
காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. கார்கில் போர் போன்ற மிகப்பெரிய யுத்தங்களும் நிகழ்ந்து பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சமீபத்தில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் சென்று 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையை இந்தியா கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கையும் தாக்கியது.
இந்த சோதனை நடந்து இரண்டு தினங்கள் ஆகி உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம், ‘ஷகீன் -1’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இன்று சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவ கட்டளை படைப்பிரிவின் செயல்பாட்டு தயார்நிலையை சோதிக்கும் நோக்கில், ஷகீன்-1 ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 650 கி.மீ. வரை அனைத்து வகையான ஆயுதங்களையும் தாங்கிச்செல்லக்கூடியது என பாகிஸ்தான் ராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஸ்சியாவிடம் S-400 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் இந்தியா
இந்தியா கஸ்மீரை ஆக்கிரமித்துள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் வெடிக்கும் என்ற அச்சம் உருவெடுத்து வரும் இதே வேளையில் ரஸ்சியாவிடம் S-400 ஏவுகணைகளை விரைவாக தமக்கு வழங்குபடி இந்தியா கோரி வருகிறது .
இந்த ஏவுகணைகள் இந்தியாவிடம் கிடைக்க பெற்றால் அது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்தியா விரைவாக வழங்க கோருவது ஏன் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகவும் சந்தேகமாகவும் வெடித்து பறக்கிறது ,
ஒருவேளை பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் நிலையில் உள்ளது போல் இதன் அசைவுகள் வட்டமிடுகின்றன







