கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு

Spread the love

கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு

இன்று உலக காசநோய் தினமாகும். இலங்கையில் காசநோயினால் ஒரு வருடத்திற்கு 500 க்கும் 600 க்கும் இடைப்பட்டவர்கள் உயிரிழப்பதாக சுகாதார அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி இந்நாட்டினுள் இனங்காணப்படாத காச நோயாளர்கள் கிட்டத்தட்ட 4000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டவர்கள் சமூகத்தில் இருப்பதாக காச

நோய் ஒழிப்பு மற்றும் மார்பு நோய் சம்பந்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் சமூகம் மருத்துவர் சுவனி தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், சுகாதார அறிக்கைகளின்படி குழந்தைகளுக்கு காச நோய் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த நோயானது பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலம் முதல் இந்நோய் இருந்து வந்திருப்பதாக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மோட்டன், பிரான்சைச் சேர்ந்த ஜின் என்டன் விலமின் பாஸ்டர் ஆகிய விஞ்ஞானிகள் காசநோய் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

பலதரப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காச நோய்க்கு எதிராக உள்ள ஒரேயொரு தடுப்பூசி டீ.ஊ.பு என்று தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போது காச நோயை குணப்படுத்துமளவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply