ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஐ.நா தலைவர் வலியுறுத்தல்
Posted in உலக செய்திகள்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஐ.நா தலைவர் வலியுறுத்தல்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஐ.நா தலைவர் வலியுறுத்தல்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஐ.நா தலைவர் வலியுறுத்தல்

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருமாறு அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

கேட்டுக்கொண்டார். இந்த மோதல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று, பொதுமக்களுக்குக் கடுமையான துன்பத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

சண்டையை நிறுத்தி பேச்சுவார்த்தை

ஒரு கடிதத்தில், இந்தப் போர் மேலும் தீவிரமடைந்து பேரழிவுகரமான மனிதாபிமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று குட்டரெஸ்

எச்சரித்தார். மேலும், சண்டையை நிறுத்தி பேச்சுவார்த்தைகளைத் தொடர வேண்டியதன் அவசரத் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கை, பிராந்தியம் முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் பரந்த ஸ்திரமின்மையைத் தூண்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலைச் செயல்களைச் செய்தது ஐ.நா. அறிக்கை
Posted in உலக செய்திகள்

காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலைச் செயல்களைச் செய்தது ஐ.நா. அறிக்கை

காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலைச் செயல்களைச் செய்தது ஐ.நா. அறிக்கை

காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலைச் செயல்களைச் செய்தது ஐ.நா. அறிக்கை

இனப்பெருக்க சுகாதார வசதிகளை முறையாக அழிப்பதன் மூலம் காசா பகுதியில் இஸ்ரேல் இனப்படுகொலைச் செயல்களைச் செய்ததாக ஐ.நா. சிறப்பு ஆணையத்தின் விசாரணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு அல்-குட்ஸ் மற்றும் இஸ்ரேல் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசம் குறித்த ஐ.நா. சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை, அக்டோபர் 7, 2023 முதல்

பாலஸ்தீன பெண்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பரந்த அளவிலான மீறல்களை கோடிட்டுக் காட்டுகிறது என்று பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.

“ரோம் சட்டம் மற்றும் இனப்படுகொலை மாநாட்டில் இனப்படுகொலைச் செயல்களின் வகைகளில் ஒன்றான பிறப்புகளைத் தடுக்கும் நோக்கில்

நடவடிக்கைகளை விதிப்பதன் மூலம் இஸ்ரேலிய அதிகாரிகள் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களின் இனப்பெருக்கத் திறனை ஓரளவு அழித்துள்ளனர்,” என்று அது கூறியது.

ஐ.நா. மாநாட்டால் இனப்படுகொலை என வகைப்படுத்தப்பட்ட ஐந்து செயல்களில் குறைந்தது இரண்டில் இஸ்ரேல் ஈடுபட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

மருத்துவப் பொருட்களை அணுகுவதில் தடைசெய்யப்பட்டதால் ஏற்படும் மகப்பேறு இறப்புகளில் ஏற்பட்ட அதிகரிப்பைத் தவிர, அந்த நடவடிக்கைகள், மனிதகுலத்திற்கு எதிரான அழிப்பு குற்றமாகும் என்று ஆணையம் கூறியது.

இஸ்ரேல், “அந்தக் குழுவிற்கு (பாலஸ்தீனியர்கள்) உடல் ரீதியான அழிவை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே வாழ்க்கை நிலைமைகளை

ஏற்படுத்துவதாகவும், குழுவிற்குள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளைத் திணிப்பதாகவும்” அது கூறியது.

“இந்த மீறல்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான நேரடி உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களின் உளவியல் மற்றும் இனப்பெருக்க

ஆரோக்கியம் மற்றும் கருவுறுதல் வாய்ப்புகளுக்கு நீண்டகால, மீளமுடியாத விளைவுகளையும் ஏற்படுத்தியது” என்று குழுவின் தலைவர் நவி பிள்ளை ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது

லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரை இஸ்ரேல் தாக்குகிறது: இது ஏன் இவ்வளவு பெரிய விஷயம்.

48 மணி நேரத்திற்குள் லெபனானில் உள்ள ஐ.நா அமைதி காக்கும் படை மீது இஸ்ரேல் ராணுவம் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

வியாழன் அன்று லெபனானில் உள்ள ஐ.நா இடைக்காலப் படையின் (UNIFIL) தலைமையகத்தில் உள்ள பாதுகாப்புக் கோபுரத்தின் மீது இஸ்ரேலியப்

படைகள் பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில், படையைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர், மேலும் ஒரு கண்காணிப்பு கோபுரத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும் இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்தனர்.

ஒரு ஐ.நா. உறுப்பு நாடு ஐ.நா. அமைதி காக்கும் படையை இலக்காகக் கொள்வது கிட்டத்தட்ட கேள்விப்படாத ஒன்று, எனவே லெபனானில் வெளிவரும் போரில் இந்த சம்பவங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை?

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல்

ஐ.நா பள்ளிமீது இஸ்ரேல் தாக்குதல் NPR விசாரணையில், மத்திய காசாவில் உள்ள Unrwa பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில்

குறைந்தது 40 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களைக் கொன்றது அமெரிக்கா தயாரித்த குண்டைப் பயன்படுத்தியது.

வெடிகுண்டு எச்சங்களின் படத்தை ஆய்வு செய்த தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, NPR

பயன்படுத்திய வெடிமருந்து ஒரு GBU-39 சிறிய விட்டம் கொண்ட வெடிகுண்டு என்று கூறுகிறது, அதே வெடிகுண்டு மே மாதம் Rafah மீது பரவலாக

அறிவிக்கப்பட்ட கொடிய குண்டுவீச்சில் இஸ்ரேல் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

Error: View 9293b2au4w may not exist
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது

இந்த கூட்டத்தொடர் வரும் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை

துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த ஆண்டு கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.

ஐ.நா பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று 17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டத்தொடரில் பங்கேற்று, தனது விசேடஉரையை ஆற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் இன்று நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள்
வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மேலும், அன்று ஜனாதிபதி, உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கெற்கவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு திங்கட்கிழமை (28) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இதில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் (03) உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார்.

இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விஷேட பிரதிநிதிகள் குழு நேற்று ஜெனிவாவுக்கு சென்றுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அதற்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்

    Posted in Uncategorized

    இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் – ஐ.நா

    இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் – ஐ.நா

    சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும்..

    ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு…

    எதிர்காலச் சந்ததியினருக்கான உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்காக, சேதன விவசாயத்துக்கான இலங்கையின் அணுகுமுறை, மேலும் பல நாடுகளுக்கு உந்துசக்தியாக அமையும் என்று தான் நம்புவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

    செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கான தளத்தை அமைக்கும் வகையில், இத்தாலியின் ரோம் நகரில் நேற்றைய தினம் (26), ஐ.நா உணவு முறைமைகள் மாநாட்டின் முன் அமர்வு நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது, காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

    ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தலைமையில் நடைபெறும் இந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்த மாநாட்டில், 2030க்குள் எதிர்பார்க்கப்படும் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் உணவு முறைகளின் தாக்கம் குறித்துக் கலந்துரையாடப்படும். இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடி மக்கள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட பல துறைகளின் பிரதிநிதிகள், புதிய அணுகுமுறையுடன் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

    உணவுக்கான உரிமை என்பது, ஓர் அடிப்படை மனித உரிமையாகும். தங்கள் மக்களுக்காக இந்த உரிமையைப் பாதுகாக்க அரசாங்கங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும், உலகளாவிய உணவு முறையின் சிக்கல்களைப் பற்றிய அவர்களின் புரிதலை அவர்கள் விரிவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

    இலங்கையானது, ஆயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, ஒரு பண்டைய நீரியல் நாகரிகத்துடன் ஆழமாகப் பிணைந்திருக்கும் வளமான விவசாயப் பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும். சேதன விவசாயம் என்பது, எமது நாட்டுக்குப் புதிதல்ல. புதிய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களுடன் இதில் புத்துயிர்ப்புப் பெற முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

    உணவு முறைமையை மாற்றுவது, மனிதகுலத்தையும் நாம் வாழும் உலகையும் நிலைப்படுத்த நாம் கைகொள்ள வேண்டிய விடயங்களின் இன்றியமையாத பகுதியாகும். தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையானது, நாம் அனைவரும் ஆழமாக ஒன்றோடொன்று இணைந்திருக்கும் ஒரே உலகினைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற எமது விழிப்புணர்வைப் பெரிதும் அதிகரித்துள்ளது.

    மனிதகுலமானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அது எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் அனைத்தும் உலகளாவியவை ஆகும். இவற்றைத் தனியாக எதிர்கொள்ள முடியாது. இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமானால், கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

    உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உயிர்ப் பல்வகைமை இழப்பை எதிர்த்துப் போராடுதல் போன்ற விடயங்கள் குறித்து, நேற்றைய மாநாட்டில் உரையாற்றிய அரச தலைவர்கள் கவனம் செலுத்தியிருந்தனர்.

    ரோம் நகரில் நடைபெறும் ஐ.நா உணவு முறைமைகள் உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய சிறப்பு உரை பின்வருமாறு:

    இன்றைய தினம் இடம்பெறும் ஐ.நா உணவு முறைமைகள் உச்சி மாநாட்டின் ஆரம்ப மெய்நிகர் அமர்வில் உங்கள் மத்தியில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
    உணவுக்கான உரிமை என்பது, ஓர் அடிப்படை மனித உரிமையாகும். தங்கள் மக்களுக்காக இந்த உரிமையைப் பாதுகாக்க, அரசாங்கங்கள் தனித்தனியாகச் செயற்பட்டாலும், உலகளாவிய உணவு முறையின் சிக்கல்களைப் பற்றிய அவர்களின் புரிதலை அவர்கள் விரிவுபடுத்த வேண்டும்.

    இந்த முறைமையை மாற்றுவது, மனிதகுலத்தையும் நாம் வாழும் உலகையும் நிலைப்படுத்த நாம் கைகொள்ள வேண்டிய விடயங்களின் இன்றியமையாத பகுதியாகும். தற்போதைய கொவிட் 19 தொற்றுப் பரவல் நிலைமையானது, நாம் அனைவரும் ஆழமாக ஒன்றோடொன்று இணைந்திருக்கும் ஒரே உலகினைப் பகிர்ந்து கொள்கிறோம் என்ற எமது விழிப்புணர்வைப் பெரிதும் அதிகரித்துள்ளது. மனிதகுலமானது, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வேறுபட்டிருந்தாலும், அது எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் அனைத்தும் உலகளாவியவை ஆகும்.

    இவற்றைத் தனிப்பட்ட நாடுகளால் மட்டும் எதிர்கொள்ள முடியாது. இவற்றை வெற்றிகொள்ள வேண்டுமானால், கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும்.

    உலக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், உயிர்ப் பல்வகைமை இழப்பை எதிர்த்துப் போராடுவதற்கும், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிலைபேறான முறையில் அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், தீர்க்கமானதும் அவசரமானதுமான பல்தரப்பு நடவடிக்கை தேவையாகும். எமக்கு முன்னால் உள்ள சவால்கள் அச்சுறுத்தலானவை. எவ்வாறாயினும், அவற்றை வெற்றிகொள்வதற்கான தீர்மானத்தில் அரசாங்கங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் இறக்குமதியை இலங்கை தடை செய்தது. இந்தத் தீர்மானமானது, பரந்துபட்ட சுற்றுச்சூழல் கரிசனைகளையும் தெளிவான மற்றும் தற்போதைய பொதுச் சுகாதார கரிசனைகளையும் கருத்திற்கொண் எடுக்கப்பட்டதாகும். பல தசாப்தங்களாக, இலங்கை அதன் விளைபொருட்களுக்காகச் செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்களையே அதிகமாக நம்பியிருந்தது.

    பல தசாப்தங்களாக, மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் விவசாய இரசாயனங்கள் போன்றவற்றால் நிலத்தை மாசுபடுத்தி, நிலத்தடி நீரும் மாசடைவதற்கு வழிவகுத்தது. இது, சுற்றுச்சூழல் அழிவு, நீர் மாசடைதல் ஆகியவற்றை மேலும் மோசமாக்கியதுடன், பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தையும் அதிகரித்தது. இது இந்த நாட்டின் விவசாய மையப்பகுதியில், பரவலான நாட்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்ததுடன், பொதுமக்களிடையே தொற்றா நோய்கள் அதிகரிப்பதற்கும் பங்களித்தது.

    செயற்கை உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருட்களைத் தடை செய்வதற்கான எனது அரசாங்கத்தின் தீர்மானமானது, இந்த கடுமையான பிரச்சினைகளுக்குப் பதிலளிப்பதற்கானதாகும். குறுகிய காலத்தில் வெற்றிகொள்ள வேண்டிய சில பிரச்சினைகள் இருந்தபோதிலும், இந்தத் தீர்மானமானது, நீண்ட காலத்தில் சேதன விவசாயத்தின் மூலமான ஆரோக்கியமான, அதிக சுற்றுச்சூழல் நன்மைகொண்ட மிகவும் தேவையான ஒரு தேசிய மாற்றத்துக்கு உதவும்.

    இந்த மாற்றம் நடைபெறுவதால், எனது அரசாங்கமானது, எமது விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த வர்த்தகங்களுக்கும் உதவும். இந்த முயற்சியில், சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். இலங்கையானது, ஆயிரம் வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட, ஒரு பண்டைய நீரியல் நாகரிகத்துடன் ஆழமாகப் பிணைந்திருக்கும் வளமான விவசாய பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும்.

    சேதன விவசாயம் எங்களுக்குப் புதிதல்ல. ஆனால், எங்கள் பங்குதாரர்களுடன் இணைந்து, புதிய அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களுடன் புத்துயிர்ப் பெற முனைவது ஒரு வரலாற்று நடைமுறையாகும். அறிவுப் பகிர்வு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் முதலீடு என்பவற்றின் ஊடாக, சேதன உரங்கள், விவசாயம் மற்றும் ஏற்றுமதியின் உள்நாட்டு உற்பத்தித் திறனை வலுப்படுத்த உதவுமாறு பல்தரப்பு நிறுவனங்கள், அரசாங்கங்கள், காலநிலை நிதியங்கள், தொழில்நுட்ப அமைப்புகள், வல்லுநர்கள் மற்றும் வர்த்தகத் துறைகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். இந்த மேம்பாடுகளின் மூலம், இலங்கை தனது உணவு முறையை நிலையான முறையில் மாற்றியமைக்க முடியும் என்பதுடன், எமது மக்களுக்கான உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.

    பேண்தகு விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு ஆகியவை, 2030ஆம் ஆண்டுக்கான ஐ.நாவின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு முக்கியமானதாகும்.

    கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு முன்பு கூட, இந்த இலக்குகள் சரியான நேரத்தில் அடையப்பெற வாய்ப்பில்லை என்பது மிகுந்த கரிசனைக்குரிய ஒன்றாக இருந்தது. இந்தச் சூழலில், இந்த முக்கியமான விடயங்களில் உலகளாவிய கொள்கை ஒருங்கிணைப்பை மேற்கொள்வதில் உலக உணவுப் பாதுகாப்பு குழுவின் முக்கிய பணி மிகவும் பாராட்டத்தக்கதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதுமாகும். முடிவாக, எமது எதிர்காலச் சந்ததியினருக்காக உணவுப் பாதுகாப்பையும் போஷாக்கையும் உறுதி செய்வதற்காக, உலக உணவு முறையை நிலையான முறையில் மாற்றுவதற்குத் தேவையான தைரியமான நடவடிக்கைகளை எடுக்க, இலங்கையின் உதாரணம், மேலும் பல நாடுகளுக்கு ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்.

    Posted in இலங்கை செய்திகள்

    போர்குற்றவாளிகளிடம் தமிழ்அகதிகள் ! பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !!

    போர்குற்றவாளிகளிடம் தமிழ்அகதிகள் ! பாதுகாப்பினை உறுதிப்படுத்த ஐ.நாவிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !!

    ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.

    நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகள் சிறிலங்கா விமானநிலையத்தில் வைத்து, சிறிலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்தே இந்தக் கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

    ஐ.நாவின் அகதிகளுக்கான உயராணையாருக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அனுப்பிய கடித்தில்,
    சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

    உலகில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் சிறிலங்க இரண்டாவது இடத்தில் உள்ளது என ஐ.நாவின் அறிக்கையொன்றில் உள்ளது.

    சிறிலங்கா தொடர்பான ஐ.நா. உள்நாட்டு மறுஆய்வு அறிக்கையின்படி, 2009 ஆண்டின் இறுதிப்பபோரின் போரின் இறுதி ஆறு மாதங்களில் எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டும்,

    காணாமலாக்கப்பட்டும் உள்ளனர்.சிறிலங்கா இராணுவத்தினாரால் நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் சிறிலங்கா இராணுவ மற்றும்

    உளவுத்துறையிடமிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்அகதிகளை, சந்திக்கவும், அவர்களை விடுவிக்கவும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவில் உள்ள ஐ.நா அதிகாரிக்களை வேண்டுமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயராணையாளரிடம் கோரியுள்ளார்.

    முன்னராக தமிழ்அகதிகளை நாடுகடத்த வேண்டாமென ஜேர்மன் வெளிவிகார அமைச்சருக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பு – “ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும் zoom

      சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பு – “ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும் zoom

      காலம் : 27/03/2021சனிக்கிழமை*

      நேரம்

      தமிழீழம் இரவு 20:30

      ஐரோப்பா 16:00

      பிரித்தானியா 15:00

      கனடா காலை 11:00

      தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு இராசதந்திர அரங்குகளிலும், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் மேற்கொண்ட செயற்பாடுகள்

      தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்படும் இணையவழி ஊடான இவ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள

      விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :

      https://us02web.zoom.us/j/84476843064?pwd=clZYdnduL1Vvc2V1cTEwVE5WK3czdz09

      Meeting ID: 844 7684 3064
      Passcode : 213141

      நன்றி
      தமிழர் இயக்கம்

      Posted in Uncategorized

      ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி

      ஐ.நா தீர்மானம் சிறிலங்காவுக்கு தோல்வி

      அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.

      ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.

      அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளதெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

      கடந்த காலத்தில் சிறிலங்கா சாமார்த்தியமாக ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்று பூச்சாண்டி காட்டி உத்திகளைக் கையாண்டது. 2015ல் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐ.நா மனித

      உரிமை;சபையின் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

      ஏற்கெனவே தங்களிடம் சான்று இருப்பதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் துணை ஆணையாளர் மெர் கான் வில்லியம்ஸ் கூறியுள்ள போதிலும், புதிய தீர்மானத்தில் ஒரு கூறு ‘ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவலும்

      சான்றும் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும்’ என்று கேட்டுக் கொள்வதாக’ உள்ளது. இது பாதிக்கப்பட்ட தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட வெற்றுக்கூடான உள்ளடக்கமாக இது தோன்றுகிறது எனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

      மேலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
      ஐ.நா மனிதவுரிமைப் சபையில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்லி, அனைத்துலக இராஜதந்திர தளத்தில் சிறிலங்கா ஒதுக்கி வைக்கப்பட்ட அரசாகிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.

      இந்தத் தீர்மானம் சிறிலங்கா விவகாரத்தில் பின்னோக்கி சென்றுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்கக வேண்டுமென 2015ம் ஆண்டு தீர்மானம் முன்மொழிந்;திருந்தது.

      ஆனால் இன்றைய தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க ஓர் உள்நாட்டுப் (சிறிலங்கா) பொறிமுறையிடமே விட்டுவிடுகிறது. நாகரீக நாடுகளின் சட்டப்புத்தகங்களில் அசிங்கமான

      கறையாக வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, 2015 தீர்மானத்தில் இடம்பெற்ற ‘நீக்கம்’ என்ற சொல் இன்றைய தீர்மானத்தில் காணப்படவில்லை.

      சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகக சுட்டிகாட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன. (ஐநா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை (பெட்ரி அறிக்கை எனப்படுவது), சிறிலங்கா தொடர்பான மனிதவுரிமை ஆணையாளர் அலுவலக OISL அறிக்கை)

      சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை சிறிலங்கா தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐநா உயராணையர் மிசேல் பசலே ஏற்கெனவே விடுத்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.

      ஐ.நா மனித உரிமைச்சபையின் 4 முன்னாள் ஆணையாளர்களும், சிறிலங்காவுக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும், சிறிலங்கா தொடர்பான ஐநா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.

      நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2011ம் ஆண்டில் இருந்து கோரிவருகின்றது.

      தற்போதைய ஐ.நா கூட்டத் தொடரிமை மையப்படுத்தி தாயக தமிழர் அரசியல் தரப்புக்களும், தமிழ் சிவில் சமூகமும், தமிழ் சமயத் தலைவர்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழுலகமும், உட்பட பலரும தமது முதன்மைக் கோரிக்கையாக இதனை முன்வைத்திருந்தனர்.

      சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதற்குத் தேவைப்படுவது நாடுகளிடத்திடத்தில் அரசியல் மனத்திட்பம்தானே தவிர புதிய செயல்திட்டமன்று.

      அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மன்றங்களில் நீதி பெறுவதில் அரசுகளற்ற தேசங்கள் சந்திக்கும் சவால்களை ஐநா மனிதவுரிமைச் சபையின் இன்றைய தீர்மானம் காட்டுகிறது.

      இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் உலகச் சமுதாயமும் சுயநிர்ணய உரிமையை ஓர் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுள்ள போதிலும், அதனை நீதிநோக்கில் பயன்படுத்தும் முயற்சியை இப்போதிருக்கும் அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் வழிமறிப்பதே வாடிக்கையாக இருந்து வருகிறது.

      இந்தத் அரசுகள் தமது ‘இறைமையையும்’ ‘ஆட்சிப்புலக் கட்டுக்கோப்பையும்’ கட்டிக் காப்பதன் போர்வையில், நாசிக் கொடுமைகளை நினைவுபடுத்தும் இனஅழிப்புக்களையும்,

      மானிடக்குற்றங்களை நடத்தத் தயங்குவதில்லை. மனிதவுரிமைகள் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் நீட்டி முழக்கும் உலக அரசுகள் தம் புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்தக் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் :

        ஐ.நா மனித உரிமைச்சபையும் தமிழர்களின் நிலைப்பாடும் :

        ஜெனீவா- ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்தி தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பில்

        தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் வரும் ஞாயிறன்று இணையவழி

        கருத்தாடல் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

        ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்காவுக்கு வழங்கப்பட்ட

        காலநீடிப்பு, எதிர்வரும் மார்ச் மாத ஜெனீவா ஐ.நா அமர்வுடன் நிறைவடைகின்றது.

        இந்நிலையில் இத்தீர்மானத்தின் அடுத்த கட்டம் என்ன என்ற நிலையில், சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச சமூகம் தனது

        நலன்களின் அடிப்படையில் தம்மை தயார்படுத்தி வரும் நிலையில், தமிழர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

        இந்நிலையில் வரும் ஞாயிறு ஜனவரி 4ம் நாள், ஐரோப்பிய நேரம், 20h00 நியு யோர்க் நேரம் 2:00 pm இணையவழியூடாக ஏற்பாடு

        செய்யப்பட்டுள்ள இக்கருத்தாடலில் ZOOM செயலிமூலமாக பங்கெடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையில் மனித உரிமைகள் மோசம்

        இலங்கையில் மனித உரிமைகள் மோசம்

        இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ

        குட்டேரஸ், இலங்கை தொடர்பான கடுமையான க​வலைகளையும் முன்வைத்துள்ளார்.

        ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 45ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. அதில், ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.

        இலங்கை மற்றும் ஜெனீவாவில், இலங்கை சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பிறர் மீதான

        இலங்கையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

        2018ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கையிலிருந்து

        சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்குப் பின்பும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

        இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவைத்

        தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் தனது அறிக்கையின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.

        ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உதவிச் செயலாளர் நாயகம், இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை இலங்கை

        அரசாங்கத்துக்கு 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான விடயங்கள் உடனடியாக

        நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தார். குறித்த விடயங்களுக்கான பதிலை இலங்கை அரசாங்கம்

        உடனடியாக வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

        இலங்கை விவகாரம் தொடர்பாக, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் கருத்து வெளியிட்டிருந்த அண்டோனியோ குட்டரஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில்

        அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பல முறைப்பாடுகள் மீண்டும் கிடைத்துள்ளனவென, தனது

        அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழல் மோசமான காலப்பகுதி என்றார்.