காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்

காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல்

காஷ்மீரில் இந்திய ராணுவம் மோதல் ,காஷ்மீரில் இந்திய ராணுவம் போராளிகளுக்குடன் இடம்பெற்ற தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் பலியாகி ஆறு பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது .

காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினர் பயணித்த ரோந்து வாகனங்களை இடைமறித்து தாக்குதலை நடத்தின.

கை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியதில் அந்த வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த, இந்திய ராணுவத்தினரில் நாலு பேர் சம்பவ இடத்தில் பலியாகி ஆறு பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு காயம் அடைந்த ஆறுபடை இதுவரையில் உடல் மிக மோசமாக உள்ளதாகவும் காணப்படுகின்றது .

இந்திய ராணுவம் தாக்குதல்

காஷ்மீர் போராளிகள் மீது இந்திய ராணுவம் நடத்தி வருகின்றது.

அந்த மக்களை தீவிரவாதிகள் என தெரிவித்து கைது செய்து கற்பழித்து சொல்லென்னா இடர்களையும் துன்பங்களையும் விளைவித்து வருகின்றது .

அதற்கு அமைவாக தற்போது இந்திய ராணுவத்தினரை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்த ஹிஸ்புல்லா போராளிகள் ஆரம்பித்துள்ளனர் .

போராளிகளுக்கும் இந்திய ராணுவத்திற்கும் இடையில் சில காலங்களாக தொடரான யுத்தம் ஆரம்பித்துள்ளது அடுத்து தற்பொழுது இந்திய ராணுவத்தினர் பகுதியில் கண்காணிப்புகளில் ஈடுபடுவது மிகப்பெரும் சவால் நிறைந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள காணப்படுகின்றது.

இந்தியா படைகள்

இந்த தாக்குதலை எடுத்து வரும் நாட்களில் மேலும் இந்தியா படைகள் மீது நடத்தப்படும் தாக்குதல் தீவிரமணியம் என எதிர்பார்க்கப்படுகிறது .

எல்லையை ஓரமாக நுழைந்து மக்கள் மற்றும் அருள்மிகு சொத்துக்கள் மற்றும் அங்குள்ள எல்லைப்புறங்களில் உள்ள பெண்கள் மற்றும் வயதானவர் மீதும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதான ,

குற்றச் சாட்டு அந்த அமைப்பினார் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம்

இந்திய ராணுவத்தினர் ஐவர் மரணம் ,இந்திய ராணுவத்தினர் லடாக் எல்லை பகுதியில் தமது டாங்கிகள் சாகிதம் கடற்கரை ஒன்று ஊடாக நுழைந்து கொண்டிருந்த பொழுது திடீரென அவ்வழியில் நீர் அதிகமாக வந்ததை எடுத்து அதில் பயணித்த டாங்கிகள் நீரில் மூழ்கின .

இதன் பொழுது அந்த டாங்கிகளில் பயணித்த ஐந்து ராணுவ சிப்பாய்கள் பலியாகி உள்ளதாக இந்தியா ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது .

அதிகமாக கடல் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், திடீரென நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து அந்த கரை பகுதியில் மூழ்கின .

இதன்போது ஐந்து ராணுவ சிப்பாய்கள் பலியாகி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனா லடாக் பகுதி

சீனா லடாக் பகுதி என்பன மிகவும் பாரதூரமான அத்துமீறல் இடம்பெறுகின்ற ஒரு முன்னரங்க நிலையாக காணப்படுகின்றது .

அவ்வாறான சீனா லடாக் இந்தியா இல்லை ஓரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினுடைய டாங்கிகள் நீரில் மூழ்கியுள்ளது .

இந்த நீர் வரத்தில் மூழ்கிய சம்பவம் இந்தியா படைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சடலங்கள் மீட்கப்பட்டு தற்போது அவர்கள் குடும்பவர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் .

மேற்படி சம்பவம் இந்திய ராணுவத்தினருக்கு பதட்டத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எல்லைப் பகுதியில் பல இந்திய ராணுவ சிப்பாய்கள் பலியாகி வருகின்ற நிலவரம் தொடர்ந்தது வருகிறது .

அவ்வாறான காலப் பகுதியில் நீரில் மூழ்கி இந்தியா படைகள் இறந்துள்ள சம்பவம் இந்திய ராணுவம் மத்தியிலும் இந்தியா மக்கள் மத்தியிலும் ஒருவித பதட்டத்தை அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை இந்திய இராணுவத்தினர் ஆரம்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் இன்று முடிவு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்திய தேர்தல் இன்று முடிவு

இந்திய தேர்தல் இன்று முடிவு இந்தியாவில் ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து வெளியான கருத்துக் கணிப்புகளில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் தலைவர்கள் இதற்கு எதிர்வினையாற்றியுள்ளனர்.

கடைசிக் கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோதி கன்னியாகுமரிக்குச் சென்று சுமார் 45 மணிநேரம் தியானம் செய்தார்.

மூன்றாவது பதவிக் காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் செயல்படுத்த வேண்டியவை தொடர்பான ‘100 நாள் நிகழ்ச்சி நிரல்’ கூட்டத்தை பிரதமர் (ஞாயிற்றுக்கிழமை) நடத்தினார்.


பாஜக தனித்து 370 இடங்களிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களிலும் வெற்றி பெறும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறினார்.

எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம்

இதற்கிடையில், சனிக்கிழமை எதிர்க்கட்சிகள் கூடி எதிர்கால வியூகம் குறித்து ஆலோசித்தன. இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கருத்துக் கணிப்புகள் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இது மோதி மீடியாக்களின் கருத்துக்கணிப்பு” என்று கூறியுள்ளார்.

கருத்துக் கணிப்புகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இதன் பெயர் கருத்துக் கணிப்பு அல்ல, இது

மோதி மீடியாக்களின் கருத்துக் கணிப்பு, இது மோதிஜியின் கருத்துக் கணிப்பு, அவரது கற்பனைக் கருத்துக்கணிப்பு” என்றார்.

இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று ராகுல் காந்தியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, “சித்து மூஸ்வாலாவின் பாடலைக் கேட்டது உண்டா- 295” என்றார்.

மறைந்த பஞ்சாப் மாநிலப் பாடகர் சித்து மூஸ்வாலா ‘295’ என்ற பாடலை வெளியிட்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டியே இந்தியா கூட்டணி 295 இடங்களைப் பெறும் என்று ராகுல் காந்தி கூறினார்.

Error: View 9293b2au4w may not exist
இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை

இலங்கை மீனவரை மீட்ட இந்திய விமானப் படை

இலங்கையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவருக்கு நடுக்கடலில் மாரடைப்பு ஏற்பட்டதால் இந்திய விமானப் படையின் ஹெலி அவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளது.

இலங்கையில் இருந்து புறப்பட்ட நீண்ட நாள் படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடன் சென்றவர்கள் நடுக்கடலில் உதவி கோரினர். இதனால் அதன் அருகே சென்ற இந்தியக் கடற்படையினர் தகவலை இந்திய விமானப் படையினருக்கு வழங்கினர்.

இதையடுத்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி சம்பவ இடத்துக்கு வந்தது. அதில் இருந்த விமானப் படையினர் மேற்படி இலங்கை மீனவரை மீட்டு சென்னை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவரின் விபரம் உடனடியாகச் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்

இலங்கை இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்

இந்தியாவின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ புபிந்தர் சிங் பல்லாவின் தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

நாட்டில் உள்ள மீள்புதுப்பிக்கத்தக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில் இந்திய ஆய்வாளர்களுக்கும் இலங்கையின் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்சக்தி , எரிசக்தி அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற தூதுக்குழுவினருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு, புதிய திட்டங்களை

ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கை இந்திய திடீர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய திடீர் பேச்சு

இலங்கை இந்திய திடீர் பேச்சு

இலங்கை இந்தியாவுக்கு இடையில் திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கரை சந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேச்சில் ஈடுபட்டார் .

இலங்கைக்கு தேவை படும் அவசர உதவிகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க பேசியுள்ளதாகவும் ,அவர்கள் விடுக்க பட்ட அந்த உதவிகள் விரைவில் இலங்கைக்கு கிடைக்க பெற வழி வகை செய்து கொடுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

வீடியோ

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின்

செயலாளரும் இராணுவ ஆலோசகருமான எயார் மார்சல் சந்தீப் சிங்கை சந்தித்துள்ளார்.

இந்திய இராணுவ ஆலோசகருடன் இராணுவத் தளபதி சந்திப்பு

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, முப்படைகளுக்கு இடையிலான பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பம், ஆயுதப் படைகளின்

நவீன மயமாக்கல் மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவரும் கலந்துரையாடியுள்ளனர்

வீடியோ

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மத்தள விமான நிலையம் ரஷ்ய-இந்திய நிறுவனத்திற்கு மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள்

இடம்பெற்று வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. டி. எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும் எனவும் அதன் பின்னர் நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்பட உள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

வீடியோ

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றும் (28) இன்று அதிகாலையும் (29) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி
Posted in இலங்கை செய்திகள்

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

சீன வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் 6’ இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதற்கும் நங்கூரம் இடுவதற்கும் இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இந்நிலையிலேயே இக்கப்பலுக்கான அனுமதியை இலங்கை வழங்கியுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ஷி யான் 6’ எனும் சீன கடல் ஆய்வுக் கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ளது.

இந்திய எதிர்ப்பையும் மீறி சீன கப்பல் நுழைகிறது

இந்த சர்ச்சைக்குரிய சீன கடல் ஆய்வுக் கப்பல் இலங்கையின் நாரா நிறுவனத்துடன் இணைந்து அறிவியல் பயணத்திற்குத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் பொருளாதார வலயம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி விரிவான ஆய்வை மேற்கொள்ளவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்த கப்பல் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது

இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது

கௌதாரிமுனையில் நெற் காணிகளையும் கடலட்டைப் பண்ணைகளையும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்

இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கடலட்டை செயற்பாடுகளுக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும்

பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், எமது நலன்களுக்கோ அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (22.07.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைமையில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், நெற் காணிளுக்கான கோரிக்கைகளை சுமார் 93 பேர் சமர்ப்பித்திருந்தனர்.

அதேபான்று கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் சுமார் 27 கடற்றொழிலாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விண்ணப்பித்தவர்களுக்கான வயல் நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

அதேபோன்று, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் இதுவரை 16 கடலட்டைப் பண்ணைகளுக்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில்

விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை வழங்குமாறும் ஏனையவர்களுக்கான இடங்களை அடையாளப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடற்றொழில அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘இலங்கை சீனக் கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்படடுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அந்தக் கடலட்டை குஞ்சு

பராமரிப்பு நிலையத்தினூடாக எமக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்தித்து வருகின்றேன்.

சீனா போன்ற நாடுகளில் இருந்து முதலீடுகளும் அனுபவங்களும் தொழில்நுட்பமும் பெற்றுக்கொள்ளப்படுமே தவிர, எமது மக்களினதும் நாட்டினதும் நலன்களை பாதிக்கும் வகையில்

அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, கௌதாரிமுனைக்கான சுமார் 16 கிலோ மீற்றர் வீதியை புனரமைப்பதற்கான சாத்தியங்கள்

தொடர்பாக ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம். நம்மையும் பாதுகாத்து கொள்வோம்-மனோ கணேசன்

    இந்திய மக்களுக்காக பிரார்த்திப்போம். நம்மையும் பாதுகாத்து கொள்வோம்.

    • மனோ கணேசன் எம்பி

    எம்மைவிட மோசமாக கொரோனா பேராபத்தில் விழுந்து விட்ட அப்பாவி இந்திய மக்களுக்காக, எல்லா பேதங்களையும் தள்ளி வைத்து விட்டு, மனிதத்தின் பெயரால் பிரார்த்தனை செய்யுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

    மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

    சுமார் 130 கோடி ஜனத்தொகை கொண்ட பாரத தேசம், இன்று கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறுகின்றது. இந்திய நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்களின் கண்ணீர் எமக்கு தெரிகிறது. இது கொரோனா சுனாமி அவலம் என கூறப்படுகின்றது.

    எமது நாட்டிலும் இந்த கொரோனா கொடுமை புதிய வீரியத்துடன் பரவி வருகின்றது. நாட்டின் சுகாதார துறையினருக்கு வழங்கும் பூரண ஒத்துழைப்பின் மூலம் இதை நாம் எதிர் கொள்ள

    வேண்டும். அரசாங்கத்தை பொறுப்புடன் செயற்படுமாறு கூறும், அதேவேளை பொதுமக்களாகிய நாமும் பொறுப்புடன் நடந்து இந்த பேரழிவை எதிர்கொள்ள வேண்டும்.

    மிகப்பெரிய ஜனத்தொகையை கொண்டுள்ள எமது மிக நெருங்கிய அயல் நாடான இந்தியாவில், ஒட்டு மொத்த ஜனத்திரளின் மத்தியில் வீரியமுள்ள கொரோனா கிருமிகள் வேகமாக பரவி

    வருவதை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாரதம் இந்த கொடுமையிலிருந்து விரைவில் மீள வேண்டும் என்ற நோக்கில் நாம் நமது வீடுகளில் இருந்தபடி பூஜை, நமாஸ், பிரார்த்தணைகளில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

      Posted in சினிமா

      போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய்குமார்

      போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய அக்‌ஷய்குமார்

      கொரோனா ஊரடங்கில் இரவு பகல் பாராமல் வேலை செய்யும் போலீசாருக்காக நடிகர் அக்‌ஷய்குமார் நிவாரண நிதி வழங்கி உள்ளார்.

      போலீசாருக்கு நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய
      கொரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி தவிக்கும்

          மக்களுக்கு, நடிகர்-நடிகைகள் பலர் உதவி வழங்கி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திரட்டும் நிவாரண நிதிக்கும் நன்கொடை

          கொடுக்கின்றனர். தமிழில் ரஜினிகாந்துடன் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்‌ஷய்குமார், பிரதமரின்

          நிவாரண நிதிக்கு ஏற்கனவே ரூ.25 கோடி வழங்கினார். பின்னர் மும்பை மாநகராட்சிக்கு ரூ.3 கோடி கொடுத்தார்.

          தற்போது மும்பை போலீஸ் அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கி இருக்கிறார். மும்பை போலீஸ் கமிஷனர் தனது ‘டுவிட்டர்’

          பக்கத்தில், “மும்பை காவல்துறை அறக்கட்டளைக்கு ரூ.2 கோடி வழங்கிய அக்‌ஷய்குமாருக்கு காவல்துறை நன்றி தெரிவிக்கிறது

          . நகர மக்களை காப்பாற்ற அர்ப்பணிப்போடு செயல்படும் மும்பை காவல்துறையில் உள்ள ஆண் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு

          நீங்கள் வழங்கி உள்ள தொகை பெரிய உதவியாக அமையும்” என்று கூறியுள்ளார்.

          அக்‌ஷய்குமார்

          இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அக்‌ஷய்குமார், “எனது கடமையை செய்து இருக்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு போலீசார்தான் காரணம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

          போலீசாருக்கு நிவாரண
          போலீசாருக்கு நிவாரண