பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி
பாடசாலை மாணவர்கள் 45 பேர் வைத்தியசாலையில் அனுமதி ,பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு
உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பக்கமுன பிராந்திய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று
வருவதுடன் சிலர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி
குறித்த பாடசாலையில் சுமார் 230 மாணவர்கள் கல்வி கற்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பக்கமுன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்







