Tag: பலி
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே இந்த பாடசாலை மாணவன் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலை மாணவர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் பலி
எம்பிலிபிட்டிய கல்ஹமுன பிரதேசத்தில் வசிக்கும் 12 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யானைக்கு பொறுப்பான யானை பாகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- நாயை தாக்கிய நபர் கைதுby நிருபர் காவலன்
- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கைby நிருபர் காவலன்
- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வுby நிருபர் காவலன்
- ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு அனுராவை கிழித்த நாமல்by நிருபர் காவலன்
- 580 லிட்டர் போலித் தேன் பறிமுதல்by நிருபர் காவலன்
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
மொரோக்கோ நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரோக்கோ நாட்டின் மாரேஷ் என்ற பகுதியில் இன்று அதிகாலை 03.14 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி, நேற்று நள்ளிரவு 11.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொரோக்கோவில் சக்கிவாய்ந்த நிலநடுக்கம் – பலர் பலி
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி உள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளில் பொதுமக்கள் சிக்கி 296 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் மக்கள் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்by நிருபர் காவலன்
- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கைby நிருபர் காவலன்
- நாயை தாக்கிய நபர் கைதுby நிருபர் காவலன்
- நாகப்பட்டினம் இலங்கை படகு வழித்தடத்தை பணமாக்க தமிழ்நாடு நடவடிக்கைby நிருபர் காவலன்
- காசில்ரே மற்றும் மௌசகெல்லே நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வுby நிருபர் காவலன்
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
பிரிட்டன் கடலில் கவிழ்ந்த படகு பலர் பலி 50 பேர் மீட்பு
பிரிட்டன் ஆங்கில கால்வாயை கடந்து பிரிட்டனுக்குள் ,
நுழைய முயன்ற அகதிகள் கப்பல் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது .
இதன் பொழுது அதில் பயணித்த ஆறு அகதிகள் சம்பவ இடத்தில நீரில் மூழ்கி பலியாகினர் .
மேலும் ஐம்பது பேர் வெற்றிகரமாக மீட்க பட்டனர் .
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆபத்தான ஆங்கில கால்வாயை கடந்து ,
பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற அகதிகள் படகே ,இவ்விதம் விபத்தில் சிக்கி இருந்தமை குறிப்பிட தக்கது .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்by நிருபர் காவலன்
- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கைby நிருபர் காவலன்
- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்by நிருபர் காவலன்
- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்by நிருபர் காவலன்
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்by நிருபர் காவலன்
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
ரஷ்யா உகைனுக்கு இடையில் இடம் பெற்று வரும் 500 நாடுகள் ,
கடந்த போரில் உக்ரைன் தலைநகர்
உள் கட்டமைப்பு பலத்த சேதமடைந்துள்ளது .
தலைநகர் கீவ் பகுதியில் 170 பேர் பலியாகியுள்ளனர் ,
மேலும் 400 வீடுகள் கடும் சேதமடைந்துள்ளது .
முதன் முதலாக ,உக்ரைன் தலைநகர் பலமானபாதிப்புக்கு உள்ளக்கியுள்ளதை ,
அதன் மேயர் ஒப்பு கொண்டுள்ளார் .
ரஷ்ய கடும் தாக்குதல் 170 பேர் பலி 400 வீடுகள் சேதம்
இதன் ஊடக ரஷ்யா தெரிவித்து வந்த கருத்துக்கள் ,
மெய் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார் .
கடந்த சில வாரங்களாக ,கீவ் பகுதி கடுமையான தாக்குதலுக்கு ,
உள்ளாகி வருகிறது . ரஷ்யா தலைநகரை இலக்கு வைத்து,
உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்திய நிலையில் ,
ரஷ்யா பழி வாங்கும் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்து! 27 பேர் பலி
பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்து! 27 பேர் பலி
மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
அப்போது, செங்குத்தான குன்றின் அடிப்பகுதியில் வாகனத்தின் சிதைந்த பாகங்கள் கிடப்பதாக தெரிவித்துள்னர்.
பள்ளத்தில் கவிழ்ந்து பஸ் விபத்து! 27 பேர் பலி
முதற்கட்ட எண்ணிக்கையின்படி, 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 17 காயமடைந்தவர்கள் மருத்துவ கவனிப்புக்காக பிராந்தியத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒசாகா மாநில வழக்கறிஞர் பெர்னார்டோ ரோட்ரிக்ஸ் அலமில்லா தெரிவித்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 11 பேர் பலி
அமெரிக்கா டெக்சாஸ், பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
11 பேர் கொல்லப்பட்டனர் ,மேலும் பலர் காயமடைந்தனர் .
இந்த சூட்டு சம்பவத்தில் 10 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை உள்ளிய ,
11 இறந்தவர்களாகி அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்திய சிலர் வாகன தரிப்பிட
பகுதியில் வைத்து , கைது செய்யப் பட்டுள்ளனர் .
இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் சூட்டு சம்பவத்தில் ,
இந்த வருடத்தில் மட்டும் ,பதின் நான்காயிரத்துக்கு மேலானவர்கள் ,
கொலை செய்யப்பட்டுள்ளதாக ,புள்ளி விபரம் வெளியாகி ,
அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
பாகிஸ்தான் தென்மேற்கு ,பகுதியில் மனித வெடிகுண்டு தாரி ,
நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவர் பலியாகியும் ,
ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் .
குறித்த சாலை வழியாக தனது வாகனத்தில் பணித்து கொண்டிருந்த ,
போலீசாரை இலக்கு வைத்து ,மனித வெடிகுண்டு தாரி ,
நெருங்கி வந்து குண்டை வெடிக்க செய்தார் .
பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் ஒருவர் பலி 5 பேர் காயம்
இதில் அந்த ஜீப் வாகனம் தூக்கி விச பட்டு தீயில் எரிந்து வெடித்து சிதறியது .
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை ,
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு
மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு
இந்திய மணிப்பூரில் தொடரும் கலவரத்தால் சிக்கி கடந்த ,
தினங்களில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் .மேலும் டசின் பேர் காயமடைந்துள்ளனர்
இருபதுக்கு மேற்பட்ட வீடுகள் தீவைத்து அழிக்க பட்டுள்ளன .
அரச சொத்துக்கள் அடித்து நொறுக்க பட்டு சூறையாட பட்டுள்ளன .
மணிப்பூர் கலவரம் 9 பேர் பலி வீடுகள் எரிப்பு
அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் இந்த போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றவண்ணம்
உள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்து வருகின்றனர் .
மக்கள் இராணுவம் போலீசாருக்கு இடையில் மோதல்கள் ,
ஆங்காங்கே வெடித்து பறக்கின்றன .
தொடர்ந்து கலக காரர்கள் கலகத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
திருப்பதியில் வாகன விபத்து 2 பேர் பலி 9 பேர் காயம்
திருப்பதி பகுதியில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகியும்
9 பேர் காயமடைந்தனர்,
பயணிகளை காவிய படி பயணித்த மினிபஸ் ஒன்று ,
லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
வான் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது .
காயமடைந்தவர்கல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டனர் ,குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
கெலின்கந்தயில் இருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகெலி எல்ல பிரதேசத்தில் வீதியில் வழுக்கிச் சென்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பஸ்ஸின் சாரதி உட்பட 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி
பஞ்சாபில் எரிவாயு கசிந்ததில் 9 பேர் பலி
வட இந்திய மாநிலமான பஞ்சாபில் உள்ள ,
லூதியானாவில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் இறந்தனர்
மற்றும் 11 பேர் காயமடைந்தனர் .
ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதியில் ,
தேசிய பேரிடர் மீட்புப் படையின் மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
இந்த வெடிப்புக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
ஏமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம் ஆண்டு ஈரான் ஆதரவுடன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், பழைய அரசை மீண்டும் கொண்டு வர சவுதி ஆதரவு பெற்ற கூட்டணி அரசும் முயற்சித்தது.
இந்த இரு நாடுகளின் மறைமுக போரால் அந்நாட்டில் வீரர்கள் மற்றும் மக்கள் என 1.5 லட்சம் பேர் உயிரிழந்தனர். இது, உலகின் மிக பெரிய மனித பேரிடரில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அந்நாட்டில் 3-ல் 2 பங்கு மக்கள் (2.1 கோடி) உதவி மற்றும் பாதுகாப்பு தேவைப்படுபவர்களாக உள்ளனர். அவர்களில் 1.7 கோடி மக்கள் வறுமையின் பிடியில் வாடுகின்றனர். இந்த நிலையில், ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில், ஏழை மக்களுக்கு நிதியுதவி வழங்க முடிவாகி இருந்தது. நிதியுதவியை பெற மக்கள் கூட்டம் பெருகி இருந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் சிக்கி 78 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
இதுபற்றி அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் காலேக் அல் ஆக்ரி கூறும்போது, வார இறுதியில், இஸ்லாமிய புனித மாதம் ரமலான் முடிவையொட்டி, சிலர் இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர்.
அவர்கள் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இதனால், திட்டமிடல் இன்றி பரவலாக நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது.
அதனை பெற மக்கள் ஓடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் உயிரிழந்தும், 13 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
ஏமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் பலி
எனினும், இந்த சம்பவங்களை பார்த்து கொண்டு இருந்த, அந்த பகுதியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மற்றும் யாஹியா மோசென் ஆகியோர் கூறும்போது, கூட்டத்தினரை கட்டுப்படுத்தும் முயற்சியாக துப்பாக்கி ஏந்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வானை நோக்கி சுட்டனர்.
அப்போது, மேலே மின்கம்பி மீது குண்டுபட்டு வெடித்து உள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் தப்பிக்க நாலாபுறமும் ஓடியுள்ளனர் என கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் உடனடியாக நிருபர்கள் உள்பட மக்கள் யாரையும் உள்ளே விடாமல் பள்ளியை பூட்டினர். இந்த சம்பவத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொலிசாரின் விசாரணை நடந்து வருகிறது.
மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி
மூழ்கிய அகதிகள் படகு 73 பேர் பலி
லிபியா கடல் பரப்பின் ஊடாக பயணித்த
அகதிகள் படகு ஒன்று மூழ்கியதில்
அதில் பயணித்த 73 பேர் பலியாகியுள்ளனர் .
80 பேருடன் பயணித்த அகாணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கும்
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
மீட்க பட்டுள்ளனர் .
காணாமல் போனவர்கள் கண்டு பிடிக்கும்
பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக பயணித்த பொழுதே இந்த
அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி
துருக்கி நில நடுக்கத்தில் 3 ஈரான் உதைபந்தாட்ட வீரர்கள் பலி
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கி ஈரான் நாட்டை சேர்ந்த ,
3 உதைபந்தாட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர் .
பலியான மூன்று வீரர்களும் ஈரான் நாட்டின் ,
amputee உதைபந்தாட்ட அணியை சேர்ந்தவர்கள் என,
ஈரான் தெரிவித்துள்ளது .
ஈரான் கால்பந்து வீர்ரகளின் இழப்பால் ,
அவரகள் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி
வாகன விபத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்துச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு – கொழும்பு வீதி மியாங்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை (24) இடம்பெற்றுள்ளது.
கேகாலையிலுள்ள தனது வீட்டிலிருந்து கடைமைக்காக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பஸ் வண்டியுடன் மோதியதிலே பொலிஸ் உத்தியோகத்தர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் 33 வயதுடைய அசங்க என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்துச் சம்பவம்
தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு
வெள்ளத்தில் சிக்கி 52 மக்கள் பலி 89 ஆயிரம் மக்கள் பாதிப்பு
சூடானில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 52 பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 89 ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்.
நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் இந்த வெள்ளத்தினால் அழிந்துள்ளது .
வீடுகளுக்குள் வெள்ளம் அடித்து புகுந்ததினால் , வீட்டின் பொருட்கள் யாவும் வெள்ளத்துடன் அடித்து செல்ல பட்டுள்ளது.
சூடானில் வெள்ளத்தினால் , பாதிக்க பட்ட மக்களுக்கு ,ஆளும் அரசு உரிய உதவிகளை வழங்கவில்லை என்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது.
சூடானில் பாதிக்க பட்ட மக்களுக்கு, தாம் உதவிட தயராக உள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளதுடன் ,கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்த வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களுக்கு, உதவிட மறுத்துள்ள சூடான்
அரசின் ,தட்டி கழிப்பு செயல்பாடுகள் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நில நடுக்கத்தில் 1500 பேர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 1500 பேர் பலியாகியுள்ளனர் என முதல்கட்ட செய்திகள் வெளியாகியுள்ளன .
மேலும் இந்த நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை இரண்டாயிரம் பேர் வரை படுகாயமடைந்துள்ளனர் .
கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளன .
இதுவரை வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் இந்த உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது.
மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் இராணுவ உலங்குவானூர்திகளும் பயன் படுத்த பட்ட வண்னம் உள்ளது .
தலிபான்கள் ஆட்சியில் இடம்பெற்ற முதலாவது பெரும் நில நடுக்க பேரழிவு காட்சியாக இது அமைய பெற்றுள்ளது .
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மக்களுக்கு அடக்குமுறையை பிரயோகித்து வருவதால் உலக நாடுகள் பல உதவிட பின்னடித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்
ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்
ஈரான் நாட்டில் Mashhad-Yazd பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பதினேழு பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்
மேலும் முப்பது பேர் படு காயமடைந்துள்ளனர் ,இந்த ரயில் விபத்து இடம்பெறும் பொழுது 380 பயணிகள் அவ்வேளை பயணம் செய்துள்ளனர்
எனினும் ஏனைய மக்கள் உயிரை சேதங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்,இந்த ரயில் விபத்தில் காயமடைந்த மக்களை உடனடியாக மீட்டெடு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல இரண்டு இராணுவ உலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளன
அந்த உலங்குவானூர்திகள் மூலம் காயமடைந்த மக்கள் அவசர சிகிச்சைக்கு அழைத்து செல்ல பட்டனர்
இந்த மனிதாபிமான உதவிகளை ஈரானிய இராணுவத்தினர் மேற்கொண்ட செயல் ஈரான் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது
ஈரான் நாட்டில் இடம்பெற்ற இந்த திடீர் ரயில் விபத்து சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஈரானில் இதுபோன்ற மிக பெரும் ரயில் விபத்து இடம் பெற்று பலநூறு மக்கள் பலியாகினர் ,
அதுபோல இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட தீவிரவாத செயலா அல்லது தண்டவாளங்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இடம்பெற்ற சம்பவமா என்பது தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
ரயில் விபத்து 17 பேர் பலி – 30 பேர் காயம்
ஈரானின் உள்ளக கட்டமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக மக்கள் புரட்சியை கிளறி ஈரான் ஆளும் அரசை ஆட்சியில் இருந்து துரத்திட அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சதிகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளன
அவ்வாறான அபாயகாரமான நிலைகள் உள்ள நிலையில், இவ்விதம் மக்கள் உயிர்களோடு விளையாடியுள்ள இந்த ரயில் விபத்து பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த ரயில் விபத்தில் பலியான மக்களுக்கு அரசு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என பரிந்துரைக்க பட்டுள்ளது
ஈரானில் இடம்பெற்ற இந்த ரயில் விபத்து அதில் இடம்பெற்ற மக்கள் பலி மற்றும் காயங்கள் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கை வெளியாகும் பொழுதே இந்த விபத்து உண்மை நிலை மக்களுக்கு தெரிய வரும் என எதிர் பார்க்க படுகிறது
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
நேற்று இரவு அமெரிக்கா Philadelphia பகுதியில் கூடியிருந்த மக்களுக்குள் புகுந்த மர்ம ஆயுததாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தாள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ இடத்தில பதினொரு பேர் பிழையாகினர் ,மேலும் இருபத்தி எட்டு பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன
நிறைந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடிரென துப்பாக்கி சூட்டு சத்தம் கேட்டது ,இதனை அடுத்து மக்கள் நாலா புறமும் சிதறி ஓடினர்
சினிமா காட்சி போல சொற்ப நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
இறந்த நிலையிலும் மேலும் பலர் கதறலுடன் காயத்துடன் துடித்த வண்ணம் இருந்தனர்
என நேரில் கண்ட சாட்சிகள் கண்ணீர் மல்க கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
அமெரிக்காவில் தொடராக இடம் பெற்று வரும் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சமப்வத்தில் சிக்கி பல நூர் மக்கள் பலியாகியுள்ளனர்
மக்களுக்குள் துப்பாக்கி சூடு -11 பேர் பலி
அதிகரித்து செல்லும் இந்த முறைகேடான துப்பாக்கி பாவனையை அடுத்து மக்கள் துப்பாக்கிகள் பயன் படுத்த தடை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்றுள்ளது
எதிரிகள் போல வேடமிட்டு நுழைந்து அப்பாவி மக்களை கொன்று குவித்து அதில் மகிழ்ச்சி காணும் மனோ நிலையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்
தொடர்ந்து இடம் பெறும் இந்த சூட்டு சம்பவங்களின் பின்னால் மிக பெரும் அரசியல்வாதிகள் உள்ளதாக சந்தேகம் வலுப் பெற்றுள்ளது
டிரம்ப் ஆட்சியை விட்டு அகன்றதன் பின்னர் இவ்வாறான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்வதை அவதானிக்க முடிகிறது
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியணை ஏறிட காத்திருக்கும் டிரம்ப் இவ்வாறான சம்பவங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துவார் என எதிர் பார்க்க படுகிறது
மக்களை கொன்று தாம் அரசியலுக்கு வந்து கொள்ளையடித்தால் போதுமென்று சில அரசியல்வாதிகள் உலாவத்தான் செய்கின்றனர்
அரசியலில் இதெல்லாம் சகயமப்பா ..!
மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி
மாலியில் வெடித்த குண்டு -ஐநா பணியாளர்கள் பலி- அடுத்து என்ன
மாலி நாட்டில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகி வருகின்றனர்
இவ்வேளை மாலியில் சமாதான பணிகளில் ஈடுபட்டிருந்த, ஐக்கிய நாடுகள் தூதரக பணியாளர்கள்பயணித்த வாகனம் மீது திடீரென இந்த வன்முறை தூண்டும் குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது
மாலியில் ஐநா பணியாளர்கள் பயணித்த வாகனம் மீது நடத்த பட குண்டு தாக்குதலில்
சிக்கி இருவர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்
நாடுகளில் நடை போரின் ,யுத்த வலய பகுதிகளில் சமாதான தூதர்களாக பயணிக்கும்
இவர்கள் ,இரட்டை உளவாளிகளாக செயல் பாட்டு வந்தமை ஈழ தமிழர் போராட்த்தில் அப்பட்டமாக இடம்பெற்றுள்ளது
அவ்விதம் இவர்கள் கறுப்பு கண்ணாடி மாட்டிய உளவாளிகள் என வர்ணித்த , போராளி குழுக்களினால் கொலை செய்ய பட்டுள்ளனர்
எதிரி எமக்கு நண்பன் என கூறும் போராளி குழு ,இவர்களே எமது, பரம எதிரிகள் என கூறி வருகினறனர்
,புரையோடி போயுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு, நாட்டை முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டிய அரசியல் வாதிகள் ,தமது சட்டை பைகளை நிறைத்த வண்ணம்
உள்ளதை ,ஆசிய நாடுக்ளின் அரசியல் சாபக்கேடுகாட்டி நிற்கிறது
மாலியில் வெடித்து சிதறும் குண்டுகளினால் அப்பாவி மக்களும் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,முடிவில்லா தொடரும் இந்த போருக்கு, ஐக்கிய நாடுகள் சபை எவ்விதம் தீர்வு காணலாம் என்பதே கேள்வியாக உள்ளது
மாலியில் இதற்கு முன்னரும் வெடித்த குண்டு தாக்குதலில் ,ஐநா பணியாளார்கள் இவ்விதம் படுகொலை செய்ய பட்டனர் ,
அதனை தொடர்ந்து , அந்த நாட்டில் இருந்து ஐநா வெளியேற போவதாக அறிவித்த நிலையில் மீளவும் இந்த தாக்குதல்கள்
இடம்பெற்றுள்ளது
ஆளும் மாலிய அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் நலன்
சார்ந்து செயல் படும் இந்த பணியாளர்கள் ,சமாதன வேடம் இட்டவாறு வெள்ளை
வண்டிகளில் பயணித்து சொகுசு வாழ்ககை அனுபவித்து வருகினறனர்
மேற்படி குண்டு தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .































