பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக குறித்த தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் வருகை தந்த பின், ஆனமடுவ வேம்புவெவ கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆனமடுவையில் இருந்து வந்த தனியார் வர்த்தக நிறுவனமொன்றுக்கு சொந்தமான லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

இந்த விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மோட்டார் சைக்கிளில் தாயுடன் பயணித்த இரண்டு பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விபத்தின் போது வீதியில் கவிழ்ந்ததில் அந்த லொறியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

எனினும், மோட்டார் சைக்கிளில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், மோட்டார் சைக்கிளில் வருகை தந்த , தான் புத்தளத்திலிருந்து ஆனமடுவைக்கு பஸ்ஸில் சென்றதாக உயிரிழந்த பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வந்த மற்றுமொரு மகள் தெரிவித்துள்ளார்.

மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

பொத்துஹெர, பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் குருநாகலில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறி போக்குவரத்து லொறியுடன் எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

வாகன விபத்தில் மூவர் 3 பேர் பலி

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி பொத்துஹெர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நொரச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளச்சேனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

புளச்சேனை நோக்கிச் சென்ற லொறியுடன் துவிச்சக்கர வண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டியில் பயணித்த 4 வயது குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் வீதி விபத்துக்களில் 341 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி

வாகன விபத்தில் அருட்தந்தையொருவர் பலி

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன் நாற்சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (4) பதிவாகியுள்ளது .

மன்னார் மறை மாவட்டம் , சலேசியன் சபையைச் சேர்ந்த 34 வயதுடைய அருட்தந்தை மரிசால் டிலான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளதுடன் அதில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வருகையில் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .

இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தையை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அல்சபா போராளிகள் 130 பேர் பலி
Posted in உலக செய்திகள்

அல்சபா போராளிகள் 130 பேர் பலி

அல்சபா போராளிகள் 130 பேர் பலி

அல்சபா போராளிகளுக்கும் சோமாலிய அரச இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 130 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிப்பு .

தமது தாயக மீட்புக்காக போராடி வரும் இவர்களுக்கும் அரச இராணுவத்தினருக்கும் இடையில் தொடராக போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

மண் மீட்பு போருக்காக தமது உயிரை கொடுத்த உறவுகள் கண்ணீர் சிந்தி வீரவணக்கம் , செலுத்தி விடுதலை கொடுத்துள்ளனர் .

பற்றி எரிகின்ற போரினால் பல உயிர்கள் பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

வீடியோ

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை
Posted in உலக செய்திகள்

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை

சீனாவில் பாரிய நிலநடுக்கம் 111 மக்கள் பலி 250 பேர் காயம் 100 பேரை காணவில்லை

சீனாவின் Qinghai  பகுதியில் இடம்பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி இதுவரை 111 மக்கள் பலியாகியுள்ளனர் .250 மக்கள் காயமடைந்தும் 100 பேர் காணாமல் போயுள்ளனர் .

இந்த நிலநடுக்கமானது 6.2 புள்ளி அளவில் பதிவாகியுள்ளது .சக்தி வாய்ந்த நில நடுக்கம் காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் என்பன இடிந்து அழிந்துள்ளன .

பாதிக்க பட்ட பகுதியில் மீட்பு பணிகள் வேக படுத்த பட்டுள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

வீடியோ

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்

எரிந்த பேரூந்து கார் 8 பேர் பலி 14 பேர் காயம்

வெனிசுவெலா தலைநகர் பகுதியில் இடம்பெற்ற கார் பேரூந்து விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில எட்டு பேர் பலியாகினர் மேலும் 14 பேர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

கார் பேரூந்து என்பன மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

வீடியோ

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

மழையில் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

அலவத்துகொட, தொடங்கொல்ல பகுதியில் நேற்று (08) இரவு பெய்த அடை மழையில் வீடொன்றின் மதில் சுவர் இடிந்து வீழ்ந்துள்ளது.

உயரமான பகுதியில் அமைந்துள்ள வீட்டின் முற்றத்தில் மண்சரிவு ஏற்பட்டதில், 15 அடி உயர மதில் சுவர் வீட்டின் கீழே உள்ள வீதியில் உடைந்து விழுந்ததில், அப்போது வீதியில் நடந்து சென்ற ஒருவர் மீது விழுந்துள்ளது.

உடனடியாக செயற்பட்ட பொலிஸார் பிரதேசவாசிகளுடன் இணைந்து விபத்தில் சிக்கியவரை அக்குரண வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அக்குரண, குருந்துகஹால பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

தனது சொந்த மக்கள் மீது விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அந்த மக்களை கொன்று குவித்துள்ளது .இந்த தாக்குதலில் 88 மக்கள் பலியாகியும் 69 பேர் காயமடைந்துள்ளனர்

நையீரிய Kaduna State பகுதியில் விழா நிகழ்வு ஒன்றின் மீது அரச இராணுவ உளவு விமானங்கள் மூலம் இரண்டு தடவை குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சொந்த மக்களை குண்டு வீசி கொன்ற இராணுவம் 88 பேர் பலி 69 பேர் காயம்

இதன் பொழுது அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் 88 பேர் பலியாகியும் ,69 பேர் காயமடைந்துள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

சொந்த மக்களையே ஈவ் இரக்கமின்றி கொன்று விட்டு அது தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் என இராணுவம் தெரிவித்துள்ளது .

வீடியோ

இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி


இஸ்ரேல் உயர் தளபதிகள் இருவர் பலி

இஸ்ரேல் இராணுவத்தின் அதி உயர் தளபதிகள் இருவர் ஹமாஸ் போராளிகள் தாக்குதலில் பலி ,

இஸ்ரேலுக்கு தொடரும் பெரும் .
இழப்பு .திணறும் இஸ்ரேல் இராணுவம் .

ஹமாஸ் படைகள் கடும் தாக்குதல் ,கொத்தாக பலியாகும்

வீடியோ

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

பாலஸ்தீனம் காசா  Khan Younis பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் முப்பது பேர் பலியாகியுள்ளனர்

இறந்தவர்களில் சிறுவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்

காசா  Khan Younis படாசாலை மீது தாக்குதல் 30 பேர் பலி

அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் கொடூர இன அழிப்பை மேற்கொண்டுள்ளனர் .

வெளியான காணொளி காட்சிகள் சடலங்கள் சிதறிய வண்ணம் காணப்படுகின்றன ,

பார்ப்பவர்களை கதற வைக்கும் நிலையில் அந்த காட்சிகள் காணப்படுகின்றன

வீடியோ

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி
Posted in உலக செய்திகள்

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி

பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி

தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் திங்கட்கிழமை(04) நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை

இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி இரண்டாக பிளந்ததுள்ளது.

தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த கோர விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந் நாட்டு அரசு போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

விடியோ

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி மாணவன் பலி

நீரில் மூழ்கி மாணவன் பலி

நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெட்டியகனே மஹாவெவ பிரதேசத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நேற்று (02) காலை 03 பாடசாலை மாணவர்கள் மெட்டியகனே மஹாவெவவில் நீராடச் சென்ற வேளையில் அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

நீரில் மூழ்கி மாணவன் பலி

பின்னர், மாணவர்களும் பிரதேசவாசிகளும் நீரில் மூழ்கிய மாணவனைக் மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் ஏற்கனவே மாணவர் உயிரிழந்துள்ளதை வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி
Posted in இலங்கை செய்திகள்

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி

பிக்கு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று

ஞாயிற்றுக்கிழமை (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெனியாய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பல்லேகமவில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த வந்த 18 வயதுடைய பிக்குவால் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டார்.

பிக்குவின் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் பலி

இந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடகோமடிய, கட்டுவன பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான உத்தியோகத்தர் என்பதுடன், இவர் குறித்த பிக்குவின்

20 வயதுடைய சகோதரியுடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த காதல் உறவை நிறுத்துமாறு பிக்குவால் பல தடவைகள் பொலிஸ் உத்தியோகத்தருக்கு அறிவுறுத்தப்பட்ட போதிலும், கடந்த 16ஆம் திகதி குறித்த

பொலிஸ் உத்தியோகத்தர் பிக்குவின் சகோதரியின் வீட்டுக்குச் சென்ற போது, பிக்கு குறித்த உத்தியோகத்தருக்கு தொலைபேசி மூலம் அழைத்து தன்னை சந்திக்குமாறு அறிவித்திருந்தார்.

பின்னர் பல்லேகம கங்கொட வீதியில் உள்ள சம்போதி முதியோர் இல்லத்திற்கு அருகில் இருவரும் சந்தித்துள்ளனர்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து சந்தேக நபரான பிக்கு, தனது பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தில் சரமாரியாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலை நடத்திய சந்தேக நபர் தெனியாய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மொரவக்க நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று காலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|


இஸ்ரேல் ஆமி பெண் பலி|இஸ்ரேல் கைதி|

இஸ்ரேல் ஆமி பெண் பலி,ஹமாஸ் படையினரால் கைது செய்ய பட்ட இராணுவ இளம் பெண் சடலமாக மீட்பு.

அல்சீபா மருத்துவமனை சுற்றிவளைத்து தேடுதல் .

தமது ஆயுதங்களை வைத்து விட்டு ஹமாஸ் ஆயுதம் என பரப்புரை நடத்தும் இஸ்ரேல் இராணுவம் .

வீடியோ

நடந்து சென்ற பெண்ணை இடித்து கொன்ற ஆசாமி
Posted in இலங்கை செய்திகள்

16 வயது பாடசாலை மாணவி விபத்தில் பலி

16 வயது பாடசாலை மாணவி விபத்தில் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் சறுக்கி எதிர்திசையில் வந்த பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து நேற்று (02) மாலை மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 09 ஆம் கம்பம் கெம்பிலிதியெத்த புராதன விகாரைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதியும் பின்னால் அமர்ந்து சென்ற மகளும் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 16 வயதுடைய மகள் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

கஹபத்வல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க விபத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலி

கட்டுநாயக்க விபத்தில் ஸ்தலத்திலேயே இருவர் பலி

கொழும்பிலிருந்து கட்டுநாயக ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

நேற்று (23) இரவு இடம்பெற்ற இவ்விபத்தினால் பிரதேசவாசிகள் அமைதியின்மையை ஏற்படுத்தினர்.

எனினும், பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

விபத்து சம்பந்தமாக கட்டுநாயக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகங்கத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பாதால உலக குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, விசேட அதிரடி படையினர் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

இதையடுத்து, விசேட அதிரடி படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.

தெற்கில் இடம்பெற்ற பல குற்றங்களுடன், இவர் தொடர்புடைய சந்தேகநபர்களில் இவரும் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்ளனர்,

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் பலி

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் நேற்றிரவு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியோரம் வாகனங்களைச் சோதனை

செய்து கொண்டிருந்த போது, கந்தளாயிலிருந்து கடுவலை நோக்கிச் சென்ற டிப்பர் ட்ரக் பொலிஸ் கான்ஸ்டபிளை மோதியுள்ளது.

படுகாயமடைந்த நிலையில், குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி
Posted in உலக செய்திகள்

திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி

திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி

ஈராக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தீ விபத்தில் குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுமார் 150 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈராக்கின் வடக்கில் உள்ள நினவா மாநிலத்தின் அல்-ஹம்டனியா பகுதியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

திருமண மண்டபத்தில் தீ 100 பேர் பலி

திருமண மண்டபத்தில் தீயணைப்பாளர்கள் நெருப்பை அணைக்க முயலும் படங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.

எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான உதவிகளை வழங்க எல்லா வகையிலும் முயற்சி எடுக்கும்படி ஈராக்கியப் பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. ஆனால் சம்பவ இடத்தில் வாணவேடிக்கையால் தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ஈரானுக்குள் வெடித்த மர்ம பொருள்|இஸ்ரேல் தாக்குதலா|பலநூறு பேர் பலி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்குள் வெடித்த மர்ம பொருள்|இஸ்ரேல் தாக்குதலா|பலநூறு பேர் பலி


ஈரானுக்குள் வெடித்த மர்ம பொருள்|இஸ்ரேல் தாக்குதலா|பலநூறு பேர் பலி|ethiri news

ஈரானுக்கும் வீழ்ந்து வெடித்த மர்ம பொருள் ,இஸ்ரேல் தாக்குதலா பீதியில் மக்கள் ,பலநூறு பேர் மரணம் ,
வெடித்த உக்கிர மோதல் ,

full video