சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீட்டியாகொட – தெல்வத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகங்கத்தில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பாதால உலக குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, விசேட அதிரடி படையினர் குறித்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர் விசேட அதிரடி படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிங்கள இராணுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
இதையடுத்து, விசேட அதிரடி படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த சந்தேகநபர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.
தெற்கில் இடம்பெற்ற பல குற்றங்களுடன், இவர் தொடர்புடைய சந்தேகநபர்களில் இவரும் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்ளனர்,
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது

- விமானம் பறவை மோதல் அவசரமாக தரை இறங்கிய விமானம்

- இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் பதஹேவஹேட்ட பிரதேச சபை தலைவர் கைது

- மேற்கு மாகாணத்தில் டெங்கு பாதிப்புகள் 35000

- நெல் கொள்முதல் விவாசயிகள் மகிழ்ச்சி

- உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு







