Posted in Uncategorized

குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.

வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .

அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .


கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.

    Posted in இலங்கை செய்திகள்

    பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்

    பஸ் ஆட்டோ மோதல் – மூவர் மரணம்

    மன்னம் பிட்டிய பகுதியில் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோ மோதி விபத்தில் சிக்கியதில்


    மூவர் சம்பவ இடத்தில பலியாகினர்

    பலியானவர்களில் இரு பெண்கள் என தெரிவிக்க படுகிறது


    இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது.

      Posted in Uncategorized

      மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

      மசூதியில் வெடித்த குண்டு 33 பேர் பலி

      வடக்கு ஆப்கான் Kunduz பகுதியில் உள்ள மசூதியில் குண்டு ஒன்று


      வெடித்து சிதறியதால் அங்கு தொழுகையில் ஈடுபட்ட முப்பத்தி மூன்று பேர் பலியாகியுள்ளனர்

      மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

      தலிபான்கள் ஆட்சியில் தொடராக இவ்விதமான குண்டு தாக்குதல்கள் இடம்பெற்ற

      வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

        வீதி விபத்தில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணம்

        இலங்கை Thanamalwila பகுதியில் ஆட்டோ மற்றும் டபிள் கப்


        இரண்டு மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர்

        மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


        இலங்கையில் நாள் தோறும் வீதி விபத்தில் சிக்கி ஆறுக்கு மேற்பட்டவர்கள்

        பலியாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          சிறுவன் பள்ளத்தில் விழுந்து பலி

          .சிறுவன் பள்ளத்தில் விழுந்து பலி

          கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற தந்தையின் பின்னால் வந்த மூன்று

          யது சிறுவன், பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

          கஹட்டகஸ்திகிலிய, கைப்பிட்டிய, இஹலகம பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

          சிறுவனின் தந்தை வழமை போன்று கால்நடைகளை வீட்டுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதையடுத்து தந்தையை சிறுவன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

          எனினும், சிறுவன் தனது பின்னால் வந்ததை தந்தை பார்க்கவில்லை என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

          இதன்போது, சிறுவன் நீர் நிறைந்த பள்ளத்தில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.

          பின்னர் சிறுவனை தேடிய போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

          லொறி மோட்டசைக்கிள் மோதல் – தாய் ,மகன் பலி

          எல்பிட்டி பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறி ஒன்று மோட்டர் சைக்கிள் ஒன்றுடன்

          மோதியதில் அந்த வண்டியை ஒட்டி சென்ற 21 வயது மகனும் ,47 வயது தாயும் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

          விபத்தை ஏற்படுத்திய லொறி சாரதி தப்பி ஓடிய நிலையில் தற்போது கைது செய்ய பட்டு நீதி

          மன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்

          Posted in உலக செய்திகள்

          வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்

          வெடித்த குண்டு – சிதறிய மனித உடல்

          சிரியாவில் திடீரென கடை தொகுதி ஒன்றுக்கு முன்னாள் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது

          ,இதன் பொழுது சம்பவ இடத்தில் இருவர் பலியாகினர் ,மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்

          ,காயமடைந்தவர்களில் சிறார்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது ,இதுவரை இந்த குண்டு

          தாக்குதலுக்கு யாரும் உரிமை கோரவில்லை

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் பேருந்து மோதி பெண் பலி

            யாழில் பேருந்து மோதி பெண் பலி

            யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற பேருந்து விபத்தில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

            யாழ். மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று காலை நுழைந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து , பேருந்து நிலைய வளாகத்தினுள் நின்ற வயோதிப பெண்ணொருவரை மோதி விபத்துக்கு உள்ளானது.

            விபத்தில் படுகாயமடைந்த வயோதிப பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

            வைத்தியசாலையில் சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் குறித்த வயோதிப பெண்ணுக்கு அதிதீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் , சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

            பிரேத பரிசோதனைக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

            Posted in Uncategorized இலங்கை செய்திகள்

            துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

            துப்பாக்கி வெடித்ததில் இருவர் பலி – ஒருவர் காயம்

            மிருக வேட்டைக்காக பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            நேற்று (23) மாலை திருப்பனே பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முரியாகல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

            60 மற்றும் 44 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

            மூவர் குறித்த பகுதியால் நடந்து சென்ற சந்தர்பத்தில் இருவர் மீது துப்பாக்கி சுடப்பட்டுள்ளது.

            இதனை ஊர்மக்களுக்கு அறியத்தருவதற்காக ஓடி சென்ற மூன்றாவது நபர் மீது வேறு ஒரு கட்டுத் துப்பாக்கி வெடித்து அவரும் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

            இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

            இலங்கையில் நேற்றைய தினம் (15) மேலும் 41 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

            சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

            திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              Posted in Uncategorized

              இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் ஒரே நாளில் 42 பேர் பலி

              இலங்கையில் அதிகரிக்கும் கொரனோ மரணம் ஒரே நாளில் 42 பேர் பலி

              இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
              கடந்த தினம் மட்டும் 42 பேர் பலியாகியுள்ளனர்

              இலங்கையில் இடம் பெற்ற மரணங்களில் இதுவே அதிக எண்ணிகையிலாக பதிவாகியுள்ளது

              இதுவரை இந்த நோயின் தாக்குதலில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1,405 ஆக பதிவாகியுள்ளது

                Posted in Uncategorized

                ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி

                ஏமனில் கடும் மோதல் – 80 இராணுவம் பலி

                எமன் நட்டு இராணுவத்தினர் நடத்தி வரும் கடும் போரில் சவுதியை இராணுவம் ,மற்றும் , ஆதரவு படைகள் வசம் இருந்த மிக முக்கிய பத்து பகுதிகள் மீட்க பட்டுள்ளன

                இவ்வாறு மீட்க பட்ட பகுதிகளில் பிரதான நெடுஞ்சாலையும் அடங்கும் என அந்த அமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

                தொடர்ந்து உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகிறது ,இதில் 80 சவுதியை படைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

                  ஒரே நாளில் 29 பேர் கொரனோவுக்கு பலி

                  இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 29 பேர் ஒரே நாளில் பலியாகியுள்ளனர்

                  இதுவரை இந்த நோயில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 1.298 என தெரிவிக்க பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ

                    இலங்கையில் ஒரே நாளில் 24 பேரை பலி கொண்ட கொரனோ

                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

                    இருபத்தி நான்கு பேர் பலியாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

                    மேலும் இதன் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி

                      இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி

                      இந்தியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் சிக்கி எட்டு இலங்கையர்கள்

                      பலியாகியுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்

                      இந்தியாவில் அதி வேகமாக பரவி வருவதுடன் நாள் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

                      என்பது குறிப்பிட தக்கது

                        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                        கொரனோவால் அமெரிக்காவில் 2,116 பேர் மரணம் – பிரிட்டனில் 678 பேர் மரணம்

                        கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது

                        இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24

                        மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்

                        பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்

                        பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்

                        தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்

                        உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது

                        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                        Posted in இலங்கை செய்திகள்

                        வாகன விபத்தில் இலங்கையில் 1844 பேர் பலி

                        வாகன விபத்தில் இலங்கையில் 1844 பேர் பலி

                        இலங்கையில் நடந்து முடிந்த ஆண்டில் சாலை விபத்துக்களில்

                        மட்டும் சிக்கி சுமார் 1844 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                        மேலும் இவ்வாறன விபத்துக்களில் சுமார் 5384 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ,

                        சிலர் முற்றாக செயல் முடக்க நிலைக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது

                        சாலை விதிகளை கடை பிடிக்க தவறுவதன் விளைவே இந்த

                        விபத்துக்கள் அதிகம் இடம்பெற காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர்

                        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                        Posted in இலங்கை செய்திகள்

                        சிறையில் கைதிகள் மோதல் -இதுவரை 6 பேர் பலி!

                        சிறையில் கைதிகள் மோதல் -இதுவரை 6 பேர் பலி!

                        அதேபோல், குறித்த சம்பவத்தில் காயமடைந்த 43 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                        மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில்

                        இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாக கொண்டு நேற்று (29) மதியம் இந்த அமைதியின்மை ஏற்பட்டது.

                        அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                        இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் குறைந்த பட்ச அதிகாரத்தை பயன்படுத்தியுள்ள

                        நிலையில் இதன்போது சில துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

                        எவ்வாறாயினும், குறித்த அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக பின்னர் பொலிஸ் விசேட அதிரடப்படையினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

                        சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பினை பலப்படுத்திய நிலையில், களனி மற்றும் ராகமை பொலிஸ் நிலையங்களில்

                        இருந்து 5 பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

                        இதேவேளை, மஹர சிறைகளில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை முழுமையாக

                        கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

                        செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                        Posted in இலங்கை செய்திகள்

                        குழந்தைக்கு தொட்டில் கட்ட முயன்ற தந்தை பலி

                        குழந்தைக்கு தொட்டில் கட்ட முயன்ற தந்தை பலி

                        முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இருட்டுமடு பகுதியில் பிறந்த தனது குழந்தைக்கு

                        தொட்டில் கட்ட வீட்டில் ஏறிய குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

                        இருட்டு மடுவினை சேர்ந்த 36 அகவையுடைய இராமசாமி மோகன்றாச் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு

                        உயிரிழந்துள்ள சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

                        குறித்த விபத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்கைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு கொண்டு

                        செல்லப்பட்டு பின்னர் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

                        குழந்தை பிறந்து பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் தொட்டில் கட்ட ஏறியபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

                        Posted in உலக செய்திகள்

                        போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

                        போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

                        ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

                        ரஷியாவில் போதைக்காக கிருமி நாசினியை குடித்த 7 பேர் பலி

                        ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற பிராந்தியம் சகா. அங்குள்ள டாட்டின்ஸ்கி என்ற மாவட்டத்தை

                        சேர்ந்த சிலர் போதைக்காக மதுவுக்கு பதில் கிருமி நாசினியை குடித்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மயக்கம் போன்ற உபாதைகள் ஏற்பட்டது.

                        இதையடுத்து அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்த

                        போதும் சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.