Tag: பேருந்து விபத்தில்
பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி
பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி
தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் திங்கட்கிழமை(04) நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை
இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி இரண்டாக பிளந்ததுள்ளது.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த கோர விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந் நாட்டு அரசு போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது
- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா
- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது
பேருந்து விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்
பேருந்து விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்து கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.



























