Tag: பேருந்து விபத்தில்
பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி
பேருந்து விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலி
தாய்லாந்தின் பிரச்சாப் கிரி கான் மாகாணத்தில் திங்கட்கிழமை(04) நள்ளிரவில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை
இழந்து தறிகெட்டு ஓடியது. பின்னர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி இரண்டாக பிளந்ததுள்ளது.
தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த கோர விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந் நாட்டு அரசு போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
- ஈரான் குடி நீர் பகுதியை இலக்கு வைத்து அமெரிக்கா தாக்குதல்
- பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
- ஈரான் தாக்குதல்களுக்குப் பிறகு குவைத் வான்வெளி மீண்டும் திறப்பு
- BharathirajaPassedAway பாரதிராஜா மறைவு சோகத்தில் மூழ்கி பேசிய ரஜினி
- ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பன்னிரண்டு பேர் பலி
- முறையான உரிமம் இல்லாமல் 17 ஆண்டுகளாக விமானம் ஓட்டியகனடா விமானி
- பதிலடித் தாக்குதலுக்கு ஈரானுக்கு ஹிஸ்புல்லா நன்றி
- அமெரிக்கா உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்திய ஈரான்
- ஹோர்முஸ் முதல் செங்கடல் வரை பாதுகாப்பு வளையம் அமைக்கப்படும் என குட்ஸ் படைத் தலைவர் அறிவிப்பு
- கிட்டத்தட்ட 150 ஆண்டுகளில் இல்லாத மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் கியூபா கடற்பரப்பில் தாக்கியது
- டிம் குக் விடைபெறும் வேளையில், ஆப்பிள் நிறுவனம் சிரி ஏஐ-யின் புதிய தோற்றத்தை வெளியிடுகிறது
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்
பேருந்து விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்
பேருந்து விபத்தில் ஒருவர் பலி 10 பேர் படுகாயம்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த பேருந்து கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.


























