Tag: தேடும்
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா குருமன்காடு பகுதியில் இருபது வயதுடைய வாலிபன் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த 31 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டார் , இதுவரை வீடு திரும்பவில்லை இவ்வாறு காணாமல் போன வாலிபனை
தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மாயமான வாலிபன் உயிருடன் உள்ளாரா அல்லது கடத்தப் பட்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
இலங்கையில் தொடராக காணாமல் போகும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
குறிப்பிட தக்கது
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு
சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது
அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது
புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்
இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது
சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்
இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது
அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது
அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க
குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்
புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்
அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,
அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,
இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்
இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்
புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது
போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது
காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .
இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !
எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .
- வன்னி மைந்தன் –
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு
- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்
- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா
- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு
- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்
- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை
- அமெரிக்காவுக்கு ஆப்படித்த ஈரான் ஓமான்
- லெபனான் அதிகாரிகள் மீதான அமெரிக்கத் தடைகளுக்கு ஈரான் கண்டனம்
- போலந்துக்கு மேலும் 5000 துருப்புகளை அமெரிக்கா அனுப்பும் டிரம்ப்
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்
- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது
- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்
மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்
மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது என்று பிரபல நடிகை வரலட்சுமி கோபமாக பதிவு செய்திருக்கிறார்.
என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது – வரலட்சுமி கோபம்
வரலட்சுமி
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில்
‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘சேஸிங்’, ‘டேனி’, ‘பிறந்தாள் பராசக்தி’ ஆகிய படங்களிலும்,
தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் கன்னடத்தில் ‘ரணம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி.
வரலட்சுமிக்கு திருமணம் என்று பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வரலட்சுமி, சந்தீப் என்ற
தொழிலதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி
தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? அதே முட்டாள்தனமான வதந்திகள்.
என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத்
திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி அறிவிப்பேன். எனக்குத்
திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


























