Posted in Uncategorized

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய – சிரியா இராணுவம்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய – சிரியா இராணுவம்

சிரியாவில் உள்ள முக்கிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தின

இந்த ஏவுகணைகள் குறித்த இலக்கினை அடையும் முன்னர் சிரியா இராணுவத்தினர் விமான

ஏவுகணைகள் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

இஸ்ரேலிய இராணுவத்தினர் தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in Uncategorized

    இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது

    இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது

    கௌதாரிமுனையில் நெற் காணிகளையும் கடலட்டைப் பண்ணைகளையும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்

    இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கடலட்டை செயற்பாடுகளுக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும்

    பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், எமது நலன்களுக்கோ அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.

    கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (22.07.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.

    கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைமையில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், நெற் காணிளுக்கான கோரிக்கைகளை சுமார் 93 பேர் சமர்ப்பித்திருந்தனர்.

    அதேபான்று கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் சுமார் 27 கடற்றொழிலாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விண்ணப்பித்தவர்களுக்கான வயல் நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

    அதேபோன்று, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் இதுவரை 16 கடலட்டைப் பண்ணைகளுக்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில்

    விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை வழங்குமாறும் ஏனையவர்களுக்கான இடங்களை அடையாளப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடற்றொழில அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.

    இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘இலங்கை சீனக் கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்படடுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அந்தக் கடலட்டை குஞ்சு

    பராமரிப்பு நிலையத்தினூடாக எமக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்தித்து வருகின்றேன்.

    சீனா போன்ற நாடுகளில் இருந்து முதலீடுகளும் அனுபவங்களும் தொழில்நுட்பமும் பெற்றுக்கொள்ளப்படுமே தவிர, எமது மக்களினதும் நாட்டினதும் நலன்களை பாதிக்கும் வகையில்

    அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

    முன்னதாக, கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, கௌதாரிமுனைக்கான சுமார் 16 கிலோ மீற்றர் வீதியை புனரமைப்பதற்கான சாத்தியங்கள்

    தொடர்பாக ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

      மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

      நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மருதங்கேணி – செம்பியன்பற்று நாவலடி குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

      நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஓர் அங்கமாக மருதங்கேணி பிரதேச

      செயலகத்துக்குட்பட்ட, J/427 செம்பியன்பற்று தெற்கு கிராமத்தின் நாவலடி குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

      இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்;

      அடிக்கல் நாட்டி பணிகளை ஆரம்பித்ததுடன், திட்டத்தின் பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்தார்.

      மேலும், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு உடனடி நடவடிக்கைகளை

      எடுத்து அவற்றை தீர்த்துவைக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

      இந் நிகழ்ச்சித்திட்டமானது நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.

      அதன்படி, நாவலடி குளத்தின் அபிவிருத்திப்பணிகளுக்காக 3,866,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


      யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்பாடுகள் 4 மாதங்களில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

      இக்குளத்தை அபிவிருத்தி செய்து குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதனூடாக, நெல் மற்றும் வெங்காயப் பயிர்ச்செய்கைகளை பெருமளவில் மேற்கொள்ளும் செம்பியன்பற்று கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர்.

      இக்குளத்தை அபிவிருத்தி செய்துதருமாறு குறித்த கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட அங்கஜன் இராமநாதனுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியை நேரில் தெரிவித்தனர்.

        Posted in Uncategorized

        சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்

        சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்

        கிழக்கு சிரியாவின் south of Al-Hasakah மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கா கூலி படைகள் மீது மோட்டார் தாக்குகள் நடத்த பட்டுள்ளது

        திடீரென மேற் கொள்ள பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்திற்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

        எனினும் அமெரிக்கா தரப்பில் இருந்து சேத விபரங்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை

          Posted in இலங்கை செய்திகள்

          ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்

          ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்

          ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை

          எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் ​கேட்டுக்கொண்டுள்ளார்.

          தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலே​யே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின்

          விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.

          ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

          வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் ​மேம்படுவதற்கு வழிவகுத்தது.

          ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால், இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

          கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

          வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட

          பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, ​​நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர

          தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.

          இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ​​ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

            Posted in உளவு செய்திகள்

            ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்

            ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்

            வடக்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய தலைமையமாக

            விளங்கும் இராணுவ தளம் மீது கடந்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

            இதில் அமெரிக்கா CIA and US Special Operations units.பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் காயமடைந்துள்ளனர்

            மேற்படி தகவலானது அங்கு உள்ள அந்த முக்கிய நபர்கள் குடும்பங்கள் வாயிலாக கசிந்துள்ளது

            மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்

            சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்

            சிரியா நாட்டுக்குள் அழையாது நுழைந்த அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈரான் வேண்டுதல் விடுத்துள்ளது .

            மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை படுகொலை புரிந்து ,அவர்கள் வளம் கொழிக்கும் எண்ணெய்களை திருடி செல்கிறது அமெரிக்கா ,


            அவ்விதமான உலக கொள்ளையர்கள் அந்த மண்ணில் இருந்து விலக வேண்டும் என ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது .

            ஈரான் இந்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா படைகள் வெளியேறுமா என்பது சந்தேகமே

              Posted in Uncategorized

              மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?

              மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?

              புஸ் ஆட்சியில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து தற்போது

              படிப் படியாக விலக்க படுகின்றனர் ,அதில் முதல் கட்டமாக அரசிவாசி படைகள் முற்றாக அங்கிருந்து அகற்ற படுகின்றனர்

              தாலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா படைகள் பாரிய இழப்பை சந்தித்தன

              ,அதன் பின்னர் ,ஏற்பட்ட அரசியல் மாறுபட்ட நிலைகளை அடுத்து இந்த படை விலகலை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது

              மத்திய கிழக்கு நாடு முழுவதும் ஆக்கிரமித்து , அதன் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க

              பயங்கரவாதம் என்றபோர்வையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் வழ வேட்டை போரில் படு தோல்வியை சந்தித்துள்ளது

              மத்திய கிழக்கு நாடுகளை விட்டு ,தற்போது மத்திய ஆசியா நோக்கி அமெரிக்கா திரும்பியுள்ளது

              குறிப்பிட தக்கது ,இங்கு அடி வாங்குமா ..? அல்லது முற்றாக அழியுமா ..?

              ஏன் எனில் இங்குதான் சீனா ,வடகொரியா இந்திய உள்ளன .

              Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

              மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்

              மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்

              அமெரிக்கா லொஸ் அஞ்சல் பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் தாய் ஒருவர் தனது மூன்று

              பிள்ளைகளை மிக கோரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

              கடந்த தினம் காலை ஒன்பது முப்பது மணியளவில் இந்த படுகொலையை வெறியாட்டத்தை அவர் அரங்கேற்றியுள்ளார்

              இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

              ,கைது செய்ய பட்ட தாயாரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் நீதி விசாரணைக்கும் அவர் உட்படுத்த பட்டுளளார் ,

              மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

              மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய்
              மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய்
                கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                Posted in Uncategorized

                சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து மக்களை சுட்டு கொன்ற மர்ம நபர் – 10 பேர் பலி

                சூப்பர் மார்க்கட்டுக்குள் புகுந்து மக்களை சுட்டு கொன்ற மர்ம நபர் – 10 பேர் பலி

                அமெரிக்காவில் சூப்பர் மார்க்கட்டுக்குள் துப்பாக்கியுடன் சென்ற நாபா அங்கிருந்த மக்கள் மீது திடீர் சூட்டு தாக்குதலை நடத்தினான் ,இதில் பத்து பேர் பலியாகினர்

                இந்த தாக்குதலை தடுக்க விரைந்து சென்ற போலீசார் ஒருவரும் பலியாகியுள்ளார்

                குறித்த ஆயுத தாரி கைது செய்ய பட்டுள்ளான்


                தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,இது தீவிரவாத செயலுடன் தொடர்புடையதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                  Posted in Uncategorized

                  அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்

                  அமெரிக்காவுக்குள்ள நுழைந்த இலங்கையருக்கு நடந்த பரிதாபம்

                  இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முகமாக ,முகவர்கள் துணையுடன் நுழைந்த இலங்கை தமிழர்

                  ஒருவர் ,அங்கு நிலவும் அதிக குளிருக்குள் சிக்கி அவரது கால்கள் விறைத்து ,காயமடைந்த

                  நிலையில் ,அவரை எல்லோயோர படையினர் தூக்கி செல்லும் காட்சிகள் இவை ,

                  ஐரோப்பிய கனடா ,அமெரிக்கா கால நிலையை கருத்தில் கொள்ளாது ,இலங்கை மாசி பனி மழை என நினைத்து

                  வெளிநாட்ட்டு மோகத்தில் ,இவ்விதம் வரும் தமிழர்கள் ,ஆளைக்கொல்லும் குளிருக்குள் சிக்கி

                  தமது உயிரை மாய்க்கும் நிலை தோற்றம் பெற்று வருகிறது

                  இவரை பார்த்தாவது நம்ம தமிழர்கள் கொஞ்சம் விழிப்பாகாட்டும்

                    Posted in Uncategorized

                    அமெரிக்கா இராணுவதளம் மீது ரொக்கட் தாக்குதல் – இராணுவம் பலி

                    அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் – முகாம் பலத்த சேதம்

                    ஈராக்கில் மேற்கு பகுதியில் உள்ள அமெரிக்காவின் Ain al-Asadஇராணுவ தளம்

                    மற்றும் படைகள் தங்கும் இடம் என்பனவற்றை இலக்கு வைத்து பத்து ரொக்கட் ,ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன ,

                    இதில் அமெரிக்காவின் முகவர் ஒருவர் உள்ளிட்ட ,மூன்று இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,

                    இவர் அமெரிக்காவின் உளவாளி என தெரிவிக்க பட்டுள்ளது ,மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                    முகாம் பலத்த சேதமடைந்துள்ளது

                    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதலை நடத்தியது ,

                    அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு படைகள் நடாத்தியுள்ளமை குறிப்பிட தக்கது

                    கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                    Posted in Uncategorized

                    தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்

                    தாயை நெத்தியில் சுட்டு கொன்ற 14 வயது மகன்

                    அமெரிக்காவில் 14 வயது மகன் தன்னை பெற்ற தயை நெத்தியில் பலதடவை சுட்டு கொன்றுள்ள அதிர்ச்சி சமபவம் இடம்பெற்றுள்ளது

                    மேற்படி கொலையினை புரிந்த சிறுவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவர் பயன் படுத்திய

                    துப்பாக்கி ,மற்றும் தோட்ட என்பன எவ்வாறு இவருக்கு கிடைத்தது என்பது தொடர்ப்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                    ,தயாரின் துப்பாக்கியை இவர் பயன் படுத்தி இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

                    Posted in உலக செய்திகள்

                    வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

                    வட கொரியா எமை மிரட்டுகிறது – ஐநாவில் அமெரிக்கா கதறல்

                    உலக நாடுகளை வடகொரியா மிரட்டி வருவதாகவும் ,அதன் எல்லை

                    தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என அமெரிக்கா தூதர் ஐக்கிய நாடுகள் சபையில் முழங்கியுள்ளார்

                    வடகொரியா தனது ஏவுகணை பலத்த தொடர்ந்து அதிகரித்து செல்வதால் நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவி

                    வருகிறது ,இதனை தடுக்க வடகொரியா மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது

                    இதன் நகர்வுகள் விரைவில் ஆளும் பைடன் ஆட்சியும் வடகொரியா

                    மீது நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயராகி வருவதை இதன் ஊடக அவதானிக்க முடிகிறது

                    Posted in உலக செய்திகள்

                    அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்

                    அமெரிக்கா எல்லையில் கோர விபத்து – 13 பேர் மரணம்

                    அமெரிக்கா Mexico எல்லையில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் சிக்கி ,சம்பவ இடத்தில்பதின் மூன்று பேர்

                    பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                    இதே பகுதியில் சட்டவிரோத ஆள் கடத்தல்கள் இடம் பெற்று வருகிறது ,

                    இதனை அடுத்து கண்காணிப்பு தீவிர படுத்த பட்டிருந்த பொழுதும் மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

                    ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

                    சிரியாவின் வடக்கு ,மற்றும் மேற்கு பகுதியில் அமைய பெற்றிருந்த ஈரானிய முக்கிய ஏவுகணை தளங்களை

                    தாம் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளது

                    ஈரானிய ஆதரவு படைகளுக்கு வழங்க பட்டிருந்த மேற்படி ஏவுகணை தளத்தில்

                    ஈரானிய இராணுவமும் உரு மறைப்பில் அங்கு இருந்துள்ளதாகவும், இவர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த முகாம் முற்றாக அழிக்க பட்டத்துடன் ,

                    அங்கிருந்த ஈரானிய முக்கிய படை அதிகாரிகளும் பலியாகியுள்ளதாக மேற்படி தகவலில் தெரிவிக்க பட்டுள்ளது

                    அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு தாம் தகுந்த பதிலடி பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என

                    ஈரான் அதரவு படைகள் தெரிவித்துள்ள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

                    Posted in Uncategorized

                    ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

                    ஆறு பெண்களை கடத்தி கற்பழித்து – அடித்து கொன்ற மர்ம கொலையாளி சிக்கினார்

                    அமெரிக்கா கலிபோனியா பகுதியில் 1977 முதல் 1987 ஆண்டுவரையில கால பகுதியில் அழகிய ஆறு பெண்களை கடத்தி

                    கற்பழித்து அதன் பின்னர் அடித்து கொன்ற மர்ம கொலையாளி தற்போது சிக்கியுள்ளார்

                    நீண்டகாலமாக போலீசார் மேற் கொண்டு வந்த மேற்படி கொலை வழக்கில் குறித்த நபர் சிக்கியுள்ளார்


                    இவ்வாறு பல்வேறு பட்ட கொலை வழக்குகளில் இன்று வரை சிக்காது சிலர் மர்மமாக உலாவி வருகின்றனர்

                    இவர்களை கைது செய்திட முடியாது காவல்துறையினர் திணறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in உலக செய்திகள்

                    30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

                    30 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

                    அமெரிக்காவில் புகழ்பெற்ற Yellowstone நதி அருகில் முப்பது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின

                    ,இதன்பொழுது பல பேர் படு காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                    அதிக சினோ பொழிவு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

                    Posted in உலக செய்திகள்

                    பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

                    பேஸ்புக்கிற்கு 843 மில்லியன் தண்டம் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

                    உலக யாம்பவானாக இடம்பிடித்து சாதனை படைத்தது விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி அவர்க்ளின்

                    தனி நபர் விபரங்களை திரட்டி வெளியிட்டதாக கூறிய புகாரில்

                    சுமார் 843 மில்லியன் அமெரிக்கா டொலர்களை குறித்த நிறுவனம் தண்டமாக செலுத்தியுள்ளது

                    பல்லாண்டுகளாக இடம்பெறு வந்த நீதி விசாரணைகளில் இந்த அதிரடி தீர்ப்பு

                    வழங்க பட்டுள்ளது ,பேஸ்புக் தற்பொழுது பெரும் அடாவடிகளில்

                    ஈடுபட்டு வருவதாக பயனாளர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்

                    வீழ்ந்து சிதறிய விமானம் – மூவர் மரணம்

                    அமெரிக்கா யோர்ஜியா பகுதியில் இலகுரக பயணிகள் விமானம்

                    ஒன்று வீழ்ந்து சிதறியது ,இதன் பொழுது அதில் பயணித்த மூவர் பலியாகியுள்ளனர்

                    இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த விபத்து

                    இடம்பெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்க படுகிறது

                    தொடர்நது தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                    ,சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளன