Tag: அமெரிக்கா
அமெரிக்கா செல்ல வெளி நாட்டினருக்கு அனுமதி!
அமெரிக்கா செல்ல வெளி நாட்டினருக்கு அனுமதி!
நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதோடு, பயணத்திற்கு 3 நாள்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.
மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
சீன கடலுக்குள் அமெரிக்கா நீர்மூழ்கிபோர் வெடிக்கும் அபாயம்
சீன கடலுக்குள் நுழைந்த அமெரிக்கா நீர்மூழ்கி – போர் வெடிக்கும் அபாயம்
அமெரிக்கா இராணுவத்தின் அணுகுண்டுகளை காவி செல்லும் நீர்மூழ்கி கப்பல் ஒன்று சர்ச்சைக்குரிய தென் சீனாவின் கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது
மேற்படி அமெரிக்காவின் ஊடுருவலை கண்டித்துள்ள சீனா எதிர் வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் அந்த கலங்கள் அழிக்க படும் என எச்சரித்துள்ளது
கடந்த முறை இவ்விதம் ஊடுருவிய விமான தாங்கி கப்பல்களை மூழ்கடிக்க அதன் அருகில் குண்டுகளை சீனா ஏவி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
வீழ்ந்து சிதறிய அமெரிக்கா போர் விமானம் – குதித்த விமானி தப்பினார்
வீழ்ந்து சிதறிய அமெரிக்கா போர் விமானம் – குதித்த விமானி தப்பினார்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் அமெரிக்கா கடற்படைக்கு சொந்தமான F/A-18F Super Hornet
ரக சண்டை விமானம் ஒன்று திடீரென வீழ்ந்தது ,இவ்வேளை இதனை செலுத்தி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பினார்
பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவர் சிகிச்சை பெற்றவண்ணம் உள்ளார், விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது
ரசியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா விமானங்கள் -வானில் நடந்த பரபரப்பு
ரசியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா விமானங்கள் -வானில் நடந்த பரபரப்பு
ரசிய வான் பரப்புக்குள் அமெரிக்கா நாட்டின் மூன்று விமானங்கள் நுழைந்தன
இதனை கண்ணுற்ற ரசியா விமானங்கள் அதனை துரத்தி சென்றன
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது
ரசியாவுக்குள் சமீபகாலமாக அமெரிக்கா திடீர் நுளைவுகளை மேற் கொண்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்தனர்.
எல்லை அருகே இறங்குதளம்… தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
அவசரகால இறங்குதளத்தில் தரையிறங்கும் போர் விமானம்
அவசர காலங்களில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மற்றும் இதர விமானங்களை தரையிறக்கும் வகையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை
மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை-925ல் சத்தா-காந்தவ் இடையிலான 3 கிமீ பகுதியை அவசர காலங்களில் விமானங்களை தரையிறக்கும் பகுதியாக மாற்றி உள்ளது.
பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள இந்த இறங்குதளத்தை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின்
கட்கரி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். அதன்பின்னர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோரை விமானப்படை
விமானத்தில் அமர வைத்து, விமானத்தை அவசரகால இறங்குதளத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்த்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்
சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை
செய்தனர். இதன்மூலம், அந்த நெடுஞ்சாலையானது, துணை ராணுவ விமான தளமாக செயல்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படை
விமானங்களை அவசரமாக தரையிறக்க பயன்படுத்தப்படும், முதல் தேசிய நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பார்மரில் உள்ளதைப் போன்று மொத்தம் 20 அவசரகால தரையிறக்கும் வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்படுகின்றன
என்றார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியுடன் பல ஹெலிபேடுகளும் உருவாக்கப்படுவதாக கூறிய ராஜ்நாத் சிங், நமது பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான படியாகும் என்றார்.
‘சர்வதேச எல்லைக்கு அருகில் இதுபோன்ற அவசரகால இறங்கு தளங்களை உருவாக்குவதன் மூலம், நமது நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க, என்ன
விலை கொடுத்தாலும் துணிந்து நிற்போம் என்ற செய்தியை வழங்கியுள்ளோம். அவசரகாலத்தில் விமானங்களை தரையிறக்கும் வசதியை உருவாக்குவது மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறது.
போர்க் காலங்களில் மட்டுமல்லாமல் இயற்கை பேரிடர் காலங்களிலும் இது உதவியாக இருக்கும்’ என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு
எதிரிகளை பந்தாட எங்கள் ஏவுகணைகள் தயராக உள்ளன-ஈரான் அறிவிப்பு
ஈரானுக்கு விட படும் எதிரிகளின் அச்சுறுத்தலை முறியடிக்க தமது ஏவுகணைகள்
எல்லையோரங்களில் தயார் நிலையில் உள்ளதாக ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது
அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதலை தம்மீது மேற்கொள்ள கூடும் என ஈரான் எதிர் பார்த்துள்ள வேளையிலேயே
இந்த ஏவுகணைகள் எல்லையோரம் மற்றும் முக்கிய கேந்திர நிலைகளை சுற்றி நிறுத்த பட்டு அதி உச்ச கண்காணிப்பில் வைக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்
தியாகிகளின் பழிவாங்குதல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த ஈரான்
சிரியா ஈராக் எல்லை பகுதியில் ஈரானிய இராணுவம் புதிய பழிவாங்கும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது
ஆயிரம் கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட எல்லையோரத்தில் இந்த திடீர் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது
இதற்கு சோலைமானியின் நினைவாக தியாகிகளின் பழிவாங்குதல் என்ற குறியீட்டு பெயருடன் தாக்குதல் ஆரம்பிக்க பட்டுள்ளது
இதுவே உலக போராக மாற்றம் பெற கூடும் என்ற அச்சம் நிலவுகிறது
புலிகளை போல குருதீஸ்தான போராளிகள் இந்த இராணுவ வேட்டையில் இல்லாது அழிக்க படலாம் என எதிர்பார்க்கலாம் ,
- வன்னி மைந்தன்-
காபூல் விமான நிலையத்தை அடித்து நொறுக்கிய அமெரிக்கா படைகள்
காபூல் விமான நிலையத்தை அடித்து நொறுக்கிய அமெரிக்கா படைகள்
ஆப்கான் நாட்டின் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையத்திதை ,நடத்தி விட்டு
வெளியேறிய அமெரிக்காபடைகள் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளன
மேற்படி சேத காட்சிகள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தனது நலனை கருத்தில் கொண்டு வழ சுரண்டல்களை மேற்கொண்ட அமெரிக்கா பல்லாயிரம்
அப்பாவி மக்களை கொன்று குவித்த ஏப்பம் இட்டதன் பின்னர் தப்பி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது
தாய்வான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சீனா இராணுவம் – ஏவுகணைக குவிப்பு
தாய்வான் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் சீனா இராணுவம் – ஏவுகணைக குவிப்பு
தாய்வனவுக்கு ஆதரவாக அமெரிக்கா இராணுவம் அந்த நாட்டின் வீதிகளில் உலாவி வரும் நிலையில் சீனா மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு தயராகி வருகிறது
அமெரிக்கா இராணுவம் அங்கு குவிக்க பட்டு வலிந்து தாக்குதல்களை நடத்த முனைந்தால் சீனா
பெரும் அதிரடி தாக்குதலை நடத்தி தாய்வானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
சீனாவின் இந்த திடீர் இராணுவ ,ஆயுத குவிப்பால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,எவ்வேளையும் எதுவும் நடக்கலாம் என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது
விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?
விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?
ஆப்கான் தலைநகர் காபூல் விமான தளம் மீது திடீரென தற்கொலை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர்
ஒரு வாரத்தில் இடம் பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பதிவாகியுள்ளது
தொடர்ந்து இது போன்ற குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்
அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்
அமெரிக்கா கலிபோனியாவில் ஐந்து வயது சிசு ஒன்றை காட்டாது சிங்கம் ஒன்று இழுத்து சென்றுள்ளது
இதனை கண்ணுற்ற மக்கள் அதனை துரத்தி சென்றனர்
சிசுவை காப்பாற்ற சிங்கம் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது
இதில் சிங்கம் இறந்து போனது ,பலத்த கடி காயங்களுக்கு உள்ளான சிறுவன் தொடர் சிகிச்சை
பெற்று வருகிறான் ,தலையில் பலத்த கடி காயங்கள் காணப்படுவதக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய – சிரியா இராணுவம்
இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய – சிரியா இராணுவம்
சிரியாவில் உள்ள முக்கிய இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தின
இந்த ஏவுகணைகள் குறித்த இலக்கினை அடையும் முன்னர் சிரியா இராணுவத்தினர் விமான
ஏவுகணைகள் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது
இஸ்ரேலிய இராணுவத்தினர் தொடர் வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது
இலங்கை இந்திய நலன்களை பாதிக்கும் செயற்பாடுகள் அனுமதிக்கப்படமாட்டாது
கௌதாரிமுனையில் நெற் காணிகளையும் கடலட்டைப் பண்ணைகளையும் பகிர்ந்தளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்
இணைத் தலைவரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சீனா போன்ற நாடுகளிடம் இருந்து கடலட்டை செயற்பாடுகளுக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும்
பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும், எமது நலன்களுக்கோ அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கோ அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (22.07.2021) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே குறித்த விடயங்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன.
கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைமையில் சுமார் 70 இற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், நெற் காணிளுக்கான கோரிக்கைகளை சுமார் 93 பேர் சமர்ப்பித்திருந்தனர்.
அதேபான்று கடலட்டைப் பண்ணைக்கான விண்ணப்பங்கள் சுமார் 27 கடற்றொழிலாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் விண்ணப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இவை தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விண்ணப்பித்தவர்களுக்கான வயல் நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரச சுற்று நிரூபத்திற்கு அமைவாக மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.
அதேபோன்று, கௌதாரிமுனைப் பிரதேசத்தில் இதுவரை 16 கடலட்டைப் பண்ணைகளுக்கான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னுரிமை அடிப்படையில்
விண்ணப்பித்தவர்களுக்கு அவற்றை வழங்குமாறும் ஏனையவர்களுக்கான இடங்களை அடையாளப்படுத்துமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடற்றொழில அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘இலங்கை சீனக் கூட்டு நிறுவனத்தினால் கௌதாரிமுனையில் அமைக்கப்படடுள்ள கடலட்டை குஞ்சு பராமரிப்பு நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், அந்தக் கடலட்டை குஞ்சு
பராமரிப்பு நிலையத்தினூடாக எமக்கான முதலீடுகளையும் தொழில்நுட்பத்தினையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் சிந்தித்து வருகின்றேன்.
சீனா போன்ற நாடுகளில் இருந்து முதலீடுகளும் அனுபவங்களும் தொழில்நுட்பமும் பெற்றுக்கொள்ளப்படுமே தவிர, எமது மக்களினதும் நாட்டினதும் நலன்களை பாதிக்கும் வகையில்
அல்லது அயல் நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சறுத்தல் ஏற்படும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளும் அனுமதிக்கப்பட மாட்டது’ என்று அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, கிளிநொச்சி மாவட்ட வீதி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலின் போது, கௌதாரிமுனைக்கான சுமார் 16 கிலோ மீற்றர் வீதியை புனரமைப்பதற்கான சாத்தியங்கள்
தொடர்பாக ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கடற்றொழில் அமைச்சர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
மருதங்கேணி – செம்பியன்பற்று குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மருதங்கேணி – செம்பியன்பற்று நாவலடி குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அபிவிருத்தி செய்யும் பணிகளின் ஓர் அங்கமாக மருதங்கேணி பிரதேச
செயலகத்துக்குட்பட்ட, J/427 செம்பியன்பற்று தெற்கு கிராமத்தின் நாவலடி குளத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்;
அடிக்கல் நாட்டி பணிகளை ஆரம்பித்ததுடன், திட்டத்தின் பெயர்ப்பலகையையும் திரைநீக்கம் செய்தார்.
மேலும், அப்பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்ததோடு உடனடி நடவடிக்கைகளை
எடுத்து அவற்றை தீர்த்துவைக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந் நிகழ்ச்சித்திட்டமானது நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.
அதன்படி, நாவலடி குளத்தின் அபிவிருத்திப்பணிகளுக்காக 3,866,000 ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்பாடுகள் 4 மாதங்களில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்குளத்தை அபிவிருத்தி செய்து குளத்தின் நீர் கொள்ளளவை அதிகரிக்கச் செய்வதனூடாக, நெல் மற்றும் வெங்காயப் பயிர்ச்செய்கைகளை பெருமளவில் மேற்கொள்ளும் செம்பியன்பற்று கிராம மக்கள் நன்மையடையவுள்ளனர்.
இக்குளத்தை அபிவிருத்தி செய்துதருமாறு குறித்த கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கையை கருத்தில் கொண்ட அங்கஜன் இராமநாதனுக்கு நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியை நேரில் தெரிவித்தனர்.
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல்
கிழக்கு சிரியாவின் south of Al-Hasakah மாகாணத்தில் அமைந்துள்ள அமெரிக்கா கூலி படைகள் மீது மோட்டார் தாக்குகள் நடத்த பட்டுள்ளது
திடீரென மேற் கொள்ள பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்திற்கு பலமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
எனினும் அமெரிக்கா தரப்பில் இருந்து சேத விபரங்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை
ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்
ஒரு அமெரிக்கா டொலர் -300 ரூபாயை எட்டும் – எச்சரிக்கும் ரணில்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, சில விவகாரங்கள் தொடர்பில் அரசியல் தலையீடுகள் இன்றி, அதிரடியான நடவக்கைகளை
எடுக்கவேண்டும் என்றும். மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொருளாதாரச் சுமைக்கு மேலும் சுமையை சேர்க்க வேண்டாம் என்றும் அதனூடாக நாட்டை அழிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள ரணில் விக்கிமசிங்க, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கப்படுமாயின் ரூபாவின்
விலை குறைவடைந்து, ஒரு டொலருக்கு 300 ரூபாய் செலுத்தவேண்டிய நிலைமை ஏற்படும். அத்துடன், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை 2017 ஆம் ஆண்டில் பெற்று நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய எங்களுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
வரிவிதிப்பு இல்லாமல் ஐரோப்பாவிற்கு பொருடள்களை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி கிடைத்ததன் ஊடாக, ஆடை மற்றும் மீன்பிடித் தொழில்கள் மேம்படுவதற்கு வழிவகுத்தது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை மீதான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையால், இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரி சலுகை தொடர்பாக ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. இந்த சலுகையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படலாமென எங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோயால் நமது சுற்றுலாத் துறை ஆபத்தில் உள்ளது. கப்பலின் பிரச்சினையுடன், எங்கள் மீன்பிடித் தொழிலுக்கும் பிரச்சினைகள் எழுந்துள்ளன.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, நமது அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்துள்ளது. அந்நிய செலாவணி வீழ்ச்சியால் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடியால் இலங்கை பங்களாதேஷில் இருந்து 200 மில்லியன் டொலர் கடன் வாங்கியது. தற்போது, நமது பொருளாதாரத்திற்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவர
தேயிலை மற்றும் ஆடைத் தொழில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அத்தகைய விஷயத்தில், ஜி.எஸ்.பி. பிளஸ் வரி நிவாரண சலுகையை இழந்தால், ரூபாய் மதிப்பு குறைந்துவிடும், மேலும் ஒரு டொலருக்கு சுமார் 300 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு ஆயிரக்கணக்கான வேலைகளும் இல்லாமற்போகும்.
இவ்வாறான ஆபத்தை எதிர்கொள்ளும்போது, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை ,இனிமேலும் அரசியல் மயமாக்கவேண்டாம். அத்துடன், ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்
ஈராக் அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் – ,முக்கிய உளவாளிகள் காயம்
வடக்கு ஈராக் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முக்கிய தலைமையமாக
விளங்கும் இராணுவ தளம் மீது கடந்த இரவு ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் அமெரிக்கா CIA and US Special Operations units.பகுதியை சேர்ந்த முக்கிய நபர்கள் காயமடைந்துள்ளனர்
மேற்படி தகவலானது அங்கு உள்ள அந்த முக்கிய நபர்கள் குடும்பங்கள் வாயிலாக கசிந்துள்ளது
மத்திய கிழக்கு நாடுகளை விட்டு அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை தமது தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்
சிரியாவுக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவமே வெளியேறு – ஈரான் காட்டம்
சிரியா நாட்டுக்குள் அழையாது நுழைந்த அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈரான் வேண்டுதல் விடுத்துள்ளது .
மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,அந்த மக்களை படுகொலை புரிந்து ,அவர்கள் வளம் கொழிக்கும் எண்ணெய்களை திருடி செல்கிறது அமெரிக்கா ,
அவ்விதமான உலக கொள்ளையர்கள் அந்த மண்ணில் இருந்து விலக வேண்டும் என ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது .
ஈரான் இந்த கோரிக்கையை ஏற்று அமெரிக்கா படைகள் வெளியேறுமா என்பது சந்தேகமே
மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?
மத்திய ஆசியா நோக்கி படை யெடுக்குகம் அமெரிக்கா-அடி வாங்குமா ..? அல்லது அழியுமா ..?
புஸ் ஆட்சியில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து தற்போது
படிப் படியாக விலக்க படுகின்றனர் ,அதில் முதல் கட்டமாக அரசிவாசி படைகள் முற்றாக அங்கிருந்து அகற்ற படுகின்றனர்
தாலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் அமெரிக்கா படைகள் பாரிய இழப்பை சந்தித்தன
,அதன் பின்னர் ,ஏற்பட்ட அரசியல் மாறுபட்ட நிலைகளை அடுத்து இந்த படை விலகலை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது
மத்திய கிழக்கு நாடு முழுவதும் ஆக்கிரமித்து , அதன் எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க
பயங்கரவாதம் என்றபோர்வையில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் வழ வேட்டை போரில் படு தோல்வியை சந்தித்துள்ளது
மத்திய கிழக்கு நாடுகளை விட்டு ,தற்போது மத்திய ஆசியா நோக்கி அமெரிக்கா திரும்பியுள்ளது
குறிப்பிட தக்கது ,இங்கு அடி வாங்குமா ..? அல்லது முற்றாக அழியுமா ..?
ஏன் எனில் இங்குதான் சீனா ,வடகொரியா இந்திய உள்ளன .
- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்
- அரேபிய தேசத்தில் அமெரிக்கா கதை முடிந்தது ஈரான் அறிவிப்பு
- ஜெர்மனியில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
- அமெரிக்க மற்றும் ஈரான் பேச்சுவார்த்தைக் குழுக்கள் தோஹாவுக்குச் செல்கின்றன
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன
- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு
- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500
- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி
- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்
மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
மூன்று பிள்ளைகளை வெட்டி கொன்ற தாய் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா லொஸ் அஞ்சல் பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடரில் தாய் ஒருவர் தனது மூன்று
பிள்ளைகளை மிக கோரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த தினம் காலை ஒன்பது முப்பது மணியளவில் இந்த படுகொலையை வெறியாட்டத்தை அவர் அரங்கேற்றியுள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
,கைது செய்ய பட்ட தாயாரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன் நீதி விசாரணைக்கும் அவர் உட்படுத்த பட்டுளளார் ,
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
















