Posted in இலங்கை செய்திகள்

கரை நகரில் கடலுக்குள் பாய்ந்த பேரூந்து – photo

கரை நகரில் கடலுக்குள் பாய்ந்த பேரூந்து – photo

இன்று மதியம் இரண்டு மணியளவில் காரைநகர் பகுதியில் அரச பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியது

காரை நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த

பேருந்தே சாரதியின் கட்டு பாட்டை இழந்து பாலத்தை உடைத்து கடலுக்குள் பாய்ந்து விபத்தில் சிக்கியது .

இதில் டசின் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர் .
பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது

    யாழ்ப்பாணம் கொழும்பு நோக்கிய பயணத்தில் ஈடுபடும் பெருந்தே இன்று இங்கே விபத்தில் சிக்கியுள்ளது

    குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்ற்னர்

        Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

        வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

        வாய் காட்டிய மனைவியை வெட்டி கொன்ற கணவன் – நடந்தேறிய பயங்கரம்

        இலங்கை மாவெனெல்ல பகுதியில் கணவன் மனவிக்கு இடையில் பலத்த சண்டை மூண்டுள்ளது .


        இவ்வேளை மனைவி கணவனுக்கு தொடர்ந்து எதிர் தர்க்கம் புரிந்த வாய் கட்டி

        வந்ததால் ஆத்திரமுற்ற கணவன் அவரை சமையலறை கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்துள்ளார்

        இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

        கொலை குற்ற சாட்டில் கணவன் கைது செய்யப் பட்டுளளார்,

        மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,இவ்வாறான குற்றங்கள் நாள்தோறும் இலங்கையில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

        வாய் காட்டிய மனைவியை
        வாய் காட்டிய மனைவியை
            Posted in இலங்கை செய்திகள்

            இரவு 8 மணியிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

            இரவு 8 மணியிலிருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம்

            கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர

            ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 5 .00 மணிக்கு ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

            இந்த மாவட்டங்களில் ,இன்றைய தினம் இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்

              படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திததி வரையில்

              அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு

              அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

              இரவு 8 மணியிலிருந்து
              இரவு 8 மணியிலிருந்து
                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு

                  இலங்கையில் 19 பேர் கொரோனாவால் பாதிப்பு

                  இலங்கை நாடு தழுவிய ரீதியில் 19 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                  அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

                  உள்ளானவர்கள் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது.

                  இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 136 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்..

                  கொரோனா
                  கொரோனா
                      Posted in இலங்கை செய்திகள்

                      உயித்த ஞாயிறு தாக்குதல் – புதிய தகவல்கள் கண்டறியப்ட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிப்பு

                      உயித்த ஞாயிறு தாக்குதல் – புதிய தகவல்கள் கண்டறியப்ட்டுள்ளதாக பொலிஸ் தெரிவிப்பு

                      கடந்த வருடம் இடம்பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹரான் புத்தளம்

                      பிரதேசத்தில் சில குழுக்களுக்கு ஆயுத பயிற்சிகளும், கருத்தரங்குகளையும் நடத்தியிருப்பதாக பொலிஸ்

                      ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

                      அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கடந்த வருடம் இடம்பெற்ற உயித்த ஞாயிறுயன்று மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்

                        குறித்த விசாரனைகளில் தற்போதைய நிலைமை குறித்து விபரித்த அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் புதிய தளத்திற்கு வந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்..


                        திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக ஆயுதப் பயிற்சி அளிக்கப்பட்ட இடம் ஒன்று, ஒரு வருடத்துக்கு பின்னர் கண்டறியப்பட்டுள்ளது. புத்தளத்தை மையப்படுத்தி இயங்கிய அமைப்பொன்று தொடர்பில் தகவல்கள் கிடைத்துளள்ன.

                        குறித்த அமைப்புக்கு ஆட்களை சேர்த்து, அந்த இடத்தில் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்குள் அவர்களை ஈடுபடுத்தும் விதமான போதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.

                        உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரானும் குண்டுத் தாக்குதலை நடாத்திய மேலும்

                        சில குண்டுதாரிகளும் அவர்களுக்கான அடிப்படைவாத போதனைகளை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

                        தோப்பூர் பகுதி ஆயுத பயிற்சி முகாமில் துப்பாக்கி செயன்முறை பயிற்சி ஊடாக போதிக்கப்பட்டுள்ளதாகவும், புத்தளம் பகுதியில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ள சிலருக்கு பலஸ்தீன் – இஸ்ரேல் யுத்த

                        காட்சிகள், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்கள் உள்ளிட்ட விடயங்கள் வீடியோ வடிவில் காண்பிக்கப்பட்டும் அடிப்படைவாத சிந்தனை

                        தூபமிடப்பட்டுள்ளதாகவும் இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

                        தற்போது தடுப்புக்காவலில் உள்ள அராபி பாடவாலையில் தங்கியிருந்த 14 வயதான மத்ரஸ மாணவன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த

                        மாணவன் உள்ளிட்ட சந்தேக நபர்களை இந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது மாணவன் பயிற்சி வழங்க்கப்பட்ட இடத்தை காட்டியுள்ளார். ஆனால் அங்கு தற்போது புதிதாக

                        கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதினால் இதனை உறுதி செய்வதில் பிரச்சினையிருப்பதாகவும் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

                        உயித்த ஞாயிறு தாக்குதல்
                        உயித்த ஞாயிறு தாக்குதல்
                            Posted in இலங்கை செய்திகள்

                            மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை

                            மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை

                            சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை ஆரம்பம்

                            கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள மேற்கொள்வதற்கான விசேட பீசீஆர் பரிசோதனை

                            மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று

                            (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம் இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

                            இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய பீசீஆர் பரிசோதனை கடந்த திங்கட்கிளமை முதல்

                            நடைபெற்றுவருவதாகவும் இதுவரை 143 பேருக்கான பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நால்வருக்கு

                            கோரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில்

                            வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும், மேலும் இதற்கு முன்னர் மட்டக்களப்பு வைத்தியசாலையில்

                            அனுமதிக்கப்பட்டு பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 101 நோயாளர்களில் 8 பேர் கொரோனா நோய் உறுதி

                            செய்யப்பட்டதுடன் இவர்களில் ஒருவரே இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்தார்.

                            கொரோன பரிசோதனை நிலையமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டிருந்ததினைத் தொடர்ந்து இதற்கான தனி அலகு ஸ்தாபிக்கப்பட்டு, இங்கு வரும் கொரோனா

                            நோயாளர்களை அல்லது கோரோனா நோய் தொற்று அறிகுறி காணப்படுபவர்களை உள்வாங்குவதற்கு பிரத்தியேக பிரிவு

                            அமைக்கப்படடிருந்தது. தற்போது பீசீஆர் பரிசோதனை மேற்கௌ;வதனையடுத்து இரண்டாவது வகைப்படுத்தல் பிரிவு

                            ஒன்று அவசர மற்றும் விபத்து பிரிவுக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                              தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் வேளைகளில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருகின்ற நோயளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நோயாளர்களுக்காக

                              சமுக இடைவெளி பேணி அமரக்கூடியவாறு மேலதிக ஆசன வசதிகள், கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிளினிக் சிகிச்சைக்காக வருபவர்களுக்கான மருந்து விநியோகம் தபால்

                              சேவை மூலம் வழங்கப்பட்டிருப்பதுடன் தற்போது இங்கு வருபவர்கள் இடைவெளிபேணி மருந்துகளைப் பெற்றுக் கொள்ள

                              ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.

                              மேலும் பொதுமக்கள் வீடுகளில் இருப்பதுடன் அவசிய தேவைக்காக மாத்திரம் வெளியில் வருமாறும், முகக்கவசம் அணிதல், கைகளை

                              சுகாதார முறைப்படி சவர்க்காரமிட்டு அடிக்கடி கழுவிக் கொள்தல், சமுக இடைவெளியினைப் பேணுதல் போன்ற விடயங்களைக்

                              கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும் பொதுமக்களைக் அவர் கேட்டுக் கொண்டார்.

                              இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலனி பிரதனியும், மயக்க மருந்து விசேட வைத்திய நிபுனருமான டாக்கடர் எஸ். மதனழகன்

                              =நுன்னுயிரியல் தொற்றுநோய் விசேட நிபுனர் டாக்டர் வைதேகிஇ மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்

                              நாளையுடன் காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்கள்

                              நாளையுடன் (29) காலாவதியாகும் ஊரடங்கு அனுமதிபத்திரங்களிகளின் கால எல்லை; மே மாதம் 31ஆம் திகதி

                              வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தள்ளார்.

                              இருப்பினும் பொதுவான அலுவல்களுக்கான அவசரகால அனுமதிப்பத்திரம் புதிதாக பெற்றுக் கொள்வது கட்டாயம் என்றும் அவர் தெரிவித்தார்

                                  இன்று கொழும்பில் நடைபெற்ற செயதியாளர்களுடனான சந்திப்பில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம்

                                  ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் தற்பொழுது ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு

                                  தற்காலிகமாக நீக்கப்பட்டது. நேற்றைய தினம் (28) இந்த மாவட்டங்களின் நகரங்களுக்கு பொதுமக்களின் வருகை

                                  குறைவாகவே காணப்பட்டது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போதிலும் வீதிகளில் செல்லும் பொழுது முகக்கவசம் அணிவது

                                  கட்டாயமாகும். இவ்வாறான பின்புலத்தில் முகக் கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் பயணத்தில் ஈடுபட்டிருந்த பிள்ளையொன்று

                                  பொலிஸ் அதிகாரியொருவரினால் முகக் கவசத்தை அணிந்து கொள்வதற்காக தமது பணத்தை வழங்கும் அளவிற்கு கருணை

                                  உள்ளம் வெளிப்படுத்தியமை காணக்கூடியதாக இருந்ததாகவும் கூறினார்.

                                  ஏனைய மாவட்டமொன்றிலிருந்து திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசிக்கும் அத்தியாவசிய சேவை

                                    வாகனங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை கந்தளாய் அக்போபுர பாதுகாப்பு சாவடியில் மேற்கnhள்ளப்பகிறது அங்கு நபர்கள் கிருமி ஒழிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

                                    இருப்பினும் இவ்வாறு வந்த சில வாகனங்களின் சாரதிகளுக்கு அவர் குடியிருக்கும் பிரதேசத்தில் சுகாதார பரிசோதகரினால்

                                    வழங்கப்படும் சுகாதார அறிக்கை இல்லாததினால் திருப்பி அனுப்பப்பட்டார்.

                                    ஊரடங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 07 மற்றும் 08

                                    குறிப்பிடப்பட்டிருக்குமாயின் அவ்வாறானோர் நாளைய தினம் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக எந்தவகையிலும்

                                    குறிப்பிட்ட இடங்களைத் தவிர பிற இடங்களுக்கு செல்வதற்கு இடமளிக்க மாட்டாது.


                                    கொழும்பு , கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய 4 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மே மாதம் அதிகாலை 5 மணி வரையில் அமுலில் இருக்கும்.

                                    மிகவும் அனர்த்தமிக்க மாவட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பதில்

                                    இராணுவத்தின் உடனடி செயலணி அதிகாரிகள் ஈடுபடுவதைக் காணக்கூடியதாகவுள்ள

                                    ஊரடங்கு
                                    ஊரடங்கு
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      நாளை முதல் 4 திகதிவரை ஊரடங்கு அமூல்

                                      நாளை முதல் 4 திகதிவரை ஊரடங்கு அமூல்

                                      இலங்கையில் நாழி இரவு எட்டு மையில் இருந்து நான்காம் திகதி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது

                                      இந்த புதிய நடைமுறையின் கீழ் மக்கள் வசிக்க வேண்டியது அவசியமாகிறது ,

                                      இந்த கால எல்லைக்குள் அத்து மீறி வீதிகளில் உலாவினால் கைது செய்ய

                                      படுவதுடன் தனிமை படுத்தலுக்கும் உள்ளாக்க படுவீர்கள்
                                      என தெரிவிக்க பட்டுள்ளது

                                      நாடு முழுவதும் இந்த் ஊரடங்கு அமூல் படுத்த படுகிறது

                                      நாளை முதல் 4 திகதி
                                      நாளை முதல் 4 திகதி
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      மத்திய வங்கி வங்கியில் அடகு வைத்தலுக்கு- அதிக வட்டி -அதிர்ச்சியில் மக்கள்

                                      மத்திய வங்கி வங்கியில் அடகு வைத்தலுக்கு- அதிக வட்டி -அதிர்ச்சியில் மக்கள்

                                      வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும் வட்டி வீதம் 12 மாக குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய அறிவித்துள்ளது.

                                      இதுதொடர்பாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாவது:

                                      உரிமம்பெற்ற வங்கிகளால் அடகு முற்பணங்களின் மீது தற்போது அறவிடப்படும்

                                      வட்டி வீதம் ஆண்டுக்கு 12 சதவீதத்திலிருந்து 17.5 சதவீதம் வரை இருப்பதை இலங்கை வங்கி அவதானித்துள்ளது.

                                          கொவிட் – 19 பரவலாக்கலின் விளைவாக ஏற்பட்ட பாதகமான பொருளாதார நிலைமை காரணமாக தமது குறுங்கால நிதித் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்காக தங்க நகைகளை

                                          அடகுவைக்கும் குறைந்த வருமானமீட்டும் தனிநபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய தேவைப்பாட்டைக்

                                          கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உரிமம்பெற்ற வங்கிகளின் அடகு முற்பணங்களின் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை விதித்துள்ளது.

                                          இதன்படி, 2020.04.27 முதல் அடகு பிடிப்பதற்காக அடமானம் வைக்கப்படும் தங்கத்தினால் செய்யப்பட்ட தனிநபர்

                                          உடைமைகளின் பிணை மீது வழங்கப்பட்ட கடன் பணத்தின் மீது விதிக்கப்படக்கூடிய உச்சபட்ச வட்டி வீதமானது வருடாந்த வட்டி 12

                                          சதவீதமாகவும் அல்லது அடகுக் கடன் காலம் ஒரு வருடத்திற்குக் குறைவானதெனின் மாதாந்த வட்டி 1 சதவீதமாக நிர்ணயிக்க கோரி

                                          உரிமம்பெற்ற வங்கிகளுக்கு நாணயவிதிச் சட்டக் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்ந்தபட்ச வட்டி வீதம், அனைத்து

                                          புதிய அடகு முற்பணங்களுக்கும் மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டு இக்கட்டளையின் திகதியிலிருந்து புதுப்பிக்கப்படக்கூடிய அடகு முற்பணங்களுக்கும் உரியதாகும்.

                                          மேலும், அடகுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஏனைய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நியாயமான

                                          விலையில் அவசர நிதி வசதியைப் பெறுவதற்கு ஏதுவாக குறைந்த வட்டி விகிதத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதுடன், இதன்மூலம்

                                          பின்னர் அவர்கள் தங்களுடைய அடகுவைக்கப்பட்ட தங்க நகைகளை மீட்டெடுக்க முடியும்.

                                          மத்திய வங்கி வங்கியில்
                                          மத்திய வங்கி வங்கியில்
                                              Posted in இலங்கை செய்திகள்

                                              நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள்

                                              நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள்

                                              தமிழகத்தில் சென்னையில் கொரோனா வேகமாக பரவி வருவதால், பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று

                                              தமிழக நோய் தொற்று மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

                                              மக்கள் தொடர்ந்து பொது இடங்களில் கூடினால் கொரோாவை கட்டுப்படுத்துவது கடினம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு

                                              நாளுக்கு நாள் அதிகரித்து, தினமும் 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தோரின்

                                              எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் முக்கியமாக கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில்

                                              கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், அனைத்து மாவட்டத்திற்கும் சேர்த்து சென்னையில் மட்டும்

                                              நாளொன்றுக்கு 40க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது.

                                              இதற்கமைய சென்னை தற்போது அதிகபட்சமாக 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில்

                                              நோய் அதிகம் பரவுவதற்கான காரணம் என்னவென்று நோய் தொற்று பிரிவு மூத்த மருத்துவர் சுப்பிரமணியன் சுவாமிநாதன்

                                              கூறியதாவது: சென்னையில் முதலில், நோய் தொற்று தொடங்கியதே விமான நிலையங்களில்தான். ஏன் என்றால்

                                              வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அனைவரும் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் வழியாகத்தான்

                                              வந்தார்கள். எனவே சென்னை போன்ற பெருநகரங்களில் பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். இரண்டாவதுஇ மக்கள் தொகை, ஒரு

                                              சதுர கிலோமீட்டருக்கு எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை பொறுத்தே பரவல் இருக்கிறது. இது கிராமப்புறத்தில் குறைவு. அதனால் அங்கே பரவல் குறைவாக இருக்கும்.

                                              இப்போது 4 நாட்கள் முழு ஊரடங்கு என்றதும், மக்கள் சனிக்கிழமை எல்லாம் ஒரே இடத்தில் கூட்டம் கூட்டமாக கூடினார்கள். அதனால்,

                                              முழு ஊரடங்கு அறிவித்ததற்கான பலனே இல்லாமல் போனதுபோல் ஆகிவிட்டது. இந்த வியாதி ஒரு நபருக்கு வந்தால் , 2 வாரத்திற்கு

                                              பிறகுதான் தெரியும். இந்த வாரம் சனிக்கிழமை கூடியவர்களில் யார் யாருக்கு பரவியது என்று இரண்டு வாரங்களுக்கு பிறகுதான்

                                                  தெரியும். இப்போது உறுதி செய்யப்பட்டவர்கள், அறிவிக்கப்படுபவர்கள் எல்லாம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு

                                                  பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள்தான். எனவே இந்த கூட்டத்தில் குவிந்தவர்கள் எல்லோரின் நிலை என்னவென்று அடுத்த

                                                  வாரம்தான் தெரிய வரும். நகர்ப்புறத்தில் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். கிராமப்புறத்தை கட்டுப்படுத்திடலாம்.

                                                  இந்த வைரஸ் சளி துளிகளால் வேகமாக பரவ கூடியது.சளிதுளியால் பரவும் வைரஸ்கள் மிக வேகமாக பரவும். மேலும் இந்த வைரஸ் நாம் இதுவரை சந்திக்காத ஒன்று. இதுக்கு மருந்தும் கிடையாதுஇ

                                                  தடுப்பூசியும் கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது. சமூக விலகல் மட்டுமே ஒரே தீர்வு. காய்ச்சல், இருமல் இருப்பவர்களை சோதனை செய்கிறோம். ஆனால், எந்த அறிகுறியும் இல்லாமல்

                                                  இந்த வைரஸ் வந்து செல்கிறது. ஆனால் அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவினாலும், அவர்கள் முதியோர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோராக இருந்தால் பாதிப்பு ஒன்றாகத்தான் இருக்கும்.

                                                  தற்போது சென்னையில் கொரோனா பரவுவதற்கு நம்முடைய வாழ்க்கை வழிமுறையை முதலில் மாற்றியாக வேண்டும். ஊரடங்கு சரி, இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் நீட்டிக்க முடியாது.

                                                  எனவே, பழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க வேண்டும். ஒருவரை விட்டு ஒருவர் தள்ளியே நிற்க வேண்டும். சில நல்ல விஷயங்களை

                                                  கற்றுக்கொள்ள வேண்டும். இருமல்இ சளி இருந்தால் வீட்டில் இருக்க வேண்டும். புது இடங்களுக்கு செல்லக்கூடாது. முகத்தை மூடிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் நல்ல பழக்கங்கள்இ

                                                  நல்ல பழக்கங்களை இனி நாம் கற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். தேவையில்லாமல் பொது இடங்களில் கூடுவதை

                                                  தவிர்க்க வேண்டும். முக்கியமாக முதியோர்இ உடல்நிலை பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டும். மருந்து ஏதும் இல்லாத

                                                  நிலையில் சமூக விலகலே தீர்வாகும் என்று தமிழக வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

                                                  நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள் ழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க
                                                  நாடெங்கும் மிக வேகமாக சளிதுளியால் பரவும் வைரஸ்கள் ழைய காலத்தில் கூறியபடி, கை கால்களை கழுவ வேண்டும். நெருக்கமாக நிற்பதை தவிர்க்க
                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      கொரனோ தொற்றிய கடற்படையினருடன் தொடர்பினைக் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தல்

                                                      கொரனோ தொற்றிய கடற்படையினருடன் தொடர்பினைக் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தல்

                                                      ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான

                                                      ஊடக சந்திப்பு இன்று மதியம் (28) கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்,

                                                      பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, மற்றும் சுகாதார சேவைகள்

                                                      பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

                                                      “இந்தியாவின் பங்களூரில் இருந்து இன்று 28 ஆம் திகதி யுஎல்-1172 விமானத்தினூடாக 164 பேர் இலங்கை வந்துள்ளனர், அவர்கள்

                                                      அனைவரும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்பட்ட வண்ணம்

                                                      இருக்கின்றனர்,” என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் கூறினர்.

                                                      இன்று 28 ஆம் திகதி அக்கரைப்பற்றைச் சேர்ந்த 77பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர்

                                                      தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு சென்றனர். இவர்களில் 75 பேர் இராணுவத்தினரால்

                                                      நிர்வகிக்கப்பட்டு வரும் தம்மின்ன தனிமைப்படுத்தல் மையத்திலும் 2 பேர் பூனானை தனிமைப்படுத்தல் மையத்திலும்

                                                      தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இதனுடன் சேர்த்து 28 தியதியளவில் மொத்தமாக 4526 பேர் முப்படையினரால்

                                                          நிர்வகிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். அதேபோல்,

                                                          அதேபோல், தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற் படையினரின் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய

                                                          தொடர்பினை பேணிய அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இன்று 28 ஆம் திகதி

                                                          அனுப்பப்பட்டுள்ளனர்,’’ என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் குறிப்பிட்டார்.

                                                          கொரனோ தொற்றிய
                                                          கொரனோ தொற்றிய
                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            தபால் அலுவலகங்கள் 4 ஆம் திகதி முதல் திறப்பு-அரசு அறிவிப்பு

                                                            தபால் அலுவலகங்கள் 4 ஆம் திகதி முதல் திறப்பு-அரசு அறிவிப்பு

                                                            தபால் அலுவலகங்கள் மீண்டும் எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திறக்கப்படுகின்றன.

                                                            கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு

                                                            நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04

                                                                திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாக திறக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

                                                                இதுதொடர்பாக தபால் மா அதிபர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

                                                                தபால் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு முதியோருக்கான கொடுப்பனவு

                                                                போன்றவை தபால் அலுவலக கடமைப்பீடங்களில் வழமைப்போன்று

                                                                கொவிட் 19 வைரசு தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு

                                                                நடைமுறைகளுக்கு அமைவாக இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான தபால் அலுவலக சேவைகள் கட்டமைப்பு 2020.05.04

                                                                திகதி தொடக்கம் வழமையான கடமைகளுக்காக முழுமையாக திறக்கப்படும்.

                                                                    1. இதற்கமைவாக 2020 மே மாதத்திற்கான பொதுமக்கள் நிவாரண மாதாந்த கொடுப்பனவு, முதியோருக்கான கொடுப்பனவு, விவசாய ஓய்வூதிய சம்பளம் மற்றும்
                                                                    2. ஓய்வூதியத்தியக்காரர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்தும் பணிகள் முன்பு போன்று தபால் அலுவலக கரும பீடங்களில் செலுத்துவதற்கு
                                                                    3. தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
                                                                    4. நீர் கட்டண பட்டியலை செலுத்துதல், மின்சார கட்டணம், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கும்
                                                                    5. உள்ளூர் இலத்திரனியல் முத்திரை பரிமாறலை மேற்கொள்வதற்கும் உள்ளூர் தபாலுக்கான கடிதங்கள் மற்றும் தபால் பொதிகளை கையளிப்பதற்கும் இந்த தினத்திலிருந்து
                                                                    6. பொதுமக்களுக்கு வசதிகள் செய்யப்படுகின்றன.
                                                                    7. சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வரும் பொது மக்கள் உரிய சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து செயல்பட
                                                                    8. வேண்டும் என்று தயவுடன் எதிர்பார்ப்பதுடன் தபால் ஊழியர் சபையினர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
                                                                    தபால் அலுவலகங்கள்
                                                                    தபால் அலுவலகங்கள்
                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                        கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரிப்பு

                                                                        கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 611

                                                                        இலங்கையில் கொரோனா (COVID 19) வைரசு தொற்றுக்கு உள்ளானவகைளின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது

                                                                        COVID 19 பரம்பலின் தரவுகள்

                                                                          புதுப்பிக்கப்பட்டது 2020-04-28 20:31:32

                                                                          611 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

                                                                          470 சிகிச்சை பெறும் நோயாளிகள்

                                                                          23 புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

                                                                          134 குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

                                                                          7 இறப்பு எண்ணிக்கை

                                                                          கொரோனா வைரசு நோயாளர்களின்
                                                                          கொரோனா வைரசு நோயாளர்களின்
                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                              வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்

                                                                              வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்

                                                                              இலங்கை வடக்கு தமிழர் பகுதியாக விளங்கி வரும் கைவேலி ,மூங்கிலாறு,வல்லிபுனம் ,பகுதியில்


                                                                              சுகாதார அமைச்சில் வேலை பெற்று தருவதாகூறி பல இளம் பெண்களுடன் திருவிளையாடலில் ஈடுபட்டுள்ள நபர் ஒருவர் சிக்கியுள்ளார்

                                                                                  மருத்துவ மனைகளில் தாதிகளாக வேலை பெற்று தருவதாக ஆசை காட்டி , இளம் பெண்களை தனது வலைக்குள் விரித்து அந்த

                                                                                  பெண்களுடன் தனது காம லீலைகளை நடத்தி வந்த ஆதி என்பவர் சிக்கியுள்ளார்

                                                                                  பாதிக்க பட்ட பெண்களிடம் பணமும் பிடுங்கியுள்ளார் ,தற்போது தமது கற்பையும்

                                                                                  ,இழந்து ,பணத்தையும் இழந்து ஏமாற்றம் அடைந்த நிலையில் இந்த பெண்கள் மன வீரகத்தி உற்ற நிலையில் உள்ளனர்

                                                                                  இவரை போல மேலும் பலர் இவ்விதமான செயல் பாடுகளில் ஈடுபடுவதகவும்

                                                                                  ஆனால் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்திட முடியாத நிலை உள்ளதாக அந்த கசிவுகள் தெரிவிக்கின்றன

                                                                                  குறுக்கு வழி மூலம் பயணித்தால் அரசாங்க வேலை பெற்று விடலாம்

                                                                                  என கருதும் பெண்கள் இவ்விதம் சிக்கி சீரழிந்து தற்கொலைக்குச செல்லும் நிகழ்வுகள் ஏற்பட்டு விடுகின்றன

                                                                                  சம்பந்த பட்ட நபர் மீது சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொள்வார்களா ..?

                                                                                  பாதிக்க பட்ட பெண்களுக்கு தீர்வு கிடைக்குமா ..?
                                                                                  இவ்வாறான சமூக விரோதிக நீதியின் முன்

                                                                                  நிறுத்த பட்டு தண்டிக்க படுவார்களா ….
                                                                                  என்பதே மக்கள் மன்றின் கேள்வியாக உள்ளது

                                                                                  வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்
                                                                                  வேலை பெற்றுத் தருவதாக கூறி இளம் பெண்களுடன் திருவிளையாடல்
                                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                                      கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

                                                                                      கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

                                                                                      இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 596ஆக அதிகரித்துள்ளது.;.

                                                                                      இன்றைய தினத்தில் (2020.04.28) இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி

                                                                                      உறுதி செய்யப்பட்ட புதிதாக 8 நோயளர்கள் பதிவாகியிருப்பதாக சுகாதார

                                                                                          சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க

                                                                                          கொரோனா தொற்று பரவுவதைதடுக்கும் கொவிட் 19 தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் உறுதி செய்தார்.

                                                                                          இந்த நோயாளர்களில் 5 பேர் கடற்படை அங்கத்தவர்கள் ஆவதுடன் மூவர் புனானி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

                                                                                          தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்தவர்களாவர். இவர்களுள் 134 பேர் குணமடைந்து

                                                                                          வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்.

                                                                                          கொரோனா நோயாளர்களின்
                                                                                          கொரோனா நோயாளர்களின்
                                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                                          இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

                                                                                          இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

                                                                                          காய்ச்சல் இரத்தப்போக்கு முதலானவை காணப்படும் கர்ப்பிணி பெண்கள்

                                                                                          சிகிச்சை (க்கிளிக்கு) களில் கலந்துகொள்ளுமாறு சுகாதார சேவைகள்

                                                                                          பணிப்பாளர் நாயகம் ஜாசிங்க விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்

                                                                                          இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் பின்வருமாறு:

                                                                                              பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப்பெண்கள் உடனடியாக

                                                                                              மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் – காய்ச்சல், இரத்தப்போக்கு,

                                                                                              கடுமையான தலைவலி ,சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits),

                                                                                              நெஞ்சு/வயிற்று வலி ,சிசுவின் அசைவு குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு

                                                                                              ஏதேனும் கடுமையான அசௌகரியம்.
                                                                                              தரமான

                                                                                              சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும்

                                                                                              கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

                                                                                              இலங்கையில் கர்ப்பிணி
                                                                                              இலங்கையில் கர்ப்பிணி
                                                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                                                  யாழ்ப்பாணதில் கொரனோ கிருமி ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்

                                                                                                  யாழ்ப்பாணதில் கொரனோ கிருமி ஒழிப்பு நடவடிக்கையில் இராணுவம்

                                                                                                  யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51, 52 மற்றும் 55 ஆவது

                                                                                                  படைப் பிரிவில் உள்ள இராணுவத்தினரால் சுன்னாகம், கொகுவில், சன்னகன்னை,

                                                                                                  தெல்லிப்பளை, நல்லூர், உடுவில், திருநல்வேலி, வல்வட்டிதுறை, கொடிகாமம், சாவகச்சேரி, அச்சுவேலி, நெல்லியடி, பளை,

                                                                                                      கோயில்வயல், ஐய்யகச்சி, முகாவில், முல்லியன், அம்பன், வெத்திலைகேணி,

                                                                                                      போக்கருப்பு மற்றும் மருதங்கேனி பிரதேசங்களில் பொது இடங்களில் கிருமிநாசிகளை விசிறினர்.

                                                                                                      இந்த பணிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய

                                                                                                      அவர்களது வழிக்காட்டலின் கீழ் புகையிரத நிலையங்கள், பாடசாலைகள்

                                                                                                      பல்கலைக்கழகம், தபால் கந்தோர், வைத்தியசாலைகள், பஸ் தரிப்பு நிலையங்கள்,

                                                                                                      மருந்து கடைகள் சேம நல நிலையங்கள்,பொருளாதார நிலையங்கள்,

                                                                                                      தனியார் வங்கி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன என அரசு தெரிவித்துள்ளது

                                                                                                      யாழ்ப்பாணதில் கொரனோ
                                                                                                      யாழ்ப்பாணதில் கொரனோ
                                                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                                                          இலங்கை கொரனோ நோயாளர்க்ளுக்கு பணம் சேகரிக்கும் அரசு – புதிய இணையதளம் ஆரம்பம்

                                                                                                          இலங்கை கொரனோ நோயாளர்க்ளுக்கு பணம் சேகரிக்கும் அரசு – புதிய இணையதளம் ஆரம்பம்

                                                                                                          COVID-19 என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொற்று நோய். இத் நோய்த்

                                                                                                          தொற்றானது 2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கியது

                                                                                                          , உலக நாடுகளுக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. COVID-19 தொடர்பான

                                                                                                              அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய வலைத்தளமாகும். மேலும்

                                                                                                              குடிமக்களுக்கு சமீபத்திய அறிவிப்புகளுடன் கூடிய துல்லியமான உள்ளூர்

                                                                                                              மற்றும் வெளிநாட்டு செய்திகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது

                                                                                                              இணைய தளம் செல்ல இதில் அழுத்துங்கள்

                                                                                                              இலங்கை கொரனோ
                                                                                                              இலங்கை கொரனோ
                                                                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                                                                  இலங்கையில் – இரவில் இடியுடன் கூடிய மழை -அவசர அறிவிப்பு

                                                                                                                  இலங்கையில் – இரவில் இடியுடன் கூடிய மழை -அவசர அறிவிப்பு

                                                                                                                  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                                                                                                  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ,தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

                                                                                                                  மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

                                                                                                                  இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

                                                                                                                  மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை

                                                                                                                  நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

                                                                                                                  சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                                                                  நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

                                                                                                                  மழை நிலைமை:
                                                                                                                  களுத்துறையிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ

                                                                                                                  அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                                                                                                  இக் கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

                                                                                                                  புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக களுத்துறை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்

                                                                                                                  மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

                                                                                                                    காற்று :
                                                                                                                    மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட

                                                                                                                    கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

                                                                                                                    காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

                                                                                                                    கடல் நிலை:
                                                                                                                    நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான கொந்தளிப்பாகக் காணப்படும்.

                                                                                                                    இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையும்)

                                                                                                                    பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

                                                                                                                    இலங்கையில் - இரவில்
                                                                                                                    இலங்கையில் – இரவில்
                                                                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                                                                        21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு விலக்கல் – குஷியில் மக்கள்

                                                                                                                        21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு விலக்கல் – குஷியில் மக்கள்

                                                                                                                        இன்று இலங்கையில் 21 மாவட்டங்களுக்கு விதிக்க பட்ட ஊரடந்கு சட்டம் விலக்க படுகிறது ,


                                                                                                                        காலை ஐந்து மணியில் இருந்து மாலை எட்டு மணிவரை இந்த விலக்கு அளிக்க படுகிறது

                                                                                                                        பின்னர் வழாமை போல இது அமூல் படுத்த படும் என அறிவிக்க பட்டுள்ளது


                                                                                                                            இவ்வேளை மக்கள் தமது பொருட்களை கொள்வனவு செய்து சென்றிட பேரூதவியாக இருக்கும் என அரசு நம்புகிறது

                                                                                                                            தொடர்ந்து கொரனோ பரவி செல்வதால் ,மக்கள் தமது பாதுகாப்பு பொறிமுறைகளை கையாள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

                                                                                                                            ஒன்றாக மக்கள் குவியும் பொழுது இந்த நோயானது மீள வேகமாக பரவும் அபாயம் உள்ளது ,

                                                                                                                            அரசு இழப்பு விகிதத்த்தை மறைத்து வருவதால் மக்கள் நோயானது நாட்டில்

                                                                                                                                இல்லை என்பதாக கருதி இவ்வாறான அலட்சியத்தில் ஈடுபட்டு செல்கின்றனர் என்ற வாதம் முன்னிலை பெற்றுள்ளது

                                                                                                                                21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு
                                                                                                                                21 மாவட்டங்களுக்கு ஊரடங்கு