Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை

இலங்கையில் பாடசாலைகளிற்கு 20 தம திகதிவரை விடுமுறை

இலங்கை கொழும்பு ; இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்ட பாடு காரணமாக பாடசலைகள் யாவும் எதிர்வரும் 20தம திகதி வரை விடுமுறை விடுக்க பட்டுள்ளது .

அதன் பின்னர் வழமை போன்று அணைத்து பாடசாலைகளும் இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


இலங்கையில் பாடசாலைகளிற்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து பாதிக்க பட்டமையினாலும் ஆசிரியர்களுக்கு


ஊதியம் வழங்கப்படுவதில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக இந்த விடுமுறை விக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்

    கோத்தாவை கைது செய் சட்டத்தின் முன் நிறுத்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழுத்தம்

    பிரான்ஸ் ; தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரச இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்து என்ற தொடர்

    போராட்டங்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் இடம்பெற இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

    போர் குற்றங்களில் ஈடுபட்ட சிறிலங்காவின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின்

    கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார்.

    அந்தவகையில் தற்போது ஒரு நாட்டின் அதிபருக்குரிய இராஜீக வரப்பிரசாதங்கள் ஏதுமன்ற ஓர் சாதாரண பொதுமகனாக சிங்கப்பூரில்

    நிற்கின்ற சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சவை, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

    அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, மலேசியா என பல்வேறு நாடுகளிலும் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்

    கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற இருப்பதோடு கோரிக்கை மனுவும் கையளிக்கப்படவுள்ளது.

    கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என

    ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள்

    தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான

    குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான

    குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது. இந்தக் கொள்கை மூன்றாம்

    நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை பொறுப்புக்கு உட்படுத்தவும்,

    தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.

    இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான
    கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை


    நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என தெரவித்துள்ள நா.தமிழீழ அரசாங்கம்,
    தமிழினத்தின் மீது இனப்படுகொலையினை புரிந்தவர்களுக்கு எதிரான உளவியல் யுத்தமாகவும் இது
    உள்ளதென அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

      ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை மனோ கணேசன்

      தமிழ் முற்போக்கு கூட்டணி தலைமைக்குழு ஜனாதிபதி தெரிவு தொடர்பில் நாளை முடிவு
      – தமுகூ தலைவர் மனோ கணேசன்

      தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை செவ்வாய்கிழமை 19ம் திகதி
      மாலை 6 மணிக்கு கொழும்பு நுகேகொடை ஏகநாயக அவனியுவில் (#15/1 Ekanayake Avenue, Nugegoda)
      அமைந்துள்ள கட்சி செயலகத்தில் கூடி, 20ம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட
      வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும், கலந்துரையாடி முடிவெடுக்கும் என தமிழ்
      முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு தெரிவத்துள்ளார்.

        Posted in இலங்கை செய்திகள்

        மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

        மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

        காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (17) 100 நாட்களை நிறைவு செய்கிறது.

        கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

        இதேவேளை, போராட்டத்தில் தங்களது உயிரை அர்ப்பணித்த மக்களைக் நினைவுகூறும் விசேட நிகழ்வும் நேற்று (16) இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது.

        இதற்கு திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

          ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

          இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் இருப்பதை அனுமதிக்க முடியாது என இலங்கை போராட்ட காரர்கள் அறிவித்துள்ளனர்.

          தொடர்ந்தும் அதி உயர் பதவியில் நாட்டை மேலும் ரணில் விக்கிரமசிங்க ஆள முனைந்தால் அவருக்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுப்போம்.

          பல் நாட்டு அரசுடன் இணைந்து அதிகாரத்தை தக்கவைத்து கொள்ள ரணில் விக்கிரமசிங்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .

          ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிடவும் மேலும் நாட்டை கீழ்நோக்கி செல்லும் நிலைக்கு எடுத்து செல்ல பிற் படுத்தப்பட்ட சிந்தனைக்குள் ஊறியுள்ள ரணில் முயல்வார் .

          ரணிலை விரட்டுவோம் மக்கள் முழக்கம் கொதிக்கும் இலங்கை

          அதனால் அவரை அந்த பதவியில்; இருந்து விரட்டும் வரை நாம் போராடுவோம் என்கின்றனர் மக்கள் .

          இவ்வாறான மக்கள் போராட்டங்கள் இலங்கையில் தொடர்ந்தால் இலங்கை மேலும் சோமாலியாக மாறும் நிலை ஏற்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

          மக்கள் மன்றம் விரும்பாத ஒருவர் ஜனாதிபதி நிலையில் அங்கம் வகிப்பதை முற்றாக கைவிட வேண்டும் என அந்த போராட்ட கார்கள் தெரிவித்துள்ளனர்.


          எரிபொருளை நாட்டுக்குள் எடுத்து அதனை நிவர்த்தி செய்துவிட்டால் மக்கள் போராட்டம் அமைதியாகிவிடும் என்பதால் எரிபொருளில் மற்றும் எரிவாயு விநியோகத்தை150 ரூபாவுக்குள் மக்களுக்குவிற்பனை செய்திடும் நரி தந்திரத்தில் ரணில் ஈடுபட்டுள்ளார்.

          இது தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள்வும் மக்கள் எழுச்சியை மழுங்கடிக்க ரணில் விக்கிரமசிங்க போட்டுள்ள மகா நரி திட்டங்களில் இதுவும் ஒன்று என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர் .

            Posted in இலங்கை செய்திகள்

            மக்கள் போராட்டங்களை தடுக்க கொழும்பில் ஊரடங்கு

            மக்கள் போராட்டங்களை தடுக்க கொழும்பில் ஊரடங்கு

            இலங்கையில் ஜனாதிபதி கோட்டாவை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

            ஆனால் ரணில் பதவி விலகி மறுத்து மக்களை அடக்கி ஒடுக்க இராணுவம் போலீசை ஏவி விட்டுள்ளனர் .

            இதனால் இன்று மதியம் 12 மணி முதல் காலை ஐந்து மணிவரை கொழும்பு பகுதியில் ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது.

            பிரதமர் ரணிலின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

            ஊரடங்கு நீக்க பட்ட பின்னர் பிரதமர் ரணிலுக்கு எதிராக ஆயிர கணக்கில் மக்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.

              Posted in இலங்கை செய்திகள்

              ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

              ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

              நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடி நிலையை தணிக்க ஒரு தீர்வாக பிரதமர் கூடிய விரைவில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என பாராளுமன்ற அலுவலகங்கள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் மற்றும்

              பாராளுமன்ற கட்சி தலைவர்களின் பங்குபற்றலில் நேற்று (13) பிற்பகல் பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

              தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்து கௌரவ சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

              நாட்டில் நிலவும் சூழ்நிலை தொடர்பில் கட்சித் தலைவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், பாதுகாப்பு படைகளின் பிரதானி, முப்படைகளின்

              தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தற்போதைய பாதுகாப்பு நிலமைகள் குறித்து இங்கு விளக்கம் அளித்தனர்.

              நாட்டு மக்களுக்கு அறிவித்தது போன்று இன்று (13) நள்ளிரவு 12மணிக்கு முன்னர் ஜனாதிபதி அவர்களின் பதவி விலகல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்

              என அதிமேதகு ஜனாதிபதி தொலைபேசி ஊடாக தனக்கு அறிவித்திருப்பதாக சபாநாயகர் இங்கு தெரிவித்தார்.

              ரணில் உடனடியாகப் பதவி விலக வேண்டும் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடல்

              இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ டிரான் அலஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மைத்திரிபால சிறிசேன, கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல, கௌரவ அனுரகுமார திஸாநாயக்க, கௌரவ மனோ

              கணேசன், கௌரவ வாசுதேவ நாணயக்கார , கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ கயந்த கருணாதிலக, கௌரவ ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ அங்கஜன் ராமநாதன் , கௌரவ கெவிந்து

              குமாரசிங்க, கௌரவ ரவூப் ஹக்கீம், கௌரவ வி.ராதாகிருஷ்ணன், கௌரவ உதய கம்மன்பில,


              சங்கைக்குரிய அத்துரலிய ரத்ன தேரர், கௌரவ எம் .ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் 6 மாதங்களில் விபத்தில் சிக்கி 459 பேர் உயிரிழப்பு

                இலங்கையில் 6 மாதங்களில் விபத்தில் சிக்கி 459 பேர் உயிரிழப்பு

                2022 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ,இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

                ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                மேலும், 1,387 பாரிய வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 3,326 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

                இந்த காலகட்டத்தில், 4,309 சிறு விபத்துகளும், 2,229 விபத்துக்களில் சொத்துக்களுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

                எவ்வாறாயினும், இந்த நாட்களில் திடீரென வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை
                குறைந்ததினால் விபத்துக்கள் மிகக்குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

                  கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

                  ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….! போராடத் தயாராகும் புலம்பெயர் தமிழர்கள் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                  தமிழர்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்களுக்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

                  நாட்டைவிட்டு வெளியேறி தற்போது மாலைதீவில் தஞ்மடைந்துள்ள சிறிலங்காவின் ஜனாதிபதி கோத்தபாய இராஜபக்ச, அங்கிருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருப்பதாக செய்திகள் கூறப்படுகின்னறன.

                  இந்நிலையில் சர்வதேச நியாயாதிக்கத்தின் (universal jurisdiction) அடிப்படையில் இனப்படுகொலையாளி கோத்தபாய இராஜபக்ச கைது செய்யப்பட்டு

                  கோட்டாவை தூக்கில் மாட்டு வெளிநாடுகளில் தமிழர்கள் போராட்டம்

                  அந்நாட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நாட்டு தூதரகங்கள் முன்னால் போராட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                  ‘ஓட ஓட விரட்டுவோம்….நீதியின் முன் நிறுத்துவோம்….!’

                  என்ற முழக்கத்துடன் ஏற்பாடாகி வரும் இப்போராட்டத்தில் அனைத்து தமிழர் அமைப்புக்களையும் ஒருங்கிணையுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கோரியுள்ளது.

                  போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவின் அரச பிரதிநிதிகளுக்கு எதிராக ஐ.


                  நா உறுப்பு நாடுகள் சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என


                  ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையாhர் அவர்கள் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்

                    கோட்டா வாகனங்கள் திருட்டு தேடும் பொலிஸ்

                    ஜனாதிபதி இல்லம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்ட காரர்கள் அந்த ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்கள் என்பனவற்றை சேதமாக்கினர் .

                    அவ்வேளை ஜனாதிபதி மாளிகை மற்றும் காரியாலயங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருபது வாகனங்கள் மற்றும் அதன் கராச்சில் வைக்க பட்டிருந்த வாகன உதிரி பாகங்கள் என்பன காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

                    இவ்வாறு கணம் போன வாகனங்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

                    மேலும் ஜனாதிபதி மாளிகை என்பனவும் சேதமாக்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

                    இதன் திரொலியாக பலர் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.


                    போலீசார் தகவல் அடிப்படையில் அங்கிருந்த வாகன உதிரிபாகங்களில் கிட்டத்தட்ட முழுவதுமாக காணாமல் போயுள்ளதக தெரிவிக்க படுகிறது.

                    கோட்டா கொள்ளையடித்த பணத்தை விட அந்த வாகன உதிரி பக்கங்கள் பெறுமதியா என மக்கள் மன்றம் கேட்பது சரியாகாதான் உள்ளது .

                      Posted in இலங்கை செய்திகள்

                      பேரூந்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்திய பெண் கைது

                      பேரூந்துக்கு கல்வீச்சு தாக்குதல் நடத்திய பெண் கைது

                      வவுனியா புளியம் குளம் பகுதியில் பயணித்த அரச பேரூந்து ஒன்றை இளம் பெண் ஒருவர் வழிமறித்துள்ளார் .

                      அவ்வேளை அந்த பேரூந்து நிற்காது புறப்பட்டு சென்றுள்ளது .

                      இதனால் ஆத்திரமுற்ற இளம் பெண் அந்த அரச பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .

                      பேரூந்து மீது கல்வீச்சு தாக்குதலை புரிந்த குற்றத்திற்காக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

                      எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் அவதியுற்று வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது.

                        கேழ்வரகு மாவுடன் பாசிப்பருப்பு சேர்த்து இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க| Ragi flour Healthy Breakfast
                        Posted in இலங்கை செய்திகள்

                        சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்

                        சஜித் பிரேமதாச ஜனாதிபதியாகிறார்

                        இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாச இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகிறார் .

                        இவரை ஜனாதிபதியாகி நியமிக்குமாறு எதிர் கட்சிகள் பல பரிந்துரை செய்துள்ளதால் இவரே ஜனாதிபதியாகும் நிலை உருவாக்கம் பெறுகிறது எனப்படுகிறது .

                        அவ்வாறு இல்லாவிடினும் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் சஜித் மகத்தான வெற்றியை தட்டி செல்வார் என எதிர்பார்க்க படுகிறது.

                        பிரதமராக டலஸ் அழகப்பெரும நியமிக்க படலாம் என்கின்ற உள்ளக கசிவு தகவல்கள் வெளியாகியுள்ளன.


                        ஜனாதிபதி கோட்டாவுக்கு அடுத்து மக்களினால் அதிக வாக்கு பெற்றவராக சஜித் உள்ளார் .

                        எனவே அவரே ஜனாதிபதியாக்க வேண்டும் எனப்து மக்கள் பொது நிலைப்பாடாகவும் உள்ளது குறிப்பிட தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கைக்கு இந்தியா இராணுவம் அனுப்ப படமாட்டாது

                          இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக ஊகங்களின் அடிப்படையில் பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும்

                          வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றுமுழுதாக மறுக்கின்றது.

                          இச்செய்திகளும் இவ்வாறான நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

                          1. ஜனநாயக பெறுமானங்கள் மற்றும் விழுமியங்கள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு ரீதியான
                          2. கட்டமைப்பு ஆகியவற்றின் ஊடாக செழுமை மற்றும் முன்னேற்றத்தினை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்பதாக இந்திய வெளியுறவு

                          3. அமைச்சின் ஊடகப்பேச்சாளர் நேற்றையதினம் மிகவும் தெளிவாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
                            Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

                            இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

                            இந்தியா இராணுவம் இலங்கைக்கு வந்தால் புதிய ஆயுத மோதல் வெடிக்கும்

                            இலங்கைக்கு இந்தியா இராணுவம் இம்முறை வந்திறங்கினால் அது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவிக்கும்.


                            சுருங்க சொல்ல போனால் இலங்கை பொல்லு கொடுத்து அடிவாங்க தயாராகிறது .

                            மக்கள் தமது அதிகார வர்க்கங்கள் புரிந்த இழிவு கெட்ட செயலினால் ராஜா பாக்ஸ அரசுக்கு எதிராக வீதி இறங்கினர் .

                            இதுவே தவறு என கருதி லஞ்ச ஊழல் பெருச்சாளிகளை காப்பாற்ற இந்தியா இராணுவ வரவு முனைந்தால் அதுவே இந்தியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் நாடாக இலங்கை மாற்றம் பெறும் .

                            சீனா தமிழர்களுக்கு உதவும் நிலையை ஏற்படுத்தும் .அதுவே இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் நிலையும் தோன்றலாம் .

                            தவிர இந்தியா இராணுவத்தை வலிந்து சீண்டும் நகர்வில் சீனா கண்டிப்பாக செயல் படும் .

                            சீனாவின் ஆதிக்கம் கொழும்பை அண்மித்து அகல கால் பாதித்துள்ளது .சீனத்தவர்களும் சிங்களவர்களும் கலப்பு திருமணம் புரிந்துள்ளதுடன் பிள்ளைகளையும் பெற்றுள்ளனர் .

                            சீனாவின் உளவுத்துறையால் மேற்கொள்ள பட்ட நீண்ட கால தந்திர திட்டமாக இவை காணப்படுகிறது .

                            இவ்வேளை இந்தியா இராணுவத்தை இலங்கை அழைத்தால் ., இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்தால், இம்முறை சுலபமாக இந்தியா இராணுவத்தை இலங்கையில் இருந்து மீள் பெற முடியா நிலையில் இலங்கை சிக்கும்.

                            இவ்வேளை தமிழர்களுக்கு இந்தியாவின் ஆதரவுடன் தீர்வினை வழங்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் .

                            மேலும் இம்முறை இலங்கைக்கு இந்தியா இராணுவம் பெரும் நெருக்கடியை வழங்கும்.

                            அது புதிய ஆயுத குழுக்களை உருவாக்கும் நிலைக்கு செல்லும் .இலங்கை புதிய போர் களமாக மாற்றம் பெறும் .

                            கோட்டபாயா ஆடுகளத்தில் இலங்கையில் நடக்க போகும் எதிர்மறை ஆயுத மோதலை தமிழர்கள் மட்டும் அல்ல சிங்களவர்களும் காண தயாராகுங்கள் .

                            இந்தியா துல்லியமாக சிந்தித்து தொலைதூர பார்வையுடன் செயல் பட்டால் தமிழர்கள் ஆதரவுடன் இந்தியாவை காப்பாற்றி கொள்ள முடியும் .

                            தொடர்ந்து தமிழர் அரசியல் நிலை தொடர்பில் இந்தியா தவறான கோணத்தில் அதன் வெளியுறவு கொள்கை காணப்படுகிறது .

                            இந்தியா வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படாது விடின் அது இந்தியா இலங்கையில் பெரும் அவமானத்துடன் வெளியேறும் நிலை ஏற்படும் .

                            இலங்கை ஆடு களம் மாற்றமடைகிறது .தமிழருக்கு புதிய நாடுகளின் ஆதரவு தானாக தேடி வரும் நிலையை இந்தியாவே உருவாக்க போகிறது என்பதே வெளிப்படை .

                            • வன்னி மைந்தன் –
                            Posted in இலங்கை செய்திகள்

                            ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

                            ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ

                            இலங்கை ஜனாதிபதி பதவி விலக கோரி வீதி இறங்கி போராடட்ம மக்கள் தற்போது ஜனாதிபதி மாளிகை உள்ளே புகுந்து இரண்டாவது நாளாக தமது தமது கட்டுப் பாட்டுக்குள் ஜனாதிபதி மாளிகையை வைத்துள்ளனர்.

                            அதி நவீன வசதிகளுடன் ஆடம்பரமாக வசித்து வந்த ஜனாதிபதிகளின் வாழ்க்கையை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது.

                            ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் காட்சிகள்இதோ

                            மக்கள் ஜனாதிபதி அமரும் முக்கிய ஆசனங்களில் அமர்ந்து புகைப்படங்கள் காணொளிகளை பிடித்து மகிழ்ச்சியடைந்தனர் .

                            தொடர்ந்து ஆயிர கணக்கில் மக்கள் ஜனாதிபதி மாளிகையை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

                            ஜனாதிபதி கோட்டா மற்றும் ரணில் பதவி விலகும் வரை தாம் ஜனாதிபதி மாளிகை உள்ளே தரித்து நிற்போம் என்கிறது மக்கள் கூட்டம்.

                            தற்போது ஜனாதிபதி மாளிகை மக்கள் கண்காட்சி பூங்காவாக மாற்றம் பெற்றுள்ளது.

                            இங்கே ஜனாதிபதி மாளிகை குறித்த பல காணொளி காட்சிகள் வைரலாகி வருகிறது .

                            ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய போலவே அவரது ஆசனத்தில் அமர்ந்து மகிழும் வாலிபர்கள் கிண்டல் பேச்சுக்கள் கலக்கலாக வைரலாகி வருகிறது.

                            மக்கள் பணத்தில் ஜனாதிபதி மாளிகை ஆண்ட கோமாளி கோட்டாவின் கோட்டைக்குள் மக்கள் வெள்ளம் புகுந்துள்ளது.


                            இலங்கை வரலாற்றில் பதிய பட்ட புதிய வரலாறு .தனி பெரும் பான்மை மூலம் வென்றவர் என்ற பெயரை கொண்ட கோட்டா இன்று அதே சிங்கள மக்களினால் ஜனாதிபதி மாளிகையை விட்டு நாயை போல விரட்ட பட்ட வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது .

                            தமிழன் அழிந்த அதே மாதத்தில் ஆரம்பிக்க பட்ட ராஜபக்ச கூட்டத்தின் அவலம் இது .

                            அரசியல் வாதிகளிற்கு நல்ல பாடமாக அமைய பெற்றுள்ளது .இது போலவே தமிழ் தலைமைகளுக்கு நடக்கும் என்பது நம்ம அரசியல்வாதிகள் புரிந்து கொண்டால் சிறப்பு .

                            மக்கள் முதுகில் ஏறி சவாரி செய்திட நினைக்கும் அரசியல்வாதிகளிற்கு மக்கள் இனித் தர தயாராகும் தண்டனைகள் எவ்வாறு அமையும் என்பதை இதன் ஊடக காண முடியும் .

                            ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் காட்சிகள்இதோ
                            ஜனாதிபதி மாளிகையில் மக்கள் கூட்டம் முற்றுகை காட்சிகள்இதோ
                              Posted in இலங்கை செய்திகள்

                              கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்

                              கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்

                              இலங்கையின் மக்களாட்சி தலைவரான கோட்டபாய ரணில் பதவி விலகும்வரை நாம் ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்போம் என கூறியவாறு மக்கள் பெரும் திரளில் அங்கே நிற்கின்றனர் .

                              எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவர் என அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதனை ஏற்காது தொடர்ந்தும் அலரிமாளிகையில் மற்றும் ஜனாதிபதி செயலகம் அருகில் காத்துள்ளனர்.

                              இராணுவம் பொலிசார் மக்களுடன் முறுகளில் ஈடுபட்டால் அதுவே பெரும் வன்முறை மோதலாக வெடிக்கும் நிலை காணப்படுகிறது.

                              முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் என்கிறது மக்கள் மன்றம் ,தம்மை எதிர்த்தவர்களை பழிவாங்க துடிக்கிறது இந்த அரசியல் தலைகள் .

                              Posted in இலங்கை செய்திகள்

                              இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

                              இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

                              இலங்கை இராணுவத்தின் இராணுவத் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா இராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதலை விடுத்துள்ளனர்.

                              கொதிப்பில் மீளவும் மக்கள் இலங்கை இராணுவத்தின் சமீப கால மக்கள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காது இவ்விதம் சவேந்திர சில்வா அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் மீளவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது .

                              தொடர்ந்து செல்லும் அரசியல்வாதிகளிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை இவரது பேச்சு மீண்டும் தூண்டி விடும் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

                                ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

                                பிரதமர் ரணிலின் இல்லத்திற்கு முன்னால் ஊடகவியலாளர்களை இலக்காக் கொண்டு தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்*!

                                பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக அரச வன்முறையைப் பயன்படுத்தி சிரச ஊடகவியலாளர்கள் நால்வரை இலக்காக்

                                கொண்டு அவர்கள் மீது பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் நடத்திய கொடூரமான மனிதாபிமானமற்ற தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

                                அது மட்டுமன்றி, தாக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களைக் கூட விரட்டி விரட்டி தாக்கும் அளவுக்கு பாதுகாப்புப் படையினர் மனிதாபிமானமற்றவர்களாக மாறிவிட்டனர்.

                                ஊடகவியலாளர்களை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் சஜித்

                                மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதற்காக நாகரீகமான ஊடகப் பயன்பாட்டில் ஈடுபட்ட மற்றும் அது தொடர்பாக மக்களின்

                                நன்மதிப்பைப் பெற்ற ஊடகவியலாளர்கள் குழுவொன்று குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டமை அதிகாரம் வாய்ந்த ஜனாதிபதியை நான்கு சுவர்களுக்குள்

                                முடக்கி வீட்டுக்கு அனுப்பிய மக்கள் போராட்டத்திலிருந்து பிரதமர் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதையே இந்தக் கோழைத்தனமான தாக்குதல் உணர்த்துகிறது.

                                மக்கள் இறையாண்மை மக்களிடமே உள்ளது என்பதை முன்னெப்போதையும் விட அதிகமாக நிரூபிக்கப்படும் இச்சூழ்நிலையிலும் கூட இவ்வளவு

                                கொடூரமாக நடந்துகொள்ள பாதுகாப்புப் படையினருக்கு பனிப்புரை வழங்கியது யார் என்பதும், சிரச ஊடகவியலாளர்களையே குறிவைத்து

                                தாக்குதலை நடத்தும் தேவை யாருக்குள்ளது என்ற விடயத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

                                உடனடியாக பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்.

                                எந்தவொரு சக்திவாய்ந்த அதிகாரமும் மக்கள் சக்தியால் தோற்கடிக்கப்படும் என்பதை சட்டவிரோத பிரதமர் அறிந்திருக்க


                                வேண்டும் என்பதோடு,நாடு அராஜக நிலைக்கு செல்ல வழிவகுக்காமல் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்

                                  முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்

                                  இலங்கையில் ஆளும் ஜனாதிபதி முட்டாள் கோட்டாவும் , பொம்மை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் நமக்கு வேண்டாம் என மக்கள் குழு அறிவித்துள்ளது.

                                  ரணில் இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியாது ,மக்கள் ஆதரவு இன்றி பின் கதவால் பிரதமர் ஆன பொம்மை ரணிலும் எமக்கு தேவையில்லை.

                                  புதியவர் நியமிக்க பட வேண்டும். அவரும் 12 மதத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் தேர்வு செய்ய பட வேண்டும் என்கின்ற பல விடயங்களை மக்கள் குழு பரிந்துரைத்துள்ளது .

                                  நாடு தழுவிய ரீதியில் தமிழர் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என மக்கள் திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது.


                                  கோட்டாபய ஜனாதிபதி இல்லை. அவரது குடும்பத்தில் அவன் ஒரு முட்டாள் .என தலைமை பிக்கு ஒருவர் கடுமையாக சாடினார்.

                                  அவர் பதுங்கு குழிக்குள் அல்லது இராணுவ முகாமில் மக்களுக்கு பயந்து மறைந்து உள்ளார் .

                                  இந்த முட்டாளும் பொம்மையும் எமக்கு வேண்டாம் என மக்கள் மன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

                                  இவர்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் உடனே பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டும் .

                                  இல்லை எனின் மக்களை எழுச்சி இதனை விட மோசமானதாக அமையும் என்கிறது மக்கள் குழு.

                                  கோட்டா மாளிகையை தேடி வந்தோம். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் .

                                  இதன் மூலம் மக்கள் சொல்ல வந்த செய்தியை அவர் புரிந்திருப்பார்.

                                  எனவே உடனே முட்டாளும் ,பொம்மையும் பதவி விலக வேண்டும் என இவர்கள் இடித்துரைத்துள்ளனர்.

                                  போர் கீரோ கோட்டா முட்டாளானர் ,அரசியல் சாணக்கியர் ரணில் பொம்மை ஆனார் .

                                  மக்கள் மன்றில் மனதில் நடந்த சகிப்பு தன்மை அற்று போனதன் வெளிப்பாடாக இவை காணப்படுகிறது

                                  இன்று இவர்களுக்கு நாளை நம்ம கிழட்டு சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இதுபோல நடக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    கோட்டபாய பதவி விலகல் பட்டாசு கொளுத்திய காலிமுக திடல் மக்கள் video

                                    கோட்டபாய பதவி விலகல் பட்டாசு கொளுத்திய காலிமுக திடல் மக்கள் video

                                    இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பதவி விலக கோரி மக்கள் மூன்று மாதங்களாக முன்னெடுத்த வந்த போராட்டம் இன்று வெற்றி பெற்றுள்ளது .

                                    கோட்டா பதவி விலகல் உறுதி படுத்த பட்டு அறிவிக்க பட்ட நிலையில் காலிமுக திடலில் கூடி இருந்த பல லட்சம் மக்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

                                    அவ்வாறான அந்த காட்சியை இதே காணொளியில் பார்த்து கொள்ளுங்கள்.

                                    இவர் காலிமுக திடல் போராட்ட களத்தில் இருந்து இன்றுவரை அந்த மக்களுடன் துணையாக நின்று குரல் வழங்கி வரும் முக்கிய தமிழராக இவர் கருதப்படுகிறார் என்பது குறிப்பிட தக்கது.

                                    இந்த காணொளியில் புதிய காட்சிகள் இதில் பார்க்கலாம்