Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
லண்டனில் வாள்வெட்டு குழுவை மடக்கி பிடித்த போலீஸ்
லண்டனில் வாள்வெட்டு குழுவை மடக்கி பிடித்த போலீஸ்
தெற்கு லண்டன் Longbury Drive, Orpington பகுதியில் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் வாலிபன் ஒருவர் துடித்த வண்ணம் இருந்தார்
அவரை மீட்ட போலீசார் வைத்திய சாலையில் அனுமதித்தனர்
மேற்படி சம்பவத்தை அடுத்து தேடுதல் நடத்திய காவல்துறையின் வலையில் வாள்வெட்டு குழு சிக்கியது ,இவர்களிடம் இருந்து மிக கொடிய தாக்குதல் உபகரணங்கள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
மேற்படி குழுவிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
வலிந்துகாணாமல்ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்துகாணாமல்ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி …..!!!
ஸ்ரீலங்கா இனவாத படைகளால்
திட்டமிட்டு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் , இளைஞர்கள் யுவதிகள் ,மற்றும் சிறுவர்கள் இலங்கை இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்டும்
காணாமல் ஆக்க பட்டும் இதுவரை நீதி கிடைக்காமல் ,கைது செய்ய பட்டவர்கள் எங்கு என்ன ஆனார்கள் என்று தெரியாமல் அவதிபட்டு கொண்டிருக்கும்
எம்மின மக்களுக்கு நீதி வேண்டி திங்கள் கிழமை
(30 .08 .2021)மதியம் 01 தொடக்கம் 03 மணிவரை லண்டன் Trafalgar Square national gallery க்கு முன்பு பிரித்தானியாவிலுள்ள
தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் என்ற அமைப்பினரும் (Freedom Hunters For Tamils )அவர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்க அமைப்பினரும் (TGTE) இணைந்து
மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை
ஒழுங்கு செய்திருந்தனர் .இந்த பேரணி கோவிட் விதிக்களுக்கு அமைய மக்கள் உணர்வு பூர்வமாக
கலந்து தங்கள் ஆதங்களை வெளிப்படுத்திஇருந்தனர்.




இலங்கையில் பெரும் பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கிறார் வெடிகுண்டு அமைச்சர்
இலங்கையில் பெரும் பஞ்சம் வரப்போகிறது – எச்சரிக்கிறார் வெடிகுண்டு அமைச்சர்
உலக சந்தை விலைப்படி ஒரு கிலோ சீனியை 92 ரூபாய்க்கு வாங்கி 98 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு கொடுக்கலாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இன்று (30) தெரிவித்தார்.
92 ரூபாய்க்கு வாங்கக்கூடிய ஒரு கிலோ சீனியை 220 ரூபாய்க்கு விற்க அனுமதித்ததற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இராஜினாமா செய்யாமல், பொய்யான அறிக்கைகளைத் தொடர்ந்தால், அமைச்சர் அந்த மோசடியாளர்களிடமிருந்து தரகுப்பணத்தைப் பெறுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பு மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார்.
ஒரு கிலோ சீனிக்கு 100 ரூபாய்க்கு மேல் இலாபம் சம்பாதிக்கும் வர்த்தகர்கள், வருடத்துக்கு சுமார் 70 பில்லியன் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் தவறான நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக சம்பிக்க எம்.பி தெரிவித்தார்.
ஊரடங்கில் திருமணம் -திருமண தம்பதிகளை தூக்கி சென்று அடைத்த பொலிஸ்
ஊரடங்கில் திருமணம் -திருமண தம்பதிகளை தூக்கி சென்று அடைத்த பொலிஸ்
மதுரங்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய
மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
ஊரடங்கு உத்தரவின் போது, மதுரங்குளிய – கனமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஊரடங்கு திருமணம் நடைபெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி, பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த போது ஒரு
குழுவினர் தப்பி ஓடியுள்ளனர். அந்த இடத்தில் இருந்த 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 நபர்களை அந்த வீட்டில் தனிமைப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இறந்த பெண் சடலத்தை உறவினருக்கு மாற்றி கொடுத்த மருத்துவமனை
இறந்த பெண் சடலத்தை உறவினருக்கு மாற்றி கொடுத்த மருத்துவமனை
இலங்கை பணத்துறையில் இரண்டு பெண்கள் மரணித்துள்ளனர் ,இதில் ஒருவர் முசுலீம் .
அதில் உறவினர்கள் தமது உறவினர் என நினைத்து வழங்க பட்ட சடலத்தை அடக்கம் செய்து விட்டனர்
ஆனால் அந்த சடலத்தினை உரியவர்கள் சென்று மருத்துவமனையில் விசாரித்த பொழுது அது
தவறாக வேறு ஒருவருக்கு வழங்க பட்டது தெரிய வந்துள்ளது
மேற்படி சம்பவம் பெரும் அதிரவலைகளை கிளப்பியுள்ளது
மகிந்தாவுக்கு கொரனோ
மகிந்தாவுக்கு கொரனோ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நோய் நிலமை காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படம் மற்றும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் வழமை போன்று தனது கடமைகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி
கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள 12,000 தொன் சீனி
இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 600 சீனிக் கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றில், 433 கொள்கலன்கள் ஒன்பது இறக்குமதியாளர்களால் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும் சுமார் 12,000 மெற்றிக் தொன் சீனியைக் கொண்டுள்ளன என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
வணிக வங்கிகள் வழங்கிய கடன் கடிதங்கள் மூலம் இறக்குமதி அனுமதிப்பத்திரங்களின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து சீனி இறக்குமதி செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டனர்.
இரண்டு மாதங்களாக 433 சீனிக் கொள்கலன்கள் வெளிவிடப்படாததால், இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ சீனிக்கு தாமதக் கட்டணமாக ரூ. 20 முதல் 25 வரை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மற்றொரு சீனி இறக்குமதியாளரால் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்ட மற்றொரு தொகுதி கொள்கலன்கள் இரண்டு மாதங்களாக கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இறக்குமதியாளரால் மியான்மாருக்கு அனுப்பப்பட்ட 130 சீனி கொள்கலன்கள் அந்த நாட்டின் பிரச்சனை காரணமாக கொழும்பு துறைமுகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் இந்த 130 கொள்கலன்களை நாட்டுக்குள் கொண்டு வர அனுமதிக்காததால், அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சீனி இருப்பு பற்றி விசாரித்த போது, லங்கா சதொச குறிப்பிட்ட சீனி இருப்பைக் கையகப்படுத்த முடிவு செய்துள்ளாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார்.
இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், லங்கா சதொச நிறுவனத்திற்கு சீனியை வாங்கும் போது தாமதமான கட்டணத்திலிருந்து இறக்குமதியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர்பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும் சதொச மூலம் சலுகை விலையில் சீனி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்
சவுதி விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் – 30 பேர் மரணம் -60 பேர் காயம்
சவுதி விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல் – 30 பேர் மரணம் -60 பேர் காயம்
தெற்கு ஏமன் பகுதியில் அமைந்திருந்த சவூதி இராணுவத்தின் Al Anad விமான தளம் மீது திடீரென
ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது ,இதில் அங்கிருந்த முப்பது படைகள் பலியாகியும் மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஈரான் ஆதரவு படைகளினால் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?
விமான நிலையம் மீது தற்கொலை தாக்குதல் -அடங்குமா தலிபான் ..?
ஆப்கான் தலைநகர் காபூல் விமான தளம் மீது திடீரென தற்கொலை தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி ஆறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர்
ஒரு வாரத்தில் இடம் பெற்ற இரண்டாவது தாக்குதல் இதுவாக பதிவாகியுள்ளது
தொடர்ந்து இது போன்ற குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்
அமெரிக்காவில் சிசுவை வீடுபுகுந்து இழுத்து சென்ற சிங்கம்
அமெரிக்கா கலிபோனியாவில் ஐந்து வயது சிசு ஒன்றை காட்டாது சிங்கம் ஒன்று இழுத்து சென்றுள்ளது
இதனை கண்ணுற்ற மக்கள் அதனை துரத்தி சென்றனர்
சிசுவை காப்பாற்ற சிங்கம் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டது
இதில் சிங்கம் இறந்து போனது ,பலத்த கடி காயங்களுக்கு உள்ளான சிறுவன் தொடர் சிகிச்சை
பெற்று வருகிறான் ,தலையில் பலத்த கடி காயங்கள் காணப்படுவதக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
இரவில் தயிர் சாப்பிடலாமா?
இரவில் தயிர் சாப்பிடலாமா?
தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
இரவில் தயிர் சாப்பிடலாமா?
தயிர்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தயிருக்கு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் தன்மை உண்டு. அதனால்தான் பரவலாக அது உபயோகத்தில் இருக்கிறது. தயிரில் உள்ளடங்கி இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானம் சீராக நடைபெற உதவும். குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
- பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் உடல் உஷ்ணத்துடன் காணப்படும்.
- அந்த சமயத்தில் தயிர் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்க உதவும். அதனால்தான் சாப்பிடும்போது தயிரை தவிர்க்காமல் உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.
- சிலர் தயிரை இரவு உணவிலும் சேர்த்துக்கொள்வார்கள். இரவு நேரத்தில் உடலின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படும். அந்த சமயத்தில் தயிரை சேர்த்துக்கொண்டால் சளிப்பிரச்சினை உருவாக வாய்ப்பிருக்கிறது.
- அதிலும் இருமல், ஆஸ்துமா பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்கள் தயிரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அது சளியை அதிகப்படுத்திவிடும்.
- ஆனால் மோர் எல்லா நேரத்திற்கும், எல்லோருக்கும் ஏற்றது. மோரில் சிறிதளவு மிளகுத்தூள் கலந்து பருகலாம். அது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் என்பதால் சளி பிரச்சினை ஏற்படாது
- .
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்
நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார்.
ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்
ஆதரவற்ற குழந்தைகளுடன் விஷால் பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த புகைப்படம்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். இவர் கைவசம் தற்போது எனிமி, துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன.
இதில் எனிமி படத்தை ஆனந்த் சங்கரும், வீரமே வாகை சூடும் படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணனும் இயக்கி உள்ளனர்.
மேலும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் நடிகர் விஷால் நடிப்பதோடு, இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார்.
நடிகர் விஷால் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஷால் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் உணவு வழங்கினார்.
மேலும் குழந்தைகளோடு கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கொரோனா பரவல் – கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு
கொரோனா பரவல் – கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு
சமீபத்தில் ஓணம் கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகளால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என கேரள சுகாதாரத் துறை தெரிவித்தது.
அதிகரிக்கும் கொரோனா பரவல் – கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக புதிய பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது. இன்றும் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு உள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகும்.
கேரளாவில் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டம் உள்ளிட்ட சில பண்டிகைகளுக்காக விடப்பட்ட தளர்வுகள் காரணமாகவே கொரோனா தொற்று அதிகரித்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் சுகாதாரத் துறையினர் நோய் பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வும் மேற்கொண்டனர். இதில் கொரோனா பாதித்தோர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காமல் காட்டிய அலட்சியமும் நோய் பரவலுக்கு காரணம் என தெரியவந்தது.
இதுபோல மாநிலம் முழுவதும் மலையோர மாவட்டங்களில் நோய் பரவலின் வேகம் அதிகமாக இருப்பதையும் சுகாதாரத் துறையினர் கண்டுபிடித்தனர். அங்கு தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.
யாழ் மக்களுக்கு அவசர கோரிக்கை – இதில் நீங்கள் உண்டா ..?
யாழ் மக்களுக்கு அவசர கோரிக்கை – இதில் நீங்கள் உண்டா ..?
யாழ் மாவட்டத்தில் மோதல்களினால் இடம்பெயர்ந்து மீளக்குடியமராத மக்கள் தங்களை உடனடியாக பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் முப்படையினர் மற்றும் பொலிசாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக கேட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பகுதியளவில் விடுவிக்கப்பட நகுலேஸ்வரம், காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை மத்தி, காங்கேசன்துறை தெற்கு, கட்டுவன், குரும்பசிட்டி இகுரும்பசிட்டி கிழக்கு, வசாவிளான் கிழக்கு, வசாவிளான் மேற்கு , மயிலிட்டித்துறை வடக்கு, தையிட்டி வடக்கு, தையிட்டி தெற்கு,பலாலி
கிழக்கு,பலாலி தெற்கு,பலாலி வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளையும் முழுமையாக விடுவிக்கப்படாத பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டித்துறை தெற்கு கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெயர்ந்து பல வருடங்களாக மீள்குடியேறாத குடும்பங்களை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மாவட்ட செயலகங்கள் ஊடாக தற்போது இடம்பெற்று வருகின்றன.யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை வலிகாமம்
வடக்கிலேயே அதிகளவில் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக மீள் குடியேற்றப்படாமல் இருக்கின்றார்கள்.18 கிராம சேவகர் பிரிவுகள் பகுதியளவில் விடுவிக்கப்படாமலும் 3 கிராம
சேவகர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமலும் இருக்கிறது.7ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னமும் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ளார்கள்.
இந்த அடிப்படையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூலம் இந்த விண்ணப்ப படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பிரதேச செயலகம்இ மாவட்ட செயலகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையிலும் இந்த விண்ணப்பங்களை பெற்று உடனடியாக நிரப்பி
வழங்கவேண்டும்.இதனை வழங்குவதன் மூலமே மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தி காணிகள் எவ்வளவு மக்களுடையது என்பதை அடையாளப்படுத்த முடியும்.
உண்மையான தகவல்களை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.ஏற்கனவே விபரங்களை வழங்கி இருந்தாலும் இந்த முறை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்கள் சரியாக பேணப்படாமையால் மீள்குடியேற்றம் தாமதமாகி வருகிறது.
தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்
உலக
தமிழர்களுக்கு சீனா ஊசியை போட்டு தள்ளும் அரசு – அதிகரிக்கும் மரணம்
இலங்கை வட கிழக்கு பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஆளும் அரசு சீனாவின் தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது
இந்த ஊசியினை பெற்று கொண்ட பல மக்கள் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன ,
மேலும் உடல் வீக்கம் ஏற்படுவதாக குற்ற சாட்டும் முன் வைக்க படுகிறது ,ஆனால் அரசோ இதனை ஏற்க மறுத்து ,இது வதந்தி என பரப்புரை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது
அரச உடைமைகள் ,ஆயுதங்களை ஒப்படைக்க தலிபான்கள் கெடு
அரச உடைமைகள் ,ஆயுதங்களை ஒப்படைக்க தலிபான்கள் கெடு
ஆப்கனவில் இருபது வருட போராட்த்தின் பின்னர் அந்த நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள தலிபான்கள் காபூலில் வசிக்கும் அரச ஆதரவு படைகள் மற்றும் அதிகாரிகள் பாவித்து வந்த அரச
உடைமைகள் மற்றும் ஆயுதங்களை உடனே ஒப்படைக்க வேண்டும் என காலக்கெடு விதித்துள்ளனர்
தமது கெடு முடிவதற்குள் இதனை செய்திட மறுத்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
Moderna ஊசி செலுத்த பட்ட இருவர் மரணம் – பீதியில் மக்கள்
Moderna ஊசி செலுத்த பட்ட இருவர் மரணம் – பீதியில் மக்கள்
ஜப்பானில் Moderna Vaccine செலுத்திய இருவர பலியாகியுள்ளனர்
இரண்டாவதாக அதே ஊசி செலுத்த பட்டு சில நாட்களில் மரணமடைந்துள்ளனர்
மேற்படி சம்பவம் அந்த நாட்டு மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு 13 இராணுவம் பலி -94 பேர் காயம்
வெடித்து சிதறிய ஆயுத கிடங்கு 13 இராணுவம் பலி -94 பேர் காயம்
கஜகஸ்தான் நாட்டின் இராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்கு ஒன்று திடீரென வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பத்து இராணுவத்தினர் இதுவரை பலியாகியுள்ளனர்
மேலும் 94 க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
இந்த குண்டு வெடிப்பு தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,
இந்த குண்டு தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என அஞ்ச படுகிறது
பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா
பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா
பவர் ஸ்டார் சீனிவாசனும் வனிதாவும் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பவர் ஸ்டாரை 3வதாக திருமணம் செய்து பங்களாவிற்கு குடியேறும் வனிதா
வனிதா – பவர் ஸ்டார்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
பவர்ஸ்டார் சீனிவாசனுடன் வனிதா விஜயகுமார் ஜோடியாக நடிக்கும் படம் ‘பிக்கப்’. இப்படத்தில் இவர்களுடன் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பவர்ஸ்டாரை மூன்றாவதாக மணமுடித்து ஒரு பங்களாவுக்கு குடியேறும் வனிதா, அந்தபங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து உருவாக்கி வருகிறார்கள்.
வனிதா – பவர் ஸ்டார்
இப்படம் குறித்து கூறும் பவர்ஸ்டார் சீனிவாசன், ‘இப்படம் எனக்கு நூறாவது படமாகும். என் திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கத்துடன் செமத்தியான பாடல்களுக்கு ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கிறேன். இந்தப் படத்தோட
டைட்டிலில் வனிதாவுக்கு “வைரல் ஸ்டார்” என்ற பட்டத்தோடு பெயரை போடுகிறோம்”. என்றார்.
சில நாட்களுக்கு சேவைகள் முழுமையாக தடை படும் நன்றி
சில நாட்களுக்கு சேவைகள் முழுமையாக தடை படும் நன்றி 0044 7536707793







